ஆங்கிலேயர்கள், கள்ளர்களை சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந்த குற்றப் பரம்பரைச் சட்டத்தில் மற்ற பகுதி கள்ளர்களுக்கு விலக்கு அளித்து, அதில் பிறமலை கள்ளர், தஞ்சை பகுதியில் உள்ள ஈசநாட்டு கள்ளர்களில் சூரியூர் மற்றும கந்தர்வகோட்டை பகுதி கள்ளர்களை மட்டும் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர்.
ஆங்கிலேயருக்கு பெரும் தலைவலியாகவும், தொல்லையாகவும் இருந்தவர்கள் கள்ளர்கள், அதுபோல் மிகவும் நெருங்கிய நண்பர்களாகவும், நம்பிக்கையானவர்களாகவும் இருந்தவர்கள் கள்ளர்கள்.
கள்ளர்கள் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் கொண்டுவந்த அந்த காலக்கட்டத்தில் கள்ளர் மரபினர் சிற்றரசர்களாகவும், பெரும் நில உடைமையாளர்களாகவும் இருந்தனர். (சிற்றரசர்களாக இருந்த தமிழ் குடிகள், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் விஜயநகர ஆட்சியில் பாளையகர்களாக ஒடுக்கப்பட்டனர், மேலும் ஆங்கிலேய ஆட்சியில் அதிகாரம் மற்றும் படைபலம் அற்ற ஜமீன்களாக ஒடுக்கப்பட்டனர்)
சோழமண்டலத்தில் பதிமூன்று சிற்றரசர்களில்
பாப்பா நாடு அரையர் - விஜயதேவர், பட்டம் தாங்கியவர்கள் இவர்கள் கீழ் 36 கிராமங்கள் 23412 ஏக்கர் பரப்பளவோடு இருந்தது
கந்தர்வகோட்டை அரையர் அச்சுதப்பண்டாரத்தார், பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 106 கிராமங்கள் சொந்தமாக இருந்தன.
கல்லாகோட்டை அரையர் சிங்கப்புலியார், பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 106 கிராமங்கள் சொந்தமாக இருந்தன.
பாளையவனம் அரையர் வணங்கமுடிப் பண்டாரத்தார், பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 52 கிராமங்கள் சொந்தமாக இருந்தன.
சிங்கவனம் அரையர் மெய்க்கன் கோபாலர், பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 26 கிராமங்கள் சொந்தமாக இருந்தன.
புனல்வாசல் அரையர் மழவராய பண்டாரத்தார், பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 1 கிராமம் சொந்தமாக இருந்தன.
நெடுவாசல் அரையர் பன்றிகொண்டார், பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 15 கிராமங்கள் சொந்தமாக இருந்தன.
பாதரங்கோட்டை அரையர் சிங்கப்புலியார், பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 7 கிராமங்கள் சொந்தமாக இருந்தன.
சில்லத்தூர் அரையர் பணிபூண்டார், பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 10 கிராமங்கள் சொந்தமாக இருந்தன.
மதுக்கூர் அரையர் கோபாலர், பட்டம் தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 12 கிராமங்கள் சொந்தமாக இருந்தன.
சேந்தங்குடி அரையர் வணங்காமுடி வகுவடையாரும் பட்டம்்தாங்கியவர்கள். இவர்கள் கீழ் 9 கிராமங்கள் சொந்தமாக இருந்தன.
இவர்கள் அனைவரும் கள்ளர் மரபினரே, மேலும்
தஞ்சாவூர் கள்ளர்கள்
தஞ்சாவூர் பூண்டி - வாண்டையார் பட்டம் தாங்கியவர்கள்
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை முன் உள்ள கல்வெட்டில்
Founder:-K.வீரைய்யா வாண்டையார் (1879 வருடம்)
தஞ்சாவூர் சீராளூர் - நாட்டாழ்வார், பட்டம் தாங்கியவர்கள்
தஞ்சை, சீராளூர் (பெரம்புநாடு) அம்பலகாரர் ஶ்ரீமான், வள்ளல் ரா.இராமலிங்கசுவாமி நாட.டாழ்வார் (ICS) ( London Bar in Law ). ஏழை, எளியோருக்காக இயங்கும் செங்கிப்பட்டி (TB சானிடோரியத்திற்கு) 60 ஏக்கர் நிலத்தினை அளித்த கொடை வள்ளல் இன்றும் இவர் புகைப்படம் உள்ளது.
பள்ளிவாசல் நில தானம் ( கிபி 1550), திருப்பதியில் இருக்கும் நைனார் என்பவருக்கு வழங்கிய நிலம் ( கி.பி .1741), ஸ்ரீரங்க கோவில் தானம் (கி.பி.1741)
தஞ்சாவூர் அரித்துவாரமங்கலம் - ராஜாளியார், பட்டம் தாங்கியவர்கள்
அரித்துவாரமங்கலத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி ஏழைகளின் கல்வி கண்ணை திறந்தார். ஶ்ரீமான் ராசாளியாரால் (7.6.1909) அன்று அரித்துவாரமங்கலத்தில் உள்ள பெருமாள் கோவிலில் உருவாக்கப்பட்ட கோபுரம் அவருடைய பெயரையே இன்றும் சுமந்து நிற்கிறது. மறைமலையடிகளைத் தம்மூருக்குப் பேரன்புடன் 18-1- 1912-ல் வரவேற்றுப் பெருங்களிகூர்ந்தார்.
தஞ்சாவூர் புத்தூர் - பாண்டியர், பட்டம் தாங்கியவர்கள்.
சோழவளநாட்டில் தஞ்சை பகுதியில் உள்ள அம்மாப்பேட்டை அருகில் உள்ள இராசேந்திர சோழர் காலத்தில் மூலகுடியாகிய திருபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்ட ஊர் புத்தூர். அருள்மிகு சவுந்தரநாயகி அம்பாள் சமேத புற்றிடங் கொண்டீஸ்வரர் கோயில் திருப்பணிகள் செய்பவர்கள் பாண்டியர்கள் . தஞ்சாவூர் ராணி பாரடைஸ் திரையரங்கு உரிமையாளர் திரு. நந்தகுமார் பாண்டியர் ஆவார்.
தஞ்சாவூர் காங்கேயம்பட்டி - காங்கேயர் பட்டம் தாங்கியவர்கள்.
காங்கேய அம்பலகாரர்... காங்கேயம்பட்டியின் முதன்மை காங்கேயர் என்றும் நாளத்தொண்டு காங்கேயர் என்றும் அழைப்பர். காங்கேயன்பட்டி சமஸ்தான வித்வான் அப்பாவுபிள்ளை ஆவார்.
தஞ்சாவூர் சாவடி - நாயக்கர், பட்டம்தாங்கியவர்கள்
ராமசந்திரபுரம், ராமசொயிரபுரம், மனோஜியப்பா சாவடி, ஐயம்பேட்டை என்று பெயர் மாற்றம் பெற்ற 400 ஆண்டுகள் வரலாற்று பின்னணியில் அய்யம்பேட்டை சாவடி நாயக்கர்கள் ஆயிரம் வேலி நிலம் உடையவர்கள்.
சாவடி நாயக்கர்களின் தற்போதைய வாரிசுதாரர் ஸ்ரீ கோதண்டராமர் ஆலய அறங்காவலர்
கிருஷ்ணமூர்த்தி நாயக்கர்
தஞ்சாவூர் செங்கிப்பட்டி -கூனம்பட்டி அரையர் மேற்க்கொண்டார், பட்டம் தாங்கியவர்கள்.
ஆயிரம் வேலி நிலம் உடையவர்கள்.
கள்ளர் மரபை சேர்ந்த பெரும் ஆயிரம் வேலிக்கு மேல் உள்ள நில உடைமையாளர்கள் பல நூறு பேர் இருந்தனர்.
A .R . மாரியப்பர் மல்லிக்கொண்டார்.
ஏழை, எளிய மாணவர்களுக்கு தனது மனைவியின் பெயரில் 1927 ஆம் ஆண்டு சோழபாண்டி மீனாட்சி மாரியப்பர் மல்லிக்கொண்டார் தொடக்க பள்ளி ஒன்றை ஆரம்பித்தார்.
புதுக்கோட்டை கள்ளர்கள்
தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னர் ஆட்சியும்,
பெருங்களூர் ஊராட்சியில் உள்ள போரத்தில் ராய பல்லவராயர் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் தலைமையில் 722 பேர் கொண்ட படையானது பல்லவராயர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. மன்னரின் ஆணைக்கு ஏற்ப பல போர்களில் வீர தீரம் காட்டி உள்ளனர். (General history of pudukkottai state 1916 page 240-243) • இவர்களுக்கு பல சலுகைகள் மற்றும் நிலங்கள் அளிக்கப்பட்டு இருந்தது • இவர்களிடம் வாள், கத்தி, துப்பாக்கி, வளரி ஆகியவற்றை கையாளும் திறனுடைய மிகப்பெரிய படை இருந்துள்ளது ( General history of pudukkottai state 1916 page 243)
புதுக்கோட்டை பெருங்களூர் பெருங்கொண்டார் வீடு - 1838
காடுவெட்டியார்,
கூழியார்,
கடாரதலைவர்,
காடவராயர்
தஞ்சாவூர் மாவட்டம் : - 1948 ஆம் ஆண்டு கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு நெல் உதவி செய்தவர்களில் கள்ளர் மரபை சேர்ந்த காடவராயர்கள்
P. தியாகராச காடவராயர், A. சந்திரகாசக் காடவராயர் ,A. ஏசைவராசுக் காடவராயர்
போன்ற கள்ளர் மரபை சேர்ந்த பெரும் நில உடைமையாளர்களும் இருந்தனர்.
தொண்டைமான், காடவராயன், பல்லவராயன், காடுவெட்டி ஆகிய பட்டங்கள் கள்ளர்களால் மட்டுமே இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது (Colas Vol.2. Prof.Sastri).
சிவகங்கை பகுதியில் கள்ளர் மரபை சேர்ந்த பட்டமங்கல தொண்டைமான்களும், அம்பலக்காரர்களும் பெரும் நில உடைமையாளர்களும் இருந்தனர்.
சிவகங்கை மாவட்டம்,மூனாப்புதூர் ஊரில் உள்ள இலங்கை அமைச்சருமான திரு. சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்களின் இல்லமான வயி. கரு.மாளிகை. பட்டமங்கல தொண்டைமான் மரபினரில் உதித்தவரே திரு.சௌமியமூர்த்தி தொண்டைமான்
முத்தூற்கூற்றத்து கப்பலூர் உடையான் கருமாணிக்க தொண்டையர் கோன் வழி வந்த சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கப்பலூர் நாட்டில் அம்பலக்காரர் கரு. இராமசாமி அம்பலம் என்ற நிலக்கிழாரின் மகனான கரிய மாணிக்கம் அம்பலம், இவரது மகன் கரு. ரா. இராமசாமி அம்பலம்.
பிறமலை கள்ளர்கள் காவல் உரிமை 16 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயகக்கர் காலத்திலேயே செப்புப்பட்டயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு உதவிகரமாக இருந்தவர் கூடலூரைச் சேர்ந்த அண்ணல் பேயத்தேவர். அணை கட்டப் பெரும் பங்களிப்பு செய்த இவர்தான் அதன் கட்டுமானப் பணிகளுக்காக ஆட்களையும் திரட்டி அனுப்பினார். அவரே, கூடல் அழகிய பெருமாள் கோயிலையும் நிர்வகித்து வந்தார். பென்னிகுவிக் நினைவு மணிமண்டபத்தில் பென்னிகுவிக் உடன் பேயத்தேவர் இருப்பது போன்ற படம் உள்ளது. பொதுப் பணித்துறை ஆவணத்திலும் பேயத்தேவர் பெயர் இடம்பெற்றுள்ளது.
1) கள்ளர்கள் வாழும் பகுதிகள்
குளித்தலை (குறைவாக),
திருச்சிராப்பள்ளி (சராசரியாக)
திருவெறும்பூர் (அதிகமாக)
லால்குடி (அதிகமாக)
முசிறி (சராசரியாக)
மணப்பாறை (குறைவாக)
ஸ்ரீரங்கம் (குறைவாக)
மண்ணச்சநல்லூர் (குறைவாக)
தஞ்சாவூர் (அதிகமாக)
திருவையாறு (அதிகமாக)
ஒரத்தநாடு (அதிகமாக)
பட்டுக்கோட்டை (சராசரியாக)
பேராவூரணி (குறைவாக)
கும்பகோணம் (குறைவாக)
பாபநாசம் (குறைவாக)
மன்னார்குடி (அதிகமாக)
திருவாரூர் (சராசரியாக)
நன்னிலம் (குறைவாக)
புதுக்கோட்டை (அதிகமாக)
கந்தர்வக்கோட்டை (அதிகமாக)
விராலிமலை (அதிகமாக)
திருமயம் (அதிகமாக)
ஆலங்குடி (சராசரியாக)
அறந்தாங்கி (சராசரியாக)
சிவகங்கை (அதிகமாக)
காரைக்குடி (சராசரியாக)
திருப்பத்தூர் (குறைவாக)
மானாமதுரை (குறைவாக)
மேலூர் (அதிகமாக)
உசிலம்பட்டி(அதிகமாக)
மதுரை (சராசரியாக)
சோழவந்தான் (சராசரியாக)
திருப்பரங்குன்றம் (சராசரியாக)
திருமங்கலம் (சராசரியாக)
கம்பம் உசிலம்பட்டி(அதிகமாக)
ஆண்டிபட்டி (சராசரியாக)
பெரியகுளம் (சராசரியாக)
போடிநாயக்கனூர் (சராசரியாக)
திருச்செந்தூர் (குறைவாக)
ஸ்ரீவைகுண்டம் (குறைவாக)
திண்டுக்கல் (சராசரியாக)
பழனி (குறைவாக)
ஆத்தூர் (குறைவாக)
தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம் பகுதியில் இருந்த கள்ளர் மரபினரின் ஜமீன்கள்
* பாப்பா நாடு சமீன் - விஜயதேவர்
* கந்தர்வக்கோட்டை பாளையம்|கந்தர்வகோட்டை ஜமீன் - அச்சுதப்பண்டாரத்தார்.
* பாலையவனம் பாளையம்|பாளையவனம் ஜமீன் - வணங்கமுடிப் பண்டாரத்தார்.
* சிங்கவனம் பாளையம்|சிங்கவனம் ஜமீன் - மெய்க்கன் கோபாலர்.
* மழவராய பண்டாரத்தார்|புனல்வாசல் ஜமீன் - மழவராய பண்டாரத்தார் / காளிங்கராயர்.
* நெடுவாசல் ஜமீன் - பன்றிகொண்டார்.
* பாதரங்கோட்டை ஜமீன் - சிங்கப்புலியார்.
* கல்லாக்கோட்டை பாளையம்|கல்லாகோட்டை ஜமீன் - சிங்கப்புலியார்.
* சில்லத்தூர் ஜமீன் - பணிபூண்டார்.
* மதுக்கூர் ஜமீன் - கோபாலர்.
* சேந்தங்குடி ஜமீன் - வணங்காமுடி வகுவடையார்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
ஜமீன்தார்கள்
* சாமிநாத விசய தேவர்|பாப்பா நாடு ஜமீன் ஸ்ரீ ராவ் பகதூர் சாமினாத விஜயத்தேவர்
* ராவ் பகதூர் அண்ணாசாமி தேவர்|உக்கடை ஜமீன் ஸ்ரீ ராவ் பகதூர் அண்ணாசாமி தேவர்.
* பாலையவனம் ஜமீன் ஆ. துரையரசன் வணங்கமுடி பண்டாரத்தார்.
* கந்தர்வக்கோட்டை ஜமீன் ராஜா ராமச்சந்திர துரை அச்சுதப்பண்டாரத்தார்.
* ராவ் பகதூர் வி. அப்பசாமி வாண்டையார்|பூண்டி ஸ்ரீ ராவ் பகதூர் வி. அப்பசாமி வாண்டையார்.
* விஜய ரகுநாத பல்லவராயர்|பெருங்களூர் விஜய ரகுநாத பல்லவராயர், புதுக்கோட்டை சமஸ்தானம் அரசப் பிரதிநிதி.
* அய்யம்பேட்டை சாவடி நாயக்கர்|அய்யம்பேட்டை சாவடி ஜமீன் கிருஷ்ணசாமி நாயக்கர்
* மதுக்கூர் ஜமீன் ஆர். கிருஷ்ணசாமி கோபாலர்
சுதந்திர போராட்ட வீரர்கள்
* வாளுக்கு வேலி அம்பலம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
* எஸ். ஓ. எஸ். பி. உடையப்பா அம்பலம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
* அத்திவெட்டி பெரியதம்பி மழவராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
* ஆர். வி. சுவாமிநாதன் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
* க. முத்துசாமி வல்லத்தரசு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
* கோபால்சாமி தென்கொண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
* ஆர். சுவாமிநாத மேற்கொண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
* தஞ்சையின் தியாக சொத்து ஏ.வி.ஆர். என்கிற ஏ.வி. ராமசாமி ராசாளியார்
* வீரர் R. பஞ்சநாதன் நாட்டார்
புரட்சி வீரர்கள்
* "தூக்குமேடை தியாகி" மதுரை பாலு என்ற பாலுச்சாமி தேவர்
*வீர தியாகி ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மாதுரார்
* வீர தியாகி கீழ நெம்மேலி பட்டுராசு களப்பாடியார்
* மொழிப்போரின் தளகர்த்தர் எல். கணேசன் கண்டபிள்ளை
* நரசிங்கபுரம் கொள்கைவீரர் பி. வெங்கடேச சோழகர்
* பொதுவுடைமை போராளி, தியாகி தோழர் என்.வெங்கடாசலம் கொடும்புறார்
* தஞ்சை பகுதியின் பகுத்தறிவு சிங்கம் பட்டுக்கோட்டை டேவிஸ் வாணாதிராயர்
ஆன்மீகம்
* திருமங்கையாழ்வார், வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர்.
* வரரிஷி சித்தர்
* ஸ்ரீமான் பெ.ந. குப்புசாமி கடாரத் தலைவர், தேவஸ்தான ஸ்தாபகர் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில், பர்மா.
* மதுரகவி ஆண்டவர், தமிழ்ப்பெருங்கவி மற்றும் செவ்விலக்கிய நூல்கள் இயற்றியவர்.
* கொங்கிவயல் முத்துகருப்பய்யா, ஆண்டவர் சுவாமிகள் என்கிற திருநாமத்தில் சமாதி கொண்டுள்ளார்.
* திருச்சி பிரேமானந்தா மழவராயர், ஆன்மீக குரு மற்றும் பிரேமானந்தா மடம் நிறுவியவர்.
* காசி சுவாமிகள் என்ற நிஜானந்த சுவாமிகள்
தமிழ் இலக்கியம்
* அரித்துவாரமங்கலம் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார், தமிழறிஞரும், புலவரும்.
* ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழறிஞர், சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்.
* "கலைமணி" தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், தமிழகத்தைச் சேர்ந்த தமிழறிஞரும், எழுத்தாளரும்.
* டி. வி. சாம்பசிவம் பிள்ளை, முதல் மருத்துவ அகராதியை வெளியிட்டவர்.
* திருச்சி, கூத்தப்பால் இசை தமிழ் வளர்த்த குஞ்சுராஜபாகவதர் பெரியசாமி சோமநாயக்கர்
* முனைவர் ம. நடராசன் மண்ணையார், தமிழக அரசியல்வாதி மற்றும் புதிய பார்வை இதழின் ஆசிரியர்.
* பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி நெடுவாண்டார், தமிழறிஞர், ஆய்வாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.
* முனைவர் சே. கல்பனா ஈழம்கொண்டார், தமிழறிஞர்.
* முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் சோழகர், கல்வெட்டு ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரும்.
* கவிஞானி டாக்டர் அ. மறைமலையான் மண்கொண்டார்.
* சி. எம். முத்து குச்சிராயர், தமிழ் இலக்கிய எழுத்தாளர்.
* தமிழ் வளர்க்கும் கம்பனைப் போற்றும் வல்லத்திராகோட்டை நீதிபதி ஆர் சுரேஷ்குமார் மாளுசுத்தியார்
* மாமனிதர் முத்துத் தேவர், மூவேந்தர்குல தேவர் சமூக வரலாறு நூல் எழுதியவர்
* முதன் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை மேடையில் பாடியவர் கூடலூர் வே.இராமசாமி வன்னியர்
* தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் வங்கார்
* “தமிழ்ச்செம்மல்” கோ. இளவழகன் உறந்தைராயர் (தமிழ்மண்” பதிப்பக உரிமையாளர்)
* சிங்கப்பூர் பல மொழிகள் கற்ற அ. அதிசயம் மண்கொண்டார்
* சொல்லின் செல்வர் நாகூர் சோமசுந்தர தேவர்
மொழிப்போர்
* மொழிப்போர் தியாகி வீரராசன் காலிங்கராயர்
இயற்கை அறிவியலாளர்கள்
* கோ. நம்மாழ்வார் பார்புரட்டியார், இயற்கை அறிவியலாளர்.
* நெல் இரா. ஜெயராமன் வாண்டையார், இயற்கை அறிவியலாளர்.
கல்வி சேவை
* ஸ்ரீ ராவ் பகதூர் வீரையா வாண்டையார், பூண்டி புஷ்பம் கல்லூரி
* பேராசிரியர் பி. முருகேசன் தொண்டைமான், பிரிஸ்ட் பல்கலைக்கழகம் என்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நிறுவனர்.
இசை
* கஞ்சிரா கண்டுபிடித்த புதுக்கோட்டை மா. மன்பூண்டியா பிள்ளை
திரைப்படத்துறை
* சிவாஜி கணேசன் மன்றாயர், திரைப்பட நடிகர்.
* ஆர். முத்துராமன் ஓந்திரியர், திரைப்பட நடிகர்
* மனோரமா கிளாக்குடையார், திரைப்பட நடிகை.
* பாரதிராஜா தேவர், தமிழ்த் திரைப்பட இயக்குநர்.
* வைரமுத்து தேவர், பாடலாசிரியர்.
* வினுச்சக்கரவர்த்தி தேவர், திரைப்பட நடிகர்
* கலைமாமணி பெரிய கருப்பு தேவர், திரைப்பட நடிகர்
* வாகை சந்திரசேகர் தேவர், திரைப்பட நடிகர்
* பிரபு மன்றாயர், திரைப்பட நடிகர்
* கார்த்திக் ஓந்திரியர், திரைப்பட நடிகர்
* பசுபதி ஆர்சுத்தியார், திரைப்பட நடிகர்
* சினேகன் கொடும்புரார், பாடலாசிரியர்.
* இயக்குனர் சற்குணம் கண்டியர்
* ரவிவர்மன் விஜயதேவர், ஒளிப்பதிவாளர்
விளையாட்டுத்துறை
* தமிழ்நாட்டின் வாலிபால் சிங்கம் கருஞ்சிறுத்தை அருச்சுனா விருது வென்ற ஏ. பழனிசாமி தேவர்
* காசிநாதன் பாஸ்கரன் சிட்டாச்சியார், இந்திய கபடி விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளர்.
* கண்டரமாணிக்கம் இராமன் விஜயன் அம்பலம், இந்திய கால்பந்தாட்ட ரசிகர்களால் "கோல்டன்கோல் விஜயன்" எனப்போற்றப்பட்டவர் .
* தர்மராஜ் சேரலாதன் சோழகர், இந்திய கபடி வீரர் மற்றும் 2016 இல் நடந்த கபடி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் உறுப்பினர்.
* ப. அனுராதா உத்தமுண்டார், தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை.
* கேப்டன் பவித்ரா சேதுராயர், தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் கேப்டன்.
* உசிலம்பட்டி கணேசன் தேவர், உயரம் குன்றியவர்களுக்கான உலக தடகள போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவர்.
* பொய்யுண்டார்குடிக்காடு சுஷாந்திகா விஜயதேவர், ஓமானிய பெண்கள் கிரிக்கெட் அணி
வள்ளல்கள்
* கொடைவள்ளல் திரு.க.சந்திரசேகரன் மழவராய, பூதலூரில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தன்னுடைய 2 ஏக்கர், 17 சென்ட் நிலத்தை தானமாக அளித்தவர்.
* பெருவள்ளல் தென்னங்குடி நா. சுந்தரராச நாட்டார், . 22 ஏக்கர் 50 செண்ட் பரப்பளவு கொண்ட விளை நிலங்களை, அறக்கட்டளைக்காக எழுதி வைத்தார்.
* ஆயி பூரணம்மாள் உக்கிரபாண்டியத் தேவர், கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார்.
* கவரப்பட்டு வள்ளல் அய்யா ஶ்ரீ மான் மாரியப்ப வாண்டையார்.
ஜல்லிக்கட்டு நாயகர்கள்
* எதற்கும் அஞ்சாத வாடிவாசல் வீரன் அழகாத் தேவன், 400 ஆண்டுகளுக்கு முன்பு வீரமரணமடைந்த அழகாத்தேவன், சொரிக்காம்பட்டி கிராம எல்லையில் கோவில்கருவறையில் காளையோடு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறான்
* ஜல்லிக்கட்டு நாயகன் பி. ராஜசேகர் அம்பலம், ஜல்லிகட்டின் பாதுகாவலர் ஜல்லிகட்டு பேரவை தலைவர்
* வீரமரணமடைந்த மாடுபிடி வீரர் திரு. செல்லச்சாமி அம்பலம், மேலநாடு தென்பறப்பு நாடு முக்கம்பட்டி மஞ்சுவிரட்டில் 1958ல் வீரமரணமடைந்த மாடுபிடி வீரர்.
* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாவீரன் சங்கங் கோட்டை ஸ்ரீதர் தேவர், 2020 ல் வீரமரணமடைந்த மாடுபிடி வீரர்.
* PK ஹரி சோழகர், 2020 கிள்ளனுர் ஜல்லிகட்டில் முதல் பரிசு
* மணி ஓணயர் அவர்கள் 2020 நாஞ்சிக்கோட்டை ஜல்லிக்கட்டுவில் முதல் பரிசு
* யோகேஷ் மழவராயர், 2022 ஆண்டு பெரிய சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி முதலிடம்
* அபிசித்தர் அம்பலம், மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் 10 காளைகளை அடக்கி முதலிடம்
* கருப்பாயூரணி கார்த்தி அம்பலம் , 2024 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு.
* பூவந்தி அபிசித்தர் அம்பலம், 2024 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2 ஆம் பரிசு.
* குன்னத்தூர் திவாகர் அம்பலம் 2024 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 3 ஆம் பரிசு.
* எஸ். அருண் மாளுசுத்தியார், 2020 மனோஜிப்பட்டி ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 7 மாடு பிடித்தசிறந்த கபடி வீரரும் ஆவார்.
அரசியல்
* பா. கா. மூக்கைய்யாத்தேவர், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு| தமிழக பார்வார்டு பிளாக்கு கட்சியின் தலைவர்.
* கரியமாணிக்கம் அம்பலம், தமிழக அரசியல்வாதி.
* சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை அரசியல்வாதி.
* கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன் தேவர்
* ச. சாமிவேலு, முன்னாள் மலேசிய இந்திய காங்கிரசு தலைவர், ஊராட்சி வீடமைப்புத் துறை மற்றும் பொதுப்பணி அமைச்சராக இருந்தவர்.
* ச. சுப்பிரமணியம் சேர்வை, மலேசிய இந்திய காங்கிரசு தலைவர் மற்றும் மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர்.
* இரா. தமிழ்ச்செல்வன் ராங்கியர், மராட்டிய அரசியல்வாதி.
* ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான், தமிழக அரசியல்வாதி
* வி. இராமையா|வி. இராமையா சேப்பிளார், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் பொதுப்பணித்துறை, உணவுத்துறை அமைச்சர்
* மன்னை நாராயணசாமி ஓந்திரையர், தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் கூட்டுறவு, விவசாயம், உள்ளாட்சித் துறை அமைச்சர்.
* எஸ். டி. சோமசுந்தரம் கோபாலர், தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர்.
* டி. என். அனந்தநாயகி வாண்டையார், இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர்.
* கே. வி. சுப்பையா, தமிழக அரசியல்வாதி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்.
* ஆறுமுகன் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி மற்றும் முன்னாள் கால்நடைவள, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர்
* வி. கே. சசிகலா சாளுவர், தமிழக அரசியல்வாதி மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர்.
* டி. டி. வி. தினகரன் முனையதரையர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அஇஅதிமுக முன்னாள் பொருளாளரும் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்|அம்முக நிறுவனர்
* ஸ்ரீதர் வாண்டையார், தலைவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
* ஜீவன் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி மற்றும் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராசாங்க அமைச்சர்.
* அன்பில் பி. தர்மலிங்கம் நாட்டார், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் உள்ளாட்சி நிர்வாகம், வேளாண் அமைச்சர்.
* மா. இராஜாங்கம்|கூடலூர் மா. இராஜாங்கம் தேவர், தமிழக அரசியல்வாதி மற்றும் மொழிப்போர் தியாகி.
* எல். கணேசன் கண்டபிள்ளை, தமிழக அரசியல்வாதி மற்றும் மொழிப்போர் தியாகி.
* தா. வீராசாமி அதிகைமான், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னால் உணவுத்துறை, வணிகவரித்துறை அமைச்சர்.
* எஸ். எஸ். பழனிமாணிக்கம் வன்னியர், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர்.
* மருத்துவர் சி. விஜயபாஸ்கர் மழவராயர், தமிழக அரசியல்வாதி மற்றும் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர்.
* திண்டுக்கல் சீனிவாசன் தேவர், தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக வனத்துறை அமைச்சர்.
* ஆர். காமராஜ் காளிங்கராயர், தமிழக அரசியல்வாதி மற்றும் உணவுத்துறை அமைச்சர்.
* ஆர். வைத்திலிங்கம் சேதுராயர், தமிழக அரசியல்வாதி மற்றும் தொழில்துறை, வனம், சுற்றுச்சூழல் வீட்டுவசதி மற்றும ஊரக வீட்டுவசதித் துறை அமைச்சர்.
* இ. பெரியசாமி|திண்டுக்கல் இ. பெரியசாமி சேர்வைகாரர், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் உணவு, வருவாய், வீட்டுவசதித்துறை அமைச்சர்.
* அழகு. திருநாவுக்கரசு சேண்டபிரியர், தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர்.
* செல்லூர் கே. ராஜூ தேவர், தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்.
* துரை. விஜயரகுநாத பல்லவராயர்
* ஏ. தியாகராஜன் காடுவெட்டியார், தமிழக அரசியல்வாதி.
* க. ரா. இராமசாமி அம்பலம், தமிழக அரசியல்வாதி.
* நா. சுந்தர்ராஜ் சேப்ளார், தமிழக அரசியல்வாதி.
* துரை சந்திரசேகரன் பாண்டுரார், தமிழக அரசியல்வாதி.
* ஜி. முருகையா சேதுரார், தமிழக அரசியல்வாதி.
* கோவிந்தராசு கலிங்கராயர், தமிழக அரசியல்வாதி.
* கே. என். சேகரன் கார்கொண்டார், தமிழக அரசியல்வாதி
* கே. மாயத்தேவர், தமிழக அரசியல்வாதி.
* சிவராமன் அம்பலம் தமிழக அரசியல்வாதி
* எஸ். ஆண்டித்தேவர், தமிழக அரசியல்வாதி.
* கி. அய்யாறு வாண்டையார், தமிழக அரசியல்வாதி
* சின்னக்கருப்பன் அம்பலம், தமிழக அரசியல்வாதி
* பெரியக்கருப்பன் அம்பலம், தமிழக அரசியல்வாதி
* அன்பில் பெரியசாமி நாட்டார், தமிழக அரசியல்வாதி
* செந்தில் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி.
* ஆர். சாமி அம்பலம், தமிழக அரசியல்வாதி
* அன்பில் பொய்யாமொழி நாட்டார், தமிழக அரசியல்வாதி.





























