வியாழன், 1 மார்ச், 2018

கள்ளர்கள் குற்றப்பரம்பரையினரா



சோழ பாண்டிய மண்டலத்தில் கள்ளர்கள்





மேற்கத்திய மானிடவியல் ஆய்வாளரும், மனித நேய சேவைக்கும்,மரபு வழி வாழ்வியலை பாதுகாப்பதற்கும் அமெரிக்க அரசாங்கத்தால் தேசிய விருதை பெற்ற ஸ்டுவர்ட் ஹெச். பிளாக்பர்ன் என்ற ஆய்வாளர் குற்றப்பரம்பரை என்கிற வார்த்தையை மறுத்து கட்டுரை வெளியிட்டுள்ளார்.

அவரின் ஆய்வின் கூற்று பின்வருமாறு:-

A Tamil criminal tribe reconsidered by Stuart H. Black burn

கள்ளர் பழங்குடி மக்களை குற்றப்பரம்பரை என்று அழைக்கப்பட்டதை மறு ஆய்வு செய்த போது, அந்த மக்கள் மீதான குற்றப்பரம்பரை என்ற பார்வை சுக்கு நூறாக உடைந்துவிட்டது. அப்படிப்பட்ட குற்றப்பரம்பரை என்கிற நிலை மிகவும் பிற்காலத்தில் பிரிட்டிஸ் இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலால், அம்மக்களை அடக்குவதற்காக கொண்டு வரப்பட்டது.

பின்பு அக்கொடிய சட்டத்தை நிர்வாகத்திற்காக தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டு வரை பிரிட்டிஸ் அரசு கடைபிடித்துள்ளது.

ஆனால் கள்ளர்களின் வாழ்வியலானது தென்னிந்தியாவில் தங்களுக்கென்று தனி நாட்டமைப்பையும், தனி நிர்வாக அமைப்பும் (அம்பலகாரர் முறை) தனிக் காவல் அமைப்பும் (பழமையான காவல்முறை) கொண்டிருந்துள்ளனர். அதாவது நீதியும்,காவலும் தன்னகத்தே கொண்டிருந்துள்ளனர்.


இன்றை காலகட்டத்தில் கள்ளர் பழங்குடிகள் அரசியல் அதிகாரத்தில் ஆளுமை செலுத்துக் சமூகமாக உள்ளது. அவர்களுடைய வரலாறானது பல புதிரை கொண்டதாக உள்ளது.

கிபி12ஆம் நூற்றாண்டில் உருவான வலங்கை,இடங்கை சாதிகள் உருவாக்கத்தில் கள்ளர் பழங்குடிகள் வலங்கை சாதியிலோ,இடங்கை சாதியிலோ இல்லாதது அவர்களின் பழமையை இங்கு நிறுபிக்கிறது


தஞ்சை :-

சோழமண்டலம் தஞ்சையில் (தஞ்சை, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, திருவையாறு, கும்பகோணம், திருவாரூர்  ) கள்ளர்கள், தஞ்சையின் பெரும்பகுதியான விவசாய நிலங்களை கைவசம் கொண்டு சீரும் சிறப்புமாக வாழ்கின்றனர். தஞ்சையின் 13 கள்ளர் சிற்றரசுகள் (ஜமீன்கள்) இருந்தன. பெரும் நிலக்கிழார்கள் மற்றும் மிராசுகளில் (ஆண்டை) 70% பேர் கள்ளர்களே. செம்மொழி வளர்த்த ஐந்தாம் தமிழ் சங்கம், கரந்தை தமிழ் சங்கம் உருவாக பேருதவி அளித்து காத்தவர் ஸ்ரீமான் கோபாலசாமி ரகுநாத ராசாளியார், சாதி மதம் பாராமல் கல்வி செல்வத்தை அளித்துவரும், உக்கடை தேவர் எஸ்டேட் குடும்பத்தினரும், கல்வி வள்ளல் பூண்டி வாண்டையார் குடும்பத்தினரும்,  கள்ளர்களே. 

பாப்பாநாடு கள்ளர் அரையர், மன்னர் சாமிநாத விசயத்தேவர் தஞ்சையில் தமிழ் சங்கம் தோற்றுவித்தார். அதைபோல் ரகுநாத ராஜாளியார் தஞ்சையில் ஒரு தமிழ் சங்கம் தோற்றுவித்தார்.








மதுரை :-



மதுரையை சுற்றியுள்ள பெரும்பான்மையான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, வெள்ளைக்காரனிடமே சுங்க வரி வசூலித்தவர்கள் பிறமலை கள்ளர்கள். 8 நாடு 24 உபகிராமங்களுக்கு சொந்தக்காரர்கள்.

இந்த வீரம் மிகுந்த மண்ணின் மைந்தரான உறங்காப் புலி மூக்கையாத் தேவர் உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிகளை நிறுவினார். ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி மட்டுமல்லாமல், தங்க இடம், உணவு ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்தார்.








புதுக்கோட்டை :-

கள்ளர் குடியில் பிறந்த புதுக்கோட்டையை உருவாக்கி ஆட்சி செய்தவர்கள் தொண்டைமான் மன்னர்கள்.  புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டதனாலும், அங்கு உள்ள 70% விவசாய நிலங்களை கொண்டவர்கள் கள்ளர்கள். 

கள்ளர்கள் 21 கள்ளர் நாடுகளை அமைத்து, படை உதவி அளித்து, புதுக்கோட்டை மன்னரின் ஆட்சிக்கு வலு சேர்த்தனர்.






தேனி : - 


"தேனி கம்பம் சுத்துபத்து கிராமதுல அவுக வைச்சதுதான் சட்டம்" என்ற திரைப்பட வசனத்திற்கு சொந்தக்காரர்கள். 70 % கள்ளர்கள் வாழும் பகுதி. ஆதி தமிழன் வாழ்ந்த பூமி. புலிமான் கோம்பையில் கிடைத்துள்ள சங்கத் தமிழ் எழுத்து பொறித்த கூடலூரில் நடந்த தொறுபூசலில் (ஆநிரை கவர்தலை) உயிர்நீத்த பேடு தீயன் அந்தவனுக்கான எடுக்கப்பெற்ற கல் இதனை குறிக்கும். 




பென்னிகுயிக் நண்பர் அண்ணல் பேயத்தேவர், கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன் தேவர், மொழிப்போரின் நாயகன் மா. இராஜாங்கம் தேவர் - MP/MLA, 
இந்த மண்ணில் தோன்றிய கள்ளர் குல மாமணிகள்.



சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் தேனி கள்ளர்கள் கணிச மான அளவில் பங்கெடுத்தார்கள். இங்கு உள்ள நிலங்களுக்கு சொந்தக்காரர்கள். 


சிவகங்கை :-

சிவகங்கை நாட்டார் கள்ளர்கள் சிவகங்கையின் பாதிக்கும்க்மேற்பட்ட விவசாய நிலப்பகுதிகளை கொண்டு சீரும் சிறப்புமாக வாழ்கின்றனர். தன்னரசு நாடுகளை உருவாக்கி சிவகங்கை மன்னர்களுக்கு படை உதவி அளித்து பேர் பெற்றவர்கள். இங்கே உள்ள பாகனேரி நாட்டு அம்பலக்காரர் வாளுக்கு வேலி மற்றும் வல்லத்தராயனும் புகழ் பெற்றவர்கள்.






திருநெல்வேலி :-

திருநெல்வேலி தொண்டைமான் பரம்பரையினர் சிறப்பு பெற்றவர்கள், தமிழுக்கு நெல்லை தந்த கொடை தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான். திருநெல்வேலி கள்ளர் குல மக்களின் தலைவராய் இருந்து, பாஸ்கரத் தொண்டைமான் ஆற்றிய பணிகள் பலபல.

தொண்டைமான் சமுதாயத்துக்காகச் செய்த சேவைகளில் எல்லாம் சிறந்தது, குற்றாலத்து மடத்தைத் தங்களது என்று உரிமை கொண்டாடிய குற்றாலநாதரது தேவஸ்தானத்தாரோடு போராடி, நீதிமன்றம் வரை போய் வாதாடி, மடத்தை மக்களுக்கு மீட்டுத் தந்ததே 1944 க்கு முன்னர் குற்றாலத்து மடம் கழுதைகள் அடைகிற மண்டபமாகத்தான் இருந்தது. கவனிப்பார் இல்லாமையால் பாபநாசம் மடம் எல்லாம் பிறர் கைவசம் போய்விட்டது. திருச்செந்தூர் மடமும் குற்றால மடமும் மட்டும் காப்பாற்றப்பட்டன. குற்றாலம் மடத்தை ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் ரீரமணாத்தாரணம் செய்து திறப்பு விழாவும் நடத்தி வைத்தார்.


அந்தத் திறப்பு விழாவுக்கு அரசர் பெருமானின் மைத்துனரான, கல்லாக்கோட்டை ஜமீன்தாரார் விஆர்பிஆர் சிங்கப் புலியாரை வரவழைத்து, ரசிகமணி டிகேசி அவர்கள் தலைமையில் ஒரு பெரிய திறப்பு விழாவும் நடத்தி வைத்தார். சூட் தாக்கல் செய்தார்கள். கேசை, முன்சீப் கோர்ட்டிலும், சப் கோர்ட்டிலும், பின்னர் ஹைகோர்ட்டிலும் வாதாடியவர்கள் தொ.மு.பா. அவர்களே. அத்தனைக்கும் தோன்றாத்துணையாயிருந்து உதவியதோடு தீர்வை செலுத்தப்படாமல் மடம் ஏலத்துக்கு வரும் நிலையில் இருந்தபோது, தொமுபா அவர்கள்தான் செக் அனுப்பி, மடம் ஏலம் போகாமல் காப்பாற்றினார்கள். மடத்திலிருந்து பத்து சென்ட் நிலத்தில் கூத்தர் குடில் என்ற குடிலைக் கட்டி, அதில் வரும் வாடகை, வருமானத்தில் இருந்து வருஷா வருஷம் தீர்வையும் அவர்களே கட்டி வந்த தன் காரணமாக, மடம், தேவஸ்தானத்துக்கோ அல்லது மற்றவர்களுக்கோ போய்விடாமல் அரண் செய்து காப்பாற்றினார். அவர்கள் செய்த சமுதாய சேவைகளில் எல்லாம் தலையாயது இதுதான்



திருச்சி : -

திருச்சியில் பெரிய அளவில் நிலபுலங்களை கைவசம் கொண்டு வாழ்கின்றனர் கள்ளர்கள். இதற்கடுத்து பெரிய அளவில் நிலபுலங்களை வைத்திருக்கும் ரெட்டியார் சமூகம், பிள்ளைமார்கள், நாயக்கர்கள் இருக்கிறார்கள். பிராட்டியூர் திருச்சிக்குத் தெற்கில் ஆறு மைல் தொலைவில் உள்ளது. கள்ளர்கள் மிகுதியாக வாழ்ந்த ஊர்.

திண்டுக்கல், தேனி, நெல்லை, இராமநாதபுரம் பகுதிகளில் வாழும் கள்ளர்களும் கணிசமான விவசாய நிலங்களை கொண்டு, தாங்கள் வாழும் பகுதிகளில் செல்வாக்குடன் உள்ளனர்.




சோழ பாண்டிய மண்டலத்தில் கள்ளர் மக்கள் தொகை 



பிரிட்டிஸ் அரசு மதுரையில் கிபி1763ஆம் ஆண்டு மேலூர் தன்னரசு கள்ளர்களை அடக்குவதற்கு கேப்டன் ரூம்லே என்கிற அதிகாரியுடன் கிட்டத்தக்க 10000 சிப்பாய்கள், குதிரைப் படை வீரர்கள்,கனரக பீரங்கிகளுடன் உள்ளே நுழைந்து போரிட்டது, போரில் கள்ளர் நாட்டு தலைவர்கள் உட்பட ஆண்,பெண்,குழந்தைகள் என்று பாராமல் 5000  பேர்கள் தோட்டங்களுக்கு இரையாக்கினான் கேப்டன் ரூம்லே.

இந்த இனப் படுகொலைகளுக்கு பின்பு கேப்டன் ரூம்லேவின் மேற்பார்வையில் மேலூர் தன்னரசு கள்ளர் நாட்டின் நிலங்களை மதுரை பிரிட்டிஸ் கவர்னர் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறார். அவ்வாறு அளந்து எடுத்த கள்ளர் நாட்டின் நிலம் எவ்வளவு என்றால்.

நஞ்சை : 400 cheys 
புஞ்சை : 20,000 kurkkam

ஒரு Chey என்பது அரை காணிக்கும் அதிகமானது, ஒரு காணி என்பது 1.25 ஏக்கர் ஆகும்.

ஆக ஒரு Chey என்பது 3/4 ஏக்கர் குறிக்கும்.

அப்போதை மேலூர் தன்னரசு கள்ளர் நாட்டின் நஞ்சை (வயல்) மட்டும் கிட்டத்தட்ட 300ஏக்கர் இருந்துள்ளது.

அதாவது 1.21 சதுர கிலோமீட்டர் இருந்துள்ளது.

அதேபோல் 20,000 kurkam நஞ்சை(காடு) இருந்துள்ளது.

ஒரு kurukkam என்பது ஒரு ஏக்கருக்கும் அதிகமானது.

20,000ஏக்கர் நஞ்சை நிலம் என்பது 80.93 கிட்டத்தட்ட 81சதுர கிலோமீட்டர்🤭 பரப்பளவு கொண்டது.

இரண்டும் சேர்ந்து 82சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

தற்போதைய மதுரை மாநகராட்சியின் பரப்பளவே 147.97 சதுர கிலோமீட்டர் என்பது கூடுதல் தகவல்.

ஆக மதுரை வட்டாரத்தின் பாதி பகுதிகள் கிபி1763 க்கு முன்னாள் அனைத்தும் மேலூர் தன்னரசு கள்ளர் நாட்டின் நிலங்கள் என்பது ஆனித்தரமான உன்மையாக உள்ளது.

82சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பளவு என்பது மேலூர் கள்ளர் நாட்டின் நிலம் மட்டுமே.

இதுபோக பிரமலை கள்ளர்களின் 8 நாட்டு நிலங்களையும் சேர்த்தால் மதுரை மீனாட்சியின் பூமி கள்ளர்களின் ஆட்சியில் தன இருந்துள்ளது. சிவகங்கையில் 14 கள்ளர் நாடு உள்ளன என்பது கூடுதல் தகவல்.

புதுக்கோட்டை எனும் ஒரு கள்ளர் மாநிலம் கிபி1947வரை இருந்துள்ளது. தஞ்சையில் 13 கள்ளர் பாளையகர்களின் கீழ்  கம்பீரமாக இருந்துள்ளனர்.






தஞ்சை ஜில்லா 1906

கந்தர்வகோட்டை ஜமீன், கல்லாக்கோட்டை ஜமீன், கோனூர் ஜமீன்







இத்தனை சிறப்பு பெற்றவர்கள் எதற்க்காக குற்றப்பரம்பரை சட்டத்தில் சேர்க்கப்பட்டார்கள் என்பதை வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்.

நன்றி : 
திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார் 
திரு. சோழபாண்டியன் 

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்