வியாழன், 29 மார்ச், 2018

பெரியம்பலகாரர் சே.சேவுகன் அம்பலக்காரர் விதித்த தீபாவளி தடை.


"தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
பாற்பட்டு ஒழுகப் பெறின்" 

என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப நடுவுநிலைமையோடு வாழ்ந்த மயில்ராயன்கோட்டை நாட்டின்  மாம்பட்டி பெரியம்பலகாரர் சே.சேவுகன் அம்பலக்காரர் விதித்த தீபாவளி தடை.

தமிழர் பண்டிகை பொங்கல் திருநாள் என்றாலும், தீபாவளி என்றால், குதூகலம், கொண்டாட்டத்திற்கு எல்லை இல்லை. சிறுவர் முதல் பெரியவர் வரை, ஒரு மாதத்திற்கு முன்பே, எதிர்பார்ப்புகள் ஏங்க வைக்கும். ஆனால், தீபாவளி கொண்டாடாத கிராமங்களும் உண்டு. அது சிவகங்கை மாவட்டம், மயில்ராயன்கோட்டை நாட்டின் எஸ்.மாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 50 ஆண்டுகளாக தீபாவளி இல்லை. வறட்சி, பஞ்சம், கடன் சுமை ஆகியவை பதித்த கோரச்சுவடுகள் தான் இதற்கு காரணம். 

இதன் பின்னணி:

சிவகங்கை மாவட்டத்தில், "நாடு' என்ற கிராம அமைப்பு, மன்னர் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது. அன்று நிர்வாக வசதிக்காக சிறு, சிறு நாடுகளாக பிரிக்கப்பட்டவை, இன்றளவும் மாறவில்லை. மயில்ராயன்கோட்டை நாட்டில் மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, எருமப்பட்டி என பல கிராமங்கள் உள்ளன. இதில் மாம்பட்டி முதன்மை கிராமம். இதன் "அம்பலக்காரர்' சேவுகன், விதித்த தீபாவளி தடை இன்றும் மீறப்படவில்லை.

வறுமை: கடும் வறட்சி நிலவிய நேரத்தில் விவசாயிகள், வட்டிக்கு கடன் வாங்கி தீபாவளியை கொண்டாடினர். வட்டியாக நெல் மூட்டை தரும் வழக்கம் இருந்தது. கடனை அடைக்க, கழனியில் கடுமையாக உழைத்தும் இயலாத நிலையே இருந்தது. பெரு விவசாயிகள் நெல், தானியங்களை அடகு வைத்து, நெல்லுக்கு நல்ல விலை வரும் போது, கடனை அடைத்தனர். காலப்போக்கில் ஏழை விவசாயிகள், தீபாவளியை மறந்தனர். வசதி படைத்தவர்கள் தீபாவளி கொண்டாடும் போது, எளியோர் ஏங்கித் தவிக்கும் சூழல் நிலவியது. கிராமத்திற்குள் நிலவிய இந்த வேற்றுமை உணர்வு, உறவுகளை பாதித்தது.


இதனால் கிராமத்தினரை ஒன்று கூட்டி, தீபாவளியை புறக்கணிப்பது என அறிவித்தார் சேவுகன் அம்பலம். அன்று முதல் இங்கு தீபாவளி இல்லை; வெளியூர்களில் வசிக்கும் இக்கிராமத்தினரும் தீபாவளி கொண்டாடுவதில்லை. அன்று வெளியூர் செல்வதைக்கூட தவிர்க்கின்றனர். புதுமண தம்பதியருக்கு "தலைத்தீபாவளி' சம்பிரதாயமும் இல்லை.
தடை விதித்த சேவுகன் அம்பலம் மகன் சபாபதி அம்பலம் கூறுகையில்,""இங்கு பெண் எடுத்தவர்கள், பெண் கொடுத்தவர்களும் ஊர் கட்டுப்பாட்டுக்கு மதிப்பளிக்கின்றனர். பல ஆண்டுகள் கடந்தும், கொடுத்த வாக்கை மதிக்கிறோம். தைப்பொங்கல் அன்று, புது ஆடை அணிந்து குதூகலமாக கொண்டாடுவோம்,'' என்றார்.


வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்