திங்கள், 12 மார்ச், 2018

சேலம் கள்ள(ர்)குறிச்சி - கள்ளர் நாடு











 

சேலம்- கீழ்நாடு, கெராங்காடு கிராமத்தில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஒன்று மலைமீதுள்ள அவ்வையாரம்மன் கோயிலில் உள்ளது. அது படிக்க முடியாதபடி சிதைந்து காணப்படுகிறது. மற்றொன்று ஊரின் மத்தியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே பலகை கல்லில் வெட்டப்பட்டுள்ளது.

கல்வெட்டின் மேற்புறம் பெருமாளின் சின்னமான சங்கு சக்கரம் காணப்படுகிறது. மொத்தம் 35 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.




இது 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதில் விய வருடம் வைகாசி மாதம் 27ந்தேதி முதல் அவ்வையாரம்மைக்கு பூசைகள் செய்ய கள்ளர் நாட்டை சேர்ந்த கருங்காடு (கெராங்காடு) என்ற பகுதியை கரையப்பக்கவுண்டர், அன்னியப்ப கவுண்டர், ஆகிய இரு தலைவர்களும் நாலுகரை நாட்டாரும் சேர்ந்து பூதானமாக கொடுத்துள்ளனர். பூதானம் என்பது ஒரு கிராமத்தையே தானமாக கொடுப்பது ஆகும். இத்தானத்தை நயினாகவுண்டநம்பி என்பவர் நடத்தி வரவேண்டும். மேலும் பூசையும் கட்டளையும் நடத்தி வருபவர்கள் உடல் நலமும் செல்வமும் பெறுவார்கள்.


இத்தானத்தை சூரியன் சந்திரன் உள்ள வரை நடத்தி வர வேண்டும். இத்தானத்துக்கு அழிவு செய்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் எனவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இப்பகுதி கள்ளர் நாடு என கல்வெட்டில் குறிப்பிடப்படுவதால் அருகே வணிக வழி பாதை ஒன்று இருந்திருக்க வேண்டும், இப்பகுதியில் காணப்படும் இந்த அரிய சான்றுகளை ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் தொல்லியல்துறை ஆவண செய்ய வேண்டும்* இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல தொல்லியல் சான்றுகள் கிடைக்கும் இவ்வாறு சேலம் மாவட்ட வரலாற்று தேடல்குழு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.



கவுண்டர் என்ற சொல் சில சமூகங்களால் பயன்படுத்தப்படும் சாதி பட்டப் பெயராகும். கள்ளர் குடியில் கொமாரலிங்கத்தில் ராமலிங்க கவுண்டர், வெள்ளலூர் மணியக்காரன் திரு. கந்தசாமி கவுண்டர், இவர்கள் கவுண்டர் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள்

கல்ராயன் மலையை அரணாகக் கொண்ட காடுகள் நிறைந்த வட்டம் கள்ளர்கள் நிறைந்த காட்டுப் பிரதேசமாக விளங்கியதால் 'கள்ளர் குறிச்சி' பின்னர் கள்ளக்குறிச்சியாக மருவியது. ஒரு கல்வெட்டில் கல்லைகுறிச்சி என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.





பெரிய கல்வராயன் மலையில் கீழ்நாடு என இப்போது அழைக்கப்படும் பகுதி 15ஆம் நூற்றாண்டில் கள்ளர் நாடு என அழைக்கப்பட்டுள்ளது. கெராங்காடு என்ற ஊர் கருங்காடு என அழைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு அவ்வையார் கோயில்கள் உள்ளன. கெராங்காடு ஊருக்கு அருகே புதிய கோயிலும் 2 கி.மீ .தொலைவில் உள்ள குன்றில் பாழடைந்த நிலையில் 15 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டசிதைந்த நிலையில் ஓர் அவ்வையார் கோயிலும் உள்ளது. பழைய கோயிலில் இப்போது அவ்வையார் சிலை இல்லை.பல வருடங்களுக்கு முன் இங்குள்ள சிலைகளை திருடர்கள் திருடி செல்ல முயற்சித்ததால் ஊர் மக்கள் பாதுகாப்பான ஓர் இடத்தில் வைத்துள்ளனர். கார்த்திகை தீபம் அன்று மட்டும் அவ்வையார் சிலையை இங்கு கொண்டு வந்து வைத்து வழிபடுகின்றனர்.

கார்த்திகை தீபம் அன்று மலை உச்சியில் உள்ள கொப்பரை மூலம் மகாதீபம் ஏற்றி வழிபடுகின்றனர்..திருவண்ணாமலை தீபத்தை பார்த்த பின்னரே இங்கு தீபம் ஏற்றுவது நடைமுறையாக உள்ளது.

சேலம் அருகே உத்தமசோழபுரம் என்ற ஊரில் உள்ள கரபுரநாதர் கோயிலில் பழமையான ஓர் அவ்வையார் சிலை உள்ளது.

சேலம் மாவட்டம் மல்லூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்பரப்பிப்பட்டி கிராமம். இவ்வூர் கல்வெட்டுகள் பொன் பரப்பி என்றே வழங்கப்பட்டு வருகின்றது. பொன்பரப்பி தலைநகராகக் கொண்டு சோழங்க தேவன் (கி.பி.1218-1261) என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். சோழங்க தேவன் கால கல்வெட்டுகள் சேலம் மாவட்டத்தில் பரவலாக கிடைத்திருகின்றன. அதன் மூலம் சோழங்க தேவன் கோவில்களுக்கு இறையிலியாக நிலம் கொடுத்தமை, மானியம் வழங்கியது போன்ற செய்திகளை அறியலாம்.

இராஜேந்திர சோழனின் ஏழாம் ஆட்சியாண்டில் இராசிபுரம் காக்காவேரி கிராமத்திலுள்ள சிவன் கோவிலில் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சேலநாட்டு அஞ்சாத பெருமாளான சோழங்கதேவன் பொன்பரப்பினான் என்கிறது.

முற்காட்டிய ஊர்களில் துண்டுராயன்பாடி என்பது தஞ்சை சில்லாவில் ஐயனார்புரம் புகைவண்டித் தங்கலுக்கு அரைநாழிகை யளவில் விண்ணாற்றின் தென்கரையில் இருப்பது, அதில் செங்கல்லாலய கோட்டை மதிலின் அடிப்பகுதியம், நாற்புறத்தும் கொத்தளமும் இன்னமும் இருக்கின்றன. கோட்டைக்குள்ளேயே வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கு நிலத்திற் புதைந்துகிடந்து அகப்பட்ட பல பீரங்கிக் குண்டுகளை நேரிற்பார்த்துள்ளேம். 

ஒரு மகம்மதிய மன்னரானவர் கண்தெரியாமலிருந்து, துண்டுராயன்பாடியிலுள்ள கள்ளர் குலப் பெரியாராகிய சோழங்கதேவர் ஒருவரால் கண் தெரியப்பெற்று, அவருக்குப் பரிசாக ஓர் தந்தப் பல்லக்கும், பாட்சா என்னும் பட்டமும் அளித்தனர் என்றும், அதிலிருந்து அவர் ‘செங்கற் கோட்டை கட்டித் தந்தப் பல்லக்கேறிக் கண்கொடுத்த சோழங்கதேவ பாட்சா’ எனப் பாராட்டப்பட்டு வந்தனரென்றும் கூறுகின்றனர். 

துண்டராயன்பாடிக் கோட்டையிலிருந்து சோழங்க தேவ அம்பலகாரர்க்கும் . அதனையடுத்து விண்ணாற்றின் வடகரையிலுள்ள ஆற்காட்டுக் கோட்டையிலிருந்த கூழாக்கி அம்பலகாரர்க்கும் பகைமை மிகுந்திருந்ததாகவும், சோழங்கதேவர் படையெடுத்துச் சென்று ஆற்காட்டுக் கோட்டையை அழித்துவிட்டதாகவும், கூழாக்கியார் அப்பொழுது தஞ்சையில் அராசாண்டு வந்த மராட்டிய மன்னர் தம்மிடம் நண்பு பூண்டிருந்தமையின் அவ்வரசரிடம் தெரிவித்துத் துண்டுராயன்பாடி மீது படைகளை அனுப்பச்செய்ததாகவும், அதனால் அக்கோட்டையும் அழிவெய்தியதாகவும் கூறுகின்றனர்.

இங்கு சோழங்கதேவர், கூழாக்கியார் வாரிசுகள் இன்றும் வாழ்ந்துவருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் கள்ளர் பெருங்குடிகளான சென்னன்டார், சோழங்கதேவர் அம்பலகாரர்,நாட்டார் ஆகியோருக்கு கோவில் மரியாதைகள்வழங்கப்பட்டு வருகிறது. 




கொழுமம்-குமரலிங்கம் ஐவர் மலை பக்கத்திலும் சோழங்கதேவர் பட்டம் உடையவர்கள் வாழ்ந்து  வருகின்றனர்.



கள்ளக் குறிச்சி கல்ராயன் மலை கூடுதலான வளமும், காட்டு வளமும் உடையது. திருக்கோவலூர் வட்டத்திலும் சிறு, சிறு மலைக் குன்றுகளும், காட்டுப் பகுதிகளும் உள்ளன. கல்ராயன் மலைத் தொடர்ச்சியே செஞ்சி மலையாகும். செஞ்சி வட்டத்திற்கு எல்லையாக அமைந்திருப்பதால் அவ்வூரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

பெரியகல்வராயன் மலையில் சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவால் மலையில் 2500 வருடங்களுக்கு முற்பட்ட கல்திட்டைகள், கற்குவைகள், புதிய கற்கால கருவிகள், மற்றும் ஏராளமான குத்துகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்ட வரலாற்று தேடல்குழுவை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆறகழூர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர் கலைச்செல்வன், ஆசிரியர் பெருமாள், ஓமலூர் சீனிவாசன் ,மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், பெரியார் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு பெரிய கல்வராயன் மலையில் உள்ள ஆத்தூர் வட்டம் கீழ்நாடு ஊராட்சி கெராங்காடு கிராமம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம் கீழ்நாடு ஊராட்சி அடியனூர், சேம்பூர், போன்ற கிராமங்களில் மேற்புற கள ஆய்வை மேற்கொண்டது.

அப்போது அக்கிராமங்களில் 21 கல்திட்டைகள், 10 கற்குவைகள் , புதிய கற்கால கருவிகள் மற்றும் ஏராளமான குத்துகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் குழுவில் முக்கியமான தலைவர்கள் , வீரர்கள் இறந்தபோது அவர்கள் நினைவாக இது போன்ற கல்திட்டைகள் அமைக்கப்பட்டன. அவை மாண்டவர் வீடு என அழைக்கப்பட்டன. அது பிற்காலத்தில் மருவி பாண்டவர் வீடு என அழைக்கப்பட்டன. இங்குள்ள மக்களால் இவை கல்பாண்டி வீடு, சின்ன பாண்டி வீடு, ,குள்ள பாண்டி வீடு என அழைக்கப்படுகிறது.

கெராங்காடு கிராமத்தின் அருகே உள்ள மலைக்குன்றின் அமைந்துள்ள பழமையான அவ்வையார் கோயில் அருகிலுள்ள பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கற்குவைகள் காணப்படுகின்றன.

இறந்தவர்கள் நினைவாகவும், அவர்களை அடக்கம் செய்த இடங்களை அடையாளப்படுத்தவும் குத்துக்கற்கள் வைக்கப்பட்டன. இவை ஒரே கல்லில் கூம்பு கல்லாகவோ அல்லது பலகை கல்லாகவோ வைக்கப்பட்டன. கெராங்காடு கிராமத்தில் இருந்து குன்றின் மீதுள்ள அவ்வையார் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏராளமான குத்துக்கற்கள் காணப்படுகின்றன.
இவை ஒரே ஒரு பலகை கல்லால் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மலைப்பாதையில் செருப்பு போட்டுக்கொண்டு நடக்க ஊர் மக்கள் அனுமதிப்பதில்லை. இந்த குன்றை புனிதமாக கருதுகின்றனர்.

கெராங்காடு, சேம்பூர், அடியனூர் போன்ற மலைக்கிராமங்களில் மக்கள் குடியிருப்புக்கு அருகே உள்ள கல்திட்டைகளின் உள்ளே புதிய கற்காலகருவிகள் காணப்படுகின்றன. ஒரு அடி உயமுள்ள கற்கோடாரிகளும் இங்கு காணப்படுவது சிறப்பான ஒன்றாகும்.






கல்வராயன்மலை கருங்காடு(கெராங்காடு) கல்வெட்டு
கருங்காடு கல்வெட்டு விவரங்கள்
* எண் : 92
* இடம் : ஊர் - கருங்காடு, வட்டம் - ஆத்தூர். மாரியம்மன் கோவில் அருகில் நடப்பெற்றுள்ள கல்.
* அரசர் : . . . . . . . . . .
* காலம் : கி.பி. 15 ஆம் நூற்றாண்டு
* மொழி : தமிழ் (தெ.இ.க.தொ. 4 - 457)
* செய்தி : அவ்வையாரம்மைக்குப் பூதானமாகக் கள்ளநாட்டைச் சேர்ந்த கருங்காடு என்ற பகுதியைக் கரையப்பக் கவுண்டர் அன்னியப்பக் கவுண்டர் ஆகிய இரு தலைவர்களும் நாலுகரை நாட்டாரும் சேர்ந்து விட்டமை.
கல்வெட்டு பாட வரிகள் (1 - 35)
வரி எண் கல்வெட்டு வரி வரி எண் கல்வெட்டு வரி
1. விய வருஷம் வய்யாசி மாதம் 27 19. வர் பூசை கட்டளை அவி
2. அவைய்யாரம்மை 20. . . . . (மெ) கம் அதி
3. சுவாமியார் த பூத 21. காமாகா நடத்திவரு (கிற)
4. ானம் விட்டதுக்கு (க) 22. (வ)ர்கள் ஆயிராரோக்கி (ய)
5. ள்ளரையக பெரிய 23. (அய்)ஸ்வரியம் அவர்பி
6. கரியப்பகவுண்ட(ர்) 24. . . வை தொழுது மாதா . .
7. பட்டத்து கள்ளனை 25. யம் பண்ணி வருகுறவர்
8. ரய அண்ணியப்ப 26. யிந்த பூ (தா)னம் பூமி
9. கவுண்டர் இந்த ரண் 27. ஆக(வும்) சந்திர(ா)தித்தர்
10. டு துரையளும் நாலு 28. உள்ளமட்டும் நடத்தவு/ம் இ/
11. கரைநாட்டரும் கள்(ள) 29. ப்படி யிதுக்கு (யாதா)
12. நாட்டில் செத்த கா(ங்) 30. மொருத்தர ரண்டு(நி)
13. நாடு பூதானம் விட்ட 31. னைச்சவர்கள் கெங்
14. துக்கு பூசை நிமத்தி 32. கைக்கரையிலே
15. யம் பண்ணி வருகுறவர் 33. க(ா)ராம் பசுவை(க்)
16. கள் நயினாவூண்டந(ம்)பி 34. கொன்ற பாவத்தி
17. யார் உள்பட யிந்தவூ(ர்) 35. (லே)போவர் (கள்)
18. தானத்துக்கு யாதா மொரு 

விய வருஷம், வைகாசி மாதம் 27-ஆம் தேதி" என்பதற்கான ஆங்கில தேதியை (Gregorian Calendar) கீழே காணலாம்:

காலக் கணிப்பு:
தமிழ் வருடச் சுழற்சியின் படி 'விய' வருடம் என்பது 60 ஆண்டுகளில் ஒருமுறை வரும். கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கி.பி. 15-ஆம் நூற்றாண்டு காலத்தைக் கணக்கில் கொண்டால், அது கி.பி. 1466-ஆம் ஆண்டைக் குறிக்கிறது.

ஆங்கில தேதி:
அந்த ஆண்டிற்கான கணக்கீட்டின்படி:
* தமிழ் தேதி: விய வருடம், வைகாசி 27.
* ஆங்கில தேதி: மே 22, 1466 (May 22, 1466).

குறிப்பு: தமிழ் மாதங்கள் சூரியக் கணக்கீட்டின்படி அமைவதால், ஆங்கிலத் தேதியுடன் ஒப்பிடும்போது ஒரு சில நாட்கள் முன்ன பின்ன மாறுபட வாய்ப்புள்ளது. இருப்பினும், வரலாற்று ஆய்வுகளின்படி 15-ஆம் நூற்றாண்டின் 'விய' வருடம் என்பது கி.பி. 1466-67 காலப்பகுதியாகும்.

இந்தக் கல்வெட்டு வரிகள், 15-ஆம் நூற்றாண்டில் கருங்காடு பகுதியில் வாழ்ந்த தலைவர்கள் இணைந்து அவைய்யாரம்மை (அவ்வையார்) எனும் தெய்வத்திற்கு நிலத்தை தானமாக வழங்கியதையும், அதை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதையும் விளக்குகின்றன.

கல்வெட்டு  வரிகளுக்கான விரிவான விளக்கம் இதோ:

1. கொடையாளிகள் மற்றும் நிலம் (வரிகள் 5 - 13)
* வரிகள் 5-9: கள்ளரை பெரிய கரியப்ப கவுண்டர் மற்றும் அண்ணியப்ப கவுண்டர் ஆகிய இரு தலைவர்களும் (துரைகளும்) இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* வரிகள் 10-11: இவர்களுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த நாலு கரை நாட்டாரும் (பஞ்சாயத்து அல்லது சமூகத் தலைவர்கள்) இணைந்துள்ளனர்.
* வரிகள் 12-13: இவர்கள் 'கள்ள நாட்டில்' உள்ள செத்த காங்கு நாடு அல்லது கருங்காடு பகுதியைச் சேர்ந்த நிலத்தைப் பூதானமாக (பூமி தானமாக) வழங்கியுள்ளனர்.

2. வழிபாட்டு முறை (வரிகள் 14 - 17 மற்றும் 25)
* வரிகள் 14-15: வழங்கப்பட்ட நிலத்திலிருந்து வரும் வருவாயைக் கொண்டு, அந்தத் தெய்வத்திற்குப் பூசை மற்றும் நிமித்தியம் (தினசரி சடங்குகள் மற்றும் நெய்வேத்தியம்) செய்ய வேண்டும்.
* வரிகள் 16-17: இந்தப் பணிகளைச் செய்வதற்காக நயினாவூண்ட நம்பியார் (பூசாரி) உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த ஊரிலேயே தங்கி பூசைகளைச் செய்ய வேண்டும்.

3. தானத்தின் நோக்கம் மற்றும் காலம் (வரிகள் 21 - 28)
* வரிகள் 21-23: இந்தத் தர்மத்தைச் செய்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் ஆயுள், ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வரியம் (செல்வம்) பெற்றுச் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக இது செய்யப்பட்டுள்ளது.

* வரிகள் 26-28: இந்த நிலதானமானது சந்திராதித்தர் (சூரியனும் சந்திரனும்) உள்ளவரை, அதாவது உலகம் உள்ளவரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

4. தர்மத்தைக் காப்போர் மற்றும் மீறுவோர் (வரிகள் 29 - 35)
* வரிகள் 29-31: இந்தத் தர்மத்திற்கு யாராவது இடைஞ்சல் செய்தாலோ அல்லது தடுத்தாலோ அவர்களுக்குப் பாவம் சேரும் என்று எச்சரிக்கிறது.

* வரிகள் 32-35: இது கல்வெட்டுகளில் பொதுவாகக் காணப்படும் சாப வாசகம். இந்தத் தர்மத்தை அழிப்பவர்கள் கங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (அக்காலத்தில் பசுவைக் கொல்வது மிகப்பெரிய பாவமாகக் கருதப்பட்டது).
சுருக்கம்:

இந்தக் கல்வெட்டு, ஆத்தூர் பகுதியில் இருந்த சமூகத் தலைவர்கள் இணைந்து 'அவைய்யாரம்மை' வழிபாட்டிற்காக நிலத்தை ஒப்படைத்ததையும், அந்தத் தர்மம் தலைமுறை கடந்து தொடர வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது.
நயினாவூண்ட நம்பியார் என்பது இந்தக் கல்வெட்டில் (வரிகள் 16–17) குறிப்பிடப்படும் மிக முக்கியமான ஒரு நபரைக் குறிக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் இவரைப் பற்றிய விளக்கங்கள் 

1. பெயரின் பொருள் (Etymology)
* நயினாவூண்ட: இது ஒரு இடப்பெயராகவோ அல்லது குடும்பப் பெயராகவோ இருக்கலாம். பொதுவாகக் கல்வெட்டுகளில் 'நயினார்' என்பது மரியாதைக்குரிய பெரியோர்களைக் குறிக்கும்.

* நம்பியார் (Nambiyar): தமிழகக் கல்வெட்டுகளில் 'நம்பி' அல்லது 'நம்பியார்' என்பது பொதுவாகக் கோயில்களில் பூசை செய்பவர்களையும் (Priests), ஆகம விதிகளின்படி சடங்குகளை நடத்துபவர்களையும் குறிக்கும் சொல்லாகும்.

2. கல்வெட்டில் இவருடைய பங்கு
இந்தக் கருங்காடு கல்வெட்டின்படி, நயினாவூண்ட நம்பியார் என்பவர் பின்வரும் பொறுப்புகளைக் கொண்டிருந்தார்:

* பூசை மற்றும் நிர்வாகம்: அவ்வயாரம்மைக் கோயிலுக்கு விடப்பட்ட பூதானம் (நிலம்) மூலம் வரும் வருவாயைக் கொண்டு, பூசை மற்றும் இதர சடங்குகளை (நிமித்தியம்) தடையின்றி நடத்தும் பொறுப்பு இவருடையது.

* உள்பட யிந்தவூர்: இவருடன் அந்த ஊரைச் சேர்ந்த மற்ற முக்கிய நபர்களும் இணைந்து இந்தத் தர்மத்தைக் காக்க வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.

3. சமூகத் தகுதி

15-ஆம் நூற்றாண்டு வாக்கில், 'நம்பியார்' என்ற பட்டம் கொண்டவர்கள் அந்தந்தப் பகுதி ஆட்சியாளர்களாலும், நாட்டுத் தலைவர்களாலும் (இங்கே கரையப்பக் கவுண்டர் மற்றும் அண்ணியப்பக் கவுண்டர்) மிகவும் மதிக்கப்படுபவர்களாகவும், கோயில் சொத்துக்களைப் பராமரிக்கும் நம்பகமான அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர்.

4. வரலாற்றுப் பின்னணி
பொதுவாகச் சேலம் மற்றும் ஆத்தூர் சுற்றுவட்டாரக் கல்வெட்டுகளில், ஒரு தானம் வழங்கப்படும்போது அக்கோயிலின் பூசாரி அல்லது நிர்வாகியைச் சாட்சியாகவோ அல்லது செயல்படுத்துபவராகவோ குறிப்பிடுவது மரபு. அந்த வகையில், நயினாவூண்ட நம்பியார் என்பவர் அக்காலத்தில் கருங்காடு பகுதியில் இருந்த அவைய்யாரம்மை கோயிலின் முதன்மை அர்ச்சகராகவோ அல்லது அறங்காவலராகவோ இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.

மேலதிகத் தகவல்:
இந்தக் கல்வெட்டில் வரும் 'நயினாவூண்ட' என்ற சொல், அருகே உள்ள ஏதேனும் ஒரு சிற்றூரின் பழைய பெயராக இருக்கிறதா என்று கள ஆய்வில் சரிபார்ப்பது சிறப்பாக இருக்கும்.
கருங்காடு கல்வெட்டில் (வரி 11–12) வரும் "கள்ள நாட்டில் செத்த காங்கு நாடு" என்ற குறிப்பைக் கொண்டு அதன் வரலாற்றுப் பின்னணியை வரிசைப்படுத்தலாம்:

1. புவியியல் அமைப்பு (Geography)

வரலாற்று ரீதியாக, சேலம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப்பகுதிகள் (கல்வராயன் மலை அடிவாரம்) உள்ளடக்கிய பகுதியே 'கள்ள நாடு' என அழைக்கப்பட்டது. இதில் செத்த காங்கு நாடு, கருங்காடு போன்ற பல சிற்றூர்கள் அடங்கியிருந்தன.

2. நிர்வாக முறை (Administration)

கல்வெட்டில் வரும் "நாலு கரை நாட்டார்" மற்றும் "கள்ளரை பெரிய கரியப்ப கவுண்டர்" போன்ற குறிப்புகள், இந்தப் பகுதியை ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக 'நாட்டார்' மற்றும் 'கவுண்டர்' என்ற பட்டங்கள் கொண்ட தலைவர்கள் நிர்வகித்ததைக் காட்டுகின்றன. இவர்கள் பெரும்பாலும் போர்த் தொழிலிலும், நில நிர்வாகத்திலும் சிறந்தவர்களாக இருந்தனர்.

3. கல்வெட்டு ஆதாரங்கள்

* கள்ளர் பற்று: 15-ஆம் நூற்றாண்டின் பல கல்வெட்டுகளில் இப்பகுதி 'கள்ளர்பற்று' அல்லது 'கள்ள நாடு' எனக் குறிப்பிடப்படுகிறது.

* படைத் தலைவர்கள்: சோழர் மற்றும் பாண்டியர் காலத்தில் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிறந்த படைத்தலைவர்களாகவும், எல்லைக் காவலர்களாகவும் இருந்துள்ளனர்.

* தானம் அளித்தல்: 
•  கல்வெட்டில் (வரி 5-9) வரும் கரியப்ப கவுண்டர் மற்றும் அண்ணியப்ப கவுண்டர் ஆகியோர் இந்தப் பகுதியின் 'துரைகள்' (தலைவர்கள்) என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கோயில் பூசைக்காக நிலத்தைத் தானமாக வழங்கும் அதிகாரம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.

4. இன்றைய நிலை
இன்றும் ஆத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன் மலைப் பகுதிகளில் இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மரபு சார்ந்த வழித்தோன்றல்கள் மற்றும் ஊர்ப் பெயர்கள் (உதாரணமாக: கள்ளநத்தம்) வழக்கில் உள்ளன.

சுருக்கமாக: 'கள்ளர் நாடு' என்பது 15-ஆம் நூற்றாண்டில் ஆத்தூர் மற்றும் கல்வராயன் மலைப் பகுதியில் நிலவிய ஒரு வளமான, தன்னாட்சி அதிகாரம் கொண்ட சமூக-நிர்வாகப் பிரிவாகும்
செத்த காங்கு நாடு" (அல்லது செத்தகங்கா நாடு) என்பது 15-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் காணப்படும் ஒரு முக்கியமான உட்பிரிவாகும். இந்தக் கல்வெட்டில் (வரி 12) வரும் இந்தக் குறிப்பு, அக்கால நிர்வாகப் பிரிவை (Administrative Division) துல்லியமாகக் காட்டுகிறது.

இதன் பின்னணி குறித்த விவரங்கள் 

1. பெயர்க் காரணம் (Etymology)
* செத்த : இது "சிறிய" அல்லது "கிளை" என்ற பொருளில் வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட குலத்தின் பெயராகவோ, நிலப்பரப்பின் தன்மையைக் குறிப்பதாகவோ இருக்கலாம்.
* காங்கு நாடு (Gangunadu) : இது "கங்க நாடு" என்பதன் மருவு ஆகும். இப்பகுதியை ஆண்ட கங்க மரபினரின் (Western Gangas) ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம்.
2. புவியியல் எல்லை
கல்வெட்டின் படி, கள்ள நாட்டுக்குள் அடங்கிய ஒரு சிறு பிரிவே இந்தச் "செத்த காங்கு நாடு".

* இது இன்றைய ஆத்தூர் (சேலம்) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் எல்லையில், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள ஊர்களை உள்ளடக்கியது.

* குறிப்பாக,  கருங்காடு, கள்ளநத்தம், மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்தும் இந்தக் காங்கு நாட்டுப் பிரிவிலேயே அமைந்திருந்தன.

3. நிர்வாகப் பங்கு (Administrative Role)
அக்காலத்தில் ஒரு பெரிய 'நாடு' (கள்ள நாடு) பல சிறிய நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

* இந்தக் கல்வெட்டில் வரும் பெரிய கரியப்ப கவுண்டர் மற்றும் அண்ணியப்ப கவுண்டர் ஆகியோர் இந்தச் செத்த காங்கு நாட்டின் தலைவர்களாக அல்லது 'துரைகளாக' இருந்துள்ளனர்.

* இவர்கள் அந்த நாட்டின் சார்பாகவே அவைய்யாரம்மைக்கு நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளனர்.

மலைப்பகுதிகளில் பொதுவாக விஷ்ணு (பெருமாள்) அல்லது முருகன் கோவில்களே அதிகமிருப்பதைக் காணலாம். ஆனால், இந்த கருங்காடு கல்வெட்டில் அவைய்யாரம்மைக்கு (அவ்வையார்) கோவில் கட்டி, அதற்குப் பூதானம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் தனித்துவமான ஒரு வரலாற்றுச் செய்தியாகும். இதற்கான காரணங்களை வரலாற்று மற்றும் சமூகவியல் ரீதியாகப் பின்வருமாறு பார்க்கலாம்:

இவை அனைத்தும் யூகங்கள் மட்டுமே

1. சமண சமயத் தொடர்பு (Jainism Influence)
வரலாற்று ஆய்வாளர்களின்படி, சங்க கால அவ்வையாரைத் தவிர்த்து, பிற்காலத்தில் 'அவ்வை' என்ற பெயரில் பல பெண் துறவிகள் இருந்துள்ளனர். குறிப்பாக, இயக்கி (Yakshi) வழிபாடு அல்லது சமண பெண் துறவிகளை 'அவ்வை' என்று அழைக்கும் மரபு தமிழகத்தில் இருந்தது.

* கருங்காடு மற்றும் கல்வராயன் மலைப் பகுதிகள் சமண சமயம் இருந்திருக்கலாம்

* அங்குள்ள ஒரு பெண் துறவியின் நினைவாகவோ அல்லது 'அவ்வை' எனப் போற்றப்பட்ட ஒரு தெய்வத்திற்காகவோ இந்தக் கோவில் எழுப்பப்பட்டிருக்கலாம்.

3. சித்தர்கள் மற்றும் யோகினி வழிபாடு
மலைப்பகுதிகள் சித்தர்களின் இருப்பிடமாகக் கருதப்படுபவை. அவ்வையாருக்கு 'ஞானக் குறள்' போன்ற யோக நெறி நூல்களுடன் தொடர்பு உண்டு.

* கருங்காடு பகுதியில் ஒரு பெண் சித்தர் அல்லது ஞானி வாழ்ந்து மறைந்திருக்கலாம்.
* அவரைத் தெய்வமாகப் போற்றி, அவருக்குக் கோவில் கட்டி, நித்திய பூசைகளுக்காக (வரி 14-15: பூசை நிமித்தியம்) நிலத்தை 'நயினாவூண்ட நம்பியார்' வசம் ஒப்படைத்திருக்கலாம்.
4. குலதெய்வம் அல்லது இனக்குழுத் தலைவி
மலைப்பகுதிகளில் வாழும் வேடர் அல்லது கள்ளர் இனக்குழுக்கள், தங்கள் குலத்தைச் சார்ந்த வீரமிக்க அல்லது அறிவுமிக்க மூத்த பெண்களைத் தெய்வமாக வழிபடும் (Ancestor Worship) வழக்கம் கொண்டவர்கள்.

* இந்தக் கல்வெட்டில் வரும் கரியப்ப கவுண்டர் மற்றும் அண்ணியப்ப கவுண்டர் ஆகியோர் தங்கள் குலத்தின் ஒரு முக்கியப் பெண்ணை 'அவைய்யாரம்மை' என்ற பெயரில் தெய்வமாக வரித்து வழிபட்டிருக்க வாய்ப்புண்டு.

4. கல்வி மற்றும் அறத்தின் அடையாளம்
அவ்வையார் என்பவர் கல்வி மற்றும் அறநெறியின் அடையாளமாகத் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர்.

* 15-ஆம் நூற்றாண்டில், கல்வியறிவு அல்லது சமூக அறத்தைப் பரப்ப நினைத்த நாட்டார் தலைவர்கள், அவ்வையாரைத் தெய்வமாக முன்னிறுத்தி இந்தக் கோவிலை நிறுவியிருக்கலாம்.

5. இடத்தின் சிறப்பு

நீங்கள் குறிப்பிட்ட 'கருங்காடு' என்பது அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதி. இத்தகைய இடங்களில் அன்னை தெய்வங்கள் அல்லது பெண் தெய்வ வழிபாடே (சக்தி வழிபாடு) தொடக்க காலத்தில் முதன்மையாக இருந்தது. பிற்காலத்தில்தான் வைணவ மற்றும் சைவத் தாக்கம் அதிகரித்தது. எனவே, இது மிகவும் பழமையான ஒரு வழிபாட்டுத் தளமாக இருந்திருக்கக்கூடும்.

ஆய்வு நோக்கில்:
இந்தக் கல்வெட்டில் "அவைய்யாரம்மை சுவாமியார்" (வரி 2-3) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'சுவாமியார்' என்ற சொல் அவர் ஒரு துறவி அல்லது இறைநிலை அடைந்தவர் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

அருகிலுள்ள வேறு ஏதேனும் பாறை ஓவியங்கள் அல்லது சமணச் சிற்பங்கள் (தீர்த்தங்கரர் சிலைகள்) அந்தப் பகுதியில் உள்ளனவா? அவை இந்தக் கேள்விக்கு இன்னும் துல்லியமான விடையைத் தரக்கூடும்

கட்டுரையாளர்
ஆறகளூர் பொன்.வெங்கடேசன்
தலைவர்: சேலம் வரலாற்று ஆய்வு மையம்

கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்