செவ்வாய், 20 ஜூன், 2023

புதுக்கோட்டை




தமிழகத்துப் பழம்பெறும் நகரங்களுள் அதிகம் அறியப்படாத ஆனால், தனக்கே உரிய விதத்தில் முக்கியத்துவம் கொண்ட நகரம் - புதுக்கோட்டை.

மன்னர் காலத்துக் கோயில்கள், அரண்மனைகள், நீர்த்தேக்கங்கள், கடைத்தெருக்கள் எனப் புதுக்கோட்டையும் அதன் சுற்றுப்புறக் குடியிருப்புகளும் நாகரிகம் செழித்தோங்கிய நிலப்பரப்பு. இப்போதும் அதன் தன்மை மாறாது நவீனத் தோற்றம் தாங்கி நிற்கிறது,
இச்சிறு நகரம்!

நிலவமைப்பு, பரப்பளவு, வடிவமைப்பு, வாழ்விட தன்மை, காலநிலை என்று நிலைநிற்கும் புதுக்கோட்டையின் குடிமக்கள் வரலாறு சித்தன்னவாசல், நார்த்தாமலை என நெடியது. அதேபோல், அரச வரலாறும் சோழர்கள் தொட்டு தொண்டைமான் வரை நீளும்.

தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களாக சோழர் காலத்து நார்த்தாமலை கற்கோயிலாயினும் தொண்டைமான்களின் அரண்மனை, கடைத்தெருக்கள், மாநிலத்தின் இரண்டாம் முக்கிய அருங்காட்சியகம், நூற்றாண்டு கண்ட தேவாலயமாயினும் இன்றும் களிப்புணர்த்துகிறது.

அடர்பச்சை நீரில் பாதிப் படிக்கட்டுகளை மூழ்கடித்த குளத்து நீர். உச்சிமுனையின் இலைகள் உதிர்ந்தும், அதன் அடிபாகத்தில் பசுமையான இலைகளோடும் உள்ள ஓர் அரசமரம். பளிச்சிடும் வண்ணங்களான சாந்தநாத சுவாமி கோயில் கோபுரம்.


மல்லாக்க அலையடிக்கும் கடலின் நீலம், அதன்மீது வெள்ளலைகள் போல் மேகங்கள். அவற்றை ஏந்தி நிற்கும் கத்தோலிக்க தேவாலயத்துக் கோபுரங்கள்.


மொத்த வரலாற்றை அடுக்கியும், நிறுத்தியும் வைத்துப் பாதுகாக்கும் அருங்காட்சியகம்!


மின்சாரக் கம்பிக்கும் மேலே பறக்கும் பறவை. பாதி வெள்ளையாகவும் பாதி நீலமாகவும் உள்ள ஆகாயம். விடியுமா என்று மக்கள் காத்திருக்கும் நீதிமன்ற வாசல், அதன்பின்புறம் மறைந்தபடி ஒளிரும் சூரியன்.


சாலையின் இருபுறமும் மரங்களைப் போல் உயர்ந்து நிற்கும் கட்டடங்கள். அதன் நடுவுல மேலே தெரியும் தெரியும் வாய்க்கால் போன்ற வானம். கீழே ஒற்றையடிப் பாதை பூமி. இருபக்க கட்டடங்களை இணைக்கும் மின்சாரக் கம்பிகள். வாகனங்களிலும் நடந்தும் பயணிக்கும் நவீன மனிதர்கள்.


ஈரத்தை மட்டும் விட்டுவிட்டு இறங்கிய தெளிவான நீரில் மிதக்கும் மேகம். பயணித்தவர்களின் தடங்களை மட்டும் வைத்திருக்கும் கரை ஒதுங்கிய படகு. இது நவீனத்தில் சிதைந்தப் புதுக்குளம்.


உளிகளின் சத்தம் அடங்கிய சிறுசிறு சிலைகள் உள்ள நார்த்தமலை கற்கோயில். அதன் கோபுரத்தில் இடுக்கில் வேர்விட்ட செடி.


போரும்-புறமும் ஆன திருமயம் மலைக்கோட்டை. மரங்களுக்கிடையே உள்ள கட்டிடங்களை குறிவைத்திருக்கிறது ஹார்ட்டின் வரைந்த பீரங்கி.


புதிய அரண்மனையின் மேல் பறக்கும் புறாக்கள் யாரிடம் தூது செல்கிறதோ?


வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்