திங்கள், 26 ஜூன், 2023

கிளாங்குடி தேவர் தொண்டைமான்

கிளாங்குடி தேவர் தொண்டைமான் 
( ஆண்டிப்பட்டியில் பாண்டியர் கால கல்வெட்டு)


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 13 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டி, ரோசனப்பட்டி, முத்துசங்கிலிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சிலைகள், கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. மேலும் இப்பகுதியில் சிதிலமடைந்த நிலையில் விநாயகர், அம்மன், போகர் சிலைகள் காணப்படுகிறது. 

இச்சிலைகளுக்கு அப்பகுதிமக்கள் ஒவ்வொரு ஆண்டும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இதுகுறித்து அறிந்த மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று உதவி பேராசிரியர்கள் எஸ்.ராஜகோபால், ஆர்.பிறையா ஆகியோர் இணைந்து இப்பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது பிராதுக்காரன்பட்டி மற்றும் ரோசனப்பட்டி கிராமங்களுக்கு இடையே 13 ம் நூற்றாண்டு பாண்டிய மன்னர் காலத்துக் கல்வெட்டு ஒன்றைக் கண்டுப்பிடித்தனர்.



இந்த கல்வெட்டு நான்கு அடி நீலமும், ஓரு அடி அகலமும் கொண்டது. இதில் முழுமையடையாத ஏழு வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. 

அதில் உள்ள எழுத்துக்கள் அப்பகுதியை ஆண்ட சிறிய தலைவனான கிளாங்குடி தேவர் தொண்டைமான் என்பவருக்கு திருப்புவன்கோன் அங்கராயன் என்ற குடிமகன் வழங்கிய பரிசு பற்றி இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் இதுபோன்ற கல்வெட்டுகள் அதிகளவில் இருக்கறது.

தேனி தொண்டைமான் நாடு என்று குறிப்பிடப்படுகிறது. 



பெரியகுளத்தில் கோவிந்த தொண்டைமான் பெரிய நிலக்கிழார். மிகப் பெரும் செல்வந்தர். ரொக்கப்புலி கோவிந்தன் தொண்டைமான் என்று சொல்வார்கள்.





பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில்தாயம்மாள் திருமண மாளிகை உள்ளது. கோவிந்தன் தொண்டைமான் மகன் G. சந்தானம் தொண்டைமான் அவர்கள் தேமுதிக வின் வேட்பாளராக போட்டியிட்டார்.





பெரியகுளம் அதிமுக 17 வது வார்டு செயலாளர் விஜய் ஆனந்த் தொண்டைமான் இருக்கிறார்.

தேனி தொண்டைமான் - திருமணம் பத்திரிகை



மக்கள் தொகை கணக்கெடுப்பில் அங்கராயர்


அகராதியில்


நேமம், ஒண்டி பிலி அங்கராயர் வகையறா




இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஆங்காங்கே பழங்கால கற்சிலைகள் கேட்பாரின்றி கிடக்கிறது. இதில் சில தமிழ் கல்வெட்டுகளும் உள்ளது. 





வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்