திங்கள், 26 ஜூன், 2023

அடப்பகாரசத்திரம்




கிபி 1797 ல் புதுக்கோட்டை மன்னர் விஜய இரகுநாத தொண்டைமான் தன்னிடம் அடப்பக்காரராக வேலை செய்த கூத்தப்பன் என்பவரிடம் கொண்ட அன்பினால் அவரது பெயரால் அன்னதான சத்திரம் ஒன்றை புதுக்கோட்டை- ராமேஸ்வரம் மார்க்கத்தில் கட்டினார். அடப்பகாரசத்திரம் - விசுவாசத்திற்கு மன்னர் அளித்த பரிசு


* பெளர்ணமி அன்று சத்திரத்திற்கான கொடைகளை அளித்தார்.

* அன்னதான கூடத்துக்கு சில ஊர்களையும், 70 பாத்திரங்கள், 100 பசுமாடுகளும், 200 ஆடுகளும் தானமாக வழங்கினார்.


* அடப்பன் கூத்தப்பனின் சிலையை அன்னதான கூடத்தின் வாயிலில் நிறுவினார்.

* மன்னர்கள் தங்களது சிலைகளை வைத்து புகழ்பரப்புவதே வழக்கம். ஆனால் தன்னிடம் பணிபுரிந்த அடப்பகாரரின் விசுவாசத்தை பாராட்டி அவரது பெயரால் சத்திரம் கட்டி , அவரது சிலையை வைத்து மரியாதை செய்த தொண்டைமான் மன்னரின் ஈகை குணம் போற்றுதலுக்குரியது.


* அடப்பகாரரின் பேரால் கட்டப்பட்ட சத்திரம் உள்ளதால் இந்த பகுதி இன்று அடப்பகார சத்திரம் என்றே அழைக்கப்படுகிறது.




* 220 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பல தலைமுறைகளை கண்ட சத்திரம் இன்றும் நல்ல நிலையில் கம்பீரமாக காட்சி அளத்தாலும், சரியான பராமரிப்பின்றி உள்ளது.

அடைப்பக்காரர் என்பது அரசருடனேயே இருந்து தாம்பூலம் மடித்துக்கொடுக்கும் பதவி. எளிய சேவகனின் பணி அல்ல. அது அரசனுடனேயே இருந்து அனைத்து ரகசியங்களையும் தெரிந்துகொண்டு மந்திராலோசனைகளில் இடம்பெறுப்வரின் பொறுப்பு கொண்டது.விஸ்வநாதநாயக்கர் கிருஷ்ணதேவராயரின் அடைப்பக்காரராக இருந்தவர். தஞ்சை நாயக்கர் மரபின் முதல்நாயக்கரான சேவப்ப நாயக்கர் விஜயநகர மன்னர் அச்சுதப்பநாயக்கரின் அடைப்பக்காரராக இருந்தவர்தான்

இருநூற்றாண்டுகளாக நட்பின் அடையாளமாக விளங்கும் அன்னதான சத்திரம், காக்கப்பட வேண்டிய வரலாற்று சிறப்பிடம் என்பதில் ஐயமில்லை.

(அடப்பகாரன் செப்பேடு (கிபி1797)தொண்டைமான்­ செப்பேடுகள்)

தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்