திங்கள், 12 மார்ச், 2018

ஆப்பிரிக்காவில் கள்ளர் தொடர்புகள்



தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கள்ளர் குடியியை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சின் முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்தியா என்னும் துணைக் கண்டத்தில் தோன்றிய முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாடு கள்ளர் குடியை சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது. இவருடைய மரபணு தான் இந்தியாவில் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் தோன்றிய பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆதாரம்: //ஸ்பென்சர் வெல்ஸ் தான் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”). இதே தலைப்பில் நேஷனல் ஜியோ கிராஃபிக் தொலைக் காட்சி பட மாகவும் எடுத்துள்ளது.//

வட கிழக்கு ஆப்பிரிக்க  பழங்குடிகளிடம் தான் முதன் முதலில் விருத்த சேதனம் செய்யும் முறை இருந்ததை எகிப்தில் காணப்படும் பழங்கால குகை ஓவியங்களில் இருந்து அறியலாம். 


ஆப்பிரிக்காவில் வசித்து வந்த அதிமனிதனின் மரபணுவில் இருந்து ஒரு குறிப்பிட்ட கூறு, இன்றும் “எம்130ஒய்’ என்கிற மரபணுக் கூறு விருமாண்டி தேவரிடமே உள்ளது. 

தமிழர்கள் பழக்கமான முதுமக்கள் தாழியின் பெரிய வடிவம் தான் பெரும் இடு அல்லது பிரமிடு என்பது, எகிப்து பிரமிடு ஒன்றின் முகப்பில் உள்ள எழுத்து பெயர்ச் சொல்லைக் கண்டுபிடித்தார். அது கந்தன் எனப் படிக்கப்பட்டுள்ளது. எகிப்திய முதல் மக்கள் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று ஆய்வாளர் பிலிண்டஸ் பெட்ரி கூறுவதும், சில ஆய்வுகள் சிந்துவெளி மக்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள். 


எகிப்திய பிரமிடு ல் வளரி




எகிப்தில் உள்ள பெனி-ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களில் காளைப்போர் இடம் பெற்றுள்ளது".

எகிப்து மற்றும் சிந்துவெளி பகுதி மக்களின் ஏறுதழுவல், விருத்த சேதனம், வளரி, மரபணு என்ற எல்லாம் கூறுகளும் கள்ளர்களிடேயே மட்டுமே உள்ளது.


ஆப்பிரிக்காவில், கென்யாவில் வாழும், கிகுயூ (Kikuyu) இன மக்கள் முருகனை தெய்வமாக முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்! "முருங்கு (Murungu) கடவுள்" என்று, பெயர் கூட ஒரே மாதிரி உள்ளது! தமிழர்களின் முருகன், மலைகளில் எழுந்தருளி இருக்கும் குறிஞ்சிக் கடவுள் என்று அழைக்கப் படுகின்றார். ஆப்பிரிக்கர்களின் முருங்கு கடவுளும், மலைகளில் வாசம் செய்கின்றார்.

தன்சானியா (Tanzania,), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும், அங்கு சரளாக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். ஆதிமனிதன் போல் வாழ்கிறார்கள், பண்டமாற்று முறையில் பொருட்களை வாங்குகிறார்கள், விற்கிறார்கள். சிந்தை கவர்ந்த பெண்ணிண் கைபிடித்து மனைவியாக்க புலியின் சிவிங்கிப் புலி) தலையை கொய்து வரவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு. கருங்காலி மரம் கொண்டு கடைந்து எடுத்தாற் போன்ற ஒரு தேகம், கருமை கலந்த நிறம், தொந்தி என்ற பேச்சுக்கே இடமில்லை. குரைந்தது 4 அடியாகிலும் எம்பிக்குதிக்கிறார்கள். 

சாம்பியா, தன்சானியா, கென்யா மூன்றும் எம் நாடு எங்கின்றனர். மருத்துவர்களுக்கு இங்கு வேலையில்லை. எல்லா நோய்களுக்கும் கரும்புச்சாறு, மிளகு, சுக்கு கலந்து கொதிக்க வைத்த பாணம் தான் மருந்து. குடும்பங்களில் 90 வயதுக்கு குறையாமல் ஒருவராவது இருக்கிறார்கள். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. ஓடுவதும் நீண்ட நடைபயணமும் பொழுது போக்கு. சாதம் சமைக்கும்போது பட்டை நீக்கிய கரும்புத்துண்டுகளையும் சேர்த்து சமைக்கிறார்கள்.

பசும்பாலும், சோழத்தை பயிர்செய்து உணவாகவும் கொள்கிறார்கள். மண்ணும் மாட்டுச்சாணமும் கொண்டு கட்டப்பட்ட வட்ட வடிவமைப்பில் 3 மீட்டர் உயரமும்,15 மீட்டர் குறுக்கலவுகள் அமைந்த வீடுகள். வேறு பழங்குடி மக்கள் வைத்திருக்கும் பசுக்களையும் தங்களுடையது என்று உரிமையுடன் எடுத்துக் கொள்கிறார்கள். இதனை திருட்டு என்று யாரும் ஒப்புக்கொள்வதில்லை. பசுக்கள் எங்களுக்காக கடவுளால் படைக்கப்பட்டவை, எமது செல்வமும் இவையே என்றும் உறுதியுடன் கூறுகிறார்கள். உடனிருப்பவர்கள் இறந்து போனால் உடல்களை சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவாக்குகிறார்கள். யார் இவர்கள்? கென்யா நாட்டில் மசைமாறா என்ற பகுதியில் வாழும் கள்ளர்குல மறவர்கள் தான் இவர்கள். அதிகமாணோரின் பெயர்கள் செம்பி, செம்பிலி, (செம்பியண்) கங்கு, (கங்கர்) கண்டியா, (கண்டியர்)ஆய்,  (ஆய்ப்பிரியர்)  ஆவாளி (ஆவாளியார்), விடா, கலியா(கலியராயர்), கரும்பா, நண்டா,  மழவா  (மழவராயர்)  இராடா (இராடர்) கலிங்கா (காலிங்கராயர்) அதியா(அதியமான்) ஆளியா (ஆளியார்) என்று முடிவடைகின்றன.








நன்றி
தன்சானியா டைம்ஸ்
என்றும் பாசமுடன்.
ஜெயராம் இராசகண்டியர் கிருபாகரன்.
சர்வதேச கள்ளர் பேரவை.
இங்கிலாந்து 

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்