சனி, 12 டிசம்பர், 2020

ஐஎன்ஏ வில் கள்ளர்கள்

ஐஎன்ஏவின்_கதாநாயகர்கள்




ராஜ் பிஹாரி போஸ் என்பவரால் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட மக்கள் படையானது, கிபி1943ல் வெள்ளையர்களை அவர்கள் போக்கிலே எதிர்த்து நின்று வெல்ல வேண்டும் என்ற தீவிர சிந்தாந்தத்தில் இருந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் இந்த மக்கள் படை முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.

இந்த படையில் பெரும்பான்மையாக சேவை புரிந்தவர்கள் சீக்கியர்கள்,தமிழர்கள்,கூர்க்கர்கள்,இஸ்லாமியர்கள்

இந்த தமிழர்களில் பெரும்பாலானோர் தஞ்சை,மதுரை,சிவகங்கை,இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிபி1920களில் சிங்கப்பூர்,மலேசியா,பர்மா,இலங்கை புலம் பெயர்ந்த சென்ற தமிழர்கள். நாட்டின் விடுதலைக்காக, நேதாஜியின் சிந்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு INAவில் சேவையில் இறங்கினர்.

இந்த INAவில் சிறப்பு படைப்பிரிவும், நேதாஜி அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் SS Group எனப்படும் "intelligent bureu"வில் நிறைய தமிழர்களே பணியாற்றினர்.

10க்கும் மேற்பட்ட தேசிய மொழிகள்,5க்கும் மேற்பட்ட உலக மொழிகளிலும், களரி,வர்மம் உள்ளிட்ட போர் கலைகள், வலியை தாங்கி ரகசியங்களை பாதுகாத்தல், நவீன ஆயுதங்களை கையாளுதல், உளவியல், நடத்தை உளவியல், குழு உளவியல், என கை தேர்ந்தவர்கள் மட்டுமே பணிபுரிய முடியும்.

INAவில் இருந்து பல ஆயிரம் வீரர்களின் தியாகத்தின் மத்தியில் "INAவாளும்,உலக இராணுவம்,இந்திய அரசாங்கத்தால்"

Battles and operations of the Indian National Army என்கிற வெள்ளையர்களுக்கு எதிரான ஆயுத போரட்டத்தில் "22வீரர்களின் உயிர் தியாகம் மற்றும் சேவைகளை போற்றி" அவர்களை இந்திய இராணுவத்தின் கதாநாயகர்கள் என்று பெருமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் தஞ்சை மாவட்டம் திருமங்கலகோட்டையை சேர்ந்த இராமசாமி ஓந்திரியர் அவர்கள் " 
ஆரம்ப காலத்தில் மலேசியாவில் பிரிட்டிஸ் ஆர்மியில் பணிபுரிந்து பின்பு, INAவில் சேர்ந்து நேதாஜியின் உளவுத்துறையான S.S group intelligent wingல் உளவாளியாக சேவைபுரிந்து வந்தார். பின்பு ஒரு முக்கியமான special intelligent assignmentக்காக மையப்புள்ளியாக செயல்பட , இந்தியாவிற்கு வருகை புரிந்து assignment செயல்படுத்திய போது, பிரிட்டிஸ் ஆர்மியால் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

அதேபோல இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமு தேவர் அவர்கள் பினாங்கில் ஜுனியர் கேம்பிரிட்ஸ் பள்ளியில் படித்து பிரிட்டிஸ் ஆர்மியில் பணியாற்றி, பின்பு INAவில் சேர்ந்து நேதாஜியின் S.S group intelligent wingல் உளவாளியாக பணியாற்றி வந்தார். இதனை அறிந்த பிரிட்டிஸார் "பிரிட்டிஸ் மன்னருக்கு எதிராக போரை தூண்ட முயற்சித்த குற்றத்திற்காக தூக்கிலிப்பட்டார்.

நாட்டை நேசிக்கும் இன்றைய இந்திய இளைஞர்களின் நெஞ்சில் குடியிருக்கும் INAவும்,நேதாஜியும் அவர்தம் சிந்தாந்தத்தில் கதாநாயகர்களாக அடையாளப்படுத்தப்பட்ட 22வீரர்களில் இரு தமிழர்கள் இருப்பது இவ்வினத்தின் அழியா பெருமையே.

Every Indian should  stand and royal salute to those intelligent shadow gosts, who were served  for INA SS group intelligent wing 🙏

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு





வெள்ளி, 11 டிசம்பர், 2020

சந்திரசேகரன் மழவராயர்




இன்று தஞ்சை மாவட்டம், பூதலூரில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தன்னுடைய 2 ஏக்கர், 17 சென்ட் நிலத்தை தானமாக அளித்தவர் "கொடைவள்ளல் திரு.க.சந்திரசேகரன் மழவராயர்" அவர்கள் புதுப்பிக்கப்பட்ட இச்சிலையை திறந்து வைத்தவர் திரு.C.R. கலியமூர்த்தி மழவராயர் அவர்கள்.. 

இச்சிலையை நிறுவியர்

 திரு.அய்யாராஜ் கண்டியர் அவர்கள்!!!


மிகவும் பின்தங்கிய பகுதியான பூதலூரில் ஏழை, எளிய மக்களுக்கு கல்வி அறிவை புகட்ட தன்னுடைய நிலத்தை தானமாக அளித்த கொடைவள்ளல் சந்திரசேகரன் மழவராயர் அவர்கள் இன்றும் நம்மோடு வாழ்கிறார் அவரால் கல்வி பெரும் மாணவர்கள் மூலமாக. ஆயிரம் அன்னதானங்கள்,கோவில்களை எழுப்புவதை காட்டிலும் புண்ணியமாம் ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.





காடவராய சகோதரிகள்


சாதிக்க வயது ஒரு தடையில்லை. சிறுவயதிலும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை குவித்து உலக சாதனை புரிந்த சகோதரிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.


சிவகங்கை  மயில்ராயன் கோட்டை நாடு  அலவாக்கோட்டை கிராமம் ஆறு.சுப்பையா காடவராய அம்பலம்( எ) சுப்பிரமணியன்-மணிமேகலை கிருஷ்ணம்பட்டி ச.கதிரேசன்ததேவர்-சாரதா அவர்களின் பேத்தி சுப.சரவண செல்வம் காடவராய அம்பலம், நித்யா தம்பதி மகள்கள் எஸ்.கயல்விழி, எஸ்.கீர்த்தனா பெரியநாயகி. இதில், கயல்விழி 9ம் வகுப்பு படிக்கிறார். பள்ளி படிப்பின் போதே பொது அறிவில் சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்பட்டு வந்தார். முதன் முயற்சியாக கணிதத்தில் உள்ள 118 குறியீடுகளை பின்னால் இருந்து வேகமாக எழுதும் பழக்கத்தை துவக்கினார். தொடர் முயற்சியால், 1 நிமிடம் 32 வினாடியில் இச்சாதனையை முறியடித்து, இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்து, தங்கபதக்கம் பெற்றார். மருத்துவத்தில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு அதற்கான படிப்புகளில் அதிக கவனம் செலுத்தினார். அதன் பயனாக திரையில் மருத்துவம் சார்ந்த படங்களை வேகமாக வெளியிடும் போது அதை பார்த்த நொடியில் அத்துறை சார்ந்த படிப்புகளை தெரிவித்து விடுகிறார். அந்த வகையில் 30வினாடியில் 38 மருத்துவ படிப்புகளின் துறைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

தைவானில் உள்ள ஆசியா புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் 48 நாடுகளுக்கிடையே நடத்திய சாதனையாளர் போட்டியில் பங்கேற்ற இம்மாணவி பிளாட்டினம் பதக்கம் பெற்றார். தினமலர் நாளிதழ் சார்பில் பள்ளி மாணவர்களுக்கென நடத்திய 'நாசா' செல்வதற்கான வினாடிவினா போட்டியில் 'தினமலர்' பதக்கத்தை வென்றார். இது போன்று பல்வேறு சாதனைகள் மூலம் கின்னஸ் சாதனை பெற முயற்சித்து வருகிறார்.

இவரது சகோதரியான எஸ்.கீர்த்தனா பெரியநாயகி 6ம் வகுப்பு படிக்கிறார். இவரும் முதற்கட்ட சாதனையாக நாட்டின் கொடிகள் பற்றிய படங்களை வேகமாக காண்பித்த நொடியில், அது எந்த நாட்டு கொடி என சொல்லிவிடுவார். அந்தளவிற்கு நாடுகளின் கொடிகள் குறித்து அதிகளவில் விபரங்களை சேகரித்துள்ளார்.

இந்தியா புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் நடத்திய போட்டியில் 30 வினாடியில் 58 நாட்டின் கொடிகளின் பெயர்களை தெரிவித்து சாதனை புரிந்தார்.

இவருக்கு அந்நிறுவனம் தங்கபதக்கம், பரிசு வழங்கி சிறப்பித்தது. சகோதரிகள் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது முயற்சிக்கு பெற்றோர் பெரிதும் உதவி வருகின்றனர்.




























இவர்களை பாராட்ட 96883 42121.

துளசி அய்யா வாண்டையார்

 

துளசி அய்யா வாண்டையார்: உதவ முன் வந்த ஒபாமா.. வியந்த அப்துல்கலாம்! -சோகத்தை ஏற்படுத்திய இழப்பு


துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

காந்தி கொள்கையில் கெட்டியாக இருந்ததால் கடைசி வரை கதர் ஆடை மட்டுமே உடுத்தி வந்தார். காந்தி வெள்ளிக் கிழமையில் சுட்டுக் கொல்லப்பட்டதால் அன்றைய தினம் முழுவதும் மெளன விரதம் இருப்பதை கடைசி வரை கடைபிடித்தவர் உயிழந்த துளசி அய்யா வாண்டையார்.

தஞ்சாவூரின் பாரம்பர்யமிக்க குடும்பத்தை சேர்ந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தனது கல்லூரி மூலம் கல்வி பயில வைத்து ஏழை மாணவர்களின் வாழ்கையில் ஒளி ஏற்றியவருமான துளசி அய்யா வாண்டையார், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்திருப்பது டெல்டா மாவட்டங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உயிரிழந்த துளசி அய்யா வாண்டையார்
உயிரிழந்த துளசி அய்யா வாண்டையார்

தஞ்சாவூர் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் துளசி அய்யா வாண்டையார். அவருக்கு வயது 93. பெரும் நிலக்கிழார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பாரம்பர்யமிக்க குடும்பமாக இவரது குடும்பம் திகழ்ந்து வருகிறது. இவரது மனைவி பத்மாவதி அம்மாள். இவர்களது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் காங்கிரஸ் கட்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். மகள் புவனேஸ்வரியை மதுரை அருகே உள்ள காஞ்சரம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜமீன் குடும்பத்தை சேர்ந்த மலையாண்டி அசோக் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

தன் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட பூண்டி புஷ்பம் தன்னாட்சி பெற்ற கல்லூரியின் செயலாளராக இருந்து கடைசி வரை ஒரு பைசா கூட நன்கொடை வாங்காமல் தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வித்திட்டவர். அவரது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு இந்தியா முழுவதிலும் பல அரசு பதவிகளில் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர். இதனால் தஞ்சை பகுதியில் துளசி அய்யா வாண்டையாரை `கல்வி காவலர்’ என்றே அழைக்கின்றனர்.


துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

காந்திய கொள்கையை உறுதியாக பற்றி கொண்டு கடைசி வரை கடைபிடித்தவர். உணவு கட்டுப்பாடு, யோகா, தினசரி மூச்சு பயிற்சி என எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், கடைசி வரை மருத்துவமனைக்கு பக்கமே எட்டி பார்க்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்த துளசி அய்யா வாண்டையார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னையிலிருந்து சொந்த ஊரான தஞ்சை பூண்டிக்கு எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. தஞ்சாவூர் பகுதியில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவரை நன்கு அறிந்த வட்டாரத்தில் பேசினோம், ``துளசி அய்யா வாண்டையார் தன்னுடைய இளமை கல்வியை ஏற்காடு மான்ஸ்போர்ட் பள்ளியிலும், கல்லூரி படிப்பை சென்னை லயோலாவிலும் படித்தார். பின்னர் தன் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட தன்னாட்சி கல்லூரியான பூண்டி புஷ்பம் கல்லூரியின் செயலாளராகவும், தாளாளர் பொறுப்பிலும் இருந்து கல்லூரியினை செயல்படுத்தி வந்தார். இப்போது வரை மாணவர்களிடையே ஒத்த பைசா கூட நன்கொடை வாங்காமல் பல்லாயிரகணக்கான ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்தவர்.


துளசி அய்யா வாண்டையார்: உதவ முன் வந்த ஒபாமா.. வியந்த அப்துல்கலாம்! -சோகத்தை ஏற்படுத்திய இழப்பு

ஏழை மாணவர்கள் 200 பேர் பயன்பெறும் வகையில் தனது சொந்த செலவில் கல்லூரில் இலவச ஹாஸ்டல் ஒன்றை நடத்தி வந்தார். அதனால் கல்லூரியே அவரது அடையாளமானது. கல்வி காவலர் என்ற பெயரும் அவருக்கு வந்தது. காந்தியின் கொள்கையினை கடைசி வரை கடைப்பிடிததவர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல்வேறு பதவிகளை வகித்து பணியாற்றியதுடன் 1991 முதல் 1996 வரை காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். காமராசர், வைகோ, கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்களிடம் நல்ல நட்பில் இருந்தவர். காமராசரின் கொள்கைகளை பின்பற்றியவர். நடிகர் சிவாஜிகணேசனுக்கு ஆலோசனைகளை வழங்கியவர்.

எம்.பியாக இருந்த போது ஒரு நாள்கள் கூட விடுப்பு எடுக்காமல் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில் அதிகம் நேரம் இருந்த எம்பிக்களின் பட்டியலில் இவர் பெயரும் உள்ளது குறிப்பிடதக்கது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். வாழ்க்கைக்கு தேவையான குறிப்புகள் கொண்ட இன்ப வாழ்வு என்ற புத்தகத்தை எழுதி ஒரு லட்சம் பிரதிக்கு மேல் அச்சிட்டு மக்களிடத்தில் இலவசமாக கொடுத்து வந்தார்.


துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

தனக்கு யாரேனும் பரிசு கொடுத்தால் அதை விட கூடுதலான பரிசை கொடுத்து அன்பால் திணறடிப்பார். நேரம் தவறாமைக்கு உதாரணமாக இருப்பார். இவரது தலைமையின் கீழ் ஆயிரகணக்கான திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். ஒரு திருமணத்திற்கு கூட நேரம் தவறி சென்றதே இல்லை. கட்டாயம் ஏதோ ஒரு வெள்ளி பொருளை பரிசாக வழங்குவார். சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர். ஓவியர் மணியம் வரைந்த பொன்னியின் செல்வன் ஓவியக் கதையில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தின் மாடலாக துளசி அய்யா வாண்டையார் இருந்தார் என்பது பலருக்கு தெரியாத தகவல்.

கல்லூரி
கல்லூரி

பால்மர் ரைட்டிங் முறையில் எழுதுவதில் வல்லமை பெற்றவர். காந்தி கொள்கையில் கெட்டியாக இருந்ததால் கடைசி வரை கதர் ஆடை மட்டுமே உடுத்தி வந்தார். காந்தி வெள்ளிக் கிழமையில் சுட்டுக் கொல்லப்பட்டதால் அன்றைய தினம் முழுவதும் மெளன விரதம் இருப்பதை கடைசி வரை கடைபிடித்து வந்தார். அந்த அளவிற்கு காந்தியின் மீது ஈர்ப்பு கொண்டவர்.

இரண்டாவது முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர், அதன் பிறகு தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி கொண்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எழுதிய நூல்களை படித்து விட்டு மெயில் மூலம் தனது கருத்தை அனுப்பி வைத்தார். அதனை படித்து விட்டு ஒபாமா துளசி அய்யா வாண்டையாருக்கு ரிப்ளை அனுப்பினார். அப்போது முதல் மெயில் மூலம் இருவரும் நட்பு பாராட்டி வந்தனர். அவரை பற்றியறிந்த ஒபாமா, `உங்களுக்கோ அல்லது உங்கள் கல்லூரிக்கோ என்ன உதவி வேண்டும் கேளுங்கள் செய்து தருகிறேன்’ என கேட்க, `எனக்கு தேவையானவை கடவுள் புண்ணியத்தால் கிடைத்து விட்டது. அந்த உதவியை ஏழை மாணவர்களுக்கு செய்யுங்கன்னு’ மெலியில் அனுப்பி ஒபாமாவை மெய் சிலிரிக்க வைத்தார். தனது கல்லூரி விழாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அழைத்து வந்த போது கல்லூரியின் நிர்வாகத்தை பார்த்து அப்துல்கலாம் வியந்து பாராட்டினார்.

துளசி அய்யா வாண்டையார்
துளசி அய்யா வாண்டையார்

பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். அமெரிக்கன் பயோ கிராபிக் என்ற இன்ஸ்டியூட் உலகில் தலைசிறந்த 500 மனிதர்களை தேர்ந்தெடுத்தது. அதில் துளசி அய்யா வாண்டையாரும் இடம் பெற்றார் என்பது சிறப்புகுரியது. பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்ததை பயணக் கட்டுரையாக எழுதுவதை வாடிக்கையாக கொண்டவர். அவருடைய இழப்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு பேரிழப்பாகும். மாணவர்களுக்கும், மக்களுக்கும் தனது கல்லூரியின் மூலம் மட்டுமல்ல உதாரணமாக வாழ்ந்ததன் மூலம் பாடமாகவும் மாறி மறைந்துள்ளார்” என சோகத்துடன் தெரிவித்தனர்.

மாவீரர் இராமலிங்க ஓந்திரியர்




SS_Group_Hitler_intelligence_service


நேதாஜி அவர்கள் கிபி1942ல் பிரிட்டிஸின் ஒட்டுமொத்த சர்வாதிகாரத்தை எதிர்த்து வந்த, ஜெர்மனியின் நாசிக் தலைவரான அடால்ப் ஹிட்லரை சந்தித்தார்.

அன்றைய காலகட்டத்தில் உலகிலேயே நம்பர்:1 உளவுத்துறையாக கருதப்பட்டது, ஹிட்லரின் S.S Group intelligent service என்கிற அமைப்பாகும். நேதாஜி அவர்கள் ஹிட்லரிடம் இருந்து S.S Group செயல் திட்டங்கள்,செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்து கொண்டு.

தன்னுடைய இந்திய தேசிய இராணுவத்தில் அதேபோல ஒரு Special bureau serviceஐ உருவாக்கினார். அதற்கு ஹிட்லரின் உளவுப்பிரிவு பெயரான S.S Group என்றே பெயருமிட்டார்.

இந்த S.S Group உளவுப்பிரிவில் தமிழ் நாட்டை சேர்ந்த அமரர் இராமலிங்க #ஓந்திரியர் அவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இராமலிங்க ஓந்திரியர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் திருமங்கலகோட்டை  கிராமத்தை சேர்ந்தவர். ஓந்திரியர் முதலில் இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஸ் இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். பின்பு நேதாஜியின் INAவில் நேதாஜி முன்னிலையில் மலேசியாவில் இணைந்தார்.

மிகவும் அறிவுக்கூர்மையுள்ள ஓந்திரியரை, நேதாஜி அவர்கள் தன்னுடைய உளவுப்பிரிவான S.S Groupல் இனைத்துள்ளார். இந்த உளவுப்பிரிவானது பிரிட்டிஸ் இராணுவத்தின் படையின் போக்கு,ஆயுத கிடங்குகளின் பகுதிகள், போர் கப்பல்களின் நடவடிக்கை உள்ளிட்டவைகளை கண்காணித்து, அவைகளை அழிக்கும் செயல்களை #Mission மூலமாக திட்டம் தீட்டி செயல்படும்.

மலேசியாவில் இருந்து ஓந்திரியரை, நேதாஜி அவர்கள் ஒரு முக்கியமான உளவு சேவைக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். பிரிட்டிஸ் உளவுப்பிரிவால் ஓந்தியரை அடையாளம் கண்டு அவரை மடக்கிபிடித்தது.

இறுதியாக ஓந்திரியருக்கு பிரிட்டிஸ் அரசாங்கத்தால், மரண தண்டனை அளிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

வீரமும்,விவேகமிக்க ஓந்திரியரின் உயிரானது தாய்நாட்டின் சுதந்திரத்தை கண்களால் பார்க்காமலே, விண்ணுலகத்திற்கு பிரிந்து சென்றது.




தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் வங்கார்.


த.ம.சரபோஜி என்கிற மணி. மாறன் வங்கார். இவர் தஞ்சாவூரில் மார்ச் 23, 1970ல் பிறந்தார்.

சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றிவருகிறார். முதுகலை தமிழ் மற்றும் முதுகலை வரலாறு, நூலக அறிவியல் போன்றவற்றில் பட்டம் பெற்றுள்ளார். வரலாறு, கலை, இலக்கியம், வரலாறு மற்றும் சுவடியியல் சார்ந்த துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் இவர், கீழ்க்கண்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். காகித ஆவணங்களில் காணப்படும் செய்திகளை இன்றைய தமிழ் வடிவிற்கு மாற்றித் தரும் பணியைச் செய்துவருகிறார். சிற்றிலக்கிய வகைகளில் அந்தாதி, குறவஞ்சி, சதகம் என்ற வகையில் முறையே அழகரந்தாதி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, அறப்பளீசுர சதகம் என்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

தமிழ் எண்ணும் எழுத்தும் -நூலட்டை

தமிழறி மடந்தை கதை-நூலட்டை

• தமிழாய்வுக்கட்டுரைகள், 2012

• அழகர் அந்தாதி (பதிப்பாசிரியர்), 2012

• சரபேந்திர பூபாலக்குறவஞ்சி (பதிப்பாசிரியர்), 2013[1]

• அறப்பளீசுர சதகம் (பதிப்பாசிரியர்), 2014

• அதிவீரராம பாண்டியர் அருளிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி(பதிப்பாசிரியர்), 2016

• தமிழ் மருத்துவ முறைகள் (தலைமைப்பதிப்பாசிரியர்), 2017

• திருவேங்கட மாலை (பதிப்பாசிரியர்கள் : மணி.மாறன் மற்றும் கோ.ஜெயலெட்சுமி), 2017 

தமிழ் எண்ணும் எழுத்தும் மணி. மாறன் எழுதிய நூலாகும். ஓலை, சுவடி, ஆவணம், காகிதம் என்ற நிலைகளில் பல்வேறு காலகட்டத்தில் எழுத்தின் வரலாறும், எண்களின் பயன்பாடும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இந்நூலில் எழுத்தின் தோற்றம் தொடங்கி 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழறி மடந்தை கதை மணி. மாறன் எழுதிய நூலாகும். ஓர் அரசகுமாரியும், ஓர் அரசகுமாரனும் விரும்பி மணக்க முற்படும்போது விருப்பம் நிறைவேறாமல் இருவரும் இறந்துவிடுகின்றனர். பின்னர் மறுபிறவிக் கதையில் தமிழ்ச்சங்கப் புலவன் நக்கீரன், கரிகாற்சோழ பெருவளத்தான், ஔவைப் பிராட்டியார், பாண்டிய மன்னன் ஆகியோர் பாத்திரப் படைப்புகளாக வருவது இந்நூலில் தரப்பட்டுள்ளது. காப்புடன் தொடங்கும் இந்நூலில் கதையானது, வெண்பா மற்றும் பொருள் என்ற வடிவில் இடம் பெற்றுள்ளது.

• மூன்றே எழுத்தில் தமிழ் (வைஷ்மதி பதிப்பகம், தஞ்சாவூர்), 2004

• முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தமிழியல் துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைஞன் பதிப்பகம், சென்னை, 600 017) 2015

• பண்டிதை அசலாம்பிகை அம்மையார், தமிழியல் துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் இந்தியவியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், (கலைஞன் பதிப்பகம், சென்னை, 600 017) 2016

• தஞ்சையில் சமணம், (முனைவர் பா.ஜம்புலிங்கம், கோ. தில்லை கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து) (ஏடகம், தஞ்சாவூர், 2018)

சரசுவதி மகால் நூலகத்தின் வழியாக நடைபெறும் சுவடியியல் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

கண்டுபிடிப்புகள்

• சோழர் காலத்து உறை கிணறு வெட்டாற்றில் கண்டுபிடிப்பு

• ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமானுக்கு இப்போதும் சதய விழா தஞ்சை அருகே சிற்றூரில் அதிசயம் தினமலர், 29.4.2014

• சிதிலமடைந்த சோழர் கால சிவாலயம் புதுப்பிக்கப்படுமா? தினத்தந்தி, 11.3.2014

• ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் சிலைகள், தினமணி, 1.2.2014

• தஞ்சாவூர் அருகே சோழர் கால சிலைகள், தினமணி, 10.1.2014

• சோழர் கால சிற்பம் கண்டெடுப்பு தினமலர், 18.4.2013

• 9th century sculptures found near Thanjavur, The New Indian Express, 16.4.2013

• தஞ்சையில் சோழர் கால நந்தி சிற்பம் கண்டெடுப்பு, தினமலர், 31.1.2013

• ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கால சிற்பங்கள் கண்டெடுப்பு தினமலர், 24.1.2013

• சிதைந்த கோவிலில் சோழர் கால நந்தி சிலை : சங்க கால புலவர் ஊரில் கண்டுபிடிப்பு, தினமலர், 3.9.2012

பெற்ற விருதுகள்

• இராசராசன் விருது, 2018 (ராஜராஜன் கல்வி அறிக்கட்டளை, தென்னமநாடு, தஞ்சாவூர் மாவட்டம்)

• 'தமிழ் எண்ணும் எழுத்தும்' நூல், (முதற்பதிப்பு, 2012; வெளியீடு: தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்)

• 'தமிழறி மடந்தை கதை', நூல், (முதற்பதிப்பு, 2013; தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்)


பசுபதி ஆர்சுத்தியார்



பசுபதி ஆர்சுத்தியார்

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை எனப் பல வகையான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பெரும் மதிப்பைப் பெற்றிருப்பவரான பசுபதி
மே 18, 1969 அன்று தன் பிறந்தார்.

இவர் கூத்துப்பட்டறை முத்துசாமியின் மாணவர்

கமல்ஹாசனின் ’விருமாண்டி’ படத்தின் வில்லன் கொத்தாள தேவனாக நடித்ததன் மூலம் பசுபதி தீவிரமாக கவனிக்கப்படத் தொடங்கினார். அந்தப் படத்தில் ஒரு அசல் மதுரை மாவட்ட நபராகவே வாழ்ந்திருப்பார். அவர் மையக் கதாபாத்திரத்தில் நடித்த ‘வெய்யில்’ கடந்த ஆண்டு வெளியான ‘அசுரன்’ போன்ற படங்களில் தெக்கத்தி மனிதர்களைக் கண்முன் நிறுத்தியிருப்பார். இவர் சென்னையை அடுத்துள்ள பொழிச்சலூர் என்னும் புறநகர்ப் பகுதியில் 1969-ல் பிறந்தவர். ஆனால் இவரது பூர்விகம் தஞ்சாவூர்  மதுக்கூர் அருகே - திருமங்கலக்கோட்டை -வடசேரி அருகில் உள்ள " அருமளை" என்கிற ஊரே அவரது சொந்த ஊர்.  இவரது தந்தை ராமசாமி ஆர்சுத்தியார்.


 1980-களில் சென்னையில் தீவிரமாக இயங்கி வந்த நாடக் குழுவான கூத்துப்பட்டறையில் இணைந்தார்.

எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை வெகு சிறப்பாக உள்வாங்கி கச்சிதமாக வெளிப்படுத்துவதுதான் பசுபதியின் சிறப்பு. கிராமத்து எளியவர், சிறு நகரத்து மனிதர், பெருநகர பிரபலம், ரவுடி, தாதா, ஆசிரியர், மருத்துவர் என எப்படிப்பட்ட கதாபாத்திரத்தின் பின்னணி, சூழல், மண் சார்ந்த பழக்கவழக்கங்கள், உடல்மொழி என அனைத்தையும் சிறப்பாக பிரதிபலிப்பவர் பசுபதி. அந்த வகையில் கூத்துப்பட்டறை நிறுவனரான எழுத்தாளரும் மாபெரும் நாடக ஆளுமையுமான ந.முத்துசாமியின் பெருமைக்குரிய சீடர்.



கூத்துப்பட்டறையில் அங்கம் வகித்த நடிகர் நாசர் மூலமாக பசுபதிக்கு கமல்ஹாசனின் அறிமுகம் கிடைத்தது. கமலின் பிரம்மாண்டக் கனவுப் படைப்பான ‘மருதநாயகம்’ படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கத் தொடங்கினார் பசுபதி. ஆனால் அந்தப் படம் நின்றுபோனது. நாசர் இயக்கி நடித்த ‘மாயன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் பசுபதி. ‘ஹவுஸ்புல்’, ‘தூள்’, ’இயற்கை’, ‘அருள்’ என பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் 2004-ல் கமல் தயாரித்து இயக்கி நடித்த ‘விருமாண்டி’ படம்தான் பசுபதியின் திரை வாழ்வில் முக்கியத் திருப்பமாக அமைந்தது.

நட்சத்திரமல்ல நடிகன்

அதன் பிறகு தொடர்ந்து 'சுள்ளான்', 'மதுர', 'திருப்பாச்சி' ஆகிய படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வந்தவர் கமலின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நகைச்சுவை கலந்த வில்லனாக நடித்தார். ‘மஜா’ படத்தில் நாயகன் விக்ரமுக்கு இணையான வேடத்தில் வடிவேலுக்குப் போட்டியாக நகைச்சுவையில் பட்டையைக் கிளப்பினார். விருதுநகர் மக்களின் அனல் நிறைந்த வாழ்க்கையின் அசல் பதிவாக அமைந்த இயக்குநர் வசந்தபாலனின் ‘வெயில்’ படத்தில் மையக் கதாபாத்திரத்தில் நடித்து விமர்சகர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டார். எஸ்.பி.ஜனநாதனின் ‘ஈ’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் தமிழக அரசின் விருதையும் பெற்றார்.

AMP

பொதுவாக கதாநாயகனாக நடித்து முதல் படம் வெற்றிபெற்றுவிட்டால் பலரும் தொடர்ந்து நாயக வேடத்திலேயே நடிக்க விரும்புவார்கள். ஆனால் ’வெயில்’ படத்துக்குப் பிறகு அதேபோல் நாயகனாக நடிப்பதற்குத் தேடி வந்த வாய்ப்புகளை மறுத்தார். நட்சத்திரமாக இருப்பதைவிட நடிகராக இருப்பதே மனதுக்கு நெருக்கமானது என்று பலர் கூறினாலும் அந்தக் கூற்றை உண்மையாகப் பின்பற்றும் மிகச் சிலரில் ஒருவர் பசுபதி.

பொதுவாக கதாநாயகனாக நடித்து முதல் படம் வெற்றிபெற்றுவிட்டால் பலரும் தொடர்ந்து நாயக வேடத்திலேயே நடிக்க விரும்புவார்கள். ஆனால் ’வெய்யில்’ படத்துக்குப் பிறகு அதேபோல் நாயகனாக நடிப்பதற்குத் தேடி வந்த வாய்ப்புகளை மறுத்தார். நட்சத்திரமாக இருப்பதைவிட நடிகராக இருப்பதே மனதுக்கு நெருக்கமானது என்று பலர் கூறினாலும் அந்தக் கூற்றை உண்மையாக பின்பற்றும் மிகச் சிலரில் ஒருவர் பசுபதி. ரஜினி படத்தில் நாயகன் 2008-ல் வெளியான ‘குசேலன்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தார். ’கத பறயும்போள்’ என்ற ,மலையாளப் படத்தின் மறு ஆக்கமான இந்தப் படத்தில் பசுபதிதான் மையக் கதாபாத்திரம். சற்று விரிவான கெளரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தலைப்புக்கேற்ப ஏழையாக இருந்தாலும் சுயமரியாதையுடன் வாழும் சிகைதிருத்தக் கலைஞராக வெகு சிறப்பாக நடித்திருந்தார் பசுபதி. 2011-ல் வெளியான ’அரவான்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் வசந்த பாலனுடன் இணைந்தார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் 18ஆம் நூற்றாண்டு மதுரை வட்டாரத்தில் வாழ்ந்த பழங்குடித் தலைவனாக நடித்திருந்தார். இன்றுவரை தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை, மையக் கதாபாத்திரம் என மாறி மாறி நடித்து ரசிகர்கள், விமர்சகர்கள் மனங்களில் மரியாதைக்குரிய இடத்தில் இருக்கிறார்.

அதேபோல் சினிமா என்பது நாடகத்திலிருந்து முகிழ்ந்த கலை வடிவம் என்றாலும் மேடையிலிருந்து திரைக்கு வரும் பலர் மேடையை மறந்துவிடுவார்கள். ஆனால் பசுபதி மேடை நாடகங்களிலும் நடித்துவருகிறார். நாடக மேடை மீதான நன்றியுணர்வை மறக்காமல் இருக்கிறார். பசுபதியை நிறைய திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லை என்பது நடிகர்களின் ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அவரோ தன் மனதுக்கு பிடித்த நல்ல வேடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இதை 2016இல் வழங்கிய ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார்.

சிறந்த நடிகரான பசுபதிக்கு அவர் விரும்பும் கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் திரைப்படத் துறையில் அவர் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று மனதார வாழ்த்வோம்


ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கள்ளரின் உருவமைப்பு

 




திருவண்ணாமலையில் சாத்தனூர் வேதியப்பன் கோயிலில் பல்வேறு நடுகற்கள் பாதுகாக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது. இங்குள்ள நடுகற்களில் ஒன்று பத்தாம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். 


இக்கல்வெட்டு வாசகங்கள் பின்வருமாறு:



"கோப்பரகேசரி பர்மருக்கு யாண்டு நான்காபது  வேட்டுவதி அரையர் வாணகோவரையர் ஆள் ஆனைமங்கலமுடைய கள்ளன் தாழன் மேல் கோவலூர் நாட்டு அளவிப்பாடி தொறு மீட்டுப் பட்டான் மன்றாடி கல்" என குறிப்பிடுகிறது.


கிபி 911 ஆம் ஆண்டு முதலாம் பராந்தகன் ஆட்சி காலத்தில் மேற் கோவலூர் நாட்டில் அளவிப்பாடி எனும் பகுதியில் நடந்த ஆகொள் பூசல் எனும் ஆநிரை கவரும் போரில் ஆனைமங்கலம் எனும் பகுதியை சேர்ந்த கள்ளன் தாழன் என்பவர் ஆநிரைகளை காத்து தன்னுயிரை நீத்து வீர மரணம் அடைந்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. 


இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் ஆனைமங்கலம் எனும் ஊர் இன்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆனைமங்கலமுடைய கள்ளன் தாழன் என குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இவ்வூரின் அரையராக கள்ளன் தாழன் இருந்துள்ளதை அறிய முடிகிறது.


முதலாம் பராந்தக சோழன் காலத்தில் நடைபெற்ற ஆகோள் பூசலில் போரிட்டு உயிர் நீத்த கள்ளன் தாழனின் உருவமும் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ளது.


பத்தாம் நூற்றாண்டில் கள்ளரின் உருவமைப்பு


ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த நடுகல் கல்வெட்டு அக்காலத்தில் இருந்த ஒரு கள்ளரின வீரனின் உருவ அமைப்பை நமக்கு எடுத்துரைக்கிறது. 


வலது கையில் பிச்சு வாளும்,  இடையில் குறு வாளும்,  இடது கையில் வில்லும் என ஒரே நேரத்தில் மூன்று ஆயுதங்களை கொண்டிருந்ததை இச்சிற்பம் நமக்கு உணர்த்துகிறது.


வலப்பக்க கொண்டை,  நீண்ட காது மடல்கள், சிறுத்த இடை என போர் வீரனுக்குரிய அனைத்து லட்சணங்களையும் இவ்வீரன் கொண்டு இருந்ததை அறிகிறோம்


இவ்வீரனின் தியாகத்தை போற்றி இன்றும் வழிபாடுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 


ஆதாரம்: கல்வெட்டு எண் ARE 230/ 1971-1972


சிற்பத்தின் விளக்கம் அறிய உதவிய திரு. திருச்சி பார்த்தி அவர்களுக்கும் நன்றி.


தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார

மலேசிய பெரியவர் ஆர் ஆர் அய்யாறு சிட்டாச்சியர்

 



தஞ்சாவூர் மாவட்டத்தில் சுலியக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர் ஐயா மலேசிய பெரியவர் ஆர் ஆர் அய்யாறு சிட்டாச்சியர்


*அகில மலேயாத் தமிழர்கள் முதலாம் மாநாட்டை நடத்தியவர்,

*ஈப்போ மாரியமன் கையில் கட்டியவர்,

*மலேசியாவில் ஈப்போவில் உள்ள ஆங்கிலோ சைனீஸ் பள்ளியில் சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார்.









தமிழ்ச்செம்மல்” கோ. இளவழகன் உறந்தைராயர்

 .


“தமிழ்மண்” பதிப்பக உரிமையாளர் – “தமிழ்ச்செம்மல்” கோ. இளவழகன் உறந்தைராயர்.



உறந்தைராயன் குடிக்காட்டில் பிறந்த கோ.இளவழகனுக்குப் பெற்றோர் கோவிந்தசாமி  உறந்தைராயர் - அமிர்தம் வைத்த பெயர் அப்பாவு என்பதுதான். அதை இளவழகன் என்று மாற்றி, இயக்கச் செயல்பாட்டாளராகவும் புத்தக ஈடுபாட்டாளராகவும் வளர்த்து வழிகாட்டியவர் புலவர் நக்கீரன்.

தமிழ் ஈடுபாடு வந்ததால், 1965 இந்தி எதிர்ப்புப் போராட்ட முன்னணி வீரராக மாணவப் பருவத்திலேயே எழுந்துவிட்டார் இளவழகன். பட்டுக்கோட்டை, திருச்சி சிறைகளில் நாற்பத்தெட்டு நாள் சிறைவாசியானார். அப்போது ஏற்பட்ட கா.காளிமுத்து தொடர்பு, இறுதிக் காலம் வரை இருவரையும் பிணைத்து வைத்திருந்தது. பெரியார், அண்ணா, பாவேந்தர், பாவாணர், பெருஞ்சித்திரனார் நூல்களோடு உறவாடுவதில் மகிழ்ந்த இளவழகன் மனம், மின்வாரியப் பணி சென்னை எண்ணூரில் கிடைத்தபோது மிகவும் மகிழ்ந்தது. விரும்பிய புத்தகங்களை வேண்டிய அளவு வாங்க உடனடிப் பணி வாய்ப்பே தேவை என அவர் தீர்மானித்தார். மாணவர்போல இதழ்களையும் நூல்களையும் அடுக்கி எடுத்து அலுவலகம் செல்வது இளவழகன் வழக்கம். புதுவை எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அப்போது சென்னையில் வசித்துவந்தார். பழுத்த காந்தியரான அவர், சர்வோதய இயக்கப் பணிகளில் முனைப்பாக ஈடுபட்டுவந்தார். அவரோடு தங்கியிருந்தார் இளவழகன். அதனால் காந்திய, சர்வோதய இயக்க ஈடுபாடு மிகுந்தவரானார்.







நன்றி எதிர்பார்க்காமல் சமூகத்துக்குப் பயன்படும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற உறுதியை இளவழகனுக்கு வழங்கியவர் பெரியார். எளிமையாய் வாழக் கற்றுத்தந்தவர் புதுவை எஸ்.ஆர்.சுப்பிரமணியம். தமிழுக்கு வளமும் பாதுகாப்பும் வழங்குவதற்கு வாழ்வதே பயனுள்ள வாழ்வு என நெறிப்படுத்தியவர் புலவர் நக்கீரனார். இம்மூவரும் தந்த வழியே என் வழி என அடக்கமாகச் சொல்லி மகிழ்வது இளவழகனார் வழக்கம்.

தமிழ் மொழி – இனம் ஆகியவற்றை சீரழித்த ஆரியத்தையும், சமற்கிருதத்தையும் எதிர்க்கும் உணர்வினை இளமையிலேயே பெற்றவர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் “தென்மொழி” அன்பராகி, பாவாணரின் பற்றாளராகி, ஒரத்தநாட்டில் “உலகத் தமிழ்க் கழகத்தை” நிறுவியவர்களில் முகாமையானவர் கோ. இளவழகன். தேவநேயப் பாவாணர் மன்றம் தொடங்கிச் செயல்பட்டார். இறுதிவரை தனித் தமிழில் பேசுவதை, எழுதுவதை தமது பண்பாகக் கொண்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பேருதவியாக விளங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளை முழுக்க முழுக்க ஆதரித்து, அதனால் பல இன்னல்களையும் ஏற்றவர். தமிழ்நாட்டு உரிமைகள், தமிழ்மொழி உரிமைகள், தமிழ்வழிக் கல்வி ஆகியவற்றிற்கான செயல்பாடுகளிலும் பங்கேற்றவர். தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு பெரும் ஊக்கமளித்தவர்.

ஈழ விடுதலை இயக்கங்களோடு இரண்டறக் கலந்த பணிகளின் தொடர்ச்சியால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த இவர், தொடர்ந்து போராடி மீண்டும் பணியைப் பெற்றார். பணி கிடைத்ததும் ‘இப்போது நானே விலகுகிறேன்’ என்று விருப்ப ஓய்வுபெற்றார். பிறகு, தமக்கு விருப்பமான அச்சுத் தொழிலிலும் பதிப்புத் துறையிலும் கால்பதித்தார். ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணா மிருத சாகரம்’ நூலில் இவரின் பதிப்புப் பணி தொடங்கியது. தமிழறிஞர் படங்களைத் தேடித்தேடி அங்கே இடம்பெறச் செய்தார். படங்களைத் திரட்டுவதிலும் அறிஞர்களின் நூல்களைத் திரட்டுவதிலும் எந்த அவமதிப்பு நேர்ந்தாலும் பொருட்படுத்த மாட்டார். எவ்வளவு காலங்கடத்தினாலும் சோர்வடைய மாட்டார். முப்பதாண்டு பதிப்புப் பணியில் பாவாணர், மயிலை சீனி வேங்கடசாமி, சாமி.சிதம்பரனார், மா.இராஜ மாணிக்கனார், வெள்ளை வாரணனார், வா.சுப.மாணிக்கனார், திரு.வி.க., சாத்தான்குளம் அ.இராகவன், தி.வை.சதாசிவப்பண்டாரத்தார், ந.மு.வே.நாட்டார். வெ.சாமிநாத சர்மா,ச.மாமந்தரபாரதியார், ந.சி.கந்தையா, புலவர் குழந்தை, முடியரசன், கா.அப்பாத்துரையார், இரா.இளவரசு, புலவர் இரா.இளங்குமரனார் முதலிய அறிஞர்களின் நூல்கள் அனைத்தையும் முழுமையான தொகுப்பாகத் திரட்டி வெளியிட்டுள்ள பெருஞ்சாதனை இளவழகனுடையது.

பாரதிதாசன் நூல்கள் அனைத்தையும் ‘பாவேந்தம்’ என 25 தொகுதிகளாக அழகுற வெளியிட்டுள்ளார். ‘செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம்’ எனச் சொற்களின் பொருள் பிறந்ததற்கான காரணத்தை விளக்கும் இளங்குமரனாரின் அரிய பத்துத் தொகுதிகள் என்றும் பயன் தருபவை. ஆசிரியர் தி.வே.கோபாலய்யர் ‘அச்சேறுமா’ என்ற கவலையோடு தம் இலக்கணப் புலமையைப் பிழிந்து தந்திருந்த நூல்கள், ‘இலக்கணக் களஞ்சியம்’ எனத் ‘தமிழ்மண்’ பதிப்பகத்தால் இளவழகன் வழியாய் வெளியாயின. அண்ணாவை எழுத்தில் பார்த்து வியந்துகொண்டிருந்த இளவழகனுக்கு, அண்ணாவை நேரில் பார்த்தபோது பற்று கூடியது. ‘பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்’ (வே.ஆனைமுத்து) தொகுப்பை 1974-ல் திருச்சியில் வெளியிட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி, “அண்ணா அவர்களுக்கும் இப்படித் தொகுப்பு வர வேண்டும்” எனப் பேசியதைக் கேட்ட பின்பு வைராக்கியம் உருவெடுத்தது. அந்த வைராக்கியமே அறிஞர் அண்ணாவின் எழுத்து, பேச்சு அனைத்தையுமே ‘அண்ணாவின் அறிவுக் கொடை’ என 110 தொகுதிகளாக உருவாக்கும் உறுதியைத் தந்தது. முதற்கட்டமாக 64 தொகுதிகள் 21.12.2019-ல் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்டன. எஞ்சிய 46 தொகுதிகள் வெளிவரும் சூழலை உருவாக்கி வைத்துவிட்டுத்தான் கோ.இளவழகனார் உலக வாழ்விலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ஆபிரகாம் பண்டிதரில் தொடங்கி ‘தமிழ்மண்’ பதிப்பகம் கண்ட அவர், அறிஞர் அண்ணாவைத் தந்த நிறைவோடு விடைபெற்றுள்ளார். அறிஞர்களின் நூல்கள் ஒவ்வொன்றும் இளவழகனார் நினைவை என்றும் பேசியபடியே இருக்கும்.





“சங்க இலக்கியக் களஞ்சியம்” (22 தொகுப்புகள்), பாவவேந்தர் படைப்புத் தொகுப்புகள் (25 தொகுப்புகள்), நா.மு.வே. நாட்டார் தமிழ் உரைகள் (32 நூல்கள்), பாவாணர் தமிழ்க் களஞ்சியம் (53 நூல்கள்), நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் (10 நூல்கள்), தொல்காப்பிய பழைய உரைகள் (19 நூல்கள் – பதிப்பாசிரியர் : “இலக்கணக்கடல்” கோபாலய்யர்), அண்ணாவின் படைப்புத் தொகுப்புகள்… இவை போல் இன்னும் பல அரிய நூல்களுக்கு மறு உருவாக்கம் தந்தார்.



தமிழ்த்தேசியப் பேரியக்கத்துடன் நட்பு பாராட்டி, சென்னை புத்தகக்காட்சியில் “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” விற்பனை அரங்கம் முதன்முதலாகக் கிடைக்கத் துணை நின்றார். “தமிழ்த்தேசியம் – அரசியல், அறம், அமைப்பு” என்ற தலைப்பில் நான் எழுதிய நூலை வெளியிட்டு சிறப்பித்தார்.

தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தில் (பபாசி – BAPASI) பொறுப்பு வகித்து, அதன் வளர்ச்சிக்கும், ஆண்டுதோறும் சென்னை புத்தகக்காட்சி நடைபெறவும் பெருந்துணையாய் நின்றார். அரசு நூலகங்களுக்கு நூல்களைத் தாராளமாக வாங்கி, பதிப்பகங்களை ஊக்குவிக்க அமைச்சர்களுடன் பேசி பணியாற்றினார்.


வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்