திங்கள், 12 மார்ச், 2018

வீரக்குடி கள்ளர் நாடு

ஐயா வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தில் வீரக்குடி கள்ளர் நாட்டின் முதற்கரை வாண்டான் விடுதி, நாட்டின் பொதுத்தலம் திருமணஞ்சேரி ஆகும்.

வீரக்குடி நாடு தனது பெயரிலேயே வீரம் தாங்கிய பூமி. வீரக்குடி கள்ளர் நாடு ஒரு காலத்தில்‌ ராஜராஜ வளநாடு புன்றில் கூற்றம்   என அழைக்கப்பட்டது. 


வீரக்குடி நாட்ட்டில் உள்ள முதன்மையான ஊர்கள் சில

திருமணஞ்சேரி
வாண்டான் விடுதி , 
கருக்காக்குறிச்சி, 
வாணக்கன்காடு
பெரியவாடி
பட்டத்திகாடு


முதற்கரை 

வாண்டான் விடுதி 

வாண்டையார் பட்டம் உடையவர்கள்

அடுத்த அடுத்த கரைகார்ர்களாக வடக்குதெரு, தெற்குதெரு, கீழ தெருவில் உள்ளவர்கள் வருகிறார்கள்.

இருக்களார்
வாச்சார்
வாணக்கர்
தேவர்
மாதுரார்

பட்டம் உடையவர்கள் உள்ளனர்.





இந்த மண்ணின் மைந்தர் கரை படியாத செம்மல் ஐயா SC சுவாமிநாதன் தேவர் 1991 ஆம் ஆண்டு புதுக்கோட்டை MLA வாக காங்கிரஸ் கட்சியில் நின்று வெற்றி பெற்றார்.

புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. 



பொன்னன்விடுதி, வீரக்குடி நாட்டுக்கள்ளர்களுக்கும், பொன்னபன்றிகுட்டி நாட்டுக்கள்ளர்களுக்கும் பாத்தியப்பட்ட ஊர். இவ்விரு நாடுகளும் வாராப்பூர் நாட்டின் உள்நாடுகள் (Manual of Puthukottai;Vol.2. Part 2 Page:971). 


திருமணஞ்சேரி

திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாகவும். இந்த ஊர் பெயர் கோவில் காடு என்று அழைக்கப்பட்டது.


இந்த கோயில் கல்வெட்டில் விசையபாலன் சென்னண்டார்  என்பவரிடம் கொண்ட நிலத்தினை பற்றி உள்ளது. சென்னண்டார் மரபினர் கள்ளராகவே இன்றும் உள்ளனர்.











இக்கோயிலில் சிவன் சுயம்புலிங்கமாக அருள் தருகிறார். பொதுவாக சிவாலயங்களில் நந்தி தேவர் கோவிலுக்குள் கொடிமரம் அருகில் இருப்பார் ஆனால் இத்தலத்தில் ராஜகோபுரம் அருகில் இருப்பது சிறப்பு.

மேலும் இது ஸ்தல விருட்சம் இல்லாத சிவாலயம் என்ற சிறப்பு பெற்றது. இக் கோவிலில் இருந்து சங்கு ஒலி கேட்கும் தூரத்தினுல் கிணறு வெட்ட முற்பட்டால் தடைபடும் என்பது ஐதீகம்.

தீராத வியாதிகளை இக்கோயில் இறைவன் தீர்த்துவைப்பான் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. நவக்கிரக தோஷ நிவர்த்தித் தலமாகவும் உள்ளது. 

சித்திரை, வைகாசி, ஆடி, மார்கழி, தை, மாசி போன்ற மாதங்களில் விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. 

இக் கோவிலில் வழிபடுபவர்களுக்கு திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அதனால்
இக்கடவுளுக்கு திருமணநாதர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

நெய்வேலி எட்டு குடி அரையர்கள் கோயிலுக்கு நிலங்கள் வழங்கியுள்ளனர். 






நெய்வேலி ஊரில் கள்ளரில் 12 கரைகள் உள்ளனர். ஊரின் அம்பலகாரர் கலியராயர் பட்டம்

செல்லங் கலியராயர்
மாச்சான் கலியராயர்
வெள்ளை யானை கலியராயர்
பச்சையன் கலியராயர்
பட்டயன் கோயில் வகையறா
ஆவா மன்னவேளார்
நவனப்ப மன்னவேளார்
திருவ மழவராயர்.
சித்த மழவராயர்
அடைக்க மழவராயர்


கரையினர் மரபினர் உள்ளனர்.

நெய்வேலி மருதப்பா கபாடி கழகம் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி நடைப்பெறும்.

கருக்காக்குறிச்சி



கருக்காக்குறிச்சி ஸ்ரீவீரையாசுவாமி, ஸ்ரீசெல்லியம்மன்சுவாமி கோயில் பாலி எடுக்கும் திருவிழா











வீரக்குடிநாடு பெரியவாடி கிராமத்தில் முருகன் கோவில் திருவிழாவில் வள்ளி திருமணம் நாடகம்



வீரக்குடி நாட்டார்களால் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு









நன்றி: திரு. ராம. சுந்தர் ராஜ் இருங்களார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்