செவ்வாய், 27 மார்ச், 2018

சுதந்திர போராட்ட வீரர் கருப்பையா அம்பலம்


சிவகங்கைசீமை பட்டமங்கல நாடு பண்ணைதிருத்தி கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் K.R.P.அம்பலம் என்ற கருப்பையா அம்பலம் அவர்கள் 15.9.1918-ம் ஆண்டு ஓர் விவாசாயக் குடும்பத்தில் பிறந்து எளிமைமிக்கவராகவும் அனைத்துதரப்பு மக்களிடமும் ஏற்ற தாழ்வு இன்றி இணக்கமாக வாழ்ந்தவர்.

வங்கத்து சிங்கம் நேதாஜி அவர்களால் ஈர்க்கப்பட்ட ஐயா KR.P அம்பலம், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து குரல் கொடுத்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற்று சிறை சென்றவர். 

ஆங்கிலேய அடக்குமுறையை அனைவரிடமும் எடுத்துரைத்து போராட்டம் பல கண்டவர். ஆங்கிலேய அரசாங்கம் இவருக்கு சிறை தண்டனை வழங்கியது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 
தன்னுடைய சுய உழைப்பில் ஏழை எளியவர்களுக்கு தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார்.

ஐயா KR.Pஅம்பலம் 27.6.1996-ம் ஆண்டு மண்ணை விட்டு மறைந்தார். ஆனால் 2004-ம் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களால் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு பெற்றதற்க்காக பதக்கம் வழங்கப்பட்டது.


ஐயா KR.P அம்பலம் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்