வியாழன், 29 மார்ச், 2018

கருமாணிக்கம் ரா. இராமசாமி அம்பலம்




காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவரும், காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருமாணிக்க தொண்டைமானின் வழிவந்த கே.ஆர். ராமசாமி அம்பலம்

க. ரா. இராமசாமி (ஆங்கிலம்: K. R. Ramasamy) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், மற்றும் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 

இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, தொடர்ச்சியாக ஐந்துமுறை  இந்திய தேசிய காங்கிரசு மற்றும் த.மா.கா கட்சிகளின் சார்பாக திருவாடாணை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1989, 1991, 1996, 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2016 ஆவது ஆண்டில் நடைபெற்ற 2016 சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.




இவர் தமிழ்நாடு பொது கணக்குக்குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவரது தந்தை கரியமாணிக்கம் அம்பலம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற இவர் காங்கிரசு கட்சியின் சட்டமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கே.ஆர். ராமசாமி 5 முறை திருவாடானை தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்த திருவாடானையை 2011 தேர்தலில் திமுக கைப்பற்றியது. இந்த தேர்தலில் அதிமுக கைப்பற்றி விட்டது.

கடந்த 2011 தேர்தலிலேயே காரைக்குடிக்கு மாறி விட்டார் ராமசாமி. அத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சித. சோழன் பழனிச்சாமியிடம் தோல்வியுற்றார். ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோவை வீழ்த்தி எம்.எல்.ஏவாகி விட்டார்.

மூத்த தலைவர் என்ற முறையிலும், காங்கிரஸ் தலைவர் முயற்சிகள் நடக்கிறது.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்