ஞாயிறு, 11 மார்ச், 2018

பட்டுக்கோட்டை கள்ளர் வளநாடு - பட்டு மழவராயர்

சோழப்பேரரசர்கள் காலத்தில் வளநாடுகள் அனைத்தும் இராசராசன் பெயரிலேயே அமைந்திருந்தன. அதில் பட்டுக்கோட்டை பகுதி வளநாட்டு பரண்டையூர் நாட்டு செல்லூர் என்றும், மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டிய மன்னனைத் தோற்கடித்த நினைவாக "பாண்டியனை வெண்கொண்ட சோழ சதுர்வேத மங்கலம்" என்றும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் வளநாடுகள் பெருகின, அப்போது புன்றில் கூற்றம் புன்று என்றும் அழைக்கப்பட்டது.

பட்டுக்கோட்டையில் உள்ள கோட்டையை உருவாக்கியவர் பட்டு மழவராயர் என்கிற மழவராயர் பட்டந்தாங்கிய கள்ளர், அவருடைய கோட்டை இந்த ஊரில் இருந்த காரணத்தால் பட்டு மழவராயர் கோட்டை என்று அழைக்கப்பட்டு, கால போக்கில் பட்டுக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது என கிராமப்புற வழக்கு. பட்டுக்கோட்டை வட்டதிற்கு உட்பட்ட அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்த, இந்திய தேசிய விடுதலைக்காக தனது விரல்களை வெட்டிக்கொண்ட தியாகி பெரியதம்பி மழவராயர் இங்கு நினைவுகூரத்தக்கது .



கி.பி.1686 மராத்தியர் கல்வெட்டின்படி பட்டுக்கோட்டை முதல் பாம்பாறு (சர்ப்ப நதி - புதுக்கோட்டை எல்லை) வரை Inhabited by Kallans என்று குறிக்கப்பட்டுள்ளது. 1781 ம் ஆண்டு இக்கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.



பட்டுக்கோட்டையில் பட்டுவனாச்சி காட்டாறும் ஓடுகிறது. பட்டுராயன், பவட்டுரான் என்னும் பட்டங்களை உடைய கள்ளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் உள்ள கள்ளர்களின் பட்டங்கள் சில 

  1. விஜயதேவர்,
  2. கண்டியர்,
  3. வாணாதிராயர்
  4. சேனாதிபதியார் 
  5. சோழகர்,
  6. முதலியார்,
  7. வாண்டையார்,
  8. பணிபூண்டார்,
  9. கொடும்புறார்,
  10. சாளுவர்,
  11. கோபாலர் 











சோழர்காலத்தை சேர்ந்த நின்ற கோலத்தில் ஸ்ரீரங்கநாதசுவாமி அமைந்திருக்கும் ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. மேலும் பட்டுக்கோட்டையில் புகழ்வாய்ந்த ஸ்ரீ நாடியம்மன் ஆலயம் உள்ளது.








கள்ளர் மண்டகப்படி காமதேனு வாகனம்

மராட்டிய மன்னனுக்கு வனாந்திரமாய் இருந்த இடத்தில் பிடாரியம்மன் சிலை தென்பட்டதாம். பட்டுக்கோட்டையின் கோட்டைப் பகுதியில் இருந்த சிவன் கோயில் பூசாரிகளை அழைத்து பிடாரியம்மனுக்கு அது கிடைத்த இடத்திலேயே ஓர் ஆலயம் கட்டி பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டான். பங்குனி மாதத்தில் இந்த அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா தொடங்குகிறது, அதில் அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் ஆலய முதல் நாள் கள்ளர் மண்டகப்படி காமதேனு வாகனம் நடைபெறும். பண்டைய காலத்தில் கள்ளர்கள் வணங்கிய, பல படையெடுப்பால் வணங்காமல் விடப்பட்ட கொற்றவையே இந்த மராட்டிய மன்னரால் கண்டெடுக்கப்பட்ட பிடாரியம்மனாக இருக்கலாம். ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் அழகிய மண்டபங்களுடன் திகழும் நாடியம்மனின் ஆலயம், 400 ஆண்டுகள் பழைமையானதாம். பட்டுக்கோட்டை பகுதியில் வடக்கு நோக்கி அமைந்திருக்கும் ஓரே ஆலயம் இதுதானாம்

சீனத்துடன் சோழர்கள் தொடர்பு கொண்டிருந்தனர். இத்தொடர்பை உறுதிப்படுத்தும் வண்ணம் பட்டுக்கோட்டை வட்டம் ஒலயக்குன்னம் பகுதியில் சீனக்காசுக் குவியல்கள் கிடைத்துளன. சீனத்தரையரென்ற பட்டம் வணிகத்தின் பொருட்டு சீனநாட்டிற்கு அனுப்பியோருக்கோ, அல்லது அந்த பகுதி வெற்றியோடோ தொடர்புடையதாக இருக்கலாம். இன்றும் கள்ளர்களில் மட்டும் இந்த பட்டம் தங்கியவர்கள் உள்ளனர். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையில் சீனத்தரையனூரில் வாழுகின்றனர்.



கி.மு. 2ஆம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது

பட்டுக்கோட்டைக்கு 12 கி.மீ தொலைவில் ‘பாப்பாநாடு’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு "விஜயாத்தேவர்" எனும் பட்டம்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். அரையர் விஜயாத்தேவர் தேவரின் சிலை மன்னார்குடி கோவிலில் வணங்கப்பட்டு வருகிறது.

பட்டுக்கோட்டைக்கு பக்கத்தில் உள்ள ‘மதுக்கூர்’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு "கோபாலர்" எனும் பட்டம்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். 1954ல் இருந்து 1957 வரை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும், 1957 முதல் 1967 வரை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் மதுக்கூர் அரையர் இரா. கிருஷ்ணசாமி கோபாலர். ராமநாதபும் மன்னர் சேதுபதியின் நெருங்கிய உறவினர்

பட்டுக்கோட்டையில் இருந்து வங்காளவிரிகுடா கடற்கரை 12 கிமீ., தொலைவில் இருக்கிறது. இந்த பகுதில் கடற்கரை ஒட்டியுள்ள சுற்றுலா தளமான மனோரா, சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது.

பட்டுக்கோட்டை சமீப காலத்தில் பெருநகரமாகவும், தென்னாட்டு சிங்கப்பூர் என்றும், அதன் செல்வச் சிறப்பு காரணமாக அழைக்கப்படுகிறது. சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வூர் மிகச் சிறிய ஊராக, ஊராட்சியாக, அரசாங்க அதிகாரிகளை தண்டனையாக மாற்றுவதற்குப் பயன்பட்டு வந்த இடம். கல்லணை கால்வாய் வெட்டப்பட்டு இவ்வூர் மிகச் செழிப்பாகவும், வியாபாரத் தொடர்பினாலும் இன்று செல்வச் செழிப்போடு திகழ்கிறது.

பட்டுக்கோட்டை பகுதி வனாந்திரமாக இருந்துள்ளது. காடுகள் அழித்து குடியேற்ற பகுதி காடு என முடியும், காடு கவலுடையவை கோட்டை எனவும் பெயர்களை கொண்டன என்று குறிப்பிடுகின்றனர். சோழமண்டலத்தில் கள்ளர்கள் வாழும் பகுதிகள் அவர்களின் பட்ட பெயர்களை தாங்கியே வரும். அதுப்போல் கோட்டை, காடு, நாடு என்றே முடியும் என்பதை நாம் அறிந்ததே.

பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கிய தாலுகாவாகவும், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய கோட்டமாகவும் செயல்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஊராட்சிகள்

அணைக்காடு, 
மூள்ளுர்பட்டிக்காடு,
வேப்பங்காடு
கழுகுப்புளிக்காடு, 
மலவேநிர்காடு, 
மலையக்காடு, 
ஒத்தையடிக்காடு, 
சந்தனகாடு, 
டி.மரவக்கடு, 
டி.மேலக்காடு, 
டி.வடகாடு, 
சேந்தன்காடு, 
தொக்களிகாடு, 
வேப்பன்காடு, 
ராசியங்காடு
செண்டாங்காடு.


வெண்டாக்கோட்டை, 
அத்திகோட்டை, 
நடுவிக்கோட்டை, 
மகிழன்கோட்டை, 
பரக்கலக்கோட்டை, 
பொன்னவராயன்கோட்டை,
புதுக்கோட்டை உளூர்,
செண்டாக்கோட்டை, 
தாமரன்கோட்டை வடக்கு,
தாமரன்கோட்டை தெற்கு,
வேந்தக்கோட்டை
கரம்பயம்

பட்டுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பேராவூரணி ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் கள்ளர் குடியில் பிறந்த ஸ்ரீ குட்டியப்பர் என்பவர் காவல் தெய்வமாகவுள்ளார்.

அணைக்காடு கிராமத்தை சேர்ந்த தஞ்சை பகுதியின் பகுத்தறிவு சிங்கம் பட்டுக்கோட்டை டேவிஸ் வாணாதிராயர், 

சேண்டக்காடு கிராமத்தை சேர்ந்த சுயமரியாதை சுடரொளி எஸ்.டி.சோமசுந்தரம் கோபாலர், 


ஆம்பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்த கம்யூனிஸ்டு புரட்சியாளர்கள்  ஆறுமுகம்,  வெ.அ.சுப்பையன் , காசிநாதன், 


பன்னைவயல் கிராமத்தை சேர்ந்த பட்டுக்கோட்டை முன்னாள் நகர மன்ற தலைவர் திரு. விஸ்வநாதன் சேர்வைக்காரர், 


அணைக்காடு ஈன்றெடுத்த கன்னிப்பருவத்திலே படகதாநாயகன் திரு ராஜேஷ், 


தேசிய விருது பெற்ற களவாணி, வாகைசூடவ இயக்குனர் சற்குணம் கண்டியர் போன்றவர்கள் புகழ்பெற்றவர்கள்.

கிபி 1830ல் எழுதப்பட்ட மோடி ஆவணக்குறிப்பில் சோழ நாட்டில் கள்ளர் பாளையங்கள் உருவானது பற்றி கூறப்பட்டுள்ளது. அதன்படி "தஞ்சை மன்னர் பிரதாப் சிங்(1739-1763) காலத்தில் கள்ளர்கள் வாழும் பட்டுகோட்டை சீமையில் கள்ளர்களின் கிளர்ச்சியை தடுக்க அங்கு குதிரை சிப்பாய்களை நிறுத்தி வைத்திருந்தார்.



சேந்தங்குடி அரையர் விஜயத்தேவனை பற்றி புள்ளான் விடுதி நடேசகோனார் அவர்கள் 1951 எழுதிவெளிவந்த சேந்தங்குடி ஜெமீன் விஜயானந்தக்களிப்பு நூலில் விஜயன் பட்டுக்கோட்டை பட்டு மழவராயனுடன் போரிட்ட வரலாறை விமர்சியாக பாடியுள்ளார்.

சேந்தங்குடி கிராமத்தை தலைமையிடமாக கொண்டு சேந்தங்குடிப்பாளையம் உருவாக்கி கி.பி.1486 விஜயத்தேவனை சேந்தங்குடி அரையராக முடி சூட்டினார்கள். விஜயத்தேவனுக்கு ஆலங்காடு, சூரன்விடுதி, கீழாத்தூர் பகுதில் உள்ள தொண்டைமான் பட்டம் உடைய குடும்பத்தில் உள்ள பெண்களை திருமணம் செய்து வைத்தார்கள்.

விஜயத்தேவன் வேட்டை ஆடுவதற்காக பாலைவனம் சுனையக்காட்டு பகுதிக்கு சென்றிருந்தார் அப்போது பட்டுக்கோட்டைப் பகுதியயை ஆண்ட பட்டு மழவராயன் வீராச்சாமி மழவராயன் ஆவுடையார் கோவில் தேர்த்திருவிழா காண சென்றபோது, விஜயத்தேவன் வேட்டைக்கு சென்றுள்ளான் என்பதை அறிந்து கொண்டு அரசர்குளம் அரண்மனையை பிடிக்க முயன்றான். அப்போது விஜயனும் அரசர்மகனும் எதிர்த்து போரிட்டார்கள் .

"ஆங்கரசர் வேட்டைக்கு போன பின்னர்
அம்புக்கோவில் முதலாய் அரசு செய்வோன்
பாங்கான கள்ளர் குல மழ்வராயன்
பண்டு பட்டுக்கோட்டை தனில் அரசு செய்தோன்
நதீங்காக மாதர்கள் மானபங்கம்
செய்ததனால்....

பட்டுக்கோட்டை பட்டு மழவராயன் வீராச்சாமி அரசர்குளம் அரண்மனை அரசியையும் மற்றவர்கலையும் சிறைப் பிடிக்க முயன்றபோது விசயனும் இளவரசனும் பட்டு மழவராயன் படை மீது பாய்ந்து போர் தொடுத்தார்கள் என்று நடேசகோனார் எழுதியுள்ளார்.

ஸ்ரீ குட்டியப்பர் காவல் தெய்வம்.





புதுக்கோட்டை சமஸ்தானத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் கள்ளர் குடியில் பிறந்த ஸ்ரீ குட்டியப்பர் வாழ்ந்துவந்தார். அப்போதிருந்த பாலைவனம் அரையர் வணங்காமுடி பண்டாரத்தார் ஆதரவில் ஸ்ரீ குட்டியப்பர் வேல், கம்பு , துப்பாக்கி முதலிய ஆயுதங்களை வைத்துக்கொண்டு ஆங்காங்கு வேட்டைக்கு செல்வது வழக்கம். அப்பொழுது ஆத்தாளுர் (பேராவூரணி ) பக்கத்தில் ஓர் புலி ஆடுமாடுகளையும், மனிதர்களையும் வேட்டையாடி வந்தது. இதனை கேள்வியுற்ற ஸ்ரீ குட்டியப்பர், அவ்விடத்திற்கு வந்து ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆத்தாளின் அருள்பெற்று வேட்டையாடிப் புலியை வேலினால் குத்தி கொன்றார். ஸ்ரீ குட்டியப்பரும் இவ்விடத்திலேயே தெய்வமாகி அம்மனுக்கும், மற்றையோருக்கும் காவல் தெய்வமாயிருந்து கத்துவருகிறார். இவருடைய பங்காளிகளால் பெரும் பூஜையும், தினமும் ஒரு காலப்பூஜையும் நடத்தப்படுகிறது.



பகுத்தறிவு சிங்கம் டேவிஸ் வாணாதிராயர்:



தந்தை பெரியாரின் தளபதியாகவும், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் தோழராகவும், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.

சுயமரியாதை சுடரொளி எஸ்.டி.சோமசுந்தரம் கோபாலர்.


S.D.ஸ் என்று அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரம் கோபாலர், பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளி படிப்பைத் தொடர்ந்தார். 1980 சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் திரு ஏ.ஆர். மாரிமுத்து அவர்களை தோற்க்கடித்தார்.1983-ல் பட்டுக்கோட்டை பகுதியில் தொழில் நுட்ப கல்லூரியை நிறுவி ஏழைகள் தொழில் கல்வி படிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்தார்.

அஞ்சாநெஞ்சன் சு. விஸ்வநாதன் சேர்வைக்காரர்



ம.தி.மு.க தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்த வர், வைகோ அவர்களின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கினர். பட்டுக்கோட்டை நகரசபைக்கு இரண்டு முறை தலைவராக பொறுப்பேற்ற இவர், பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். ஒருமுறை இவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் இவரின் துணைவியார் ஜெயபாரதி விஸ்வநாதனை நிற்கவைத்து நகரசபை தலைவராக வெற்றிபெறவைத்தார். இவரது தனிப்ட்ட செல்வாக்கின் மூலம் ம.தி.மு.க., வும் மிக செல்வாக்குடன் நகராட்சியினை கைப்பற்றி ஆட்சிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட சௌராஷ்டிர இனத்தவர் தெற்குநோக்கி வந்தபோது அவர்களை கள்ளர் அரையர் சாவடி நாயக்கர் அடைக்கலம் குடுத்தது போல், பட்டுக்கோட்டை மழவராயர்களும் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய தேங்காய் உற்பத்தி மையம், காசி விஸ்வநாதர், மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆகிய சிவாலயங்களும் பிரசித்தி பெற்றவை.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்