திங்கள், 12 மார்ச், 2018

தஞ்சை கள்ளர்நாடு ஒரத்தநாடு - கள்ளர் நாடு





ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். சோழனை உறந்தையர்கோன் என்று அழைத்தனர். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது. இதனை முத்தம்பாள்புரம் எனவும் முத்தம்பாள்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. 

இத்தொகுதியில் "தி.மு.க., காங்கிரஸ் & அ.தி.மு.க" என பல கட்சிகள் போட்டியிட்டு அதில் கள்ளர் குடியில் பிறந்த வெற்றி வேட்பாளர்கள்.


திரு எல்.கணேசன் கண்டபிள்ளை (1967, 1971 & 1989),

திரு டி.எம்.தைலப்பன் மல்லிகொண்டார் (1977),

திரு த.வீராசாமி அதியமான் (1980, 1984),

திரு அழகு.திருநாவுக்கரசு சேண்டப்பிரியர் (1991),

திரு பி.ராஜமாணிக்கம் தேவர் (1996),

திரு ஆர்.வைத்திலிங்கம் சேதுராயர் (2001, 2006 & 2011)"

திரு. எம். ராமச்சந்திரன் சாளுவர் (2016)
ஆகியோர்கள் "சட்டமன்ற உறுப்பினர்களாக" வெற்றிபெற்றுள்ளனர்.

இவர்களில் திரு எல்.கணேசன் கண்டபிள்ளை அவர்கள் மூன்றுமுறையும்,

திரு ஆர்.வைத்திலிங்கம் சேதுராயர் அவர்கள் தொடர்ச்சியாக மூன்றுமுறையும் இத்தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளனர்.

பல்லவராயர் வரலாறு - பல்லவராய மன்னர்கள் - பல்லவராயன்

பல்லவராயர்கள் பல்லவராய சுதந்திர போராட்ட வீரர்கள்  பல்லவராயர் கள்ளர் சாதி  ( தமிழக அரசு) தமிழக வரலாறு [பேராசிரியர் அறுவர் சொற்பொழிவுக...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்