திங்கள், 17 ஆகஸ்ட், 2020

கொன்றிமாயத்தேவர்



பாப்பாபட்டி மதியத்தேவர் சாவடியில் தெய்வா ஆர்ட்ஸ் வரைந்த கொன்றிமாயத்தேவரின் ஓவியம். இவர் பாப்பாபட்டி ஆண்டாயி பகாத்தேவன் பேரன் பத்துத்தேவரில் எட்டாவது தேவர் மதியத்தேவரின் ஆறாவது மகன் கொன்றிமாயத்தேவர் அவர்கள்.




கொன்றிமாயத்தேவர் சிலம்பம் மற்றும் வளரி மாவீரா். இன்று அவா்கள் பயன்படுத்திய வளரி உள்ளது. பாப்பாபட்டியில் திண்டுக்கல் மாவட்டம் விளம்பட்டியின் காவல்காரன் நடுக்கல் மற்றும் கோவில் உள்ளது.


முக்குபரி ( எ ) தவமணி கல்யாணி தேவர்


25.8.2020 இன்றைய Hindu நாளிதழ்.


திருமங்கலம் அருகே உள்ள தர்மத்துப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் உள்ள ஆவணங்கள் உள்ளுர் வரலாற்றை புரிந்து கொள்ளக் கூடிய முக்கியமான இடமாக உள்ளது. அங்கு தான் 80 வயது பெரியவர் முக்குபரி ( எ ) தவமணி கல்யாணி தேவர் வசிக்கிறார். அவரைக் காணும்போது சாதாரண கிராமவாசிகள் நம் கண்கள் தவறாக பார்க்கத் தோணும் ஆனால் அவர் மன்னர் திருமலை நாயக்கரோடு நல்ல உறவில் இருந்த பிரமலைக் கள்ளர் நாட்டின் தலைவரான திருமலை பின்னர் தேவரின் பதினோராவது வாரிசு.

மன்னர் திருமலை நாயக்கர் திருமலை பின்னத் தேவனுக்கு அவருக்கு வழங்கிய 3 செப்புத் தகடுகள் கம்பளி, காளாஞ்சி ( வெண்கல கூஜா ) பாதக் குறடு போன்றவற்றை கல்யாணி தேவர் பாதுகாப்பாய் வைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் லூயிஸ் டூமோ அவர்கள் எழுதிய *தென்னிந்திய துணை சாதி : பிரமலைக் கள்ளர்களின் சமூக அமைப்பும், மதமும்* 
A South Indian Sub-Caste: Social Organization and Religion of the Pramalai Kallar
by Louis Dumont
என்ற புத்தகத்தின் ஆசிரியருமான லூயி டூமோ அவர்கள் திரு. கல்யாணி தேவர் மற்றும் அவரது தந்தையையும் இரண்டாம் உலகப்போருக்குப் பின் கள ஆய்வுக்காக வந்திருந்தபோது சந்தித்துள்ளார் .
சமீபத்தில் கலை வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன் கல்யாணி தேவர் அவர்களே சந்தித்து ஆய்வு மேற்கொண்டார். 1960 ஆண்டில் வெளியான மாவட்ட கெஜட்டில் திருமலை பின்ன தேவன் பிரமலை கள்ளர் நாட்டு தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காலகாலமாக அந்த குடும்பத்தில் செவி வழி செய்தி ஒன்று உள்ளது . அதன்படி திருமலை நாயக்கர் உறுதியான அரண்மனையை கட்டியபின் பொதுமக்கள் முன்பு சவால் விடுகிறார். அதன்படி இனி ' கள்ளர் பயம் இல்லை' என அனைவரும் முன்பு உறத்த குரலில் முழங்கினார். இந்த செய்தி பிறமலைக்கள்ளர் இனத் தலைவர்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை உருவாக்கியது. அவர்கள் திருமலை நாயக்கருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என தீர்மானம் போட்டனர். அதன்படி முறையான திட்டம் வகுத்து உடும்பை பயன்படுத்தி அரண்மனையில் கூரையில் துளை போட்டு இறங்கி மன்னரின் விலை உயர்ந்த வாள் மற்றும் ஆபரணங்களை எடுத்து வெளியேறி விடுகிறார்கள். பொழுது விடிந்தது, மன்னன் தன் படுக்கையில் உள்ள தனது உடமைகளை களவாடப்பட்டது அறிகிறான் அதிர்ச்சியுற்றான். மிகவும் பாதுகாப்பான வலுவான கோட்டைக்குள் பாதுகாவலர்களையும் மீறி எப்படி ஒருவன் உள்ளே வந்து இந்தப் பொருட்களை எடுத்திருப்பார் என்று குழம்பி விட்டார். தன்னை கொல்ல வாய்ப்பு இருந்தும் உடமைகளை மட்டும் எடுத்துச் சென்ற காரணம் தெரியாமல் தவித்தார். பின்னர் சபையைக் கூட்டி நடந்தவற்றை விளக்கி இதை எடுத்துச் சென்றவர்கள் தாமாக முன்வந்து கொடுத்து விடுமாறு செய்தியை வெளியிட்டார் . பிறமலைக் கள்ளர்கள் நோக்கம் திருடுவது அல்ல ஆகையால் எடுத்த அரசனின் உடைமைகளை மீண்டும் அரசனிடம் எடுத்துச் சென்றனர் . திருடியவர்களின் நோக்கத்தை அறிந்து திறமையை மதித்து நட்புறவை கொண்டு அவர்களது வாழும் எல்லைகளில் சில உரிமைகள் அனுபவித்துக் கொள்ள உரிமை அளித்தார். அது செப்பேடுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது . இதுகுறித்து மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் பணியாற்றும் காப்பாட்சியர் கே சக்திவேல் அவர்களிடம் கேட்டபோது இந்த சம்பவம் மகாலில் மாலை வேளைகளில் நடத்தும் திருமலை நாயக்கர் வாழ்க்கை வரலாறு கூறும் ஒலி ஒளி காட்சியின்போது பயன்படுத்துவதாக கூறினார்.

இவரது வீட்டில் 3 செப்புத் தகடுகள் உள்ளது அவை மூன்றும் திருமலை நாயக்கரால் நேரடியாக வழங்கப்பட்டவை. 1994 ஆம் ஆண்டில் மாநில தொல்பொருள் துறையால் வெளியிடப்பட்ட 'திருமலை நாயக்கர் செப்பேடுகள்' என்ற புத்தகத்தில் மூன்று செப்புத் தகடுகளின் விரிவான விளக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செப்புத் தகடுகள் 1645 முதல் 1656 வரை வழங்கப்பட்டன. இந்த மூன்று செப்பேடுகளில் ஒன்று 21 சென்டிமீட்டர் நீளமும் 14 சென்டிமீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இச் செப்பேடு 1655 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது . இந்த செப்பேடு வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியினை உள்ளடக்கியுள்ளது. அதன்படி திருமலை பின்ன தேவன் திருமலை நாயக்கரிடம் பெத்த பிள்ளை மற்றும் திருமலை என்ற 2 பட்டங்களை பெற்றார். மேலும் கம்பளி , பாதக் குறடு மற்றும் காஞ்சி காளாஞ்சியும் கொடுத்து பயன்படுத்த முழு உரிமையையும் கொடுத்துள்ளார். மேலும் குடும்பத்தின் பிறக்கும் பெண் சந்ததியினருக்கும் 'திருமலை புன்னியக்கா' என்ற தலைப்பைப் பயன்படுத்த மன்னர் அனுமதித்தார். அதுபோல தர்மத்துப்பட்டி மற்றும் உச்சப்பட்டி ஆகிய இரண்டு கிராமங்கள் அவருக்கு மானியமாக வழங்கப்பட்டன.

திரு. கல்யாணி தேவர் கூறுகையில், அவரது மூதாதையர்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே நடக்கும் பிரச்சினையை தீர்க்கும் போது 'கம்பளி'யில் அமர்ந்திருப்பர் அப்போது பாதகுரடு 'மற்றும்' காளாஞ்சி 'ஆகியவை அருகில் இருக்கும். அவர் மேலும் கூறுகையில், “குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் 'பாதகுறடு' மீது நிற்கும்போதுதான் உண்மையை பேச முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த கலைப்பொருட்களைத் தவிர, திரு. கல்யாணி தேவர் பல பனை ஓலை சுவடிகளும் கையெழுத்துப் பிரதிகளையும் வைத்திருக்கிறார், அவை திரு. காந்திராஜனின் கூற்றுப்படி, சுமார் 150 ஆண்டுகள் பழமையானவை. "காலனித்துவ ஆட்சி வரை இந்த குடும்பத்தால் பிரமலை கள்ளர்களிடையே நடக்கும் தகராறுகள் தீர்த்து வைக்கப்பட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு இருந்தது என்பதைக் காட்ட பல காகித ஆவணங்களும் உள்ளன. ,காலனித்துவ ஆங்கில அரசாங்கம் தங்கள் அதிகாரத்துக்கு கட்டுபடாத பிரமலை கள்ளர்களை குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் ஒரு 'குற்றவியல் பழங்குடி' என்று வகைப்படுத்தியது, ”என்று அவர் கூறுகிறார்.

செப்புத் தகடுகளின் புகைப்படங்களை திருமலை நாயக்கர் அரண்மனையில் காட்சிக்கு வைக்கலாம், இதனால் ஆர்வமுள்ளவர்கள் இவர்கள் குடும்பத்தைப் பார்வையிட்டு வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்று திரு காந்திராஜன் கூறுகிறார்.

இந்த கலைப்பொருட்களை அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து பாதுகாத்து வருவதாக அவரது மகன் திருமலை என்ற கார்த்திகேயனுடன் வசிக்கும் திருமலை கல்யாணி தேவர் கூறுகிறார். 

A nondescript house at Dharmathupatti near Tirumangalam holds a significant place in understanding the region’s history. It is where 80-year-old Mukkupari alias Thavamani Kalyani Thevar resides. He can easily be mistaken to be one of the many villagers. But he says he is the 11th descendant of Thirumalai Pinna Thevan, a leader of Piramalai Kallar community, who had a special relationship with king Thirumalai Nayak.

Mr. Kalyani Thevar has several artefacts given to Thirumalai Pinna Thevan by king Thirumalai Nayak - three copper plates, a ‘kambali’ (blanket), ‘kalanji’ (a bronze vessel that is kept with the community leader during meetings) and ‘padhakuradu’ (sandal) .

Louis Dumont, a French anthropologist and author of ‘A South Indian subcaste: social organisation and religion of Piramalai Kallar,’ had met Mr. Kalyani Thevar and his father after the World War II while doing fieldwork for his book, says Mr. Kalyani Thevar.

Art historian K.T. Gandhirajan, who recently met him, says Piramalai Kallar used to reside along the Nagamalai hill range till Elumalai near Usilampatti. There is a reference in the District Gazetteer, 1960, which says Thirumalai Pinna Thevan was a headman of the community.

Recalling his family’s oral tradition, Mr. Kalyani Thevar says it all started after king Thirumalai Nayak challenged the public to try breaking into the highly fortified palace. A group of Piramalai Kallars managed to gain entry using an ‘udumbu’ (monitor lizard) and stole valuables from the king’s bedroom. Following this incident, the king made an announcement asking the thieves to turn in by themselves.

“Since the intention of the Piramarai Kallars was not to steal, they returned the belongings to the king. Impressed by it, the king gave several rights to Thirumalai Pinna Thevan. It has also been recorded in the copper plates,” says Mr. Kalyani Thevar.

Curator of Thirumalai Nayak Palace K. Sakthivel says this incident is usually narrated during the evening light-and-sound show that used to take place at the palace.

Artefacts

A detailed description of the three copper plates has been recorded in the book, ‘Thirumalai Naicker Seppedugal’ which was released by the State Archaeological Department in 1994. These copper plates were issued between 1645 and 1656.

Among the three, one copper plate measuring 21 cm in height and 14 cm in width, which was issued in 1655, holds significance. It says Thirumalai Pinna Thevan got two titles from the king - Peththa Pillai and Thirumalai. He received a ‘kambali’, ‘pathakuradu’ and ‘kalanji.’ The king also permitted the female descendants of the family to use the title, ‘Thirumalai Punniakka.’ Two villages - Dharmathupatti and Uchapatti - were given as grants to him.

Mr. Kalyani Thevar says his ancestors used to settle disputes among members of their community while sitting on the ‘kambali,’ along with the ‘padhakuradu’ and ‘kalanji.’ He adds, “It is said that those who are accused of charges can only speak the truth when they stand on the ‘padhakuradu.’

Apart from these artefacts, Mr. Kalyani Thevar also possesses several palm leaf manuscripts, which, according to Mr. Gandhirajan, are around 150 years old. “There are also several paper documents to show that there was an organised system by which disputes among Piramalai Kallars were settled by this family until the colonial rule. However, the colonial government classified the Piramalai Kallars as a ‘criminal tribe’ under the Criminal Tribes Act,” he says.

Photographs of the copper plates can be kept at Thirumalai Nayak Palace so that those who are interested can visit the family to understand the history, adds Mr. Gandhirajan.

Mr. Kalyani Thevar, who lives with his son Thirumalai alias Karthikeyan, says their family continues to preserve these artefacts

சிலம்பாட்ட தேவர்கள்


சிலம்பக் கலையில் மாநில அளவில் சிறந்த சிலம்பாட்ட வீரர்கள் என பெயர் பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலை வணங்கும் நாகப்பாண்டிதேவர் அவர்களின் வாரிசுகள் நித்தீஷ் தேவர் மற்றும் நிவேதா தேவர்.

காடுவெட்டியார் மரபினர்

காடுவெட்டியார் வரலாறு 

காடவராயர் பட்டத்துடன் தொடர்புடைய பட்டம் காடுவெட்டி என்றும், காடுவெட்டி என்பது பல்லவரது பெயராக சாசனங்களிலும் வருகிறது.

கங்கவேந்தர்களின் செப்பேடுகள் காஞ்சி மாநகரத்தை காடுவெட்டிகள் ஆண்டதாக கூறுகின்றன. காடுவெட்டி பேரரையன், காடுவெட்டி தமிழ் பேரரையன், விடேல் விடுகு காடுபட்டித் தமிழ் பேரரையன் என்போர் பல்லவ பெரு வேந்தர்களின் கீழிருந்த பல்லவ சிற்ரசர்கள், தலைவர்களென்றும் சுட்டுகின்றன. பழைய திருவிளையாடல் புரானத்தில் பல்லவ குல காடுவெட்டி என்பவனின் பெருமையும் அவனது பக்திச் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. காடுவெட்டி பட்டமுடையோர் புதுக்கோட்டை அம்மாவட்டத்தில் காடுவெட்டிவிடுதி, பாலக்குடிப்பட்டி, உஞ்சைவிடுதி, அரிமளம் முதலிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். காடுவெட்டிகள் சோழர் மற்றும் பல்லவர் மரபினர் என்றும் அறிய முடிகிறது.




கல்வெட்டுகள்

சோழநல்ல ஆதிர்சன் கணபதி ஆள்வானான காடுவெட்டி

ஆதித்தன் கணபதி ஆழ்வானான காடுவெட்டி

இரண்டாம் இராசராசன் 7-ஆம் ஆட்சியாண்டில் குவலால நாட்டில் (கோலார் கோட்டம்) காடுவெட்டி என்ற சிற்றரசன் மலை மீது ஒரு கோவில் கட்டினான்.










கள்ளர் மரபினரின் - காடுவெட்டியார்






புதுவிடுதி கோவிந்தராஜ் காடுவெட்டியார்




வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்