செவ்வாய், 29 ஜனவரி, 2019

பொ. ஆ 1743 இல் ஐதராபாத் நிஜாம் படையை விரட்டியடித்த தஞ்சை கள்ளர்கள்


1719-ம் ஆண்டு முதல் அசாஃப் ஜா வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் மன்னர்கள் நிஜாம் என்ற பட்டத்துடன் ஐதராபாத் அரசை ஆண்டு வந்தனர். 1713 முதல் 1721 வரை முகலாய மன்னர்களின் பிரதிநிதியாக தக்காணத்தை ஆண்டு வந்த முதலாம் அசாஃப் ஜா இந்த வம்சத்தை துவங்கினான். 1707-ல் அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பிறகு முகலாயப் பேரரசு சிதைந்தபோது அசாப் சா தன்னை தனிமன்னராக அறிவித்துக்கொண்டான்.

1743-ம் ஆண்டு ஐதராபாத் நிஜாம் நிஜாம் உல் முல்க் 80,000 குதிரைப்படை மட்டும் 200000 காலட்படை கொண்டு தென்னகத்தின் மீது படையெடுத்து வந்தான்.ஒரே நாளில் 18 குறுநில தலைவர்களை வென்று திக்விஜயம் செய்தான். இறுதியில் திருச்சியை தாக்கினான். திருச்சி அப்பொழுது மராத்தியரிடம் இருந்தது.திருச்சியை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்படையுடன் தாக்குதல் நடத்தி சூரையாடினான்.


திருச்சிராப்பள்ளி கோட்டையை கைப்பற்ற நிசாமின் படை கடுமையான தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.அந்த சமயத்தில் தஞ்சாவூரிலுள்ள குண்ணம்பட்டி ( புதுக்கோட்டை, தஞ்சை எல்லை)மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கள்ளர்கள், நிசாமின் போர்படை பற்றில் இரவு தாக்குதல்களை நடத்தினர். கள்ளர்களின் இந்த திடீர் தாக்குதலை எதிர்ப்பாராத நிசாமு படையினர் நிலைகுலைந்தனர். நிசாம் படையில் இருந்த மாடுகள், ஒரு யானை, 133 குதிரைகள் மற்றும் 40 ஒட்டகங்களை கொள்ளையடித்து சென்றனர். 

கள்ளர்களின் தாக்குதலால் பெரும் சேதத்தை சந்தித்த நிசாம் தனது தளபதியின் தலைமையில் பெரும்படை ஒன்றை அனுப்பி கள்ளர்களை தாக்கினான்.ஆனால் கள்ளர்களின் எதிர்தாக்குதலை சமாளிக்க முடியாமல் நிசாம் படை திணறியது.


நிசாம் நினைத்ததை போல் கள்ளர்களை எளிதாக சமாளிக்க இயலவில்லை. கள்ளர்களிடம் வெற்றி பெற இயலாத நிசாம் படை அவர்களிடம் இருந்து கிடைத்ததை( குதிரை, ஒட்டகம்) பெற்று கொண்டு, தோல்வியுடன் திரும்பினர். கள்ளர்களின் இரவு தாக்குதல்கள் தொடர்ந்ததால், நிசாம் மீண்டும் பெரிய படை ஒன்றை அனுப்பினான். ஆனால் கடைசிவரை கள்ளர்களை நிசாமால் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.

ஒரே நாளில் 18 குறுநில தலைவர்களை வென்ற, நிசாமின் பெரும்படையால் கள்ளர்களை ஒரு தடவை கூட வெல்ல இயலவில்லை என்பது நமக்கு விளங்கும்.. 

(General history of pudukkottai state 1916 pg 184)
(Letter of madurai mission to rome 1743)

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

ரா. வைரமுத்து தேவர்



ஒவ்வொரு தமிழ் ரசிகனுக்கும் பாடல்கள் என்றாலோ, கவிதைகள் என்றாலோ, ஹைக்கூ என்றாலோ நினைவுக்கு வருபவர் ‘கவியரசு வைரமுத்து’ அவர்களே. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் அவர்,  சிறந்த பாடலாசிரியருக்காக ‘ஆறு முறை தேசிய விருதும்’, ‘கலைமாமணி விருதும்’, ‘பத்மஸ்ரீ விருதும்’ பெற்ற இந்திய தமிழ்க் கவிஞர். ‘கவியரசு’ என்றும், ‘கவிப்பேரரசு’ என்றும், ‘காப்பியப்பேரறிஞர்’ என்றும், ‘காப்பியசாம்ராட்’ என்றும் பட்டங்கள் பெற்ற வைரமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
வைரமுத்து அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டியில் (பெரியகுளம் அருகில் உள்ளது) ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் கள்ளர் குடியில், ராமசாமி தேவருக்கும், அங்கம்மாளுக்கும் மகனாக ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
தன்னுடைய இளமைப் பருவத்தில் அண்ணாவின் இனிமையான தமிழ் நடையாலும், பெரியாரின் சிந்தனைகளாலும், கருணாநிதியின் இலக்கியத் தமிழாலும் கவரப்பட்டு, பாரதியார், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் அவர்களின் கவிதை நடையால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால், மேலும் தனது கிராமத்தின் சுற்றுப்புறச்சூழலும் அவரைத் தனது பன்னிரெண்டாவது வயதிலேயே கவிதை எழுத ஊக்குவித்தது. திருவள்ளுவரின் திருக்குறளால் கவரப்பட்ட அவர், தனது பதினான்காவது வயதிலேயே, தமிழ் செய்யுளின் யாப்பின் சொல் இலக்கண விதிகளைக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். பள்ளிப்படிப்பிலும் சிறந்து விளங்கிய அவர், தனது உயர்கல்விப் படிப்பில் மதுரை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, அதற்காக வெள்ளிப்பதக்கமும் வென்றார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், தமிழில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ) பெறுவதற்காக, அவர் சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி நாட்களில், அவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு, சிறந்த பேச்சாளர் மற்றும் கவிஞருக்காக 20க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றார். கல்லூரியின் இரண்டாவது ஆண்டில், அவருக்கு பத்தொன்பது வயதிருக்கும் போது, ‘வைகறை மேகங்கள்’ என்ற முதல் பாடல் திரட்டை வெளியிட்டார். அவரது இந்தப் படைப்பானது, சென்னையிலுள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அவரது படைப்பு பாடத்திட்டத்தில் வந்ததால், ஒரு மாணவக் கவிஞராக அவர் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்றார். பின்னர், முதுகலைத் (எம்.ஏ) தேர்வில் தங்கப்பதக்கம் பெற்றார். 1979ல், அவரது இரண்டாவது படைப்பான ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ என்ற படைப்பை வெளியிட்டார்.
குமாரசாமி உடையார் பேத்தி, த.கு.முருகேசன் உடையார் மகள் பொன்மணியை ,  வைரமுத்து காதல் திருமணம் செய்து கொண்டார். 





வைரமுத்து அவர்களை பற்றி அவர் மனைவி

"  நீ உன்னை ரொம்பவும் தாழ்த்திக்கொண்டு உன் கணவரை பெருமைப்படுத்துகிறாய்!’ என்றும் என் தோழிகள் சொல்வதுண்டு. அதேபோல நான் அதிகம் கவிதை எழுதாமலிருப்பதற்குக் காரணம் என் கணவர்தான் என்றுகூடப் பலர் சொல்லியிருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் நான் ஒரேயொரு பதிலைத்தான் சொல்ல விரும்புகிறேன்.

விளையாட்டு வீரர்களான இரண்டு நண்பர்களுக்குள்ளே ஒருவர் மற்றவரைவிட அதிக லட்சிய வெறியுடனும் அதற்கேற்ற திறமையுடனும் இருக்கும்போது, அந்த இன்னொரு நண்பர் தன் சாதாரண திறமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நண்பனின் முன்னேற்றத்துக்காக கை கொடுப்பதில்லையா? அப்படித்தான் இதுவும்! தவிர நாங்கள் நண்பர்கள் மட்டும் இல்லையே!

இன்னொரு உண்மையைச் சொல்ல வேண்டுமானால், என்னிடமிருந்து ஒரு படைப்பு வந்தால், அதை முதுகில் தட்டியோ அல்லது தலையில் குட்டியோ பாராட்டும் முதல் ரசிகர் என் நண்பரான கணவர்தான்! இதில் எந்த வார்த்தையும் கூடுதலோ குறைவோ கிடையாது. நல்ல கவிதை என்றால், சமயத்தில் கண்ணீர் விட்டு அழக்கூட செய்வார். என்னுடைய 'தெரசா!’ கவிதையும் விஞ்ஞானம் பற்றி நான் எழுதிய ஒரு கவிதையும் அவரை நெகிழ வைத்தவை.

என்னை சினிமாவுக்குக்கூட சிலர் பாட்டெழுதக் கூப்பிட்டார்கள். எனக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லாததால்தான் நான் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். சினிமாவில் கணவரோடு போட்டியிடக் கூடாதென்றுதான் நான் அந்த வாய்ப்புகளை நிராகரித்தேன் என்று அதற்கும் சிலர் கருத்து சொன்னார்கள். அப்படி நான் எழுதியிருந்தால், அதை முதலில் பாராட்டியிருப்பவர் அவராகத்தான் இருப்பார்.

மெட்டுக்குப் பாட்டு எழுதுவது என்பது சிலருக்கே சுலபம். அவரளவுக்கு அதில் எனக்கு திறமையும் இல்லை என்பதே உண்மை. சொல்லப்போனால், இவர் சினிமாவுக்குப் போனதிலேயே எனக்கு விருப்பமில்லை.


மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.

1978 ஆம் ஆண்டு பாரதிராஜா அவர்களின் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடலாகும். பின்னர், அவர் ‘நினைவெல்லாம் நித்யா’ (1982), ‘முதல் மரியாதை’ (1985), ‘புன்னகை மன்னன்’ (1986), ‘வேதம் புதிது’ (1987), ‘கொடி பறக்குது’ (1989), ‘புதிய முகம்’ (1993), ‘ஜென்டில்மேன்’ (1993), ‘கிழக்குச் சீமையிலே’ (1993), ‘கருத்தம்மா’ (1994), ‘காதலன்’ (1994), ‘பவித்ரா’ (1994), ‘டூயட்’ (1994), ‘முத்து’ (1995), ‘இந்திரா’ (1995), ‘பாட்ஷா’ (1995), ‘இந்தியன்’ (1996), ‘இருவர்’ (1997), ‘நிலாவே வா’ (1998), ‘காதல் மன்னன்’ (1998), ‘ஜீன்ஸ்’ (1998), ‘துள்ளாத மனமும் துள்ளும்’ (1999), ‘வாலி’ (1999), ‘ஆடுகளம்’ (1999), ‘முதல்வன்’ (1999), ‘படையப்பா’ (1999), ‘சங்கமம்’ (1999), ‘ஜோடி’ (1999), ‘குஷி’ (2000), ‘ரிதம்’ (2000), ‘ஆளவந்தான்’ (2000), ‘முகவரி’ (2000), ‘அலைபாயுதே’ (2000), ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2000), ‘பார்த்தேன் ரசித்தேன்’ (2000), ‘பூவெல்லாம் உன் வாசம்’ (2001), ‘மஜ்னு’ (2001), ‘ஷாஜகான்’ (2001), ‘சிடிசன்’ (2001), ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002), ‘வில்லன்’ (2002), ‘ஜெமினி’ (2002), ‘அன்பே சிவம்’ (2003), ‘இயற்கை’ (2003), ‘செல்லமே’ (2004), ‘அட்டஹாசம்’ (2004), ‘ஆயுத எழுத்து’ (2004), ‘வசூல் ராஜா MBBS’ (2004), ‘உள்ளம் கேட்குமே’ (2005), ‘வரலாறு (2006), ‘அந்நியன்’ (2006), ‘சிவாஜி: தி பாஸ்’ (2007), ‘மொழி’ (2007), ‘குரு’ (2007), ‘தசாவதாரம்’ (2008), ‘அசல்’ (2009), ‘மோதி விளையாடு’ (2009), ‘சிவப்பு மழை’ (2009), ‘ஆனந்த தாண்டவம்’ (2009), ‘அயன் (2009)’, ‘எந்திரன் (2010)’, ‘ராவணன்’ (2010), ‘வாகை சூட வா’ (2011), ‘யமுனா’ (2012), ‘நீர்ப்பறவை’ (2012),  மற்றும் ‘கடல்’ (2013).
அவர் எழுதிய பல பாடல்கள் அவருக்குப் புகழ் பெற்றுத்தந்தாலும், ‘பூங்காற்று திரும்புமா’ – ‘முதல் மரியாதை’ (1985), ‘சின்ன சின்ன ஆசை’ – ‘ரோஜா’ (1993), ‘போறாளே பொன்னுத்தாயி’ – ‘கருத்தம்மா’ (1995), ‘முதல் முறையே கில்லி பார்த்தேன்’ – ‘சங்கமம்’ (2000), ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ – ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2003) மற்றும் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ – ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (2011) போன்ற பாடல்கள் அவருக்கு தேசிய விருதுகளைப் பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல், அவருக்குப் பெரும் புகழையும் தேடித்தந்தது.

தமிழ்மொழியின் மீது அளவற்றப் பற்றுக் கொண்ட அவர், திரைப்படங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், பல்வேறு நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். அவரது படைப்புகளில் சில
நாவல்கள் – ‘வில்லோடு வா நிலவே’, ‘தண்ணீர் தேசம்’, ‘வானம் தொட்டுவிடும்’, ‘தூரம்தான்’, ‘கருவாச்சி காவியம்’, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, மற்றும் ‘மூன்றாம் உலகப் போர்’
கவிப் பேரரசு அவர்களின் உலகப் புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகள் – ‘வைகறை மேகங்கள்’, ‘சிகரங்களை நோக்கி’, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ‘தமிழுக்கு நிறமுண்டு’, ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’, ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’, ‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’, ‘இதனால் சகலமானவர்களுக்கும், ‘இதுவரை நான்’, ‘கொஞ்சம் தேனீர் நிறைய வானம்’, ‘பெய்யென பெய்யும் ம‌ழை’, ‘நேற்று போட்ட கோலம்’, ‘’ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்’, மற்றும் ‘ஒரு மெளனத்தின் சப்தங்கள்’.
நூல்கள் – ‘கள்ளிகாட்டு இதிகாசம்’, ‘இதனால் சகலமானவர்களுக்கும்’, ‘இந்த பூக்கள்  விற்பனைக்கு அல்ல’, ‘இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்’, ‘ஒரு போர்க்களமும்  இரண்டு பூக்களும்’, ‘காவி நிறத்தில் ஒரு காதல்’, ‘என் பழைய பனை ஓலைகள்’, ‘இன்னொரு தேசிய கீதம்’, ‘வைகறை மேகங்கள்’, ‘ரத்ததானம்’, ‘சிற்பியே உன்னை  செதுக்குகிறேன்’, ‘எல்லா நதியுளும் என் ஓடம்’, ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’, ‘கவிராஜன் கதை’, ‘வானம் தொட்டுவிடும் தூரம்தான்’, ‘தண்ணீர் தேசம்’, ‘நேற்று போட்ட கோலம்’, ‘தமிழுக்கு நிறம் உண்டு’, ‘மீண்டும் என் தொட்டிலுக்கு’, ‘கொடிமரத்தின் வேர்கள்’, ‘வில்லோடு வா நிலவே’, ‘என் ஜன்னலின் வழியே’, ‘ஒரு மௌனத்தின் சப்தங்கள்’, ‘கல்வெட்டுகள்’, ‘கேள்விகளால் ஒரு வேள்வி’, ‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’, ‘வடுகபட்டி முதல் வல்கா வரை’, ‘பெய்யென பெய்யும் மழை’, ‘இதுவரை நான்’, ‘ஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும்’, ‘பாற்கடல்’ மற்றும் ‘கருவாச்சி காவியம்’.
1981ல் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்காகவும், 1995ல் ‘கருத்தம்மா’ படத்திற்காகவும், 1996ல் ‘முத்து’ மற்றும் ‘பம்பாய்’ படங்களுக்காகவும், 2000ல் ‘சங்கமம்’ படத்திற்காகவும், 2006ல் ‘அந்நியன்’ படத்திற்காகவும், 2008ல் ‘பெரியார்’ படத்திற்காகவும் தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றார்.
1986ல் ‘கலைமாமணி விருது’ வழங்கப்பட்டது.
2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது.
1986 ல் ‘முதல் மரியாதை’ (1985) படத்திலிருந்து வரும் ‘பூங்காற்று திரும்புமா’ என்ற பாடலுக்காகவும், 1993ல் ‘ரோஜா’ (1993) படத்திலிருந்து வரும் ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடலுக்காகவும், 1995ல், ‘கருத்தம்மா’ (1995) படத்திலிருந்து வரும் ‘போறாளே பொன்னுத்தாயி’ என்ற பாடலுக்காகவும், ‘பவித்ரா’ படத்திலிருந்து வரும் ‘உயிரும் நீயே’ என்ற பாடலுக்காகவும், 2000ல், ‘சங்கமம்’ (2000) படத்திலிருந்து வரும் ‘முதல் முறையே கில்லி பார்த்தேன்’ என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2003) படத்திலிருந்து வரும் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடலுக்காகவும், 2011ல், ‘தென்மேற்குப் பருவக்காற்று’ (2011) படத்திலிருந்து வரும் ‘கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ என்ற பாடலுக்காகவும் ஆறு முறை தேசிய விருதுகளை வென்றார்.
 காலவரிசை
  • 1953: தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டியில் ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் பிறந்தார்.
  • 1979: அவரது இரண்டாவது படைப்பான ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ வெளியிடப்பட்டது.
  • 1978: பாரதிராஜா அவர்களின் ‘நிழல்கள்’ திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.
  • 1986ல் ‘கலைமாமணி விருது’ வழங்கப்பட்டது.
  • 2003 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது

மூக்கறுப்புப் போர்



கி.பி. 1656 ல் 70 வயதாகி இருந்த திருமலை நாயக்கரை மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் 50,000 படைவீரர்களை அனுப்பி மதுரையை பிடிக்க மைசூர் மன்னன் காந்திரவ நரசராயன் மதுரை நாட்டிற்கு  கம்பையா என்பவனை  மைசூர்படைக்கு தலைமை ஏற்று அனுப்பினான்.

இலக்குவன் சூர்ப்பநகை மூக்கறுப்பு

மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்கள் புகுந்து ஆண் பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனப்பி வைத்தான். 

அதோடு நிறுத்தாமல் கொள்ளையும், வெட்டிக் கொலைகளும் செய்தான். இராமநாதபுரம் மன்னர் சேதுபதிக்கும் தன் மனைவி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மன்னர் சேதுபதியின் மறவர் படை மதுரை வர தாமதமானதால், மதுரை மேற்கில் இருந்த கள்ளர் தன்னரசு படை விரைவில் வந்தது. கள்ளர் படை உரப்பனுர் திருமலை பின்னத்தேவர் தலைமையில் மைசூர் படையுடன் போரிட்டது.

இராமநாதபுர சேதுபதி மன்னர் இரகுநாததேவர் 35000 படை வீரர்களுடன், திருமலை நாய்க்கர் 50000 படைவீரர்களையும் இணைத்து மதுரையை சுற்றி வளைத்து மைசூர் படையை தாக்கி 10000 வீரர்களுக்கு மேல் கொன்றனர்.



கள்ளர் படைகள், கண்ணிவாடி, விருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். திருமலை பின்னத்தேவர் தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையம் ஆறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை மன்னர், பின்னத்தேவருக்கும் "மூக்குப்பரி" என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு "திருமலை சேதுபதி" என்ற பட்டமும் "ராணி சொல் காத்தான்" என்ற பெயரும் வழங்கினார்.

பேளூர் கல்வெட்டு வாசகம்

பேளூர் கல்வெட்டில் நாயக்க மன்னர்களின் பெயர்களோடு 'மீசையுடனே மூக்கறுப்பிச்சார்' என்கிற வாசகமும் வருவது குறிப்பிடத்தக்கது.


உரப்பனூர் கள்ளர்களில் பின்னதேவர் வாரிசுகள் மூக்குப்பரி என்ற பட்டத்தை தன் பெயருக்கு பின் இட்டுக்கொள்வது வழக்கம்.



சனி, 26 ஜனவரி, 2019

சிங்கப்பூரின் புகழ்பெற்ற கோடிஸ்வரன் திரு. அப்பாவு கண்டியர்



தஞ்சாவூர் பகுதி,  மன்னார்குடி அருகிலுள்ள கருவக்குறிச்சி கிராமத்தில் பிறந்தவர் எஸ். அப்பாவு கண்டியர் Pipe & Cable Laying, Handling Of Cargo ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பொது ஒப்பந்தக்காரர்.



திரு. அப்பாவு கண்டியர்  சிங்கப்பூரில் ஒரு வெற்றிகரமான ஒப்பந்தக்காரர் ஆவார். 

1957 இல் Straits Times  நாளிதழ்  இவரை ஒரு மில்லியனர் (கோடிஸ்வரன்) என்று குறிப்பிடுகிறது.  

சிங்கப்பூரில் Bukit Timah and Coronation சாலை பகுதிகளில் சொந்தமாக சொத்துக்கள் வைத்திருந்தார். 

நன்றி : Klang Valley Mukkulathor Association - KVMA

புதன், 23 ஜனவரி, 2019

பொ. ஆ 1755 - மருதநாயகமும் கள்ளர்களும்



1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடிக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. 

18ம் நூற்றாண்டு முழுவதும், குறிப்பாக நாயக்க மன்னர்களின் வீழ்ச்சியின் போதும், கள்ளர்களுக்கும் மதுரையை நிர்வகித்த பிரிட்டிஷாருக்கும் பகைமை முற்றியது. 1755 லிருந்து ஐந்து முறை பிரிட்டிஷ் பட்டாளங்கள் மேலூர் கள்ளர்களுடன் மோதியதாகவும், இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மடிந்துள்ளதாகவும் மானுடவியலாளர் ஆனந்த் பாண்டியன் (அமெரிக்க பல்கலைக் கழகம்) தெரிவிக்கிறார்.



ஆர்காடு நவாபான முகமது அலி, தனது உரிமையை மீட்க வெள்ளையர்களின் உதவியை நாடினான். வெள்ளையர்கள் முகமது அலிக்கு ஆதரவாக கர்னல் ஹரான் தலைமையில் படையனுப்பி உதவினர். இவரது படையில் முகமது அலியின் அண்ணன் மாபூஸ் கான் , கான்சாகிப் ஆகியோர் இருந்தனர்.  பெரும்படையுடன் வந்த கர்னல் ஹரான் சந்தா சாகிப் வசமிருந்த மதுரையை கைப்பற்றினான். மதுரையின் கவர்னராக இருந்த " மயன்னா" அங்கிருந்து தப்பித்து கோயில்குடி என ஊரில் தஞ்சம் புகுந்தார். கோயில்குடியை தாக்கியது. 

கோயில்குடியில் கள்ளர்கள் வழிபடும் கோயிலை சூரையாடினார்கள் பிறகு கிபி 1755, மார்ச் 4 அன்று கர்னல் ஹரான் தலைமையிலான படை திருநெல்வேலி வருவதை அறிந்த பொல்லாப்பாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டிவிடுவதாக வேண்டுகோள் விடுத்தார்.  திருவிதாங்கூர் வசம் இருந்த களக்காடு கோட்டை மற்றும் நத்தக்கோட்டை ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. மீதம் இருந்த சிறு பாளையங்களும் அடிபணிந்தன. 
(Tinnevelly gazetter 1917 pg 376/387) 

பூலிதேவரின் நெற்கட்டுச்செவ்வல் நோக்கி  சென்றவர்கள், அவரிடம் எந்த வரியும் வசூலிக்க முடியவில்லை. பிறகு அங்கிருந்து திரும்பியவர்களை கள்ளர் படையினர் நத்தம் கால்வாய் பகுதியில் தாக்கினர்.

பொ. ஆ. 1755 கள்ளர்களின் நத்தம் தாக்குதல் 

வரலாற்றை அறிய கீழே  உள்ள தலைப்பின் மீது சொடுக்கவும் (click here) 👇👇👇👇

பொ 1755 இல் ஆங்கிலேய படைக்கு எதிராக நத்தம் போர்

மாபூஸ்கானை துணைக்கழைத்து வந்த வெள்ளைக்காரன் கர்னல் ஹெரான் மாமன்னர் பூலித்தேவரிடம் தோற்று ஓடினான்.  

மதுரைப் பகுதியில் இருந்த சில பாளையக்கார்களும் பூலித்தேவர் அணியில் இணைந்தனர். தங்களுக்கு எதிராக பூலித்தேவர் உருவாக்கும் கூட்டணி பற்றிய தகவல் ஆர்காடு நவாப் மற்றும் கும்பினியாரை சென்றடைந்தது.
மாபூஸ்கானின் மேல் நம்பிக்கையை இழந்த கும்பினியார், கான்சாகிப் தலைமையில் ஒரு பெரும்படையை திரட்டி அனுப்பினர்.

1755 ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காகத் தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் , யூசுப்கான் (மருதநாயகம்) அனுப்பிவைக்கப்பட்டான் .

மருதநாயகம் தன்னுடைய தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி படை, ஆற்காடு நவாப் படையுடன் தெற்கத்திய பாளையக்காரர்களை அடக்கி கப்பம் பெறும் முனைப்பில் இரத்தவெறியுடன் புறப்பட்டான்.

அப்படி மருதநாயகம், அவனுடைய படைகளும் தெற்குப்பகுதியில் செல்லும் போது தடையாக இருந்த்து மணப்பாறை கள்ளர் படைப்பற்றே. 1755ல் கான் சாஹிப் முதல் வரலாற்று சாதனையாக ஆய்வாளர்கள் கருதுவது “Storming of the Kallar Barrier அதாவது கிழக்கிந்திய படை மற்றும் நவாப் படையோடு கான் சாஹிப் மணப்பாறையில் உள்ள கப்பம் கட்ட மறுத்த தன்னரசு கள்ளர் நாட்டு படைப்பற்றை வென்றதே கருதப்படுகிறது.

மேலும் அந்த கள்ளர் படைப்பற்று திருச்சி எல்லையில் அரண் போல இருந்ததாகவும் குறிக்கிறார்கள்.

மேலும் அந்த படைப்பற்றின் அழிவை வைத்து மணப்பாறை தன்னரசு கள்ளர்களின் தலைவரை கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியுள்ளான்.

இந்த வெற்றிக்கு பின்னர் மருதநாயகம் மணப்பாறையில் தங்கி வரி பாக்கியை செலுத்துமாறு பாளையக்காரர்களுக்கு செய்தி அனுப்பினான். மணப்பாறை அருகில் இருந்த பாளையக்காரரான லட்சி நாயக்கர் வரி செலுத்த ஒப்புக்கொண்டான். பிறகு தெற்கத்திய பாளையக்காரர்களையும் வெற்றிபெற்றான்.

இந்நிலையில் கும்பினியார் நெல்லை பாளையங்களை அழகப்ப முதலியார் என்பவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டனர். கும்பினியார் பெயரைச் சொல்லி வரி வசூல் செய்ய அழகப்பன் கிளம்பினார். இதனால் தனது அதிகாரம் குறைக்கப்பட்டதை உணர்ந்த மாபூஸ் கான், கும்பினியாரை வீழ்த்த பூலித்தேவரின் உதவியை நாடினார். 


திருவிதாங்கூர் மன்னர், சந்தா சாகிப்பின் பிரதிநிதிகள், மாபூஸ்கான், மற்ற பாளையக்காரர்கள் பூலித்தேவர் தலைமையில் ஒன்றிணைந்தனர். மாபூஸ்கான் சந்தா சாகிப்பின் பிரதிநிதியான மயானா, பக்ரத்துல்லா மற்றும் கள்ளர்களின் உதவியுடன், மதுரையை சுற்றியிருந்த யூசுப் கானின் பகுதிகளை தாக்கினர். இது பற்றி கூறும் கான் சாகிப் எழுதிய கடிதம், மதுரையில் உள்ள ஒர் கோட்டையில்  மாபூஸ் கான் இருப்பதாகவும், கோட்டையில் இருந்து இரவு நேரங்களில் கள்ளர்கள் திடீர் தாக்குதல்களை நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.(Country correspondence 1756,records of st george fort)/(Yusuf khan : the rebel commendant 1914/ pg 56)

யூசப் கானுக்கு கிபி1759ல் மதுரை கவர்னராக பிரிட்டிஸ் கவுன்சில் அறிவித்து, ஒட்டு மொத்த மதுரையும் பிரிட்டிஸ் கம்பெனியின் காலடியில் கொண்டு வர அறிவுறுத்தியது.

500 கள்ளர்களை தூக்கிலிட்ட கான் சாகிப்

மதுரையின் கவர்னராக பதவியேற்ற கான் சாகிப், தனது கூட்டணிக்கு எதிராக கலகம் செய்தவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க ஆரம்பித்தான். இவன் கொடுக்கும் தண்டனை மற்ற பாளையக்காரர்களுக்கு பயத்தை உண்டு பண்ண வேண்டுமென திட்டமிட்டான். முதல்கட்டமாக 1759 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் மதுரையில் மாபூஸ் கானுக்கு ஆதரவாக போரிட்ட கள்ளர் தலைவனை தாக்கினான். பெரும்படைக் கொண்டு போரிட்டு கள்ளர் தலைவனையும், அவனோடு போரிட்ட 500 கள்ளர்களையும் திருப்பரங்குன்றத்தில் ஒரே நாளில் தூக்கிலிட்டு கொன்றான்.



கள்ளர்களை கான்சாகிப் கொன்று குவித்ததை கூறும் கான்சாகிப் பற்றிய கதைப்பாடல், பின்வருமாறு பாடுகிறது

" மதுரை மீனாட்சிக் கள்ளரை
கருவறுத்த தீரன் "

"அடங்காத பிறமலை நாட்டாரை வளைத்து
ஆறுபொதி தலை வெட்டியடக்கினான்
கானும்
ஒடுங்காத மயிலாடிக் கள்ளர் தன்னை
ஊருக்குயிரு பேரைகீர்த்தியாய் வைத்து
வண்டிக்கொண்டு குடமுட அடித்து "

என கள்ளர்களுக்கும் கான்சாகிப்புக்கும் நடந்த போர் விவரிக்கப்படுகிறது.

1759, ஜூலை 6 ஆம் தேதி நாட்டுக் கள்ளர்களை தாக்கி போரிட்டான். அவர்களை அனைவரையும் தண்டித்து, வரவேண்டிய வரி பாக்கியை, செலுத்துமாறு உத்தரவிட்டான். கள்ளர்களிடம் இருந்து ஆயிரம் மாடுகள் மற்றும் இரண்டாயிரம் ஆடுகளை பறித்துக்கொண்டு நெல்லை நோக்கி கிளம்பினான்.

இதனை மருத நாயகத்துடன் இறுதி வரை பயணம் செய்த பிரெஞ்சு வீரர் M.Marchant வாக்குமூலமாக அளித்துள்ளார்.

அப்படி அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியது:


மருத நாயகம் மதுரையின் கவர்னராக ஆனவுடன், பாளையக்காரர்களின் புரட்சியை அடக்க, மதுரையில் தன்னை எதிர்த்த கள்ளர் தலைவரையும், அவருக்காக சண்டையிட்ட 500கள்ளர்களையும்.....!


ஒரே நாளில் மருதநாயகம் தூக்கிலிட்டார், இந்த கொடுரூரமான சம்பவம் அனைத்து தென் பாளையக்காரர்களையும் அச்சுருத்தியது, பல பாளையக்காரர்கள் புரட்சியை கைவிட்டு அமைதிக்கு திரும்பினர் என்றும் வாக்குமூலம் அளிக்கிறார்.




அந்த கள்ளர் தலைவரை மதுரை பாளையக்காரர் என்று குறிக்கிறார், ஆனால் மதுரையில் எந்த பாளையமும் இல்லை, கள்ளர் தலைவரை அங்கு பாளையக்காரர் என்று குறிக்கிறார்.



தங்களுடைய சுயாட்சிக்காக கள்ளர்கள் அன்னிய அரசிற்காக எதிர்த்து போர் செய்ததற்காக ஒரே நாளில் ஒரே நேரத்தில் 500  பேரும் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 500  பேரை ஒரே நேரத்தில் பிரிட்டீஸாரால் இந்தியாவில் வேறு எங்கும் தூக்கிலிடப்பட்டதில்லை.

மேற்கோள் நூல்


Saints, goddesses and Kings

1759 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாமன்னர் பூலித்தேவருக்கு எதிராக தொடங்கிய யுத்தம் டிசம்பர் 26 ஆம்தேதிவரை நடந்தது. பூலித்தேவரின் வாசுதேவநல்லூர் கோட்டையை , யூசுப் கான் தகர்க்க முயன்றபோது, கள்ளர்கள் பூலித்தேவருக்கு ஆதரவாக யூசுப் கானின் படைகளின் மீது திடீர் தாக்குதல்களை நடத்தினர்.

அவன் வெற்றி பெறுவான் என்று பிரிட்டிக்ஷ்காரன் நினைத்தான். அப்படி நினைத்த கான்சாகிப் இரண்டு முறை புறமுதுகிட்டு ஓடினான்.

மூன்றாம் முறையாக கான்சாகிப் 1761 மேமாதத்தில் மீண்டும் பெருமளவில் கும்பினிப் படைகளுடன், பீரங்கிகளுடன் போர் தொடுத்தான். மே 3 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி முடிந்தது போர். இப் போரில்தான் பூலித்தேவர் தோற்றார். வாசுதேவநல்லூர் கோட்டை, பனையூர் கோட்டை, நெற்கட்டும் செவல் கோட்டைகள் வீழ்ந்தன.

தெற்கத்திப் பாளையக்காரர்களை அடக்கி கப்பம் பெற கிழக்கிந்தியக் கம்பெனியரால் நியமிக்கப்பட்டான். அவர் வரிவசூலை மிகச் சிறப்பாகச் செய்ததால் திருநெல்வேலிக்கும் கவர்னராகப் பதவி உயர்வு பெற்றான்.

கிழக்கிந்திய கம்பெனி மதுரையிலும் திருநெல்வேலியிலும் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறியது. யூசுப்கான் தெற்குசீமையின் தளநாயகனாக ஆட்சிபுரிய ஆரம்பித்தான். யூசுப்கானுக்கு மதுரையில் கள்ளர்கள் சவாலாக இருந்தனர். அவர்களது கலவரங்களை அடக்க பெரும் போராட்டத்தை சந்தித்தான். நத்தம் பகுதியில் நடந்த கலவரங்களை அடக்கியபோது 2000 க்கும் மேற்பட்ட கள்ளர்கள் இறந்தனர்.


போர் திறனால் மதுரையை கைப்பற்றிய மருதநாயகம் எனும் யூசுப் கான், கள்ளர் நாடுகளின் பலமறிந்து அவர்களிடம் மோதாமல், திருமலை நாயக்கர் பாணியில் அவர்களை நட்பு நாடுகளாக மாற்றிக்கொள்ள மேலூர் வெள்ளாளப்பட்டி போன்ற இடங்களில் கோட்டைகளை அமைத்து கொடுத்து கள்ளர் நாடுகளுடன் சுமூகமாக சென்றான். அவன் கள்ளர் நாடுகளிடம் இருந்து எவ்வித வரியையோ, சிறப்பு மரியாதையையோ எதிர்பார்க்கவில்லை!! கள்ளர் நாடுகளின் படைபலத்தை பயன்படுத்திக்கொள்வதிலேயே குறியாக இருந்துள்ளான்.


இறுதியில் புதுக்கோட்டை மன்னர் படையினர் , தஞ்சை படையினர் , கும்பினியருடன் 1763 செப்டம்பர் மாதம் காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர்.

முதலில் நத்தம் கள்ளர் நாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கோட்டையை முற்றுகையிட்டனர். கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். குதிரையும், குரங்கும் உணவாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படைகள் மற்றும் மக்களிடம் சோர்வும், குழப்பமும் ஏற்பட்டது. யூசுப்கான் தப்பிக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை.

1764 அக் 13இல் யூசுப்கான் கைதுசெய்து கும்பினிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டான். அக் 15ஆம் நாள் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டான்.

செவ்வாய், 22 ஜனவரி, 2019

கள்ளர்கள் காவல் / படிக்காவல் / அரசு சுவந்திரம்



கள்ளர் குலத்து இப்பொழுது அரசராயும், குறுநில மன்னராயும் உள்ளாரது காவல் இங்கே எடுத்துக் காட்ட வேண்டுவதன்று. ஏனைய நாட்டாமைக்காரரை பற்றியே இங்கு கூறவது. இன்னோர் பண்டு அரசராயும், குறுநில மன்னராயும் விளங்கி இருந்தமையாலும் அம்மைக்காலம் வரையில் குறுநில மன்னர்களாய் இருந்திருத்தலாலும் இவர்களது செல்வாக்கிற்கு பிற வகுப்பினர் பெரிதும் கட்டுப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாட்டாமைக் காரர் அல்லது அம்பலக்காரர் காவலில் பற் பல ஊர்கள் அடங்கியுள்ளன. 



Source : The kallars by Black burn

18நூற்றாண்டு இறுதியில் கள்ளர்களின் காவல் உரிமையின் மீதான ஆங்கிலேய ஏகாதிபத்திய போர் உசாத்திற்கு சென்று கொண்டிருந்த நேரம் அது.

கிபி1861ஆம் ஆண்டு பிரிட்டிஸ் இந்திய சட்டம் 5ன் கீழ் கொண்டு வரப்பட்ட indian Imperial police சேவையை, ஆங்கில அரசு இந்தியா முழுவதும் விரிவுபடுத்தியது.

இச்சட்டம் இந்தியா முழுவதும் உள்ள அரச மற்றும் போர்குடிகளின் அடிப்படை தொழிலான காவல் உரிமையை பறிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளர்ச்சி ஏற்பட்டது.

மதுரை
திருச்சி
தஞ்சை
நெல்லை
ஆற்காடு

போன்ற பகுதிகளில் ஆங்கில அரசு நேரடியாக இரும்பு கரம் கொண்டு பூர்வ காவல் சேவையை அடக்கிக் கொண்டிருந்தது.

அச்சமயத்தில் அடிப்படை காவல் உரிமைக்காக தஞ்சை கள்ளர்கள் சீர்காழியில் உள்ள பிரிட்டிஸ் அரசின் சிப்பாய்களை கொன்று குவித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அதுமட்டுமில்லாமல் பட்டுக்கோட்டையில் ஆங்கில அரசால் உருவாக்கப்பட்ட தலைமை ஆனையர் காவல் அலுவலத்தை தீக்கிரையாக்கினர். மேலும் பட்டுக்கோட்டை காவல் ஆனையாளரின் வீட்டை சூரையாடியும் தங்கள் எதிர்ப்பினை வரலாற்றில் பதிவு செய்தனர்.

மேலூர், அழகர்கோவில், வெள்ளளூர், உசிலம்பட்டி, தேவதானப்பட்டி, கம்பம், குச்சனூர், பழனி, திண்டுக்கல், தேனி மண்டல பகுதிகளில் கள்ளர்கள் தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த சமயத்தில் கிபி1896ல் குச்சனூர் பகுதி காவல்காரரான பிறமலைக் கள்ளர் “பிரிட்டிஸ் மேஜிஸ்ட்ரேட் முன்பு காவல தவிர விவசாயத்தை நம்ம மக்கள் எப்படி பார்த்தாங்கனா சில நீதிபதிகள் காவல் தொழிலை விட்டுட்டு விவசாயம் பண்ணுங்க அப்படின்னு சொன்னதுக்கு குச்சனூர் பிரமலைக்கள்ளர் காவக்காரர் சொல்லி இருக்காரு நான் நீண்டகாலம் பார்த்துவந்த சர்க்கார் வேலையை விட்டுட்டு அதாவது காவல் வேலைய அவங்க என்ன சொல்லிருக்காங்கனா சர்க்கார் வேலைன்னு சொல்லிருக்காங்க சர்க்கார் வேலைய விட்டுட்டு கலப்பையை போய் எப்படி பிடிப்பேன் அதாவது ஏர்புடிச்சு எப்படி உழுவேன் நீதிபதி கிட்ட விவசாயத்தை தன்னுடைய கண்யத்துக்கு குறைவானதாகும் காவல் தொழிலை கௌரவமிக்க நிர்வாகப் பணியாகவும் அவங்க நினைச்சு சொல்லி இருக்காங்க இவருடைய அந்த நிலைப்பாடு இவருக்கு மட்டுமில்லாமல் அந்த பகுதியில் பெரும்பாலுமான காவல் காத்த காவல்காரங்களுக்கும் இதே நிலைப்பாடுதான் இருந்திருக்கிறது
.

கள்ளர் காவலில் பற் பல ஊர்கள் அடங்கியுள்ளன. உதாரணமாக தஞ்சை ஜில்லாவின் மேற்கு பக்கத்தில் உள்ளவர்களில் காங்கய அம்பலக்காரரை முதன்மையாகக் கூறலாம் . அவர்கட்கு சென்னப்பட்டினம் வரையில் காவற் கிராமங்கள் இருந்தன என்பர். அடுத்து, 

ராயமுண்டார் , 

சோழகர், 
சோழங்கதேவர், 
மேல்கொண்டார், 
நாட்டரையர், 
சொம்பியமுத்தரசு, 
வன்னிமுண்டார், 
கொடும்புராயர், 
கண்டியர் 

முதலானவர்களைக் கூறலாகும். 


இதிலிருந்து இன்னார்க்கு இன்னின்ன கிராமங்கள் என இவர்கள் பங்கிட்டுக்கொண்டிருந்தனர் என்பது விளங்கும். காவர் கிராமம் என்பதில் இவர்களுடைய உரிமையும், கடமையும், என்னவென்று பார்ப்போம். ஓர் அரசனுக்கு குடிகள் வரிசெலுத்துவது போன்றே கிராமத்தார்கள் இவர்கட்கு ஆண்டுதோரும் வரி செலுத்துவர். வரி தனித்தனியாவேனும், கிராமத்தார் ஒன்று சேர்ந்து மொத்தமாக வேனும் செலுத்துவதுண்டு. மற்றும் அம்பலக்காரர் வீட்டில் கல்யாணம் முதலிய நடக்குங்காலங்களில் காணிக்கை செலுத்துவதுண்டு. இவ்வுரிமையை பெற்றுக்கொள்ளும் அரசு காவலர் தமது காவலில் உள்ள ஊர்களில் எவ்வகை களவும், கொள்ளையும், நிகழாமல் பார்த்துக்கொள்ளும் கட்டுப்பாடுடையர். களவு நிகழாமல் பார்ப்பதென்றால் தாம் சென்று காத்து நிற்பதில்லை; ஆட்களை அனுப்பி காப்பதும் இல்லை. தம் வலிமையாலும் ஆணையாலும் பாது காப்பாராவர். 


இன்னாருடைய அரசு காவலில் உள்ள ஊர் என்று தெரிந்தால் திருடர்கள் அவ்வழிச் செல்லமாட்டார்கள். ஒரு கால் ஏதேனும் களவு நிகழ்ந்து விடின் கிராமத்தார் அம்பலக்காரருக்கு செய்தி தெரிவிப்பர். அம்பலக்காரர் தம் ஆட்களை பல இடங்களுக்கு அனுப்பி களவு போன பொருளை எவ்வாற்றாலேனும் மீட்டுக் கொடுப்பர். சில சமயங்களில் அம்மபலக்கார் தம் கைப்பொருள் செலவு செய்து மீட்க நேரும். இதில் கிராமத்தார்க்கு எவ்வளவு நன்மையிருக்கிறதென்று பாருங்கள். சில சமயங்கள் அரசு காவலர் சிலர் தவறான வழிகளில் நடத்தலும் நிகழக்கூடியதே. அது குறித்து அம்முறையே வெறுக்கத்தக் கதாகது. 


தற்காலத்தில் நாட்டின் சாதன பாது காப்புக்கு போலீஸ் படை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நூற்றில் 90 ஊர்களுக்கு அதன் சம்பந்தமே இல்லை. அவ்வூர்களில் ஏதேனும் நிழந்து விட்டால் அவர்கள் நகரங்களில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவிக்க , அன்னோருத்தரைவைப் படிப்படியாகப் பெற்றுப் போலீசுக்காரர் வந்து பாத்து ஏதேனும் எழுதிக் கொண்டு போகின்றனர். இதில் எவ்வளவு நம்மையை நாம் எதிர் பார்க்கமுடியும்? இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுதுதான் பழைய அரசு காவலின் பயன் விளங்கா நிற்கும் . அம்பலகாரர்கட்கு அன்னோர் காவலுட்பட்ட கிராமத்து மக்கள் தாம் ஆண்டுதோறும் செலுத்தும் வரி முதலியவற்றைக் குறிப்பிட்டுப் பாட்டயங்களும், முறிகளும் எழுதிக் கொடுத்திருக்கின்றனர் அரசாங்கத்தினர் அவற்றில் பல பட்டயங்களைக் கைப்பற்றி விட்டனரென்றும், பட்டயம் பெற்றிருந்த சிலரிடம் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கட்க உபகாரச் சம்பளம் கொடுத்து வந்திருக்கின்றன ரென்றும் அறிகின்றோம். 


தாங்கள் பரம்பரையாக அடைந்து வந்து வருவாயை இழந்த காரணத்தால் அம்பலகாரரிற் சிற்சிலர் தத்தம் பெருந்தன்மையை இழக்கவும் நேர்ந்தது. இப்பொழுது பெரும் பான்மை அரசு பாவர் ஒழிந்துவிட்டது. சிற்சில இடங்களில் பழமையை நினைவுகூர்ந்து, அன்புபள்ளி ஒருவகையான சம்பந்தம் வைத்துக்கொண்டிருக்கின்றனர். 


இனி, அம்பலகார்கள் அரச காவல் முறையை நாடுவது பொருத்தமாகத் தோன்றவில்லை, இவர்கள் தம்முடைய நிலங்களை நன்கு பயிரிட்டுத் தம் உழைப்பினார் வருகின்ற பொருள் கொண்டு தம்ட் வாழ்க்கையை நடாத்தி ஏனையர்க்கும் இயன்ற உதவிசெய்து கொண்டு அறநெறியில் நிற்பார்களாயின் எவ்வளவோ சீரும் சிறப்பும் எய்துவார்கள். பழைய நாளில் இவர்கள் அரசு காவல் முறி பெற்றமைக்குச் சில சான்றுகள்


பினவருபவை, விணணனூர்ப் பட்டி, திருவாளர் மு. கந்தசாமிச் சோழங்க தேவர் அவர்களிடமிருந்து எமதருமை மாணவர் திரு. வீ. உலகதாசக் கொடும்புராயர் வாயிலகக்கிடைத்த பழைய (ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளின் முந்திய ) ஏடுகளிற் கண்டவை:-


1. 'ஈசுவர u ஆனி t 152 வாலிகொண்டாபுரம் சீமை வெண்பா னாட்டில் கூரையூரைச் சேர்ந்த வடவின்னம் பூண்டியிலுக்கும் இருசப்ப நாயனார், முத்துக் கருப்ப உடையார் நாங்களிருவரும் ஏரிமங்கல நாட்டில் விண்ணனூர்ப்பட்டியிலிருக்கும் பலபத்திரச் சோழகனார் குமாரர் குஞ்சான் சோழகனார்க்கு மேன்காவர் பொருப்பு முறிகொடுத்தப்படி .முறியாவது வடவிண்ணம் பூண்டி மாகாணத்தில் ராயத்துடையார் கிராமம் உட்பட்ட நம்முடைய கிராமம் 12 . இந்த பன்னிரண்டு கிராமத்துக்கு ம் வருடம் ஒன்றுக்குப் பொருப்பு கெட்டி 12 பொன் கொடுத்துக்கொண்டு வருவோமாகவும். இந்த மேன்காவல் கல்லுங் காவேரி புல்லும் பூமி உள்ளவரை ஆண்டு அனுபவித்துக் கொண்டு சுகத்திலே இருப்பீராகவும் .


2. அக்ஷய uதை t 72 முத்துலிங்க ரெட்டியார் கிராமமான துறைமங்கலம் அகரங்குடியான (பொளை) ? துறைமங்கலத்தில் இருக்கும் லெட்சுமணரெட்டியர் நல்லப்ப ரெட்டியார், காளத்தி ரெட்டியார், எறமரெட்டியார், பூசாரிசின்னத்தம்பி உடையார், கலிதீர்த் உடையார், ரெட்டை பச்சை உடையார், அகரத்தில் இருக்கும் மகாஜனங்கள் கொண்டையா, நரசைய்யா, லிங்கய்யா, மன்னக்கோன், மறவைக்கோன், பெருச்சிக்கோன் நாங்கள் அனைவரும் ஏறிமங்கள நாட்டிலிருக்கம் கருத்த காங்கையர் , வேலாயுத சோழகர் இவர்களுக்கு மேன் காவல் முறிஎழுதிக் கொடுத்தோம் . இதற்கு வருடம் ஒன்றுக்கு பொருப்பு மதுரை சக்கரம் 10 இந்த 10 பொன்னுக்கு கருத்த காங்கயர் பாதிக்கு 5 பொன்னும் வேலாயுத சோழகர் பாதிக்கு 5 பொன்னம் வருஷா வருஷம் கொடுத்துவருவோமாகவும். இந்த படிக்கு சம்மதித்து நாங்கள் அனைவரும் காவல் முறிகொடுத்தோம்.சாக்ஷிகள்:- சிறுவாச்சூர் நல்லப்ப ரெட்டியர், பெருமாயிலூ நல்லப்பரெட்டியர்... .நாட்டுக்கணக்கு ரெங்கநாதபிள்ளை



3. தாது u வைகாசி t 132 ஏறிமங்கல நாட்டிலிருக்கும் கருத்த காங்கைய அம்பலக்காரர் கீழத் துவாகுடியைச் சேர்ந்த செங்கிப்பட்டியிலிருக்கும் ஓந்தையா மேல்கொண்டார் அம்பலக்காரர், கருவிப்பட்டியிலிருக்கும் ராமையா மேல்கொணடார் அம்பலக்காரர் இவர்களுக்கு கூகையூர்ச் சீமை நாட்டார் செகநாத உடையார் மற்றும் உள்ள உடையார் கிராமத்துக் குடியானவர்கள் ஆகிய நாங்கள் மேன்காவல் பட்டையம் எழுதி கொடுத்தோம். மேன் காவலாவது கூகையூர், மாமந்தூர், வீரபயங்கரம், கருத்துளங்குறிச்சி இந்த கிராமம் நான்குக்கும் பொருப்பு மதுரைச்சக்கரம் பொன் 20. செந்து அளம்பளம் , கிருஷ்ணாபுரம், பெருமாள் பாளையம், சித்தேரி, நரையூர், வடபாதி, அரசங்குடி, சிறுபாக்கம், உறத்துர், திருவலந்துறை, பசும்பலூர், பாதாங்கி, ஐயனார்பாளையம், பில்லாங்குளம், சிறு நிலா, பெறுநிலா, பட்டாக்குறிச்சி, வடகரைப் பாதி, மாவிலிவகை, ஆண்டியமடம், ஆகிய இருபது கிராமத்துக்கு ம் பொருப்பு மதுரைச் சக்கரம் பொன் 90. இந்த 20 கிராமம் உட்பட கிராமம் 24 க்கும் பொருப்பு மதுரைச்சக்கரம் பொன் 10. இந்தப்படிக்குச் சம்மதித்து மேன்காவல் பட்டயம் கொடுத்தோம். . . . .

இதற்குச் சாட்சி:- 


சிகம்பூர் பெரியஉடையார், 


சிறுமதுரை திருமேனிப் படையாச்சி











காவல்கோட்டம் புத்தகத்தில் தாதனூர் கள்ளர்கள் பற்றி  

"கள்ளர்கள் காவல் காப்பதென்றால் சுற்றிசுற்றி வருவதல்ல. அவர்கள் வந்து சாவடியில் சும்மா குந்தி அமர்ந்திருக்கிறார்கள், அவ்வளவுதான். அவர்களின் ஆயுதங்களோ கைகால்களோ அல்ல கூடிய புலன்களே உண்மையான காவல்.


உதாரணமாக வெளியூரில் இருந்து வண்டி வண்டியாக தானியங்களுடன் வந்து மதுரைக்குள் இருட்டில் நின்றிருக்கிறார்கள் வெளியூர்க்காரர். தாதனூர் கள்ளன் அதைப் பார்த்து விசாரித்து விட்டு காவல் கூலி கேட்கிறார். உங்களூரில் என்ன தொகை என்று கேட்டு கொடுக்க முற்படும் வண்டிச் சொந்தக்காரர் ஒரு வண்டியைக் குறைத்து சொல்லிவிடுகிறார். கூரிருளில் வண்டிக்காளைகளின் கழுத்துமணி ஓசையை வைத்தே எத்தனை வண்டி என்று ஊகிக்கும் காவலன் கள்ளன். சரியாகக் கணக்கு சொல்லி எச்சரித்து வாங்கிச் செல்கிறான். இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் ஊரிலேயே திருட வருகிறார்கள் என்றால் அவர்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று வியப்பு கொள்கிறார் வண்டிக்காரர். இப்படி தான் கள்ளர்களின் காவல் இருந்தது. 



கள்ளர்களுக்கும் காவலுக்கும் மிக தொன்மையான தொடர்பு உள்ளது. வேந்து தொழில், வேந்துறு தொழில், வேந்துவிடு தொழில் ஆகிய மூன்று சொல்லாட்சிகள் சங்கப்பாடல்களில் காணப்பெறுகின்றன.

வேந்துவிடு தொழில் : 


வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின்

ஆ தந்து ஓம்பல் மேவற்றுஆகும் -  என்ற நூற்பா, அரசனால் ஏவப்பட்ட போர் மறவர், பகையரசர் நாட்டுக்குள் சென்று, பசுக்கூட்டங்களைப் பகைவர் அறியா வண்ணம் கவர்ந்து கொண்டுவந்து பாதுகாத்தல் வெட்சிதிணை. 


வேந்து தொழில் : வேந்தற்குரிய செயல்


வேட்டல் - வேள்வி செய்தல்

ஓதல் - கல்வி பயிலுதல்
படை வழங்கல் - காத்தல்
குடியோம்பல் - தண்டஞ்செய்தல்


வேந்துறு தொழில்:  அரசர்க்கு ஓராண்டு வரையறைக்குட்பட்ட அயலகப் பணியாகும். (பொருள்.189) போர், தூது, நாடுகாவல் ஆகிய பிரிவுகள். கடந்து செல்லும் பொழுதும், போர்ப் பாசறைகளில் தங்கும் பொழுதும் தம் மனைவியர் உடன் இருப்பதற்கு இசைவு அளிக்கப்பெறவில்லை. (பொருள். 34, 175)



ஆநிரை கவர்தல் , காத்தல் , உளவு பார்த்தல் என்பது கள்ளர்களின் முதன்மை தொழில். 

மூவேந்தர் காலம், சுல்தான்கள் காலம், விசயநகர காலம் , பிற்கால தமிழ் மன்னர்கள் காலம், பிரிட்டீசார் காலம் என சென்ற நூற்றாண்டு வரை மிக்க அதிகாரத்துடன் கள்ளர்கள் வசம் இருந்துள்ளது. வரலாற்றுப் பக்கங்கள் கள்ளர்களுக்கும் காவலுக்கும் உள்ள பல சான்றுகளை தருகிறது. அவற்றில் சிலவற்றை காண்போம்.





திருச்சி சோழமாதேவியிலிருந்து தஞ்சாவூர் மெய்காவலுக்கு நால்வர் ராஜராஜர் காலத்தில் சென்றுள்ளனர். இங்கே உள்ள சோழமாதேவி கோவிலில் நான்கு குடும்பம் தான்ஊர் கரைக்காரர்கள். அவர்களுக்கே முதல்மரியாதை



கல்லணை, காவிரி கரை, தஞ்சை பெரிய கோவில் சோழர்களால் போரில் கொண்டுவரப்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் கட்டி உள்ளனர். கைதிகளை வைத்து தானே கட்டினார்கள் என்று ஏளனமாக நினைக்க வேண்டாம். கைதிகளை வைத்து செய்ய வேண்டும் என்றால், காவல் எவ்வளவு கட்டுகோப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பு எவ்வளவு நேர்த்தியாக இருக்கவேண்டும். ஒரு நிமிடம் அசந்தாலும் நாட்டின் தலைநகரம் வரைபடத்தில் இருந்து காணாமல் போய் விடும். எந்த நேரம் வேண்டுமானாலும் கைதிகள் தாக்குதல் நடத்தலாம். ஆனால் எந்த அளவுக்கு சோழ காவல் படை செயல்பட்டு இருந்தால், எதிரி நாட்டு கைதிகளை வைத்து வேலை வாங்கி இருப்பார்கள்.




சுல்தான்கள் காலம் கிபி 14 ஆம் நூற்றாண்டு( ஹிஜிரி 769)



மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்தில் உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் உள்ள கடத்தூர் எனும் பகுதியில் காங்கயநாட்டு முத்தூர் கோயில் பிராமணர்கள் அனுப்பிய ஒலையில் இக்கட்டான அந்த காலத்தில் கோயிலை காக்க கள்ளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுல்தான்களின் கொடுங்கோல் ஆட்சியில் கோயில்களையும் மக்களையும் காக்க கள்ளர்களை மக்கள் சரணடைந்ததற்க்கு இந்த கல்வெட்டு ஒர் சிறந்த எடுத்துக்காட்டு. ( கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் :- 64/2004






விருப்பண்ண உடையார் காலம் கிபி 1377 : -

விசயநகர மன்னர் காலத்தில் , திருக்குன்றக்குடி மக்கள் " கள்ள வேளைக்காரர் " என்பவரிடத்தில் சரணடைந்து தங்களது ஊரை காத்து வருமாறு காவல் உரிமை அளித்து அவருக்கு சிறப்புகள் செய்துள்ளனர். அவருக்கு மக்கள் அளிக்க வேண்டிய சலுகைகள் பற்றியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. (புதுக்கோட்டை கல்வெட்டுகள் 689) வேளைக்காரர் படையை சேர்ந்த கள்ளர்கள் விஜயநகர மன்னர் காலத்திலும் ஊர்மக்களை காக்கும் பொறுப்புகளில் வகித்து வந்துள்ளனர் என்பதற்கு இந்த கல்வெட்டு ஒரு சான்றாகும்.









ஜடாவர்மன் பராக்கரம பாண்டியன் காலம்: கிபி 1483 


திருபுவனவீரபுரத்தை சேர்ந்தவர்களுக்கும் குளமங்கல நாட்டாருக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை விளக்குகிறது கல்வெட்டு எண் 159 of 1911. குளமங்கல நாட்டு கள்ளர்கள் " ஊர் காவல்" உரிமையை பெற்றிருந்தனர். ஒப்பந்தத்தில் கள்ளர்கள் ஊருக்கு பாதுகாப்பு அளிக்கவும் , நியாயமாக நடக்கவும், யாரையும் துன்புறுத்த கூடாதென்றும், கள்ளர் மக்கள் வீட்டு திருமணத்தின் போது ஒரு சீலையை காவல் கூலியாக பெறுவார்கள் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர் காலத்திலேயே கள்ளர்கள் ஊர்மக்களை காக்கும் காவல் உரிமை பெற்று விளங்கியுள்ளனர். ( Topographic list of Inscriptions in madras presidency vol 2)






 இடையர்களின் காவலன் திருமலை பின்னத்தேவன் ( கிபி 1645) 


 திருமலை நாயக்கர்(கிபி 1623-1659) காலத்தில் திருநெல்வேலியில் இருந்த இடையர்களை அங்கிருந்த பாளையக்காரன் தொந்தரவு செய்து வந்தான். இதனால் அங்கிருந்த இடையர்கள் திருமலை நாயக்கரிடம் சரண் அடைந்தார்கள். திருமலை நாயக்கர் பின்னத்தேவரை அழைத்து ஆயிரம் வீட்டு இடையர்களுக்கு தலைவர்களாக நியமித்து, அவர்களை காத்து அருளுமாறு கேட்டுக்கொண்டார். மதுரையில் இராமாயணச்சாவடியில் இருந்து மாரியம்மன் தெப்பக்குளம் வரையிலும் இடையர்களுக்கு வீடுகளை கட்டித்தரும் பொறுப்புகளை பின்னத்தேவர் சிறப்பாக செய்து முடித்தார். 

அதன்பின் பின்னத்தேவனும் அவரது வாரிசுகளும் தொடர்ந்து இடையர்களை காத்து வந்துள்ளனர். திருமலை பின்னத்தேவரின் வாரிசுதாரர்களுக்கு பட்டம் கட்டும் உரிமையை இடையர்கள் பெற்றிருந்தனர்.மதுரை இராமாயணச்சாவடிக்கு மேற்கேயுள்ள இருக்கும் கிருஷ்ணர் கோயிலில் விழாக்காலங்களில் பின்னத்தேவர் வகையராக்களுக்கு பரிவட்ட மரியாதையும்,பாதக்காணிக்கையும், தீர்த்தம் துளசி மரியாதையும் உண்டு. இன்றும் இத்தகைய மரியாதைகள் அளிக்கப்படுகிறது.( மூவேந்தர் குல தேவர் வரலாறு : முத்துத்தேவர் பக் 216 /Gazettee of madura pg 96 / தருமத்துப்பட்டி செப்பேடு 3)








திருச்சிராப்பள்ளியின் அரசு காவலர்கள்:-( கிபி 1682)


கிபி 1682 ல் சொக்கநாத நாயக்கர் காலத்தில், திருச்சியை நாயக்கர் ஆண்டபோது, அவர்களின் நண்பராக இருந்த, மராத்தியர்கள் திருச்சி கோட்டையை பிடிக்க திடீர் தாக்குதல் நடத்தினர். துரோகத்தை தாங்க இயலாத சொக்கநாத நாயக்கர் அதிர்ச்சியில் உயிர் இழந்தார்.அவரது வாரிசான ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் ரகுநாதராய தொண்டைமானின் உதவியை நாடினார். கோட்டை சுவர்களை வீரத்துடன் போராடி கடந்து கோட்டையை அடைந்து, எதரிகளை விரட்டியடித்தனர். இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்துவீரப்ப நாயக்கர் அம்புநாட்டு கள்ளர்களை ரகுநாதராய தொண்டைமான் தலைமையில் திருச்சியின் முக்கிய 12 பகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமித்தார்.ரகுநாதராய தொண்டைமான் திருச்சியின் அரசு காவலராக நியமிக்கப்பட்டார். மருங்காபுரி பூச்சிநாயக்கரின் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்:- ரகுநாதராய தொண்டைமான் திருச்சியின் அரசு காவலராக நியமிக்கப்பட்டுள்ளதால், " ஸ்ரீரங்கம் திருவானைக்கால் பகுதிகளில் உள்ள கடைகள் ஒரு காசும், ஒவ்வொரு வீடும் வருடத்திற்கு 2 பணமும்,பெரிய கிராமங்கள் வருடத்திற்கு 10 கலம் நெல்லும், சிறிய கிராமங்கள் வருடத்திற்கு 5 கலம் நெல்லும் ரகுநாதராய தொண்டைமானுக்கு அளிக்க கடமைபட்டிருந்தனர். புதுக்கோட்டை மன்னர்களாக உயர்ந்த தொண்டைமான்களும் ஒரு காலத்தில் காவல்காரனாக இருந்துள்ளது வியப்பளிக்கும் தகவலாகும்.(Manual of pudukkottai state vol 2 part 1 pg 759)




முத்துவடுகநாதருக்கு ஆதரவாக போர்களம் கண்ட கள்ளர் காவலர்கள்:- ( கிபி 1772)


இராமநாதபுரத்தை அடுத்து சிவகங்கையை நோக்கி திரும்பிய ஆங்கிலேயர் படை கிபி 1772 ல் ஜெனரல் ஸ்மித் தலைமையில் தாக்கினர். இந்த போரில் முத்துவடுகநாதர் வஞ்சகமாக கொல்லப்பட்டார். முத்துவடுகநாதருக்காக படை உதவி அளித்த கள்ள நாடுகளை பற்றி அம்மானை பாடுகிறது.




"தென்னிலை வளர்நாட்டு ஊரவரும், மேல் சிலம்பா நாட்டவரும் , சாவ முத்து நாட்டுத்தலைவர் வெகுசனமும் கண்டதேவி நாட்டு கனமான மன்னவரும் வண்டரெழுவங்கோட்டை மன்னருடன் கண்டமாணிக்கம் கனநாட்டு இராணுவமும் துண்டரிக்க னான துரை பாகனிச் சனமும் பட்டமங்கல நாட்டு பலசனங்கள் மெத்தவுமாய் திட்டமுட னாயுதங்கள் சேர்க்கை வெகு வாகவுமே, பள்ளத்தூர் நாடும், பாலைய நாட்டாரும் கள்ளற் சிலகுடியுங் காவலராரும் , நேரிய போரில் நிலையதனை விட்டகலா ஏரியூர் மல்லாக்கோட்டைக் கியல்புடைய சேதுபதியம்பலம் தீரன் வெகுசனமும் பேதமில்லா பெரியபிள்ளையம்பலமும்" (சிவ அம் பக் 122)



ஏழுவங்கோட்டை நாட்டார்கள், தென்னிலை நாட்டார்கள், சிலம்பா நாட்டார்கள், முத்து நாட்டு கள்ளர்கள் ஆகிய ஏழுகிளை கள்ளர் நாடுகளும் , பாகனேரிச் சனமும், பட்டமங்கல நாட்டார்களும்,கண்டதேவி நாட்டார், கண்டர்மாணிக்க நாட்டார் பள்ளத்தூர் நாடு, பாலையூர் நாடு, கள்ளர் காவல்காரர்களும், மல்லாக்கோட்டை நாட்டு சேதுபதியம்பலம் தலைமையிலான் படை, பெரியபிள்ளை அம்பலம் படை முதலான நாட்டார் படைகள் சிவகங்கை சமஸ்தானத்தை ஆபத்தில் இருந்து காக்க உதவியுள்ளனர். இங்கனம் கள்ளர் காவலர்கள் ஆபத்துக் காலங்களில் போர் களங்களிலும் களமாடியுள்ளனர் என்பதற்கு சிறந்த சான்றாக சிவகங்கை சரித்திர அம்மானை அமைகிறது. ( சிவகங்கை சரித்திர அம்மானை பக் 122).






கள்ளர்களை அழைத்து காவல் உரிமை அளித்த மருது பாண்டியர்கள் ( கிபி 1790) : 



பெரிய மருதுபாண்டியர் வெள்ளையன் அம்பலக்காரருக்கு அளித்த, பட்டயத்தில் குன்றக்குடியில் காடு செடி வெட்டி திருடர் பயம் நீக்கி காவல் காத்துவருமாறு கூறியுள்ளார். குன்றின் மேல் காடு நீக்கி கோயிலை உருவாக்க உதவ வெள்ளையன் அம்பலக்காரன் உதவ ஆணையிட்டார். வெள்ளையன் அம்பலக்காரனுக்கு அம்பல மரியாதையும், நிலங்களும் அளிக்கப்பட்டது. வெள்ளையன் அம்பலக்காரன் காவலுக்கு கூட்டி வந்த தொண்டைமான் புதுக்கோட்டை அம்புநாட்டு கள்ளர்கள் :சாத்துக்குட்டி சேர்வைக்காரன், செல்லக்குட்டி சேர்வைக்காரன், நல்லகுட்டிச் சேர்வைக்காரன் இந்த மூவரும் புதுக்கோட்டை மன்னரிடம் முறி( அனுமதி) வாங்கிக்கொண்டு கோயில் குளம் மடம் சத்திரம் காத்து வருமாறு ஆணையிடப்பட்டு அவர்களுக்கு மரியாதைகளும் நிலங்களும் அளிக்கப்பட்டது.மருதுபாண்டியர்கள் அம்புநாட்டு கள்ளர்களை குன்றக்குடி பகுதிக்கு குடியமர்த்தி கோயில் குளம் காத்து வருமாறு காவல் உரிமைகளை அளித்து பெருமை சேர்த்துள்ளார். இந்த கள்ளர்களின் வழியினர் இன்றும் குன்றக்குடி முருகன் கோயிலில் மரியாதை பெறுகின்றனர். ( குன்றக்குடி கோயில் ஒலை ஆவணம் : மருதுபாண்டிய மன்னர்கள் மீ மனோகரன்)






பாகனேரி நாட்டு கள்ளர் காவல்காரர்கள்  ( 18 ஆம் நூற்றாண்டு)



பாகனேரி கள்ளரான வயிரவன் என்பவர் வேம்பத்தூர், பாசாங்கரை, ஒக்கூர், மான்குழி, பெருங்குடி, திருமலை மற்றும் திருக்கோட்டியூர் சீர்மைகளில் தன்னிடம் இருந்த காவல் உரிமையை குரும்பன் என்பவருக்கு விற்பதற்கு இசைந்து ஒலை ஆவணத்தை கொடுத்துள்ளார். காவல் உரிமைக்கான விலை ஊர் சான்றோர் முன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கள்ளர்கள் காவல் உரிமைகளை பெற்று ஊரையும் உடமையையும் காத்து வந்துள்ளனர். ( பாகனேரி நாட்டு மக்களின் கலாச்சாரமும், மரபும்: முத்தையா) ஒலைச்சுவடி எண்: 8)




முடிமன்னர் காலம் முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலும் கள்ளர்கள் பெரும்பாலான தேசக்காவல் உரிமைகளை பெற்றிருந்தனர். இதற்காக பல கோயில் மரியாதைகள் மற்றும் நிலங்களை பெற்று வாழந்துள்ளனர். பாரம்பரியமிக்க காவல்முறையை வெள்ளையர்கள் ஒழித்து கள்ளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து , பொருளாதார ரீதியில் கள்ளர்களை வலுவிழக்க செய்தனர். காவல் தொழிலை இழந்த கள்ளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வலுக்கட்டயாமாக காவல் கூலி வசூலிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வரலாற்றில் சுழ்நிலையால் குற்றவாளிகளாகவும், குற்ற பரம்பரையாகவும் மாற்றப்பட்டவர்கள் கள்ளர்கள்.


ஆய்வு : திரு . சியம் சுந்தர் சம்பட்டியார்

நன்றி. திரு. சோழபாண்டியன்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்