திங்கள், 1 ஜனவரி, 2007

முலக்கரம் / முலைவரி / Breast Tax / தோள் சீலைப் போராட்டம்


முலைவரி காட்டியதாக குறிப்படப்படும் சாதிகள் நாடார் , ஈழவர், காவேரி நாவிதர், பறையர், புலையர், சாம்பவர், வள்ளுவர், சேரமர்.  


ஆனால் அகிலத்திரட்டு என்பது நாடார்களால் நாடார் களுக்கு எழுதப்பட்டவை. அதில் மறவர், இடையர், வாணியர், அருந்ததியர், பரதவர், துலுக்கர், கம்மாளர் எல்லாரும் தோள் சீலை போராட்டம் நடத்தியதாகவும், திருவிதாங்கூர் அரசர்கள் இவர்களை தாழ்த்தப்பட்ட மக்களாக நடத்தினர்கள் என்றும் ஆதாரமற்ற கற்பனையாக எழுதியுள்ளனர்.



‘முலக்கரம்.' இது பெண்களின் மீது விதிக்கப் பட்ட வரி. அன்றைய திருவிதாங்கூர் சமஸ் தானத்தின் (இன்றைய கேரளப் பகுதி) மன்னர் தான் வரியை விதித்தான். 1800-ம் ஆண்டுகளில் ஆடை, அணிகலன்கள் செல்வச்செழிப்பின் அடையாளமாகவும் உயர் சாதிக்காரர்கள் என்று தங்களை அழைத் துக்கொண்டவர்களுக்கே உரித்தானவை யாகவும் இருந்தன. வறுமையில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அவற்றை அணிய அனுமதி இல்லை. தாழ்ந்த சாதியினர் என்று சொல்லி பிறரால் ஒடுக்கப்பட்ட மக்களான சாணார் மற்றும் ஈழவ சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் உயர்சாதிக்காரர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள் முன்னிலையில் தங்கள் மார்பை மறைக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை.

திருவிதாங்கூரின் ‘பூர்வீக வாழ்க்கை’ என்ற நூலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப் பட்ட இதுபோன்ற இன்னல்கள் குறித்து விரிவாகவே எழுதியுள்ளார் எழுத் தாளர் சாமுவேல். அந்த மக்களின் மீது 110 விதமான வரிகள் விதிக்கப் பட்டிருந்தன என்றால்... அது எத்தகைய கொடுமை. வறுமையிலும் பசி, பட்டினியிலும் வாழ்ந்து கொண்டிருந்த அம்மக்களின் வாழ்க்தைத் தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, வரிகளை விதித்து கொடுங்கோன்மையை அரங்கேற்றி யிருக்கிறார் அந்த மன்னர். ஆடை களை அணியத் தடைவிதிக்கும் அளவுக்கு மதிகெட்டுப் போனவரை மன்னர் என்று சொல்வதற்கே மனது வரவில்லை.

சாமுவேல் எழுதியிருக்கும் புத்தகத் தில் மேலாடை ஏதுமின்றி, திறந்த மார்பகங்களோடு நின்றிருக்கும் அச்சமூக மக்களின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. 

அரசாங்கத்தின் ஆணையை மீறி ஆடை அணிந்த பெண்களுக்குத் தான் `முலக்கரம்' எனும் முலைவரி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரியை விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள், சம்பந்தப் பட்ட பெண்ணின் மார்பைத் தொட்டு அளவிட்டு, அதற்கேற்ப வரி விதிக்கும் கொடுமைகளும் அரங்கேறி யிருக்கின்றன.

தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லி ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமல்ல, உயர்சாதி என்று அழைக்கப்படும் நாயர் சாதியைச் சேர்ந்த பெண்களையும்கூட இத்தகைய கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள் அக்காலத்தில். அதாவது, பிராமணர்கள் முன்பாக நாயர் சாதி பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது என்கிற கட்டுப்பாடு இருந்திருக்கிறது. மற்ற சமயங்களில் சல்லாத் துணி போன்ற முண்டுடுத்தி மார்பை மறைத்திருக்கிறார்கள், நாயர் இனப் பெண்கள். இவர்கள், வரி கட்டத் தேவையில்லை என்பது மட்டுமே, இவர்களுடைய `உயர்சாதி’க்காக வழங்கப்பட்ட சலுகை.

கேரளாவின் மத்தியப் பகுதியில் உள்ள சேர்தலாவில், இன்றும் பாடப் பட்டு வருகிறது ஒரு நாட்டுப் பாடல். அந்தப் பாடலின் நாயகி... நங்கேலி.

மார்பில் துணிகொண்டு மூடுவதற்குத் தடை விதிக்கப்பட் டிருந்ததை ஏற்க மறுத்தார் நங்கேலி. உயர்சாதிக்காரர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட கொடூரர்களின் கண்களுக்கு, தன்னுடைய மார்பைக் காட்ட முடியாது என்று கொந்தளித்த நங்கேலி, ஆடைகொண்டு மறைத்தார். இந்த விஷயம், வரிவிதிக்கும் பர்வதியர் என்ற அரசு ஊழியனின் கவனத்துக்குச் சென்றது. இதையடுத்து, சட்டத்துக்கு எதிராக நடப்பது சரியல்ல என்று நங்கேலியை எச்சரித் தான். அதையும் மீறி, மார்பை மறைத்துச்சென்றார் நங்கேலி.

வரி விதிப்பவரும், வரி வசூலிப்பவரும் நங்கேலியின் வீட்டுக்கே சென்று, முலை வரியைத் தீர்மானிப்பதற்காக, `உன் மார்பைத் திறந்துகாட்டு’ என்று நங்கேலிக்கு உத்தர விட்டார்கள். சட்டென்று வீட்டுக்குள் சென்ற நங்கேலி, ஒரு வாழையிலையைக் கொண்டு வந்து அவர்கள் முன் தரையில் விரித்து, விளக்கும் ஏற்றினார். கத்தியோடு வந்த நங்கேலி, சட்டென்று தன்னுடைய முலைகளை அறுத்து ரத்தம் சொட்டச்சொட்ட வாழை இலையில் வைத்தார். சற்றுநேரத்தில் அவருடைய உயிர் பறிபோனது. முலைக்கு வரி கட்டுவதைவிட, உயிர் துறப்பேன் என்று செயலால் உணர்த்தினார். அதிர்ந்துபோன அரசு ஊழியர்கள், பயந்தோடி பதுங்கினர்.

வீடு திரும்பிய கணவன் சிறுகண்டன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மனைவி நங்கேலியைக் கண்டு அலறித் துடித்தார். மறுநாள், மனைவியின் சிதைக்குத் தீமூட்டி, அதில் பாய்ந்து தன்னையும் மாய்த்துக் கொண்டதாகத் தகவல்கள் கூறு கின்றன. ஓர் ஆண் உடன்கட்டை ஏறிய முதல் சம்பவம் இதுவென வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக் கின்றன.

ஈழவ சமூகத்தைச் சேர்ந்த நங்கேலியின் மரணம், தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் கலவரமாக வெடித்தது. அநாகரிகமான இந்த வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்றைய சென்னை மாகாண கவர்னர், பிரிட்டிஷ் அரசிக்கு கடிதம் எழுதி, அந்த வரிக்கு தடைவிதிக்கக் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்தே திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முலைவரி ரத்து செய்யப்பட்டு, மார்பை மறைக்கும் ஆடை அணிய அனுமதியும் வழங்கப் பட்டது.


`முலக்கரம்' வரியை எதிர்த்து நங்கேலி, தன் முலைகளை அறுத்து உயிர் துறந்த இடம், இன்றைக்கும் ‘முலச்சிப் பறம்பு’ என்றும் அழைக்கப்படுகிறது.

முலைவரி மற்றும் நங்கேலியின் தியாகம் ஆகியவற்றை சாதியம், மோதல் மற்றும் ஆடை மாற்றம் என்ற தலைப்பில் மத்திய பள்ளிக் கல்வி வாரியம், பள்ளிக்கூட பாடமாக வைத்தது. ஆனால், சமூகநீதிக்கான வழக்கறிஞர் அமைப்பு, சாணார்கள் என்னும் நாடார்களை இழிவுபடுத்தும் செயல்; திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பூர்வகுடிகள் நாயர்கள் என்று சொல்லப்பட்டிருப்பதும் தவறு; நாடார்களே பூர்வகுடிகள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். நாடார் சமுதாயப் பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, கிறிஸ்துவ மத ஆலயங்கள் நடத்திய போராட்டங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

1836-ம் ஆண்டிலிருந்து அய்யா வைகுந்தர் நடத்திய போராட்டங்கள் பாடத்தில் சேர்க்கப்படவில்லை. இவற்றையெல்லாம் முன்வைத்து, முலைவரி தொடர்பான பள்ளிக்கூட பாடத்தைத் தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதை யடுத்து, நங்கேலியின் கதையை 2016-ம் ஆண்டு பாடத் திட்டத்திலிருந்து நீக்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.









































கட்டுரை :  ஆனந்த விகடன்
வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி; 
ஓவியம்: ஜீவா

சாளுவர்

சாளுவர் 

.........

 .........

.........

 .........

.........

 .........

.........

 .........

..................

 .........

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்