திங்கள், 26 ஜூன், 2023

உடன்கட்டை ஏறி உயிர்த்தியாகம் செய்த ராணி ஆயி அம்மணி ஆயி சாஹேப்




ராஜா ஸ்ரீ விஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் மன்னர் ( 1789 – 1807) சிறப்புடன் அரசாண்டு வந்து 1807-ல் பிப்ரவரி 1ஆம் தேதி வானுலகெய்தினர். அப்போது அவருக்கு வயது 47. இவருடன் இவரது இளைய ராணியான ஆயி அம்மணி ஆயி சாஹேப் (சதி எனும்) உடன்கட்டை ஏறி உயிர்த்தியாகம் செய்தார்.

ராணி ஆயி அம்மா ஆயி உடன்கட்டை ஏறி தீயில் பாய்ந்து கணவருடன் மரணத்தில் கலந்தார். அவர் உடன்கட்டை ஏறிய இடம் " மாலையீடு " என அழைக்கப்படுகிறது.


மாலையீட்டில் ஆயி அம்மாவின் நினைவாக , அவர் உடன்கட்டை ஏறிய இடத்தில் பள்ளிப்படை கோயில் எழுப்பப்பட்டு அவரது சிலை நிறுவப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது.


காலப்போக்கில் கைவிடப்பட்ட கோயிலாக மாறிப்போனது பள்ளிப்படை. அக்கோயிலின் பராமரிப்பன்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.


கோயில் கதவுகள் மற்றும் சிலைகளை காணவில்லை. இன்று கேட்பாரற்று கிடக்கும் கற்புக்கரசிக்கான கோயில்.



கோயிலின் உள்ளே ஒரு பெட்டியில் ராணியார் உபயோகித்த உடைகள் ஒரு பெட்டியில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்று அந்த பெட்டியில் மிகவும் சிதலமடைந்த நிலையில் உடையின் மிச்சங்கள் காணப்படுகின்றது.

ராணி ஆயி அம்மா அவர்களது நினைவாக எழுப்ப பட்ட கோயிலில் , வழிபாடுகள் நடத்தப்பட்ட ராணியின் ஆடை , அஸ்தி பானை மற்றும் மற்ற உபகரணங்கள் இருந்த பெட்டி உள்ளது.


பராமரிப்பு இன்றி காணப்படும் பெட்டியில் காணப்படும் ராணியின் உடைகளின் மிச்சம்!!


தமிழ் பெண்களின் பெருமையை பறைசாற்றும், கற்புக்கரசிக்கு எழுப்பப்பட்ட கோயில் சிதிலமடைந்த நிலையில் இருப்பது மிகவும் வருத்ததிற்குரியது.

புதுக்கோட்டை - திருமயம் வழித்தடத்தில் புதுக்கோட்டையில் இருந்து 4 கிமீ தொலைவில், மாலையீடு எனும் இடத்தில் காணப்படும் இப்பள்ளிப்படை கோயில், ஆயி அம்மன் கோயில் என அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

அழிந்து வரும் வரலாற்று சின்னம்.

கள ஆய்வு : திரு. சியாம் சுந்தர் சம்பட்டியார்

பல்லவராயர் வரலாறு - பல்லவராய மன்னர்கள் - பல்லவராயன்

பல்லவராயர்கள் புதுக்கோட்டை மாவட்டம்   குளத்தூர், திருமயம்,   பெருங்களூர்  மற்றும்  வைத்தூர்  ஆகிய ஊர்களை தலைமையாக கொண்டு புதுக்கோட்டையின...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்