வியாழன், 29 மார்ச், 2018

இளந்தாரி முத்துவிஜய அம்பலக்காரன்



" இளந்தாரி முத்துவிஜய அம்பலக்காரன் :-  கிபி 1686 சேதுபதி மன்னரின் சிவகங்கை தெற்கத்தி கள்ளர் படையின் தலைவன். 

ஆம் கிபி1686 ஆண்டு சேது சீமையில் மன்னர் கிழவன் சேதுபதி அரியணை ஏறி 7வது ஆண்டில் அவரது கள்ளர் தளபதியான இளந்தாரி முத்து விஜய அம்பலத்திற்கு சிவந்தெழுந்த பல்லவராயரின் மீது என்ன விரோதமோ அவருக்கு எதிராக சதித்திட்டம் ஒன்றை தீட்டினார். 

சேதுபதியிடம் சென்று மன்னா பல்லவராயர் உங்களை சந்திக்க மறுத்து அவமானப்படுத்திவிட்டர் என தவறான தகவலை அளிக்கிறார். இதனை கேட்டு சினம் அடைந்த சேதுபதி தனது மகனுடன் யானைப்படையுடன் ஒரு பெரும் படையை அனுப்புகிறார். கண்டதேவிக்கு வந்து அங்கே சிவ பூஜையில் இருந்த கள்ளர் குல மன்னர் சிவந்தெழுந்த பல்லவராயரை கண்டதேவி குளத்தின் அருகிலே மரணத்தை ஏற்படுத்துகிறார்.

சேதுபதியின் கள்ளர் படையின் தலைவரான இளந்தாரி முத்து விஜய அம்பலக்காரர் மூலமாக தங்க பல்லக்கையும் வைர மோதிரத்தையும் தொண்டைமானுக்கு அளித்தார் கிழவனார். 

திருமயத்தில் இருந்த சேதுபதியின் அதிகாரி தர்ம பிள்ளை என்பவரிடம் தொண்டைமானை பல்லவராயரின் பகுதிகளுக்கு பொறுப்பேற்க ஏற்பாடுகளை செய்யுமாறு பணித்தார்.



பல்லவராயர் இறப்பிற்கு பிறகு அவரின் ஆட்சிப்பகுதியை இளந்தாரி அம்பலம் வரையறுத்து அங்கு அதே கள்ளர் குல மன்னரான விஜயரகு நாத தொண்டைமானரை அமர வைக்கிறார். பிற்காலங்களில் தொண்டைமானார் பல்லவராயரின் வகையறாக்களிடம் பெண் எடுத்துக்கொள்கிறார்.

கிபி 18 ஆம் நூற்றாண்டு புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் கால முக்கிய படைபற்று தலைவர்களில் இளந்தாரி முத்து விசய அம்பலக்காரர்( திருமயம் பகுதி - வெள்ளாற்று தெற்கு) இருந்தார். இவர் சேதுபதி மன்னரின் தெற்கத்தி கள்ளர் படையின் தலைவன் இளந்தாரி முத்துவிஜய அம்பலக்காரன் வாரிசுகள் அவர்கள்.


வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்