தொண்டைமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொண்டைமான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 ஜூன், 2023

மேஜர் வில்லியம் பிளாக்பர்ன் எனும் தொண்டைமான்களின் விசுவாசி


மன்னராட்சியில்  எதிரிநாட்டின் மீது ஆயுதமேந்தி போர்தொடுத்து வெற்றி பெறுவது ஒருபுறம் என்றாலும் உள்நாட்டு மக்களுக்கு தேவையான நீதி,நிர்வாகம், நிதி இவற்றை அளித்தால்தான் மக்கள் செழிப்போடு வாழ இயலும்.இதைச்செய்த மன்னர்களே பிற்காலத்தில் பொற்கால ஆட்சி வழங்கியதாக வரலாற்றில் சிறப்பானதொரு இடத்தை பெற்றுள்ளனர். போருக்கு வீரம் செறிந்த தளபதிகள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது நிர்வாகத்தை நடத்த ஆளுமையும், திறமையும், நேர்மையும் நிறைந்த, மக்களின் மனநிலையும் அறிந்த நிர்வாக அதிகாரிகள் அப்படியானவரைப்பற்றி காண்போம்.



ராஜா விஜயரகுநாதராய தொண்டைமான் (1807-1825):

விஜயரகுநாதராய தொண்டைமான் 10 வயதாக இருக்கும்பொழுது தொண்டைமான் புதுக்கோட்டையின் மன்னரானார். அரசு காரியங்களை மேல் அரண்மனை ஜாகீர்தார் (மன்னரின் சித்தப்பா) விஜயரகுநாத தொண்டைமான் கவனித்து வந்தார். மன்னர் இளம் பிராயத்தினராக இருந்ததால் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் நிர்வாகத்தையும், நலன்களையும், கவனித்துக்கொள்ள தஞ்சாவூர் ரெசிடன்ட் ஆக இருந்த மேஜர் வில்லியம் பிளாக்பர்ன் ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டார். அதன்படி கிபி-1807 பிப்ரவரி முதல் புதுக்கோட்டையின் ரெசிடண்டாக (ஆட்சியாளராக) பிளாக்பர்ன் பொறுப்பேற்றார். 

மேஜர் பிளாக்பர்ன் புதுக்கோட்டை அரச குடும்பத்தினருக்கு நன்கு அறிமுகமானவர் பாளையக்கார போரின்போது அவர் புதுக்கோட்டைக்கு பலமுறை வந்திருக்கிறார்.எனவே அவர் சமஸ்தானத்தின் நிர்வாக பொறுப்புகளை கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டதில் அரச குடும்பத்தினருக்கும்,புதுக்கோட்டை மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சி.

இளம் பிராயத்தில் இருந்த மன்னர் மற்றும் அவரது சகோதரர் இருவரும் பிளாக்பர்னியம் மிகுந்த பாசப்பிணைப்பு கொண்டிருந்தனர்.
மன்னருக்கு சமஸ்கிருதம்,மராத்தி,தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கல்வியும், சண்டைபயிற்சி மற்றும் குதிரையேற்றம்,போர்யானைப்பழக்குதல் போன்ற பயிற்சிகள் அளிக்க பிளாக்பர்ன் ஏற்பாடு செய்தார்.



புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானத்தில் பிளாக்பர்ன் மேற்கொண்ட சீர்திருத்தங்கள்:-

இதற்கு முன்பு தொண்டைமான் சமஸ்தானத்தின் மன்னராக திகழ்ந்த ராஜா விஜய ரகுநாத தொண்டைமான் (1789-1807)

இம்மன்னரின் ஆட்சிக்காலம் முழுவதும் போர்மேகங்களால் சூழப்பட்டிருந்தது எனலாம். விஜயரகுநாத தொண்டைமான் இறக்கும்போது 60,400/-பகோடா கடன்சுமையை அரசுக்கு விட்டுச்சென்றார்(ஒரு பகோடா என்பது 8கிராம் அளவுள்ள தங்கக்காசு) 
(Statistical Acc... Puthukottai).

முன்னாள் மன்னர் இறந்தபிறகு அரண்மனை நிர்வாகம் மிகவும் சீர்குலைந்திருந்தது. அரசின் நிர்வாக நடவடிக்கைகளை கவனிக்க இரண்டு மேனேஜர்கள் நியக்கப்பட்டனர். மேனஜர்களாக காலஞ்சென்ற மன்னரின் உறவினர்களான மாப்பிள்ளை பல்லவராயர் மற்றும் திருமலை தொண்டைமான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.சிர்க்கிள் என்ற பதவியும் ஏற்படுத்தப்பட்டது (தற்போதைய முதல்வர் பதவிக்கு சமம் எனலாம்).

மேஜர் பிளாக்பர்ன் தஞ்சாவூர்க்கும், புதுக்கோட்டைக்கும் ரெசிடண்டாக இருந்ததால் அவர் தஞ்சாவூரிலேயே தங்க வேண்டி இருந்தது. கிபி-1808ல் குடிவாரம் (விவசாயியின் பங்கு) நஞ்சைக்கு 25 முதல் 40 சதவீதமாகவும்,புஞ்சைக்கு 50 % இருந்தது.அமானி நிலமென்பது அரசிற்கு சொந்தமானது விவசாயிகள் குத்தகைதாரர்களாக மட்டுமே இருக்க முடியும். மொத்தவிளைச்சலில் 10-ல் ஒரு பங்கு கிராம கோவில்கள், காவலர்கள், தச்சர், கொல்லர், வண்ணார், நாவிதர், குயவர்,
தண்டல்காரர் ஆகியோருக்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 

அமானி முறையில் இருந்த குறைபாடுகளை களையும் வண்ணம் விளைபொருளில் ஒரே சீராக அரசின் பங்கை நிர்ணயம் செய்து ப்ளாக்பர்ன் ஆணைபிறப்பித்தார் (Statistical Acc.. of Pkt).

புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கென தலைமை நீதிமன்றம் இருந்தது.அதன் தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட்டன.நிதிவழுவும் நீதிபதிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர் என குறித்துள்ளார் பிளாக்பர்ன் (நீதிவழுவும் நீதிபதிகளை மாட்டின்மீது ஏற்றி,தாரை, தம்பட்டங்களுடன், ஊர்வலமாக புதுக்கோட்டை நகருக்குள் அழைத்துச்சென்று மீண்டும் புதுக்கோட்டைக்குள் வர தடைவிதிக்கப்பட்டது).

கிபி-1812 ல் புதுக்கோட்டைக்குள் பெரும் தீ விபத்து ஏற்பட்டு நகரில் பெருத்த சேதம் ஏற்பட்டது. இதனை வாய்ப்பாக கருதிய பிளாக்பர்ன் புதிய முறையில் நகரை சீரமைக்க எண்ணினார். இதன்படி அகலமான நேரான சாலைகளும்,கூரை வீடுகளுக்கு பதிலாக ஓட்டு வீடுகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.வசதி படைத்தவர்கள் தாமாகவே தங்கள் வீடுகளை புதுப்பித்து கொள்ளவும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். 

ஏழைகளுக்கு தேவையான பண உதவிகளும் செய்யப்பட்டன. அரண்மனைக்கும் புதிய கட்டடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் பயனாக புதிய "புதுக்கோட்டை" நகரம் உருவாகியது. தற்போதைய பழைய அரண்மனையை மையமாக வைத்து கிழக்கு, மேற்காக எட்டு வீதிகளும், வடக்கு தெற்காக எட்டு வீதிகளும் நேர்,நேராக அமைக்கப்பட்டன.

பிரான்மலையை அடுத்து உள்ள சில இடங்களில் உரிமை குறித்து சிவகங்கைக்கும்,புதுக்கோட்டைக்கும் சர்ச்சை இருந்து வந்தது.பிளாக்பர்ன் இதில் தலையிட்டு அப்பகுதியை இரண்டாக பிரித்து இருதரப்பாருக்கும் அளித்தார்.

முந்தைய மன்னர் ராஜா விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் நடைபெற்ற நாலாவது மைசூர் போரில் புதுக்கோட்டை படைவீரர்கள் காட்டிய வீரத்தை பாராட்டி,அப்போர் வீரர்களுக்கு பரிசாக 4452 ஸ்டார் பகோடாவை ஆங்கிலேய அரசு அளித்து இருந்தது.இதை மன்னருக்கு அனுப்பபட்ட நசார் என அப்போது நிர்வாகத்தில் இருந்த மாப்பிள்ளை பல்லவராயரும், திருமலை தொண்டைமானும் முடக்கி வைத்துவிட்டனர். பிளாக்பர்ன் முயற்சியால் இத்தொகை போரில் பங்குபெற்ற வீரர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.

புதுக்கோட்டையின் சில இடங்களில் (உப்பிளியக்குடி) இருந்து கிடைக்கும் நிலத்தடி நீரில் இருந்து உப்பு காய்ச்சி எடுக்கப்பட்டு வந்தது. இந்த உப்பிற்கு நல்ல விலையும் கிடைத்தது.இந்த உப்பு அருகில் உள்ள மாவட்டங்களுக்கும் கடத்தப்படும் சூழ்நிலை நிலவியது. இந்த உப்புக்காய்ச்சும் தொழிலை தடை செய்யுமாறு கிபி  1813ல் அப்போதைய தஞ்சை ஜில்லா கலெக்டர் ஆணை பிறப்பித்தார். இது புதுக்கோட்டையின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என்றும் ஆங்கிலேய அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானத்திற்கும் தீங்கு ஏற்படும் என்றும் ஆங்கிலேய அரசுடன் வாதாடி இந்த ஆணையை ரத்து செய்ய பிளாக்பர்ன் ஆவணம் செய்தார்.

பிளாக்பர்ன் ஆட்சியராக இருந்தபொழுதுதான் சமஸ்தான நிலங்கள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டன. சமஸ்தான பகுதியில் உள்ள மலைகள், மரம்,செடி, கொடிகள், நிலங்கள் அவற்றில் விளையும் பொருட்கள், தன்மை, குளங்கள், கோவில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, செய்தொழில்கள், வியாபாரம் போன்ற பல விவரங்களும் குறித்து வைக்கப்பட்டுள்ளன (இந்த விவரங்கள் அடங்கிய ஓலைச்சுவடியே இன்றும்புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது).

மக்கள் அறியாமையில் இருந்து விடுபட பல இடங்களில் இலவச பள்ளிகள் அமைக்க பிளாக் பர்ன் முயற்சி செய்தார் மாட்சீமை தாங்கிய மன்னரின் ஒத்துழைப்போடு. இவ்வாறாக கல்வி அறிவூட்டும் இயக்கம் சமஸ்தானத்தில் துவங்கப்பட்டது.

வானம் பார்த்து விவசாயம் செய்து வந்த புதுக்கோட்டையில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த பிளாக்பர்ன் விரும்பினார்.
அதன்படி அப்போதிருந்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கறம்பக்குடியில் தனியார் துறையில் நீல சாய (இண்டிகோ) தொழிற்சாலையை ஏற்படுத்த திட்டமிட்டார். பிளாக்பர்னின் சகோதரர் ஜான் பிளாக்பர்னும்,புதுக்கோட்டை மன்னரும் கூட்டாக சேர்ந்து இந்த சாய தொழிற்சாலையை ஆரம்பித்தனர்.

இது 1814ம் ஆண்டில் வெற்றிகரமாக துவங்கப்பட்டது.அவுரி எனப்படும் செடியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த நீல நிற சாயத்திற்கு இங்கிலாந்தில் நல்ல வரவேற்பும்,விலையும் கிடைத்தது.சில ஆண்டுகள் கழித்து புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள காரைத்தோப்பிலும் இதுபோன்றதொரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது.1841-ம் ஆண்டு வரை இத்தொழிற்சாலைகள் இயங்கி வந்துள்ளன. இத்தொழிற்சாலைகள் இயங்கிவந்ததற்கான அடையாளங்களை இன்றும் கறம்பக்குடியில் (அம்புநாடு)காணலாம்.

மண்ணின்மைந்தர்கள் தொண்டைமான்கள்:-

கிபி 1822-ல் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் சரபோஜி புதுக்கோட்டை தொண்டைமான் ஒரு ஜமீன்தார் நிலையிலேயே இருப்பதாகவும் ஆகவே அவர் சிர்க்கிள் போன்ற பதவிகளை வைத்துக்கொள்ள தகுதி இல்லை என்றும் ஆங்கிலேய அரசிற்கு தெரிவித்திருந்தார். இந்த தவறான அனுகுமுறையை தவிர்க்க எண்ணிய பிளாக்பர்ன் தஞ்சாவூர் மன்னருக்கு 31-12-1822ல் எழுதிய கடிதத்தில் "புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேய அரசின் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் ஒரு சுதேச மன்னர் என்றும், அவரது உள்நாட்டு நீதி,நிதி,இதர நிர்வாக விஷயங்களில் அவருக்கு பூரண உரிமை உண்டு எனவும் அவரை ஒரு ஜமீன்தார் என்று சொல்லாகாது எனவும் தஞ்சாவூர் மன்னர் அவருக்கு உரிய மரியாதைகளை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்". 

கிபி 1823ல் பிளாக்பர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இங்கிலாந்துக்கு பயணமானார் தொண்டைமானின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அவர் இங்கிலாந்து செல்லும் முன்பு புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகத்தில் திறமைவாய்ந்த அலுவலர்களையும், ஆலோசகர்களையும் நியமித்துவிட்டுச்சென்றார். அவரது சகோதரரும் அவருடன் செல்ல வேண்டி இருந்ததால் சாய தொழிற்சாலைகளின் முழு பொறுப்பும் மன்னரிடமே ஒப்படைக்கப்பட்டன.
இப்படி புதுக்கோட்டை மன்னர்களின் உரிமைகளையும், அந்தஸ்தையும், உயர்த்த பிளாக்பர்ன் பெரும் முயற்சி மேற்கொண்டார் என்பதை அறிகிறோம்.

தான் பிறந்தது இங்கிலாந்து என்றாலும் தொண்டைமான் சீமை மன்னர்களின் மீதும், பாமர மக்கள் மீதும் அளவற்ற அன்புபூண்டு மொழிகடந்து, இனம் கடந்து தொண்டைமான் தேசத்திற்கு ஒரு இடர்பாடும் நேர்ந்திடாது உள்நாட்டு நிதி, அண்டைநாட்டு உறவுகள், எல்லைப்பிரச்சினைகள், தொண்டைமான்களின் சுயாட்சி உரிமை, நிர்வாகம், நீதி,உட்கட்டமைப்பு, விவசாயிகள் நலன் என எல்லாவற்றிலும் தொண்டைமான் தேசத்தை தன் தாய்நாட்டை விட மேலாக நேசித்து தொண்டைமான் தேசத்திலிருந்து பிரியாவிடை கொடுத்துள்ளார். மக்களும் கண்ணீர் மல்க வழியனுப்பிவைத்துள்ளனர்.

மாட்சீமை தாங்கிய மன்னர் விஜயரகுநாதராய தொண்டைமானும் மேஜர் பிளாக்பர்னை தன் தந்தைக்கு நிகராக மதித்துள்ளார். இம் மண்ணின் மீதும் மக்களின் மீதும் அளவற்ற அன்பை கடல்கடந்து பதித்துச்சென்றுள்ளார்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" கணியன் பூங்குன்றனாரின் வைர வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன.

கிளாங்குடி தேவர் தொண்டைமான்


கிளாங்குடி தேவர் தொண்டைமான் 
( ஆண்டிப்பட்டியில் பாண்டியர் கால கல்வெட்டு)


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 13 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டி, ரோசனப்பட்டி, முத்துசங்கிலிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சிலைகள், கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. மேலும் இப்பகுதியில் சிதிலமடைந்த நிலையில் விநாயகர், அம்மன், போகர் சிலைகள் காணப்படுகிறது. 

இச்சிலைகளுக்கு அப்பகுதிமக்கள் ஒவ்வொரு ஆண்டும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இதுகுறித்து அறிந்த மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று உதவி பேராசிரியர்கள் எஸ்.ராஜகோபால், ஆர்.பிறையா ஆகியோர் இணைந்து இப்பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது பிராதுக்காரன்பட்டி மற்றும் ரோசனப்பட்டி கிராமங்களுக்கு இடையே 13 ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர் காலத்துக் கல்வெட்டு ஒன்றைக் கண்டுப்பிடித்தனர்.



இந்த கல்வெட்டு நான்கு அடி நீலமும், ஓரு அடி அகலமும் கொண்டது. இதில் முழுமையடையாத ஏழு வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. 

அதில் உள்ள எழுத்துக்கள் அப்பகுதியை ஆண்ட சிறிய தலைவனான கிளாங்குடி தேவர் தொண்டைமான் என்பவருக்கு திருப்புவன்கோன் அங்கராயன் என்ற குடிமகன் வழங்கிய பரிசு பற்றி இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் இதுபோன்ற கல்வெட்டுகள் அதிகளவில் இருக்கறது.

தேனி தொண்டைமான் நாடு என்று குறிப்பிடப்படுகிறது. 



பெரியகுளத்தில் கோவிந்த தொண்டைமான் பெரிய நிலக்கிழார். மிகப் பெரும் செல்வந்தர். ரொக்கப்புலி கோவிந்தன் தொண்டைமான் என்று சொல்வார்கள்.






பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில்தாயம்மாள் திருமண மாளிகை உள்ளது. கோவிந்தன் தொண்டைமான் மகன் G. சந்தானம் தொண்டைமான் அவர்கள் தேமுதிக வின் வேட்பாளராக போட்டியிட்டார்.





பெரியகுளம் அதிமுக 17 வது வார்டு செயலாளர் விஜய் ஆனந்த் தொண்டைமான் இருக்கிறார்.

தேனி தொண்டைமான் - திருமணம் பத்திரிகை



மக்கள் தொகை கணக்கெடுப்பில் அங்கராயர்


அகராதியில்


நேமம், ஒண்டி பிலி அங்கராயர் வகையறா




இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஆங்காங்கே பழங்கால கற்சிலைகள் கேட்பாரின்றி கிடக்கிறது. இதில் சில தமிழ் கல்வெட்டுகளும் உள்ளது. 





புல்லி - புலி - தொண்டைமான்


புலி கள்ளர் மரபினரின் பரம்பரை செய்திகளில் புலி மிகவும் முக்கியமானது. கள்ளர் உட்பிரிவுகளில் செம்புலியான், சிங்கபுலியார் என்று வழங்குவதை காணலாம்.

புதுக்கோட்டை மன்னர்களே வரிப்புலி வேட்டையாடுவதில் பெருமை பெற்றவர்கள்.  புலி வேட்டையில் சிறந்த பெருமை பெற்றவர்கள் தொண்டைமான்கள். அதே போல் மைசூர் மன்னர்களும் பெருமை பெற்றவர்கள்.










நூல் : இலக்கிய ஆய்வு - சாமி I.A.S

17 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையின் அரசியல் நிலை





கிபி 1686 ல் புதுக்கோட்டையின் பெரும்பான்மை பகுதிகளை கைப்பற்றிய ரகுநாதராய தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார். புதுக்கோட்டையில் பல்லவராயர் ஆட்சி செய்த பகுதிகள் பல்லவராயன் சீமை என்றே அழைக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் இரகுநாதராய தொண்டைமான் ஆட்சி அமைத்த பொழுது இன்றய புதுக்கோட்டை பகுதிகள் முழுவதும் சமஸ்தான எல்லையில் அடங்கவில்லை. புதுக்கோட்டையை சுற்றியிருந்த பல பகுதிகளில் பல குறுநில தலைவர்களின் ஆளுமையில் இருந்துள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் இருந்த பிற அரசுகள் மற்றும் அவர்களின் அரசியல் நிலை குறித்து காண்போம்.

17 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் மற்ற அரசுகள்:

கிபி 17 ஆம் நூற்றாண்டில் இன்றைய புதுக்கோட்டையின் பெரும்பான்மை பகுதி பல்லவராயர்களாலும், பிற குறுநில அரசுகளாலும் ஆளப்பட்டுள்ளது. 



பெருங்களூர் பல்லவராயர்கள்:-

தொண்டை மண்டலத்தில் இருந்து தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவருடன் புதுக்கோட்டையில் குடியேறிய பல்லவராயர்கள் கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டையில் ஆதனக்கோட்டை, பெருங்களூர், வைத்தூர், திருக்கட்டளை, கலசமங்கலம், திருவரங்குளம், பொன்னமராவதி பகுதிகளை இவர்கள் ஆட்சி செய்துள்ளனர். இப்பகுதிகளில் இவர்களைப்பற்றிய பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. 



சிற்றம்பலக் கவிராயர் என்பவர் சிவந்தெழுந்த பல்லவராயர் என்பவர் மேல் சிவந்தெழுந்த பல்லவராயர் உலா எனும் நூலை பாடியுள்ளார். இவரது காலம் கிபி 1650 ஆகும். இந்த காலகட்டத்தில் சிவந்தெழுந்த பல்லவராயர் ஆட்சி செய்த பகுதிகளாக, ஆலங்குடிநாடு, அமராபதிநாடு (பொன்னமராவதி), கடுவன்குடிநாடு ( விராலிமலை), செங்காட்டு நாடு, பேரையூர் நாடு, வல்லநாடு, மெய்மலை (திருமயம்), சந்திரலேகா நாடு, கொடுங்குன்ற நாடு (பிரான்மலை), திருக்கோளக்குடிநாடு மற்றும் கோனாடு. 



கிபி 1681 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை கல்வெட்டு (968) , சிவந்தெழுந்த பல்லவராயர் ராச்சியம் பண்ணியருளுகையில் குடுமியான்மலை கோயிலுக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடுகிறது. இதுவே சிவந்தெழுந்த பல்லவராயர் பற்றி கிடைத்த கடைசி கல்வெட்டாகும். 



அறந்தாங்கி தொண்டைமான்கள் மற்றும் பாலைவன ஜமீன்:-



கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டை அறந்தாங்கி பாலையூரை மையமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் அறந்தாங்கி தொண்டைமான்கள் என அழைக்கப்பட்டனர். அறந்தாங்கி தொண்டைமான்கள் வழி வந்தவர்கள் பாலையவன ஜமீன்களாக 20 ஆம் நூற்றாண்டுவரை ஜமீன்தார்களாக தொடர்ந்தனர். கிபி 1686 ஆம் ஆண்டை சேர்ந்த சங்குபட்டணம் செப்பேடு ஆண்டவராய வணங்காமுடி தொண்டைமான் ஆட்சி செய்யும்போது வெள்ளாற்றுக்கு தெற்கே உள்ள நிலப்பகுதிகளை தானமாக அளித்துள்ளார். புதுக்கோட்டை யில் தொண்டைமான் ஆட்சி ஏற்பட்ட பிறகும் அறந்தாங்கி தொண்டைமான்கள் தனியரசு நடத்தியுள்ளனர். 

நகரம் ஜமீன்தார்கள்:-

கிபி 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சை மராத்தியர்களால் உருவாக்கப்பட்ட நகரம் ஜமீன் கிபி 1735ல் புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது.(Manual of pudukkottai state vol 2 part 1 page 722)

வாராப்பூர் பாளையம் :-

கிபி 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சை மராத்தியர்களால் ஜகநாத அய்யர் என்பவருக்கு வாராப்பூர் பாளயைம் அளிக்கப்பட்டது. கிபி 1735ல் வாராப்பூர் புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது.

கத்தலூர் பெரம்பூர் சிற்றரசர்கள்:-

விராலிமலை வட்டாரத்தில் அரசு செலுத்திய சிற்றரசர்கள் இப்பகுதியில் கிபி 14 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்து வந்துள்ளனர். 17 ஆம் நூற்றாண்டில் ஆவூர் பகுதியில் கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு பல உதவிகளை இவர்கள் செய்துள்ளனர். கிபி 1653ல் கள்ளர் நாடான கத்தலூரில் சர்ச் ஒன்று அமைக்கப்பட்டதாக பாதிரியார்கள் குறித்துள்ளனர். கிபி 1686ல் பெரம்பலூர் கத்தலூர் கள்ளர் ராசாக்கள் இப்பகுதியில் மிசினரிகளுக்கு உதவியதாக பாதரியார் குறிப்புகள் உணர்த்துகின்றன. (Saints, Goddesses and Kings: Muslims and Christians in South Indian Society /By Susan Bayly)
இந்த பெரம்பலூர் கத்தலூர் மதுரை நாயக்கர் பாளையங்களில் ஒன்றாக இருந்ததாக oriental historical manuscripts vol 2 ல் உள்ள ஒலைச்சுவடி தகவல்கள் கூறுகின்றது. 






குமாராவாடி பாளையம்:-

கிபி 17 ஆம் நூற்றாண்டில் லக்கய நாயக்கர் என்பவர் குமாராவாடி பாளையத்தின் தலைவராக இருந்தார். பெரம்பலூர் கத்தலூர் அரசுகளிடம் இருந்து விராலிமலையை இவர்கள் கைப்பற்றினர். மதுரை நாயக்கர் உருவாக்கிய பாளையங்களில் இதுவும் ஒன்றாகும். பிற்காலத்தில் 18 ஆம் நூற்றாண்டில் இப்பாளையம் நமண தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது. (Manual of pudukkottai state vol 2 part 1 page 724)

மருங்காபுரி பாளையம்:-

கிபி 17 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை பொன்னமராவதி வட்டம் அம்மன்குறிச்சியை மையமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் மருங்காபுரி பாளையக்காரர்கள். புதுக்கோட்டை கல்வெட்டு 760/875 ஆகியவை இப்பகுதியில் ஆட்சியாளர்களான பூச்சி நாயக்கர்களை பற்றி குறிப்பிடுகிறது. கிபி 1691 வரை இவர்கள் இப்பகுதியில் ஆட்சி செய்துள்ளனர். 18 ஆம் நூற்றாண்டில் நமண தொண்டைமானால் இந்த பாளையம் புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது. (Manual of pudukkottai state vol 2 part 1 page 725)



கரிசல்பட்டு வாராப்பூர் பாளையம்:-

கிபி 17 ஆம் நூற்றாண்டில் பொன்னமராவதி பகுதியில் இருந்த பாளையங்களில் கரிசல்பட்டு வாராப்பூர் பாளையமும் ஒன்றாகும். இப்பாளையத்தை பொம்ம நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். இந்த பாளையம் பிற்காலத்தில் தொண்டைமான்களால் கைப்பற்றப்பட்டது.
(Manual of pudukkottai state vol 2 part 1 page 725)

இலுப்பூர் பாளையம் :-

திருமலை நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாளையங்களில் இலுப்பூரும் ஒன்றாகும். இப்பாளையம் காமாட்சி நாயக்கர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இந்ந பாளையமும் 18 ஆம் நூற்றாண்டில் விஜயரகுநாத தொண்டைமானால் கைப்பற்றப்பட்டது.
(Manual of pudukkottai state vol 2 part 1 page 725)


செங்கீரை காண்டுவர்கள்:-

திருமயம் பகுதியில் ஆட்சி செய்த சிற்றரசர்கள் காண்டுவர் என அழைக்கப்பட்டனர். 17 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி கிழவன் சேதுபதியால் புதுக்கோட்டை தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டது.

குளத்தூர் பாளையம்:-

ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர்(1682-1689) காலத்தில் நமண தொண்டைமானின் போர் சேவைகளை பாராட்டி முத்து வீரப்ப நாயக்கர் நமண தொண்டைமானை குளத்தூர் பாளையத்தின் தலைவராக்கினார். கிபி 1682 முதல் 1750 வரை குளத்தூர் பாளையம் நமண தொண்டைமான் வம்சத்தால் ஆளப்பட்டு பிறகு புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது.


அம்புநாட்டு அரசு மக்கள் முதல் புதுக்கோட்டை மன்னர் வரை:-

தொண்டை மண்டலத்தில் இருந்து வெங்கடசால பல்லவராயர் என்பவருடன் தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவர் புதுக்கோட்டை கேரளசிங்கவளநாட்டு பகுதியில் குடியேறி, பிறகு அங்கிருந்து அம்புக்கோயிலில் குடியேறினர். இவர்களை அம்புக்கோயில் அஞ்சுக்குடி அரையர்கள் என 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுந்தரபாண்டிய தேவர் காலத்து புதுக்கோட்டை கல்வெட்டு 522 குறிப்பிடுகிறது. 



புதுக்கோட்டை கல்வெட்டு எண் 458, வல்லப பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் ஆனை தொண்டைமான் என்பவர் அம்புக்கோயில் சிவனு கொடை அளித்த தகவலை தருகிறது. 

கிபி 1734 ஆம் ஆண்டை சேர்ந்த நாஞ்சியூர் செப்பேடு, அழும்பில் அரச மக்கள் என தொண்டைமான்களை குறிப்பிடுகிறது.

17 ஆம், நூற்றாண்டில் விஜய நகர மன்னர் ஸ்ரீரங்கராயர் ராமேஸ்வரம் நோக்கி தள யாத்திரை சென்றபோது அவரது யானைகளில் ஒன்று மதம்பிடித்து கட்டுப்பாட்டை மீறி மக்களை தாக்க ஆரம்பித்தது. யானைகளை போருக்கு பயிற்றுவிப்பதில் வல்லவரான ராய தொண்டைமான் மதம் கொண்ட யானையை அடக்கி ஸ்ரீரங்கராயரின் முன் நிறுத்தினார். தொண்டைமானின் வீரத்தை கண்டு மெச்சிய ஸ்ரீரங்கராயர் , தொண்டைமானுக்கு" ராய ரகுத்த ராய வஜ்ஜிருடு ராய மன்னிடு ராயர்" எனும் பட்டத்தை அளித்து , நிலங்களையும் அளித்தார். இவற்றோடு சேர்த்து,அம்பாரி யானை, முரசு யானை, சிங்கமுகபல்லக்கு, பெரிய மேளங்கள், உலா வரும்போது கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை, " கண்டபெருண்டா( யானையை ஒரு பறவை வேட்டை ஆடுவது போல்)" எனும் உருவம் பதித்த பதாகைகளை தனக்கு முன் எடுத்துசெல்லும் உரிமை( அக்காலத்தில் இந்த உரிமை சிற்றரசர்களுக்கே உரியது), பகல் நேரங்களில் தனக்கு முன்னும் பின்னும் விளக்குகளை எடுத்து செல்லும் உரிமை, இவரது புகழை பாடிச்செல்ல கட்டியக்காரர்களை வைத்துக்கொள்ளும் உரிமை, சிங்கக்கொடி, மீன் கொடி, கருடக்கொடி, ஹனுமர்கொடி பயன்படுத்தும் உரிமை, குதிரைகள் படைசூழ செல்லும் உரிமை, வெண்குற்ற குடை உயபோகப்படுத்தும் உரிமை என சிற்றரசருக்கே உரிய பல உரிமைகள் ஆவுடை ரகுநாத தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டது. ( (General history of pudukkottai state R.aiyar 1916 page 120: ராய தொண்டைமான் அணுராக மாலை)
ஸ்ரீரங்கராயரின் உதவியுடனே ராய தொண்டைமான் ஒரு சிற்றரசர் நிலைக்கு உயர்ந்துவிட்டார் என்பதை தொண்டைமானுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் உணர்த்துகிறது.

கிபி 1639ல் பல்லவராயர்கள் புதுக்கோட்டையை ஆட்சி செய்து வந்த போது, ஸ்ரீரங்க ராயரின் உதவியோடு தொண்டைமான், புதுக்கோட்டை பகுதிகளை பல்லவராயர்களிடம் இருந்து கைப்பற்றியதாக கிபி 1819 ஆம் ஆண்டை சேர்ந்த புதுக்கோட்டை அரண்மனை குறிப்பு உணர்த்துகிறது. (General history of pudukkottai state R.aiyar 1916 page 120)

கிபி 1661 வரை உயிரோடு இருந்த ராய தொண்டைமான், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோயிலில் உள்ள சிற்ப மண்டபத்தை கட்டியுள்ளார் என திருக்கோகர்ணம் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.( தமிழக தொல்லியல் ஆவண கல்வெட்டு) 


இவருக்கு அடுத்து பொறுப்பேற்ற ரகுநாதராய தொண்டைமான், தஞ்சை நாயக்கர், திருச்சி நாயக்கர் ஆகியோருக்கு போர் உதவிகள் செய்துள்ளார்.திருச்சிராப்பள்ளியின் தலைமை அரசுக்காவலராக பொறுப்பேற்றுள்ளார். சேதுபதி வேண்டுகோளின்படி, தஞ்சை நாயக்கரின் பட்டத்து யானையை கவர்ந்து வந்தார்.எட்டயபுரம் பாளையக்காரரின் தலையை கொய்தார்.

கிபி 1686 ல் வெள்ளாற்றின் தெற்கே உள்ள சில பகுதிகள் மட்டுமே பல்லவராயர் வசம் இருந்துள்ளது. சிவந்தெழுந்த பல்லவராயர் கண்டதேவியில் சிவபூஜையில் இருந்தபொழுது கிழவன் சேதுபதியின் ஆட்கள் பல்லவராயரை சந்திக்க அழைத்துள்ளனர். ஆனால் பூஜை முடியாமல் வர இயலாதென பல்லவராயர் கூறிவிட்டார். இதனால் சேதுபதி தனது மகனை அனுப்பி சிவந்தெழுந்த பல்லவராயரை கொன்றார். சிவந்தெழுந்த பல்லவராயரின் உதவியாளர்கள் சின்ன பங்காரு மற்றும் பெரிய பங்காரு சேதுபதியின் மகனை ஈட்டியால் குத்தி கொன்றனர்.

பல்லவராயர் இறந்தபின் அவர் ஆட்சி செய்த பகுதிகளுக்கு தொண்டைமானை பொறுப்பில் அமர்த்த எண்ணிய சேதுபதி , திருமயத்தில் இருந்த தர்மபிள்ளை என்பவருக்கு இளந்தாரி அம்பலம் என்பவர் மூலம் தகவல் அனுப்பினார். ஆனால் தர்மபிள்ளை தன்னால் 1000 பேர் வாழும் முனிசந்தை, செங்கீரை பகுதிகளை மட்டுமே தர இயலும் என்றார் . இதன்பிறகு சேதுபதி தனது மோதிரத்தை அத்தாட்சியாக, இளந்தாரி அம்பலம் மூலம் அளித்து வெள்ளாற்றுக்கு தெற்கே பல்லவராயர் ஆண்ட பகுதிகளை தொண்டைமானுக்கு அளிக்கவேண்டும் என கூறினார். அதன்படி திருமயத்தை சுற்றியிருந்த பல்லவராயரின் பகுதிகள் தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டது.

வெள்ளாற்றுக்கு தெற்கே திருமயத்தை ஒட்டியுள்ள பகுதிகளே, சேதுபதியால் தொண்டைமானுக்கு அளிக்கப்பட்டதாக இளந்தாரி அம்பலக்காரர் கும்மி எனும் நூலில் கூறப்பட்டுள்ளது. (General history of pudukkottai state R.aiyar 1916 page 127)

புதுக்கோட்டை சமஸ்தான வரலாற்றை எழுதிய ராதாகிருஷ்ணன் ஐயர், வெள்ளாற்றுக்கு வடக்கே ஆட்சி செய்த பல்லவராயர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் தனியாட்சி செலுத்தியதாகவும், வெள்ளாற்றுக்கு தெற்கே திருமயத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே சேதுபதியின் ஆதிக்கம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளைப்பற்றிய கல்வெட்டு / ஒலைச்சுவடி/ செப்பேடுகளில் சேதுபதிகளை பற்றிய எந்த குறிப்புமே இல்லை என அவர் தெரிவிக்கிறார். 
(General history of pudukkottai state R.aiyar 1916 page 134)

தொண்டைமானின் படையெடுப்புகளும் சமஸ்தான விரிவாக்கமும்:-

* குமாரவாடி பாளையக்காரரிடம் இருந்து விராலிமலையை வென்றார்.
* பூச்சி நாயக்கரை வதம் செய்து மருங்காபுரி பாளையத்தை இணைத்தார்.
* பெரம்பூர், கத்தலூர், ஆவூர் பகுதிகளில் படையெடுத்து வென்று புதுக்கோட்டை உடன் இணைத்தார்.
*கிபி 1723 ல் சேதுபதி திருவுடையத்தேவருக்கு பின் ஏற்பட்ட வாரிசுரிமை போரில் பங்கேற்று திருமயத்தை பெற்று புதுக்கோட்டையுடன் இணைத்தனர்.
*பொன்னமராவதி பகுதியில் ஆட்சி செய்த பொம்மி நாயக்கரை வீழ்த்தி, கரிசல்பட்டு- வாராப்பூர் பகுதிகளை இணைத்தார்
*நகரம் ஜமீன், பாலையவன ஜமீன்களின் கணிசமான பகுதிகளை புதுக்கோட்டையுடன் இணைத்தனர்.
* வாராப்பூர் பாளையக்காரரை வீழ்த்தி, வாராப்பூர் புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டது.
*கிபி 1749 ல் கீழாநிலை கோட்டை கைப்பற்றப்பட்டது.
* கிபி 1756 ல் வல்லநாடு தாலுக்காவில் 10 கிராமங்கள் இணைக்கப்பட்டது.
* கிபி 1770ல் பட்டுக்கோட்டையின் சில பகுதிகள் புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது.
* கிபி 1781 ல் ஐதர் அலியுடன் நடைப்பெற்ற போரில் வென்று அறந்தாங்கியை இணைத்தனர்.
(General history of pudukkottai state R.aiyar 1916 page 123) 

17 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையின் அரசுகளாக பல்லவராயர்களும், அறந்தாங்கி தொண்டைமான்களும் இருந்துள்ளனர். இவர்களைத் தவிர சிறு பாளையங்களாக குமாரவாடி, கத்தலூர், பெரம்பூர், குளத்தூர், மருங்காபுரி, காண்டுவன், இலுப்பூர், கரிசல்பட்டு வாராப்பூர், நகரம் ஜமீன் ஆகியவும் 17 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இப்பகுதியில் ஆட்சி செய்துள்ளனர். 

அம்புநாட்டை ஆட்சி செய்துவந்த தொண்டைமான்கள், கிபி 1639ல் புதுக்கோட்டை வட பகுதிகளை பல்லவராயரிடம் கைப்பற்றி, பிறகு கிபி 1686ல் கிழவன் சேதுபதி அதிகாரம் செலுத்திய வெள்ளாற்றுக்கு தெற்கே இருந்த பகுதிகள் சேதுபதியால் தொண்டைமானாருக்கு அளிக்கப்பட்டது. 


கிபி 1686க்கு பிறகு விராலிமலை, மருங்காபுரி, பெரம்பூர், கத்தலூர், ஆவூர், திருமயம், பொன்னமராவதி, நகரம் ஜமீன், வாராப்பூர், குளத்தூர், கீழாநிலைக்கோட்டை , அறந்தாங்கி உட்பட பல பகுதிகள் தொண்டைமான் மன்னர்கள் போரிட்டு பெற்றுள்ளனர். 



தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

திருக்கோகர்ணம் கோயில் சிறப்பு மண்டபம் விதானம் உபையம்



மன்னர் ராய தொண்டைமான் திருக்கோகர்ணம் கோயில் சிறப்பு மண்டபம் விதானம் உபையம்




ஆறுமுகன் தொண்டமான்




மலையகத் தந்தையின் பேரன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (55) ,27.05.2020 காலமானார்.

பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கலாமா, ஈழத் தமிழர் விவகாரம் குறித்து விவாதம் எழும்போதெல்லாம் பெரும்பாலானவர்களால் இப்படியொரு கருத்து முன்வைக்கப்படும். ஆனால், இலங்கையில் தனி நாடு கேட்டு போராடியவர்கள், பிழைக்கப்போனவர்கள் அல்ல. அவர்கள், வடக்கு-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த இலங்கையின் பூர்வகுடி மக்கள். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பிழைக்கப் போனவர்கள் என யாருமே இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறார்கள். அவர்கள்தான் மலையகத் தமிழர்கள். இந்திய வம்சாவழித் தமிழர்களான இவர்கள், மலை சார்ந்த இடங்களில் வாழ்ந்துவருவதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றனர்.






இவர்கள் யார், எதற்காக இங்கிருந்து இலங்கைக்குப் போனார்கள் என்பது பற்றித் தெரிந்துகொண்டால்தான், மாரடைப்பால் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் பற்றி நாம் புரிந்துகொள்ள முடியும்.

19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தமிழகத்தின் தென்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம், சாதிக்கொடுமைகள் தாங்காமல் மக்கள் அல்லாடி வந்தனர். மக்களின் இந்த நிலையை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஆங்கிலேயர்கள், அவர்களை இலங்கைக்கு அழைத்துச்சென்று, வேலைவாய்ப்புகள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர். தனுஷ்கோடி வரைக்கும் நடைப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து தோணிகள் மூலமாக தலைமன்னாருக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கிருந்து மீண்டும் இலங்கையின் மலையகப் பகுதிகளுக்கு நடைப்பயணமாகவே அழைத்துச் செல்ல, போகும் வழியிலேயே பலர் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள், ரப்பர், காப்பி, டீ எஸ்டேட்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். நாளொன்றுக்கு பல மணி நேரத்துக்கும் மேலாக வேலைபார்க்க நிர்பந்திக்கப்பட்டனர். அடி, உதை எனப் பல சித்ரவதைகளுக்கும் ஆளாகினர்.

அவர்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்க, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பை உருவாக்கியவர்தான் சௌமியமூர்த்தி தொண்டமான். இவர்களின் மூதாதையர், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் திருப்பதூர் அருகே உள்ள பட்டமங்கலம் புதூர் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள்.

இலங்கையில் மலையகத் தமிழர்களின் முகமாகத் திகழ்ந்தவர். மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடியவரும், மலையகத் தமிழர்களின் தந்தை என்று போற்றப்படுபவருமான சௌமிமய மூர்த்தியின் பெயரனான ஆறுமுகம் தொண்டமான், இலங்கை அரசுக்கும் தமிழக அரசுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். தமிழர்களின் கலை & கலாசாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்; குரல்கொடுத்தவர்.

அப்படி மலையக மக்களின் உரிமைக்காகப் போராடியவரும், மலையகத் தந்தை என போற்றப்படுபவருமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன்தான், தற்போது மறைந்துள்ள ஆறுமுகம் தொண்டமான். 1964-ம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், தமிழகத்தின் ஏற்காடு மான்ட்ஃபோன்டில் பள்ளிப் படிப்பையும் கொழும்பு ரோயல் கல்லூரியில், கல்லூரிப் படிப்பையும் பயின்றுள்ளார். தாத்தாவின் வழியில், 1990-ம் ஆண்டு முதல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து, அரசியலில் காலடி எடுத்துவைத்துள்ளார். 1993-ம் ஆண்டு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளராகவும், 1994-ம் ஆண்டு, கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று பிரமாண்ட வெற்றியுடன் நாடாளுமன்றம் சென்றார். சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர், 1999-ம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிறுவனர், சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் குடும்பவழி வாரிசாக மட்டுமின்றி, அவருக்குப் பின்னர் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்று அரசியல் வாரிசாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். சிங்களத் தலைவர்களோடு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் மலையக மக்களின் நலன்களுக்காக அவர்களுடன் இணக்கமான நட்பைக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் 2000, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். தொடர்ந்து, தற்போது தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராகவும் பதவி வகித்துவந்தார். மலையக மக்களின் நலன்களுக்காகக் கடந்த 30-ஆண்டுகளாகப் பணியாற்றியவர். 25-ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்டவர். தமிழக அரசியல்வாதிகள் பலருடன் மிகவும் நெருக்கமான நட்பைப் பேணி வந்தவர் ஆறுமுகன் தொண்டமான். 2010-ம் ஆண்டு இலங்கைக்குச் சென்றிருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மலையகத்துக்கும் அழைத்துச்சென்று, தோட்டத் தொழிலாளர்களைச் சந்திக்க ஏற்பாடுகளைச் செய்தவரும் இவர்தான்.

மறைந்த ஆறுமுகம் தொண்டமான், அடிக்கடி தமிழகம் வந்து சிவகங்கை மாவட்டத்தில் வாழ்ந்துவரும் உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். தமிழக அரசியல்வாதிகளிலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டில் மிகவும் ஈடுபாடுடையவர், ஆறுமுகம் தொண்டைமான். ஜல்லிக்கட்டுக் காளைகளையும் வளர்த்து வருகிறார். 

கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்