பல்லவர் கொடி
புதுக்கோட்டை தொண்டைமான் கொடி
ஐயா. வேங்கடசாமி நாட்டார் தான் எழுதிய கள்ளர் சரித்திரம் என்ற நூலில்,
கள்ளர் குலத்தவர் எவ்வகுப்பிலடங்குவர் என்பது பற்றி வேறுபட்ட கொள்கைகள் உண்டு. இவர்களை நாகர் வகுப்பின ரெனச் சிலரும், சோழர் வகுப்பினரெனச் சிலரும், பல்லவர் வகுப்பின ரெனச் சிலரும் கூறுவர்.
வின்சன் ஏ. ஸ்மித் என்னும் சரித்திர அறிஞர் ‘புராதன இந்திய சரித்திரம்'’ என்னும் தமது நூலில் பல்லவர் வரலாறு கூறுமிடத்தே கள்ளர் வகுப்பினரையும் இயைந்து கூறுகின்றனர்.
பல்லவர் ஒரு கொள்ளைக் கூட்டத்தார், அல்லது வகுப்பினர் என்றும், தங்களது வலிமையால் சோணாடு முதலிய நாடுகளைத் தமது ஆட்சிக் குட்படுத்தினர்கள்.
ஆக்ஸ்போர்டின் இந்திய வரலாறு-III
ஐயா. வேங்கடசாமி நாட்டார் தான் எழுதிய கள்ளர் சரித்திரம் என்ற நூலில்,
கள்ளர் மரபினரின் பட்டங்கள்
தொண்டைமான்
பல்லவராயர்
காடவராயர்
கச்சிராயர்
போத்தரையர்
கூரராயர்
காடுவெட்டியார்
வாண்டையார்
நந்தியர்
கள்ளர்களின் தலைவராகிய புதுக்கோட்டை மன்னர் தம்மை ராஜபல்லவ ரென்றும், பழைய அரச வமிசத்தின ரென்றும் சொல்லிக் கொள்கின்றனர். சர் வால்டர் எலியட் என்பார் கள்ளர்கள் கலகக்கூட்டத்தாரில் ஒரு வகுப்பின ரென்றும, ஆண்மையும், அஞ்சாமையும், வீரமும் உள்ளவர்களென்றும் கூறுகின்றார். சரித்திர்ப்படி பல்லவர்களும் அவர்களை யொத்தவர்கள்தான். கள்ளர்கள் இன்று வரையிலும் கருநாடக பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு, அவர்களிடமிருந்து. மகாராட்டியர் செளத் என்ற வரிவாங்கி வந்ததுபோல் ஒருவரியும்வாங்கி வந்திருக்கின்றனர். கள்ளர், மறவர் இவர்களுடன் பள்ளி வகுப்பாரும், உழுது பயிரிடும் வேளாளரிற் சிலரும் தாங்கள் பல்லவரைச் சேர்ந்தவர்களென்று சொல்லிக் கொள்கின்றனர்.
நெடுமுடிக்கிள்ளிக்கு நாகர் மகளான பீலிவளை வயிறறுப் பிறந்தோனே இவ்விளந்திரையன் என்றும் சிலர் கூறுவர். தொண்டையர் என்னும் பெயர் காஞ்சி, திருவேங்கடம் முதலியவற்றைத் தன்னகத்தே யுடையதொரு நாட்டிலே தொன்று தொட்டு ஆட்சி புரிந்த ஓர் வகுப்பினரைக் குறிப்பதென்பதே தேற்றம் . இளந்திரையானவன், சோழனொருவன் தொண்டையர் மகளை மணந்து பெற்ற புதல்வன் என்றும், அவனே தாய்வழி யுரிமையால் தொண்டை நாட்டுக்கு அரசனாயினான் எனறும் தாய்வழியாற் தொண்டைமான் என்னும் பெயரும், தந்தை வழியால் திரையன் என்னும் பெயரும் அவனுக்கு எய்தின என்றும் கோடல் வேண்டும்..
இத்தொண்டையரும் காஞ்சியிலிருந்து அரசு புரிந்திருக்கின்றனர். பல்லவரும் காஞ்சியிலிருந்து ஆட்சி நடத்தியுளர். ஆகலின் இவ்விருவரும் வெவ்வேறு வகுப்பினரா? ஒரே வகுப்பினரா? என ஆராய வேண்டியிருக்கிறது. பல்லவர் வடக்கே பெருசியாவிலிருந்து வந்தவரென சரித்திரக்காரர்கள் சொல்லி வந்திருக்கின்றனர் இப்பொழுது சிலர் அக்கொள்கையை மாற்றியும் வருகின்றனர் இவர்கள் பல்லவர் தொன்றுதொட்டு இந்நாட்டவரேனெத் துணிந்துரையாவிடினும், இந்நாட்டினராக யிருக்கலாம் என கருதுகின்றனர் .
தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும் .பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும் ஒரு பொருளுள்ளனவே எனச் சிலர் கருதுகின்றனர். பல்லவர்க்கு வழங்கும் போத்தரசர் என்னும் பெயரும் இப்பொருளதே யென்கினறனர். காஞ்சியிலாண்ட தொண்டைமான் இளந்திரையனையும் சோழன் கரிகாலனையும் உருத்திரங்கண்ணனார் என்னனும்புலவர் பாடியிருத்தலால் இளந்திரையன் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் இருந்தோன் எனத் தெரிதலானும், அதற்கு முன்பு பல்லவர் செய்தி யொன்றும்கேட்க்கப்படாமையானும் இளந்திரையனது வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர்.
இவர்கள், பல்லவராயினார் சோழர்க்கும் தமக்கும் ஏற்பட்ட பகைமை பற்றியே தம்மை வேறு பிரித்துக்கொள்ள நினைந்து, தமக்குப் பாரத்துவாச கோத்திரத்தைக் கற்பித்துக் கொண்டனர் என்பர். பல்லவர் பெருசியாவிலிருந்து வந்தோரென கூறுபவருக்கு ஆதாரமாக வுள்ளது சில வடமொழிப் புராணவிதிகாசங்களில் காணம்படும் பகல்வா என்னும் பதமாம். அச்சொல்லே பல்லவர் எனத் திரிதுதிருக்கும் என்பது அவர்கள் கருத்து. பல்லவர் இன்னகாலத்தில் இன்னவிடத்திருந்து இவ்வழியாக இவ்விடத்தை யடைந்தனரென்பது வேறுபல மேற்கோள்களால் உறுதிப் படுத்தப்பெற்ற பின்பற்றி தெற்கே காஞ்சியைத் தலைநகராகக் கெண்டு ஆண்ட வகுப்பினர் பெயராய பல்லவர் என்பது பகல்வா என்பதன் திரிபு என்று கொள்ளல் சிறிதும் பொருந்தாது.
வின்சன் ஏ. ஸ்மித் என்பாரும், வால்டர் எலியட் என்பாரும் பல்லவர் கோதாவரி யாறுகட்கு இடையிலுள்ளதான வெங்கி நாட்டில் இருந்தோராகலாம் எனக் கருதுகின்றனர்
பல்லவரைப்பற்றித் தனிநூல் எழுதியியுள்ள புதுச்சேரியிலிருக்கும் புரொபசர் ஜி.ஜே. துப்ரீல் என்பாரும், பல்லவர் ஆந்திர நாட்டிலிருந்தோராகலாமென்றும், பல்லவர் இருகூறாய்ப் பிரிந்து ஆந்திரநாட்டிலும், தமிழ் நாட்டிலும் அரசு புரிந்தனரென்பதும் பொருந்தும் என்றும் இங்ஙனம் கருதுகின்றனரே யன்றிப் பெருசியா முதலிய இடங்களிலிருந்து வந்தொரெனக் கூறவில்லை. பல்லவரது முதன்மைப் பட்டணம் காஞ்சி என்பதும், அவர்கள் ஆந்திர நாட்டுடன் தொண்டைமண்டலத்தையம் ஒரே காலத்தில் ஆண்டிருக்கினறன ரென்பதும் சரித்திரத்தில் நன்கு விளக்கமாம்.
காஞ்சி முதலிய இடங்களுள்ள பகுதி முன்பு அருவா நாடு எனவும் வழங்கப்பட்டது. அங்கிருந்தோர் அருவாளர் எனப்பட்டனர். அந்நாடு தமிழகத்தின் பகுதியே யாகலின் அருவாளரும் தமிழரே யென்பது கூறாதே அமையும். அருவாளரை நாகரென்பார் கொள்கையும் முன்னரே காட்டப்பட்டது.
பெரும்பாணாற்றுப்படை கூறுதல் கொண்டு அறியலாகும். இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னம் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன என்பதில் எத்துணையும் ஐயமில்லை.
திருமங்கையாழ்வார் பல பாட்டுக்களில் பல்லவரைக் குறித்திருக்கின்றனர்
அவற்றுள் அட்டபுயகரப் பதிகத்தில்,
‘மன்னவன் றொண்டையர் கோன் வணங்கு
நீண்முடி மாலை வைரமேகன்
தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி
யட்ட புயகரத் தாதிதன்னை’
என்றும்,
திருவரங்கப்பதிக்கத்தில்,
‘துளங்கு நீண்முடி யரசர்தங் குரிசில்
தொண்டைமன்னவன்
என்றும் ஓர் பல்லவனைத் தொண்டை மன்னன் எனப் பாடியிருக்கின்றனர்.
வண்டை நகரதிபனும், முதற் குலோத்துங்கச் சோழனுடைய மந்திரத்தலைவனும ஆகிய கருணாகரத் தொண்டைமானை,
‘பல்லவர்கோன் வண்டைவேந்தன்’
என்று செயங்கொண்டார் பரணியிற், கூறுகின்றனர், பல்லவர் தொண்டையர் என்னும் பெயர்கள் ஒரே மரபினரைக் குறிப்பன என்பதற்கு இவற்றினும் வேறென்ன சான்று வேண்டும்.
கல் வெட்டுக்களிலும் பல்லவரைத் தொண்டையர் என்று குறித்திருக்கிறது. தளவானூர்க் கல்வெட்டில் ஒரு பல்லவன் ‘தொண்டையர் தார்வேந்தன்’ என்று கூறப்படுகின்றான்.
‘மறைமொழிந்தபடி மரபின் வந்த குலதிலகன் வண்டை நகரரசனே’ என்று பரணி கூறுவது பல்லவர் அல்லது தொண்டையர் பின்பு அரச வகுப்பினராகக் கொள்ளப் பட்டு வந்தமைக்குச் சான்றாகும்.
கி.பி.4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டின் இடைக் காலம் வரையில் பல்லவராட்சி மிக மேன்மையடைந்திருந்தது. அக் காலததில் சோழர்கள் பல்லவர்க்குக் கீழே சிற்றரசராயிருந்தனர். பல்லவரில் புகழ் பெற்ற மன்னர் பலரிருந்தனர். பல்லவர் காலத்தில் சிற்பம் உர்ந்த நிலையில் இருந்ததுபோல் வேறு காலத்தில் இருந்ததில்லை அவர்களிற் சிலர் சிறிது காலம் சமண, பெளத்த மதங்களைத் தழுவியிருப்பினும், பெரும்பாலோர் சைவராகவோ வைணவராகவோ இருந்து வந்தனர். அவர்கள் கட்டிய கோயில்களும் பல. பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் பல்லவர் பலரிருக்கின்றனர். சைவசமய குரவர்களும், ஆழ்வர்களும் அக்காலத்தில்தான் தோன்றி விளங்கினர். சமயக் குரவரும், ஆழ்வாரும் புகழந்து பாடும் பெருமையும் பல்லவர் பெற்றிருந்தனர். இத்தகையாரையோ ஒரு கொள்ளைக் கூட்டத்தார் எனச் சிலர் கருதுவது ! இது காறும் கூறியவற்றிலிருந்து பல்லவ ரென்பார் தொன்று தொட்டுத் தொண்டை நாட்டி லிருந்துவந்த தொண்டையரே! என்பது விளக்கமாம். அவர் வடக்கிலிருந்து வந்தோ ரென்பதற்குச் சிலர் கூறும் வேறு காரணறங்கள்:
பல்லவர்க்கள் முதலில் அளித்த செப்புப் பட்டயங்கள் பிராகிருதத்திலும், வடமொழியிலும் இருப்பதும், அவர்கள் பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்தவரென்றும், வேள்விகள் புரிந்தனரென்றும் கூறப்படுதலும் ஆம்.
கள்ளர் வகுப்பினரை பல்லவர் வழியினர் என்பதற்கு பல பொருத்தங்களுள்ளன. அவற்றினை இங்கே காட்டுதும். பல்லவர் தொண்டையர் என்னம் பெயர்கள் ஒரே வகுப்பினரை குறிப்பன வென்று முன் விளக்கப்பட்டதும். காடவர், சேதிபர், காடுவெட்டி என்னும் பெயர்களும் பல்லவருக்கு உரியவை.
காடுவெட்டி என்பதும் பல்லவரது பெயராகச் சாசனங்களில் வருகிறது. ‘காடு வெட்டித் தமிழ் பேரரையன்’ என்று கல்வெட்டிற் காணப்படுவதிலிருந்து இப்பெயர்அரசரக்குரியதென்பது விளங்கும்.
மேலெ குறிப்பிட்ட பெயர்கள் (தொண்டைமான், பல்லவராயர், பாடவராயர், சேதிராயர், காடு வெட்டி) எல்லாம் கள்ளர் வகுப்பினரக்குள் வழங்கும் கிளைப்பெயர் அல்லது பட்டங்களாக உள்ளன. வாண்டையார் (வண்டையார்) என்னம் பட்டமும் வண்டை வேந்தனாகிய கருணாகரத் தொண்டைமான் வழியினர்என்பதைக் காட்டும்.
இங்ஙனம் பல பெயர்கள் ஒத்திருப்பது கள்ளர் மரபினரின் முத்தரையரும் பால்லவ வகுப்பினரே யென்று காட்டும். காஞ்சியிலிருந்து ஆண்ட பேரரசர்களாய பல்லவர்கள் தம் இனத்தவரையே தஞ்சை முதலிய இடங்களில் அரசாளும்படி செய்திருந்தனரென்பது பொருத்தமாம். இது காறும் கூறியவற்றிலிருந்து கள்ளர்கள் பல்லவ வகப்பினர் அதாவது பல்லவரின் ஒரு கிளை என்பது பெறப்படும். பெயர்கள் ஒத்திருப்பது கொண்டு இவர்கள் பல்லவ வகுப்பினரெனல் பொருந்தாது எனின், பெயர்களே யன்றி வரலாறுகளும் ஒத்திருத்தல் இதில் பலவிடத்தும் காணப்படும்.
கள்ளர் வகுப்பினராகிய புதுக்கோட்டை அரச பரம்பரையினர் தொண்டைமண்டலத்திலிருந்து வந்த பல்லவர் எனவே புதுக்கோட்டைச் சரிதம் கூறுகின்றது. வின்சன் எ. ஸ்மித் முதலியோரும் அங்ஙனமே கருதியுள்ளாரென்பது முன்பு காட்டப் பட்டது. திருவாளர் பி.டி. சீனிவாசையங்கார் அவர்கள் தாம் எழுதியுள்ள பல்லவர் சரிதத்தில், ( நாம் முன்பு மறுத்துள்ள) சில காரணங்களையெடுத்துக் காட்டிப் பல்லவர் கள்ளரினத்தினினின்றும் உதித்தவராகாதர் எனக் கூறினரேனும், பின் பல்லவர் தமிழராகிவிட்டாரென்று கூறி வந்து, தமது நூலை முடிக்குமிடத்தில் ‘ஒரு தெலுங்கு பல்லவக் கிளையார் 17-ம் நூற்றாண்டில் தொண்டைமான் என்றும் பல்லவ ராஜா என்றும் பட்டத்துடன் புதுக்கோட்டை அரசரானார். இப்போது புதுக்கோட்டை அரசரே பல்லவகுல மன்னருடைய புகழை நிலை நிறுத்தி ஆள்கிறார்’ என்று குறித்திருக்கின்றனர். இங்ஙனம் பலர் கருத்தும் இக்கொள்கையை ஆதரிப்பனவாகவேயுள்ளன.
கள்ளர் மரபினரின் பட்டங்கள்
தொண்டைமான்
பல்லவராயர்
காடவராயர்
கச்சிராயர்
போத்தரையர்
கூரராயர்
காடுவெட்டியார்
வாண்டையார்
நந்தியர்
பல்லவர்கள் யார்? என்று தற்போதைய தொல்லியல் துறை மாணவரும், வரலாற்று ஆய்வாளரும் திரு.விக்கி கண்ணன். (VICKY KANNAN) விளக்கமாக தன்னுடைய பக்கத்தில் எழுதியுள்ளார். அது கீழே தரப்பட்டுள்ளது
பல்லவர்கள் தொண்டை மண்டலத்தின் பூர்வகுடி அரசர்களா? அல்லது ஆந்திர பகுதியில் இருந்து பிற்காலத்தில் காஞ்சியை கைப்பற்றியவர்களா? அல்லது பார்சியாவில் இருந்து வந்தவர்களா? பல்லவர்கள் பிராமணர்களா? என பலதரப்பட்ட கேள்விகளும் கருதுகோள்களும் இருந்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் விடை காணும் வகையில் இக்கட்டுரை பல்லவர்கள் பற்றிய வரலாற்று தரவுகளை கொண்டு எழுதப்படுகிறது.
பார்சியாவில் இருந்த பஹலவ அரச வம்சத்திற்கும் தமிழகத்தில் இருந்த பல்லவ அரச மரபிற்கும் பெயர் ஒற்றுமையை தவிர்த்து வேறு ஒற்றுமைகள் இருப்பதாக தெரியவில்லை. ஒற்றைக்கல் இரதங்கள் எடுப்பித்தவர்கள் பல்லவர்கள். அதேபோல் சிறிய அளவில் பார்சிய மரபும் ஒற்றை கல் கட்டுமானங்களை செய்திருப்பதாக கூறுவர். ஆனால் இந்தியாவில் பல்லவர்கள் மட்டுமே இதனை செய்யவில்லை. பாண்டியர்களும் செய்திருக்கிறார்கள். எல்லோராவிலும் ஒற்றைக்கல் கோவில்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. பல்லவர்கள் எடுப்பித்ததற்கும் பாண்டியர்கள் எடுப்பித்ததற்கும் ஏறத்தாழ சில ஆண்டுகள் இடைவெளி தான். இவை தவிர்த்து பார்சியாவில் இருந்து பல்லவர்கள் வந்ததற்கான எவ்வித தரவுகளும் இல்லை. காஞ்சி பல்லவர்களை பார்சிய பஹலவ மரபுடன் இணைத்து முதன்முதலில் எழுதிய டாக்டர் ஸ்மித் கூட தனது இரண்டாவது பதிப்பில் இக்கூற்று தவறானது என கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
அதேசமயம் பல்லவர்களின் செப்பேடுகளிலும் சில கல்வெட்டுகளிலும் இருந்து அவர்கள் பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என அறியமுடிகிறது. இதைக்கொண்டு கோத்திரம் என்பதே பிராமணர்களுக்கு மட்டுமானதாக கருத இயலாது. ஏனெனில் கொங்கு வெள்ளாளர்கள் தங்களை பறவை இனங்களின் மரபினராக அழைத்துக்கொள்கின்றனர். அவர்களுக்குள்ளாகவே சிறு இனக்குழுக்களாக பறவை கூட்டங்களை அடியொற்றி பிரிந்திருக்கின்றனர். இந்த ‘பரத்வாஜ‘ என்பதும் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும் மைனா குடும்பத்தின் ஒருவகையை சேர்ந்தது. இதனை ‘செம்போத்து‘ என அழைக்கின்றனர். மேலும் சைவ ஆகமத்தில் ஒன்றான ரௌரவ ஆகமத்தின் கிரியா பாதம் 14வது வசனம், பரத்வாஜ ரிஷியை சூத்திரர் என குறிப்பிடுகிறது. இவ்வாறு பரத்வாஜ ரிஷியின் வழிவந்தவர்களாக தங்களை கூறிக்கொண்ட பல்லவர்கள் பிற்காலத்தில் ஹிரண்யகர்பம் போன்ற பிறப்பை தூய்மைசெய்துக்கொள்ளும் வேள்விகள் செய்து தான் சத்திரிய பட்டத்தினை பெற்றனர். ஆகையால் கோத்திரத்தால் மட்டுமே அவர்களை பிராமணர்களாக கருதுவது ஏற்புடையதல்ல. இதேபோல் மூவேந்தர்களும் கோத்திரத்தை குறிப்பிட்டுக்கொண்டுள்ளனர். இது ஒரு மரபுவழியாக தங்களை முன்னிருத்தி கொள்ள செய்யப்பட்டதே ஒழிய இனரீதியான அடையாளங்கள் அல்ல என்பதை உணர்க.
பல்லவர்களின் ஆரம்ப கால செப்புப்பட்டயங்கள் பிராக்கிருத மொழியிலும் பின் சமஸ்கிருதத்திலும் இருப்பது கிபி 3 ஆம் நூற்றாண்டில் தென்னகத்தில் இருந்த பௌத்த-ஜைன மத தாக்கங்கள் தான். இதனை இன்னும் விரிவாக புரிந்து கொள்ள பௌத்த மத பரவலையும் அதன் பிரிவுகளையும் மேலோட்டமாக புரிந்து கொள்வது அவசியம். அசோகனது காலத்திலேயே இந்திய துணைக் கண்டம் முழுவதும் பௌத்தம் பரவியது அறிந்த ஒன்றே. எனினும் மௌரிய பேரரசுக்கு பின்னான காலத்தில் பௌத்த மதம் இரண்டாக பிரிந்தது. அதில் மகாயாண பௌத்த சமயமானது தென்னிந்தியாவில் குறிப்பாக நாகர்ஜூனகொண்டா, அமராவதி போன்ற இடங்களில் தான் தோன்றியது. கிபி முதலாம் நூற்றாண்டிலேயே பரவலாக அறியப்பட்ட இந்த மகாயாண பௌத்தமானது அடுத்த இரு நூற்றாண்டுகளில் இந்தியா மட்டுமின்றி கிழக்காசிய, தென்கிழக்காசிய போன்ற நாடுகளிலும் பரவிவிட்டது. இதன் தொடர்ச்சியாக தான் பாஹியான், யுவான் சுவாங் போன்ற சீனப்பயணிகள் இந்தியாவை நோக்கி பயணித்தனர். அதிலும் குறிப்பாக பாஹியான் சமஸ்கிருதம் கற்கவும் திரிபிடகத்தை படியெடுக்கவும் தான் சீனாவில் இருந்து பயணப்பட்டதாக தனது குறிப்பில் தெரிவிக்கிறார்.
பௌத்த சமய வளர்ச்சியில் சமஸ்கிருதம் முக்கிய பங்கு வகித்தது என்பதை மறுத்துவிட முடியாது. இதன் தாக்கத்தில் தான் இந்தியா முழுவதுக்குமான பொது மொழியாக சமஸ்கிருதம் பரவத்தொடங்கியது. ஆகையால் தான் வேதமே சமஸ்கிருதத்தில் எழுதிக்கொள்ளப்பட்டது. வேதத்தினை ஏற்ற சமயங்களும் சரி, வேத எதிர்ப்பினை பதிவு செய்த சமயங்களும் சரி சமஸ்கிருதத்தை பொதுவாக ஏற்றனர். அதன் காரணம் பாலி, பிராக்கிருதம், தமிழ் போன்ற பல மொழிகளின் கலப்பில் சமைக்கப்பட்ட மொழி தான் சமஸ்கிருதம். அது தனித்து உருவாக்கப்பட்டதல்ல.
இதை அறிந்துக்கொண்டாலே பல்லவர்கள் பிராக்கிருத, சமஸ்கிருத மொழிகளை பயன்படுத்தியதன் பின்னணியும் பிற்காலத்தில் சோழர்களும் பாண்டியர்களும் கூட சமஸ்கிருதத்தில் பட்டங்களை வைத்துக்கொண்ட காரணங்களும் எளிதில் புலப்படும். சமஸ்கிருதம் பலதரப்பட்ட சமயங்களின் பொதுவான மொழியாக இருந்ததாலும் அன்றைய காலத்தில் இந்தியா முழுவதுக்குமான பொதுவான மொழியாக இருந்ததாலும், அன்று வணிகம் முக்கிய பங்கு வகித்ததாலும் அரசு மொழியாக சமஸ்கிருதம் இருந்ததில் வியப்பில்லை.
பல்லவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனும் கருத்து தான் மிக வலுவாக திணிக்கப்பட்ட ஒன்று. காரணம் பல்லவர்களின் ஆரம்ப கால செப்பேடுகளாக அறியப்படும் மயிடவோலு செப்பேடும், ஹிரஹடகள்ளி செப்பேடுகள் ஆந்திரப்பகுதியில் கிடைத்தது தான். முதல் பல்லவ அரசனான சிவஸ்கந்தவர்மனது காலத்தியதாக (கிபி 275-300) இவை அறியப்படுகிறது. இந்த செப்பேடுகள் கிடைத்தது ஆந்திரப்பகுதியாக இருக்கலாம். ஆனால் அந்த செப்பேட்டிலேயே அது காஞ்சியில் இருந்து வழங்கப்பட்டது என்பதை அறியமுடிகிறது. ஆகவே பல்லவர்கள் காஞ்சியை பிற்காலத்தில் தான் கைப்பற்றினார்கள் எனும் கருத்தானது ஆதாரமற்ற கருதுகோள் என அறிக.
அதுமட்டுமின்றி தொடக்க கால செப்பேடுகளில் இருந்து இதுவரை மூன்று ஊர்களின் பெயர்கள் தான் நமக்கு கிடைத்திருக்கிறது. அதில் சிவஸ்கந்தவர்மன் காலத்தியதாக அறியப்படும் செப்பேடுகள் காஞ்சியில் இருந்து வழங்கப்பட்டிருக்கின்றன. வீரகூர்ச்ச பல்லவனின் பேரனான எனும் தகவல் மட்டும் கிடைத்த ஒரேயொரு ஏடு மட்டுமே கண்டெடுக்கப்பட்ட செப்பேட்டில் அது தசனபுரா எனும் இடத்தில் இருந்து வழங்கப்பட்டதாக குறிக்கிறது. இது தெற்கு மைசூர் பகுதியாக இருக்கலாம் என்பது ஹூல்ஸ் அவர்களின் கருத்து. அதேசமயம் சிம்மவர்ம பல்லவனின் செப்பேட்டில் பாலக்காடா எனும் இடத்தில் இருந்து அது வழங்கப்பட்டதாக கிடைக்கிறது. இது கேரளத்தின் பாலக்காடு என சிலர் கருதினாலும் அது சென்னையை அடுத்த பழவேற்காடு என டாக்டர் புர்னெல் தெரிவித்திருக்கிறார். (South indian paleography, second edition,page 36 ல் காண்க)
இதில் எந்தவொரு செப்பேடும் ஆந்திரப்பகுதியில் இருந்து வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை எனினும் பல தொடக்க கால பல்லவர் செப்பேடுகள் ஆந்திரப்பகுதிகளில் கிடைத்திருக்கிறது. இதனால் சாதவாகன பேரரசு வலிமைக்குன்றிய சமயத்தில் பல்லவர்கள் ஆந்திர பகுதியையும் உள்ளடக்கிய பகுதிகளை கைப்பற்றி ஆட்சிசெய்திருக்கின்றனர் என அறியமுடிகிறது. இது செப்பேடுகள் மூலம் அறிந்துக்கொள்ள முடியும் செய்தி.
குப்த பேரரசில் வலிமையான அரசனாக அறியப்படும் சமுத்திர குப்தன் (கிபி 335-375) தனது அலகாபாத் தூண் கல்வெட்டில், தான் வெற்றிக்கொண்ட மன்னர்களைப்பற்றி குறிப்பிடும்போது அக்கல்வெட்டின் 19வது வரியில் காஞ்சியை ஆட்சி செய்த பல்லவ விஷ்ணுகோபனை (Kancheyaka Vishnugopa) வென்றதாக குறிப்பிடுகிறான். இதிலிருந்து சமுத்திரகுப்தன் காலத்திலும் பல்லவர்களின் தலைநகராக காஞ்சிபுரம் விளங்கியதை அறியலாம். ஆகவே ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள் தான் பல்லவர்கள் என்பதற்கு இதுவரை எந்தவிதமான சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. அதேசமயம் சாதவாகனர்களின் கீழ் சிலகாலம் சிற்றரசாக பல்லவர்கள் விளங்கியிருக்ககூடும் என்பதற்கு காஞ்சியில் கிடைத்த சாதவாகனர்களின் காசுகளே சான்று. தொடக்க கால பல்லவன் முதல் அதன்பின் தொடர்ச்சியாக பல்லவர்கள் காஞ்சியினை தலைநகராக கொண்டு ஆட்சி செய்திருப்பது வரலாற்று சுவடுகளின் மூலம் அறியமுடியும் செய்தி.
இதேபோல் மற்றொரு கல்வெட்டு சான்று திருக்கழுக்குன்றம் கோவிலில் கிடைக்கிறது. அது ஆதித்த சோழனின் காலத்தியது. அதில் பூர்வ ராஜாக்களான ஸ்கந்தசிஸ்யனின் தானத்தையும் வாதாபி கொண்ட நரசிம்மனது தானத்தையும் தனது காலத்திலும் அப்படியே தொடரும்படியாக உத்தரவு பிறப்பித்த தகவல் கிடைக்கிறது. இதில் வாதாபி கொண்ட நரசிம்மனது காலத்துக்கும் (கிபி 630-660) முந்தையதாக ஸ்கந்தசிஸ்யன் எனும் அரசனது பெயர் கிடைக்கிறது. இந்த ஸ்கந்தசிஸ்யன் என்பவர் சிவஸ்கந்தவர்மனாக இருக்கலாம் என்றும் அல்லது பின்வந்த ஸ்கந்தவர்மர்களில் ஒருவராக இருக்கலாம் என்றும் தெரிகிறது. இதிலிருந்து மகேந்திரவர்ம பல்லவனின் தந்தையான சிம்மவிஷ்ணுவிற்கு முன்பே பல்லவர்கள் காஞ்சியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்திருப்பதை அறியமுடிகிறது.
இதேபோல் பல்லவர் காலத்திற்கே உரித்தான தனித்தன்மை வாய்ந்த சிற்பத்தொகுதி ஒன்று தொண்டை மண்டல பகுதியில் மட்டுமே கிடைக்கிறது. அந்த சிற்பத்தொகுதி மகேந்திரவர்மனின் காலத்திற்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்பது வரலாற்றாளர் திரு நாகசாமி அவர்களின் கருத்து. இதுகுறித்த மேலதிக தகவலுக்கு Damilika Vol 1 இல் காண்க. இந்த சிற்பத்தொகுதியானது காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் போன்ற இடங்களிலும் தெற்கு ஆந்திரத்தில் சில பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டும் பல்லவர்கள் வலிமைபெறுவதற்கு முன்பே காஞ்சியையும் காஞ்சியை சுற்றிய பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.
பல்லவர்களை வரலாற்று காலத்தில் திரமிள (அல்லது) திராவிட என்றழைக்கும் மரபு இருந்திருக்கலாமோ என்று கருதவும் சில சான்றுகள் கிடைக்கின்றன. பொதுவாக திரமிள என்பது பாலி மொழியில் தமிழர்களை குறிக்கும் சொல். அதுவே பின்னாளில் சமஸ்கிருத வழக்கில் திராவிட என்றானது என்பர். பல்லவர்களின் பரம எதிரியான சாளுக்கிய அரசர்களின் செப்பேடுகளில் திரமிளனை வென்றேன் எனும் குறிப்புகள் தொடர்ச்சியாக கிடைக்கின்றன. இது பல்லவர்கள் தவிர்த்து வேறு யாரும் இருக்க வாய்ப்புகள் குறைவு. இதற்கு வலுசேர்க்கும் விதமாக சீனப்பயணி யுவாங் சுவானின் பயணக்குறிப்பில் காஞ்சிபுரத்தை திராவிட தேசத்தின் தலைநகரம் என குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இவை அல்லாது இடைக்கால பாண்டிய செப்பேடு ஒன்றில் வடமொழி பகுதியில் திரமிளாபரணன் எனும் பெயரை தமிழ்ப்புலவன் ஒருவனை குறித்துவிட்டு அதே செப்பேட்டின் தமிழ்ப்பகுதியில் தமிழாபரணன் என குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இதனை பாண்டியர் கால செப்பேடுகள் by மு.இராஜேந்திரன் அவர்களின் நூலில் காணலாம்.
சாளுக்கிய அரசனான மங்களேசனின் மஹாகுடா தூண் கல்வெட்டில் தனது முன்னவரான முதலாம் கீர்த்திவர்மனின் வெற்றிகளை பற்றி குறிப்பிடும்போது அவன் அங்க,வங்க,மகத, கேரள, சோழிய, மூஷிக, பாண்டிய, த்ரமிள நாட்டினை வெற்றி பெற்றதாக குறிப்பிடுகிறான். இதில் வரும் த்ரமிள என்பது பல்லவனை தவிர வேறு யாராகவும் இருக்க வாய்ப்பில்லை என்பது பல அறிஞர்களின் கூற்று. ஏனெனில் முதலாம் கீர்த்திவர்மனின் காலத்தில் சிம்மவிஷ்ணுவோ அல்லது அவனின் தந்தையோ தான் இங்கு ஆட்சியில் இருந்திருக்க வேண்டும். ஆகையால் சாளுக்கிய-பல்லவ சண்டைகள் கிபி 6ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே இருந்து வந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து பார்க்கும் போது பல்லவர்கள் தமிழகத்தின் பூர்வகுடிகளாக இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம் தொண்டைமான் இளந்திரையனின் வழி வந்தவர்களாக இருக்கவும் சாத்தியக்கூறுகள் உண்டு. மானுடவியல் ஆய்வின் படி பல்லவர்கள் குறும்பர் இன பழங்குடிகள் எனவும் ஒரு கருத்துண்டு. சமண இலக்கியங்கள் சில பல்லவர்களை கள்வர்கள் என குறிப்பிடுவதைக்கொண்டு பல்லவர்கள் பழங்குடிகளாக இருந்திருக்கலாம் என்பது வரலாற்றாளர் திரு பூங்குன்றன் அவர்களின் கருத்து.