புதன், 9 நவம்பர், 2022

முன்னாள் கொறடா துரை. கோவிந்தராஜன் காளிங்கராயர்

 



தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தைச் சேர்ந்த தமிழக அரசின் முன்னாள் கொறடா துரை. கோவிந்தராஜன்  காளிங்கராயர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்திலுள்ள வடக்கூரில் 1937 ஆம் ஆண்டில் பிறந்தார்.  திமுக உறுப்பினராக இருந்த இவர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, அக்கட்சியில் இணைந்த முக்கியமான நிர்வாகிகளில் இவரும் ஒருவர். இதையடுத்து இவர் 1977 ஆம் ஆண்டில் திருவோணம் தொகுதியிலும், 1984 ஆம் ஆண்டு தேர்தலில் திருவையாறு தொகுதியிலும் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் கொறடாவாக இருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமமுகவில் இணைந்த இவர் அக்கட்சியின் விவசாய பிரிவு மாநிலச் செயலராகப் பொறுப்பு வகித்து வந்தார்.  இவரது மனைவி மீனாட்சி. இவருக்கு மகன்கள் துரை. கோ. கருணாநிதி, துரை. கோ. பாண்டியன், மகள் திராவிட னமணி ஆகியோர் உள்ளனர்.


வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்