புதன், 28 ஜூன், 2023

தொண்டைமானின் மெய்கீர்த்தி


 அறந்தாங்கி தொண்டைமானின் மெய்கீர்த்தி




"சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்"
(சோழர்கள் சூரிய குலம்)


"நலம்பெறு சோழ ராசாவின் மரபினன்"
(சோழரின் மகன்)


"புலிக்கொடி மேருவில் பொறித்தருள் புகழோன்"
(புலிக்கொடி வேந்தன்)


"புறாவினுக்காகத் துலைபுகு பிரபலன்"
(புறாவிற்காக தன் சதையை கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி சோழன் மரபு)


"கிடாரத்து அரசன் தெய்விதம் அளித்தோன்"
(கடாரம் வென்ற இராஜேந்திர சோழ மரபு)


"கலிங்கம் திறக்கொண்டு பரணி புனைந்தோன்"
(கருணாகர தொண்டைமான் மரபு)


"கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்"
(கம்பருக்கு பரிசளித்த அரச மரபு)


"ஓட்டக் கூத்தன் உயர்தமிழ் புனைந்தோன்"
(ஓட்டக் கூத்தரால் புகழப்பட்ட அரச மரபு)


"கச்சியம் பதியான் கருணா கடாட்சன்"
(கஞ்சியை ஆண்ட அரச மரபு)


"இந்திரன் ஏழடி எதிர்கொளப் பெற்றான்"
(இந்திர குலத்தவன்)


********************************

புதுக்கோட்டை தொண்டைமானின் மெய்கீர்த்தி


“புலிக்கொடி முள்ளோன்”
(சோழர் கொடி தாங்கியவன்)


“வட்ட நீலக்குடை பூசுக்கின்ற வாளக்குடை முள்ளோன் யிட்ட பாதத்தி லணிந்தோன்”
(நீல மற்றும் வாளக் குடை உடைய மன்னர்களை தனது பாதத்தில் அணியாக அணிந்தவன்)

“வளர் யிந்திரகுல மேவிளங்கிய் சந்திர குலநேயன்”
(இந்திர குலம் வழி வந்து பாண்டியர் குலத்தை நேசிப்பவன்)

“சிஷ்ட பரிபாலன கொடியூரன்”
(தர்ம நீதியை காப்பவன்)

“சிங்கமனாதிப தியான் பாரில் செங்கோல் செலுத்த வந்தவங் காமதேனு துங்கன் விஜய ரகுநாத ராய தொண்டைமான் போற்றி”
(சிம்மாசனத்திற்குரிய பூவுலகில் தனது செங்கோலை செலுத்த வந்து இரப்பவர்களுக்கு இல்லை எனாத காமதேனு போன்ற இராஜன் விஜய ரகுநாத எனும் ராய தொண்டைமான் போற்றி)


அன்புடன் சோழபாண்டியன்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்