புதன், 28 மார்ச், 2018

பனங்குடி புரட்சி



சிவகங்கை மாவட்டம் கள்ளர் நாடான பனங்குடி கிராமத்தில் தியாகி கண்ணுச்சாமி அம்பலத்தின் தலமையில் பனங்குடி புரட்சி நடந்தது.  பனங்குடி கிராமத்தில் 29 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் தியாகத்தை மறக்காமல் நினைவுத்துாண் அமைத்து கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

சுதந்திர போராட்டத்தில் பனங்குடியில் ஒவ்வொருவருடைய ரத்தத்திலும் நாட்டுப்பற்று கலந்திருந்தது. ஏற்றத்தாழ்வு நிறைந்த அக்காலத்திலேயே காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தாழ்த்தப்பட்டோருக்கும் சமமரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் குடிநீர் ஊரணியில் ஓலைப்பெட்டி வைத்து தண்ணீர் எடுத்து வந்தனர். இதனை மாற்றி அவர்களும் பானையில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டது.

சிறிய கிராமமாக இருந்தபோதிலும் 29 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்துள்ளனர். இதில் ஆகஸ்ட் போராட்டத்தில் ஈடுபட்ட 15 தியாகிகள், இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.,) பணிபுரிந்த 14 வீரர்கள் உள்ளனர். அவர்களது நினைவாக கிராமத்தில் நினைவுத்துாண் வைத்துள்ளனர். அதனை சுற்றிலும் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 1990ல் அப்போதைய கலெக்டர் குத்சியாகாந்தி துவக்கி வைத்துள்ளார். முன்னோர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அந்த நினைவுத் துாணுக்கு கிராமமக்கள் தேசிய விழாக்களில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ராஜூ கூறியதாவது: பனங்குடி மக்கள் 1942ல் ஆகஸ்ட் புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். காந்தியடிகள் கைது செய்யப்பட்டதும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆக., 24ல் பனங்குடி ரயில்வே ஸ்டேஷனாக செயல்பட்ட இரண்டு பெட்டிகள் மற்றும் அதில் இருந்த டிக்கெட்கள், ஆவணங்களை தீயிட்டு கொளுத்தினர். ஆத்திரமடைந்த போலீசார் இருவரது வீடுகளை தீயிட்டு சேதப்படுத்தினர். இன்றும் அந்த சுவடுகளை வீடுகளில் காண முடியும்.

24.8.1942-ம் தேதி பனங்குடி நடராஜபுரம் ரயில் நிலையத்திற்கு தீ வைத்த நிகழ்வுகளை அடுத்து 

கள்ளர் மரபினரான 
தியாகி கண்ணுச்சாமி அம்பலம், 
முத்துச் சாமி வல்லத்தரசு
வளமாவூர் இராமகிருஷ்ணத் தேவர், 
பாகனேரி ஆர்.வி.சுவாமிநாதன் தேவர், 
இரவிசேரி நடராஜன், ஆகியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் 28 பேர் மீது வழக்கு பதிந்து ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், 800 ரூபாய் அபராதமும் விதித்தனர். மேலும் அனைவருக்கும் சேர்த்து கூட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. சுந்திரம் அடைந்ததால், அந்த அபராதத்தை வசூலிக்கவில்லை.




வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்