சனி, 19 பிப்ரவரி, 2022

குழந்தை களத்தில்வென்றார்

பஞ்சாட்சர மும்மாலை அந்தாதி இயற்றியவர்

சங்கு

சங்கு ஒலி தமிழர் திருமணத்தில் மங்கள ஒலி (கள்ளர், செட்டியார்)

சங்கு ஒலி தெலுங்கர்களுக்கு தீய ஒலியாக கருதப்படுகிறது.





களிமேடு - சைவத் திருமுறை வளர்த்த கள்ளர்கள் வாழும் ஊர்.



களிமேடு தீ விபத்தில் இறந்தவர்கள் இருவரை தவிர மற்ற அனைவரும் கள்ளர் மரபை சேர்ந்தவர்கள்.  சைவத் திருமுறை வளர்த்த கள்ளர்களுக்கு நேர்ந்த, இந்த கொடுமை இனி யாருக்கும் வரக்கூடாது. தமிழக அரசு தேரோட்ட வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவட மின்கம்பிகளாக மாற்றப்படும் என அறிவித்துள்ளது.

களிமேடு கிராமத்தில் வாழும் கள்ளர்கள் திருமுறை திருநாவுக்கரசர் தேவாரம் கற்றவர்கள். 

தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவையொட்டி, களிமேடு கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் பங்கேற்ற திருமறை ஓதும் நிகழ்ச்சி நடந்தது.  100 ஆண்டுகளுக்கு மேலாக திருமறை ஓதுதல் நிகழ்ச்சியை பெரிய கோயிலில் அரங்கேற்றி வருகின்றனர். பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, 10 ஓதுவார்கள் தலைமையில், களிமேடு கிராமத்தைச் சேர்ந்த 40 சிறார்கள் பங்கேற்று திருமறை ஓதினார்கள். 

ராஜராஜன் காலத்திற்கு முன் வாழ்ந்த நால்வர்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர் ஆகியோர் எழுதிய தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட நூல்களிலுள்ள பாடல்கள் திருமறை எனக் கூறப்படுகிறது. 

இந்தத் திருமறையின் மீது ராஜராஜனுக்கு அதீத ஈடுபாடு உண்டு. சிதம்பரம் கோயிலில் இருந்த திருமறைப் பாடல்களை மீட்டு வந்து, பெரிய கோயிலில் வழிபாட்டிற்கு பாடச் செய்தவர் ராஜராஜன். 

இதற்காக சுற்றுப் பகுதியிலிருந்து 400 தலிச்சேரி பெண்களை கோயிலில் தங்க வைத்து தமிழ் கற்றுக் கொடுத்து, இசைக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து, தினமும் மாலை திருமறைப் பாடல்களை பாடச் செய்தார். 

திருமறை மீது ராஜராஜனுக்கு இருந்த ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, பெரிய கோயிலில் சதய விழாவின் போது திருமறை ஓதுவதை வழக்கமாகக் வைத்துள்ளனர். 

சம்பந்தர் பாடியவை 4158 பாடல்கள், நாவுக்கரசர் பாடியவை 3066 பாடல்கள், சுந்தரர் பாடியவை 1026 பாடல்கள். இத்தேவாரப் பாடல்கள் அனைத்தும் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் பெருமுயற்சியால் கிடைத்தன. எனவே அச்சோழ மன்னன் திருமுறை கண்ட சோழன்  -  என அழைக்கப்பட்டான். நம்பியாண்டார் நம்பி இவற்றை எல்லாம் தொகுத்து வகைப்படுத்தினார். 

இதுகுறித்து களிமேடு கிராமத்தைச் சேர்ந்த அம்பிகாபதி கூறியது: 

அப்பர் மீது பற்றுக் கொண்டு களிமேடு கிராமத்தில் அப்பர் மடம் தொடங்கியுள்ளோம். மார்கழி மாத பஜனையின் போது இக் கிராமத்திலுள்ள சிறுவர், சிறுமிகள் திருமறை ஓதியபடி வீதியுலா வருவார்கள். எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய கோயிலில் திருமறை ஓதி வருகிறோம் என்றார் அம்பிகாபதி 

சிவனடியாரான திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயரும் உண்டு. 

தன் மூச்சு இருக்கும் வரை சிவபுகழ் பாடி சிவத்தொண்டு செய்து இறந்த சிவனடியார் திருநாவுக்கரசருக்கு திங்களுர், திருப்புகழூர், திருப்பூந்துருத்தி, தஞ்சாவூர் எனத் தமிழகத்தில் பல்வேறு இடத்தில் கோவில் உள்ளது. இதில் தஞ்சாவூர் களிமேடு என்னும் இடத்தில் உள்ள கோவில் அப்பருக்கு மிகவும் பிரசத்தியான கோயிலாகும். 

பல்வேறு தலங்கள் சென்று சிவபுகழ் செய்த திருநாவுக்கரசருக்கு, மிகவும் சிறப்பாகத் திருவிழா எடுத்துக் கொண்டாடும் சிறப்பு தமிழ் கட்டிட பாரமறியத்தை எடுத்துரைக்கும் தஞ்சையில் களிமேடு என்னும் ஊரில் பல சிறப்புகள் கொண்ட களிமேடு அப்பர் திருத்தலத்துக்கு உண்டு. 

களிமேடு என்னும் இந்த ஊர் தஞ்சையில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் ஆகும். மிகவும் பாரமரியமான இந்த திருத்தலம்  அப்பருக்கு சித்திரை மாதத்தில் திருவிழா கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு வருடமும் சித்திரை சதய நாளில் அப்பருக்கு குரு பூஜை செய்து மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும். சுற்றுவட்டார மக்களுடன் ஆனந்தமாக சிவத்தொண்டு செய்த சிவனடியாருக்குச் செய்யும் பாக்கியமாகக் கருதி இந்த விழா கொண்டாடப்படுகிறது. அலங்காரம் கொண்டு அப்பர் வரும் இத்திருவிழா சதய விழா என்று அழைக்கப்படும். இந்த ஆலயத்திற்கு அருகில் இருக்கும் 100 வருடப் பழமையான மடம், உயிர்க்கொலை பாவத்தைத் தடுக்க உருவாக்கப்பட்டு அப்பர் மடம் என்றாகியது. 

இங்கு அமைந்துள்ள அப்பர் பெருமானின் 300 வருட ஓவியத்திற்குச் சிறப்பு குரு பூஜை செய்யப்படுவது






வழக்கமாகும், அதன்பின் அப்பரின் உருவச் சிலை தேரில் வைத்து ஊர்வலமாக வந்து திருவிழா நடக்கும். இன்று முற்றிலும் எரிந்து போய்விட்டது.





மன்னார்குடி எம்.ஜி. நடராஜபிள்ளை

மன்னார்குடி எம்.ஜி. நடராஜபிள்ளை என்ற எம்.ஜி. நடராஜ தென்கொண்டார்

த்தனையோ பேருக்கு வாழ்வு கொடுத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், சினிமாவில் அவரது முன்னேற்றத்துக்கு தடம் போட்டுத் தந்தவர் மன்னார்குடி எம்.ஜி.நடராஜபிள்ளை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

சினிமாவில் எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடும் அழகே தனி. லாவகமாக அவர் கம்பு சுற்றுவதையும் வாகாய் வாள் வீசுவதையும் ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இந்தக் கட்டுரைக்கும் எம்.ஜி.ஆரின் கத்திச் சண்டைக்கும் சம்பந்தம் இருக்கிறது.

எம்.ஜி.நடராஜபிள்ளை

திரைத் துறையில் எம்.ஜி.ஆர். அவ்வளவாய் பிரபலமாகாத காலம் அது. அப்போது மன்னார்குடி எம்.ஜி.நடராஜபிள்ளை, நாடகத்திலும் சினிமாவிலும் பிரபலமான நடிகர். ஏராளமான புராண, சமூக நாடகங்களில் நடித்தவர். தனது நடிப்பின் மூலமாக சுதந்திர வேட்கையை ஊட்டிய இவர், விடுதலைப் போராட்டங்களில் பங்கெடுத்ததால் சிறைக் கொட்டடிகளையும் பார்த்த வீரத் தியாகி.

மேடை நாடகங்கள் காலாவதியாகி சினிமாவாக பரிமாணம் பெற்றபோது அங்கேயும் எம்.ஜி.நடராஜ பிள்ளை ஜொலித்தார். சதிசுலோச்சனா, மகாபாரதம், தட்சயஞ்ஞம் ஆகிய படங்களில் நடித்து சினிமாவிலும் பெரும் புகழை அடைந்தார் நடராஜபிள்ளை. ‘தட்சயஞ்ஞம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் படத்தில் துணை நடிகராக நடித்தார் எம்.ஜி.ஆர்.

மது அருந்த மறுத்தார்

அப்போது, ‘தட்சயஞ்ஞம்’ படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டன. படப்பிடிப்புக்காக நடராஜபிள்ளையும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். அது ஒரு குளிர்காலம். கொல்கத்தாவில் கடும் பனி பெய்தது. அந்த சீதோஷ்ண நிலை நடராஜபிள்ளைக்கு ஒத்துக் கொள்ளவில்லை. சளியால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டார் எம்.ஜி.நடராஜபிள்ளை. அப்போது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை. அதனால், ஆபத்துக்கு பாவமில்லை என்று சிறிதளவு மது எடுத்துக் கொண்டால் பிள்ளையைக் குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.


ஆனால் நடராஜ பிள்ளையோ, மது அருந்த மறுத்தார். ‘போதை வஸ்துவாக நினைக்காமல் மதுவை மருந்தாக அருந்துவதில் தவறேதும் இல்லையே’ என்று உடன் நடிப்பவர்கள் சமாதானம் சொன்னார்கள். ஆனாலும், ‘மது அருந்தாமையை கொள்கையாக கடைபிடிப்பவன் நான். இப்போது மதுவால் காப்பாற்றப்படும் எனது உயிரை பிறகு எனது மன உறுத்தலே சாகடித்துவிடுமே’ என்று சொல்லி மதுவை குடிக்க மறுந்தார் நடராஜபிள்ளை. அவரது உடல் நிலை குறித்து கவலைப்பட்ட எம்.ஜி.ஆரும் நடராஜ பிள்ளைக்கு ஆறுதலும் தேறுதலும் கூறினார்.

இந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் ஓரளவுக்கு உடல் நலம் தேறினார் எம்.ஜி.நடராஜபிள்ளை. அப்போது தன்னைப் பார்க்க வந்த எம்.ஜி.ஆரிடம், ‘நான் தோற்றுவிட்டேன்’ என்று சொல்லி புலம்பினார் பிள்ளை. இடைப்பட்ட அந்த இரண்டு நாளில் என்ன நடந்தது என்பது இதுவரை வெளியில் தெரியாத ரகசியம்.

இதைத் தொடர்ந்து, ‘தட்சயஞ்ஞம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்து, படமும் சக்கைப் போடு போட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அதே பி.எல்.சுமேகா மெட்ரோ பாலிடன் பிக்சர்ஸ் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டது. அதில், கதாநாயகன் மச்சீந்திராவாக எம்.கே.ராதாவும், வில்லன் சூரியகேதுவாக எம்.ஜி.நடராஜபிள்ளையும் ஒப்பந்தம் ஆனார்கள். இதில், முதல் காட்சியிலேயே கொலையுண்டு இறக்கும் விசாலாட்ச மகாராஜா கதாபாத்திரம் எம்.ஜி.ஆருக்கு!

ஆனால், இதன் படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்ட எம்.ஜி.நடராஜபிள்ளை (27-06-1938) மரணத்தை தழுவினார். இதனால், மாயா மச்சீந்திராவில் பிள்ளை ஏற்கவிருந்த கதாபாத்திரம் எம்.ஜி.ஆருக்கு தரப்பட்டது. தான் எழுதிய, ‘நான் ஏன் பிறந்தேன்’ சுயசரிதையில் இதையெல்லாம் விவரித்திருக்கும் எம்.ஜி.ஆர், ‘சினிமாவில் கத்திச் சண்டை போட்டு நடிக்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய கனவு. என் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்த எம்.ஜி.நடராஜபிள்ளை தனது மரணத்தின் மூலமாக அந்த வாய்ப்பை முதன் முதலில் எனக்குத் தந்தார். அதனால் நான் சினிமா துறையில் புதுவாழ்வு பெற்றேன்’ என்று நெகிழ்ந்து போய் சொல்கிறார்.

எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாக்கள் எடுக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் இதையெல்லாம் நினைவுகூர்ந்த எம்.ஜி.நடராஜபிள்ளையின் பேரன் நடராஜன், காங்கிரஸ் ஆட்சியில் மன்னார்குடியில் ஒரு தெருவுக்கு தாத்தாவின் பெயரைச் சூட்டினார்கள். மன்னை நாராயணசாமி அமைச்சராக இருந்தபோது தாத்தாவை கலைமாமணியாக அங்கீகரித்து விருதை எங்களது பாட்டி ஜானகி அம்மாளிடம் கருணாநிதி வழங்கினார்.


சிலை வைக்க வேண்டும்

ஆனால், எம்.ஜி.ஆருக்கு அணுக்கத் தோழராக ஒருவர் இங்கு வாழ்ந்தார் என்பதே எம்.ஜி.ஆர் விசுவாசிகளுக்கு தெரியவில்லை” என்று சொன்னவர், “தாத்தாவின் புகழ் நிலைத்திருக்க அவருக்கு மன்னார்குடியில் அரசு சார்பில் சிலை வைப்பதுடன் எங்கள் தெருவிலுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தாத்தா பெயரை சூட்ட வேண்டும்” என்று சொன்னார்.

மன்னார்குடி நடராஜபிள்ளை தெரு என்று இப்பொழுதும் அவர் நினைவாக உள்ளது.



சஞ்சீவிராயசுவாமி கோயிலுக்கு பீடப்பட்டி என்ற ஊரை மானியம்

மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் சஞ்சீவிராயசுவாமி கோயிலுக்கு பீடப்பட்டி என்ற ஊரை மானியமாக வழங்கினர்.





திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளை

திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளை என்ற திவான் பகதூர் சரவண பவானந்தம் அமரக்கொண்டார்.



மன்னார்குடி விடுதலை போராட்ட வீரர் நடராஜபிள்ளை என்ற நடராஜ தென்கொண்டார், தமிழின் முதல் மருத்துவ அகராதியை தந்த மேதை "டி.வி.சாம்பசிவம் பிள்ளை என்ற டி.வி.சாம்பசிவம் மண்ணையார், நாகூர் தர்காவிற்கு பழனியாண்டி பிள்ளை சத்திரம் கட்டி தந்த பழனியாண்டி பிள்ளை என்ற பழனியாண்டி தொண்டைமான் வரிசையில் சரவண பவானந்தம் பிள்ளை என்ற திவான் பகதூர் சரவண பவானந்தம் அமரக்கொண்டார். தஞ்சையில் சில புகழ் பெற்ற கள்ளர்கள் சில 19 , 20 ஆம் நூற்றாண்டில் தங்கள் பட்டங்களை விடுத்து பிள்ளை என்று போட்டுக்கொண்டனர் . அதில் கரந்தட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர்கள் அதிகமா பிள்ளை பட்டத்தை பயன்படுத்தினர்.

தஞ்சை கரந்தட்டாங்குடியில் வாழ்ந்த திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளையவர்களின் தந்தை முத்துசாமி பிள்ளை என்னும் முத்துசாமி அமரக்கொண்டார், தாய் சந்திரமதி. சிறு வயதிலேயே
நல்ல குணங்களுடன் வளர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கினார். உயர்கல்வி பயின்றார். வழக்கறிஞராக விரும்பி இங்கிலாந்து சென்று படிக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் வைதிக மதப்பற்றுள்ளவராகிய இவரது அன்னையார் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் அயல் நாடு போகவில்லை.

அந்நாளில் நகரகாவற்படையின் உயர் அதிகாரி(போலீஸ் கமிஷனர்) கர்னல் டி.வெல்டன் ஸி.ஐ.இ என்பவர், கல்வியில் சிறந்த இவரை நகரகாவற்படையில் சேர்க்க விரும்பினார். போட்டி பரீட்சை ஒன்றை வைத்தார். அதில் எழுதியவர்களில் முதன்மையாய் தேறிய இவரை தாம் புதிகாக ஏற்படுத்திய குற்றவர்த்தமான விசாரணை வகுப்பில்(criminal intelligence department) தமது நேர்முக காரியஸ்தராக (உதவியாளராய்) நியமித்தார்.
பவானந்தம் பிள்ளை, தான் மேற் கொண்ட பணியில் பலரும் வியக்கும் வண்ணம் புகழ்பெற்றார்.அவர் தமது பணியில், மனம் தடுமாறாமை, நேர்பட ஒழுகல், நிர்வாக சாதுரியம் ஆகியபண்புகளுடன் விளங்கினார்.
இவர் சட்ட நூல்களை ஆராய்வதில் ஏற்பட்ட பெரும் விருப்பத்தால் அவற்றை நன்கு ஆய்ந்துணர்ந்த சட்ட அறிஞ்ராவர். சட்ட நூல்களை ஆராய்ந்து F.L ,B.L , சட்டப்பரீட்சை எழுதுபவர்களுக்காக 30 நூல்களை எழுதிப் பதிப்பித்துள்ளார்.

1904 ஆம் ஆண்டு முதல் 1912 வரை சென்னை நகரக் குற்ற வர்த்தமான விசாரணை வகுப்பு தலைவராக இருந்திருக்கிறார்.

வேல்ஸ் இளவரசரும், இளவரசியும் வந்தபோது மெய்காப்பாளராக இருந்து திறம்பட செயலாற்றியதால், விருது, பதக்கம் ஆகியவற்றை இளவரசரிடம் இருந்து பெற்றார். மிண்டோ பிரபுவும், ஹார்டிஞ்சு பிரபுவும் சென்னையில் தங்கியிருந்த போது அவர்களுக்கும் மெய்காப்பாளராய் இருந்து பாராட்டுப் பெற்று இருக்கிறார்.

32 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தமை பற்றி பத்திரிக்கையில் இவரை புகழ்ந்து இருக்கிறார்கள். 1908 இல் உதவி ஆணையராகவும் (A. C), 1918 இல் காவல்துறையின் சென்னைத் துணை ஆணையராகவும் (D. C.) பணியாற்றியவர். இவர்தம் கடமையுணர்வையும், ஒழுங்கினையும் போற்றி, ஆங்கிலவரசு இவருக்குத் "திவான் பகதூர்" என்ற பட்டத்தை வழங்கியது.

இவர் சென்னை ஷெரிப்பாயும் விளங்கினார். நாட்டுமக்களின் நலம் கருதி பற்பல தொண்டுகள் ஆற்றி இருக்கிறார். அதனால் அவரை ’பரோபகாரப் போலீஸ் உத்தியோகஸ்தர் “எனப்பாராட்டி இருக்கிறார்கள்.

தமிழறிவுடன் ஆங்கில அறிவும் பெற்றவர். வேப்பேரியில் தௌடன் பேருந்து நிலையம் அருகில் பவானந்தர் கழகம் (Bavanantham Academy) உருவாக்கியவர். இந்நூலகத்தில் நாற்பதாண்டுகளாக இவர் சேமித்த நூல்கள், ஓலைச்சுவடிகள், கையெழுத்துப்படிகள் பாதுகாக்கப்படுகின்றன. சட்டத் தேர்வுக்குப் பயன்படும் வகையில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இதன் வளர்ச்சிக்காகவும், தொண்டுகளுக்காகவும் தாம் ஈட்டிய பொருளை உயில் எழுதி அர்ப்பணம் செய்து இருக்கிறார். இவர் ஏற்படுத்திய கழகத்தின் நோக்கம் பலதுறைகளில் ஆராய்ச்சியும், பொது ஜன நன்மைக்கான ஞானத்தையும், கல்வியையும், நீதிநெறியிலும், உடற்கூற்றுத் துறையிலும் மக்களிடையிற் பரப்புதலும் ஆகும்.

இவரால் நிறுவபட்ட நூல்நிலையத்தில் 40 ஆண்டுகளாய் (1941ல்)இவரால் தொகுக்கப்பெற்ற பல்லாயிரம் நூல்கள், ஏட்டு வடிவிலும் கையெழுத்திலும் அச்சிலும் அமைந்தவை.தமிழ் நூல்கள் பலவற்றை இவர் பல வகைக் குறிப்புகளுடனும் ஆராய்ச்சி முகவுரைகளுடனும் பதிப்பித்து வெளியிட்டு தமிழுலகத்திற்கு தொண்டாற்றியிருக்கிறார்.

தமிழிலக்கணங்களில் தொன்மை வாய்ந்தனவும், சிறந்தனவுமாகிய தொல்காப்பியம் பொருளதிகாரம், (நச்சினார்க்கினியர் பேராசிரியர் உரையுடன்), யாப்பருங்கல விருத்தியுரை, இறையனாரகப்பொருளுரை , பேரகத்தியத்திரட்டு, இராமானுச கவிராயர் சங்கர நமச்சிவாயப் புலவர், சிவஞான முனிவர் முதலிய உரையாசிரியர்களின் உரைகளைத் தழுவி எழுதப்பட்ட நன்னூல் காண்டிகையுரை முதலியவற்றை இவர் தம் பொருளைக் கொண்டு வெளியிட்டிருக்கின்றார்.

பவானந்தர் கழகம் சார்பில் பேரகத்திய விருத்தி, தொல்காப்பியம் – பேராசிரியர், நச்சினார்க்கினியர் உரை, யாப்ருங்கல விருத்தியுரை, பழைய உரைகளைத் தழுவி நன்னூலுக்கு உரை, வீரசோழியம், நம்பியகப்பொருள், இறையனார் களவியல் உரை ஆகிய நூல்கள் தரமான அச்சில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியில் பவானந்தருக்கு உற்றுழி உதவும் அறிஞர் குழு துணைசெய்துள்ளமையை இங்கு நினைத்தல் தகும். கா.ரா.கோவிந்தராச முதலியார், மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை உள்ளிட்டோர் இம்முயற்சியில் துணைநின்றுள்ளனர். நாடகவியல் விளக்கம், பரதசாத்திர விளக்கம், வேதாந்த சித்தாந்த தத்துவ ஞானம், நீதிக் கவித்திரட்டு முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். அரிச்சந்திரன், காணாமற் போன கணையாழி, பாதுகாப் பட்டாபிசேகம், சகுந்தலை உள்ளிட்ட நூல்களும் இவர்தம் படைப்புகள் என்று அறியமுடிகின்றது (வாழ்வியற் களஞ்சியம்,தொகுதி:12, பக்கம் 191). தமிழ் ஆங்கில அகராதி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இவரால் இயற்றப்பட்ட நாடகங்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் பல. இவர் இயற்றிய நாடகங்கள் இலண்டன் மாநகரத்தில் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி, மேரி மகாராணியார் முன்னிலையில் நடித்துக் காட்டப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழக்த் திராவிட வாசக சங்கத்திற்குத் தலைவராயும் பல்கலைக் கழக அதிகாரிகளால் நியமிக்கப் பட்ட திராவிடச் சொற்றொடராக்கச் சங்கத்தின் அங்கத்தினாராயும் இருந்திருக்கிறார். தென்னிந்திய ஆராய்ச்சிக் கழகத்தின் சபாநாயகருக்குப் பிரதிநிதியாய் இருந்திருக்கிறார். இவர் இயற்றிய நூல்களில் பல பல்கலைக் கழகச் சார்பில் நடைபெறும் கல்லூரிகளின் மாணவர்களுக்கும் உயர்தரப் பாடசாலைகளிற் பயிலும் மாணவர்களுக்கும் பாட புத்தகங்களாக இருந்தன.. இவர் இயற்றிய வாசக பாடங்கள் இளஞ்சிறார்களுக்கு பயன்பட்டு வருகின்றன.

இவர் தலைவராயும், அங்கம் வகித்து தொண்டாற்றிய கலைக் கழகங்களும் சபைகளும் பலவாகும். இவருடைய பக்திமிகுந்த பரிசுத்தமான பிரம்மசரிய வாழ்க்கையும், இனிய குணமும், சிறந்த கலையுணர்வும், வசீகரத்தோற்றமும்,, வணங்கிய வாக்கும், நுணங்கிய கேள்வியும், இவரை எவரும் விரும்பிப் பாராட்டும் பண்புகளாயிருந்தன.’கற்றோருடன் கலந்துரையாடி மகிழ்வதிலும் பேரின்பம் வேறில்லை; என்னும் கருத்துடன் இப்பெரியார் வாழ்ந்து வந்தமையின் , புலவருங் கவிஞரும் போற்ற வாழ்ந்தவர்,

அறிஞர் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை பவானந்தம்பிள்ளையைப் போற்றிப் பாடிய பாடல்:-
கண்டவர் வியக்கும் கவினுறு வடிவும்
கலைதெரி புலமையும் சீர்சால்
தண்டமிழ் மொழியில் ஆர்வமும் அதனைத்
தழைத்திடச் செய்தலின் விருப்பும்
கொண்டநற் பெரியோய்! சரவண பவானந்
தன்னெனும் கோதிலாய்! கருத்தின்
எண்டகு மிந்நூற் பதிப்பினை யீந்தேன்
ஏன்றருள் உரிமையா இனிதே.

தமிழுக்கு அருந்தொண்டாற்றிய பவானந்தம் பிள்ளை,1932-ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி இம்மண்ணுலகிலிருந்து மறைந்தார்.




தமிழின் முதல் மருத்துவ அகராதியை தந்த மேதை "டி.வி.சாம்பசிவம் மன்னையார், துரைக்கண்ணு அம்மையாரை மணம் செய்து கொண்டார். துரைக்கண்ணு அம்மையாரின் தாய்மாமன் சென்னை நகரப் போலீஸ் துணை ஆணையாளராக விளங்கிய ச. பவானந்தம் பிள்ளை ஆவார். இவர் மூலம் சென்னை நகரக் காவல் துறை ஆணையாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்கமர்ந்த சாம்பசிவம் மன்னையார், 1907இல் துணை ஆய்வாளராக்கப்பட்டார்.

(பாரதியின் 'இந்தியா' பத்திரிகைக்கு எதிரான வழக்கையும் விசாரணையையும் நடத்தியவர் இவர்.)

சரஸ்வதி மகால் ஒரு கண்ணோட்டம்

தஞ்சையின் அரண் கள்ளர் மரபினர்

பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து 1659 ல் தஞ்சையை காத்து நின்றவர்கள். தஞ்சை நீர்வளம், உறுதியான பெரும்சேனையால் பாதுகாக்கப்படுகிறது. 

நூல் : சரஸ்வதி மகால் ஒரு கண்ணோட்டம்






வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்