ஞாயிறு, 11 மார்ச், 2018

வீரசிங்க மகாநாடு




திருவெறும்பூர், திருஎறும்பியூர் என்பது திரிந்து திருவெறும்பூர் என மாறியது. திருச்சிராப்பள்ளி மாநராட்சிக்குள் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அமைந்துள்ள திரு எறும்பீஸ்வரர் கோயிலின் காரணமாக இந்நகருக்கு இப்பெயர் வழங்கப்படுகிறது. எறும்பீஸ்வரர் கோயிலின் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கவேல் முனையதரையர்,  முருகையா நாவலங்கியர் 

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் உள்ள கள்ளர் நாட்டின் வீரசிங்க மகாநாடு சேர்ந்தது நவல்பட்டு கிராமம் உள்ளது. இங்கு காடவராயர் பட்டமுடைய கள்ளர் மரபினரே அம்பலகாரர்களா உள்ளனர்.

அப்பகுதியில் வசிக்கும் கள்ளர் சமுதாயத்தினர், 300 தலைக்கட்டு உறவினர்கள், ஸ்ரீபொன்னலாண்டி அம்மன் என்ற கோவிலில் பரம்பரையாக வழிபட்டு வருகின்றனர். 

இது குலதெய்வமாகவும், அப்பகுதியினர் வழிபடும் முக்கிய தெய்வமாகவும் உள்ளது.





விஜயதசமியான கோவிலில் அம்பு விடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 

கோவில் அம்பலத்தாருக்கு முதல் மரியாதை செலுத்தப்படும். 



தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு விஜி காடவராயர் 



இங்கு உள்ள கள்ளர் மரபினரின் பட்டங்கள்


அயிரபிரியர்
காடவராயர்
காடுரார்
வளம்பர்
கவிராயர்
கருப்பட்டியார்



இரட்டைமலை ஒண்டி கருப்பசாமி



இரட்டைமலை ஒண்டி கருப்பசாமி  கோயிலுக்கு நவல்பட்டு கிராமத்தை சேர்ந்த காரைகாச்சி (கள்ளரில் காரையாட்சி / காரைக்காச்சி பட்டம் உடையவர்கள் ) கரையினர் வணங்கி வருகின்றனர்.


நவல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நிலம் கொடுத்த கொடைவள்ளல் P.வைத்தியலிங்கம் காடுறார் ஆவார்.


திருவெறும்பூரை அடுத்துள்ள நவல்பட்டு நவலி குளத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதில், பங்கேற்பதற்காக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள், 450 வீரர்கள் மேலாக கலந்துகொள்வார்கள்.


முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்படும், அதனைதொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்படும். 

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்