திங்கள், 26 ஜூன், 2023

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் மண உறவுகள்






புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை ஏற்று மன்னர் ராஜகோபால தொண்டைமான், 3 March 1948 ல், எந்த நிபந்தனையும் இன்றி, உபரி நிதியாக இருந்த 48 லட்ச ரூபாயுடன், புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்த சிறப்பிற்குரியவர். கிட்டதட்ட 300 ஆண்டுகள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்த தொண்டைமான் வம்சத்தில் 9 மன்னர்கள் அரியாசனம் ஏறி நாட்டை காத்துள்ளனர். புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தினர் கொண்ட மண உறவுகள் பற்றிய தகவல்களை காண்போம். 

ராய தொண்டைமான் (1639-1661)

விஜய நகர அரசரான ஸ்ரீரங்கராயரின் யானையை அடக்கி, விருதுகள் பெற்று, அவரது உதவியுடன் புதுக்கோட்டையின் வட பகுதிகளை பல்லவராயரிடம் இருந்து பெற்று புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு அடிக்கோலிட்ட ராய தொண்டைமானின் மகள் காதலி நாச்சியார், ராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதியை மணந்து சேதுநாட்டின் அரசியானார். அரசின் சார்பாக பல தானங்களை செய்துள்ளார். இவரது பெயரால் களத்தூர் எனும் ஊர் காதலி நாச்சியார்புரம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு பிராமணர்களுக்கு தானம் அளிக்கப்பட்டது. கிபி 1694ம் ஆண்டை சேர்ந்த மேலசீத்தை செப்பேடு மற்றும் 1709ம் ஆண்டை சேர்ந்த களத்தூர் செப்பேடு ஆகியவற்றில் காதலி நாச்சியார் அளித்த கொடைகள் பற்றிய தகவல்கள் உள்ளன. கிபி 1710ல் சேதுசீமை மன்னர் கிழவன் சேதுபதி மரணித்த பிறகு காதலி நாச்சியார் உடன்கட்டை ஏறி கணவரோடு கரைந்தார்.
(சேதுபதி செப்பேடுகள்:தமிழ் பல்கலைக்கழகம்/ General history of pudukkottai state. R.Aiyar 1916)

ரகுநாதராய தொண்டைமான்(1686-1730)

புதுக்கோட்டை மன்னர் ரகுநாதராய தொண்டைமான் 6 மனைவிகளை கொண்டிருந்தார்.

முதல் மனைவி -மலையத்தாயி ( மாங்காட்டான்பட்டி ராங்கியர் குடும்பம்)
இரண்டாவது மனைவி - பெரிய உடையம்மை ஆயி ( தென்னத்திரையன் குடும்பம்)
மூன்றாவது மனைவி- அவத்தாயி ( மலைக்குறிச்சி ராங்கியர் குடும்பம்)
நான்காவது மனைவி - வீரத்தாயி ( காடுவெட்டியார் குடும்பம்)
ஐந்தாவது மனைவி- பிள்ளத்தாச்சி வீராயி(ராங்கியர் குடும்பம்)
ஆறாவது மனைவி- பாச்சி ஆயி ( ராங்கியர் குடும்பம்) 

( General history of pudukkottai state. R.Aiyar 1916 பக் 145)

நமண தொண்டைமான்(1686-1713)

புதுக்கோட்டை முதல் மன்னர் ரகுநாதராய தொண்டைமானின் தம்பியான, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் குளத்தூரை ஆட்சி செய்து வந்த நமண தொண்டைமான், நான்கு மனைவிகளை கொண்டிருந்தார்.

முதல் மனைவி- சம்பட்டியார் குடும்பம்
இரண்டாவது/ மூன்றாவது மனைவி- ராங்கியர் குடும்பம்
நான்காவது மனைவி-பன்றிக்கொண்டார் குடும்பம்.

நமண தொண்டைமானுக்கும் குருந்தன் சம்பட்டியாரின் மகளுக்கும் பிறந்த ராமசாமி தொண்டைமான் குளத்தூரின் அடுத்த மன்னராக பதவியேற்றார். 
(General history of pudukkottai state 1916, பக் 140)

திருமலைராய தொண்டைமான்

புதுக்கோட்டையின் முதல் மன்னரான ரகுநாதராய தொண்டைமானின்(1686-1730), மகன் திருமலைராய தொண்டைமான் இரு மனைவிகளை கொண்டிருந்தார்.

முதல் மனைவி- நல்லாயி ஆயி ( பன்றிக்கொண்டார் குடும்பம்)
இரண்டாவது மனைவி - முத்தவீராயி ஆயி( மழவராயர் குடும்பம்) 
(Trichinopoly Gazetter 1907/ பக் 361)

விஜய ரகுநாதராய தொண்டைமான்(1730-1769)

புதுக்கோட்டையின் இரண்டாவது மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் 5 மனைவிகளை பெற்றிருந்தார்.

முதல் மனைவி-நல்லக்காத்தாயி ஆயி( வேறு தகவல் இல்லை)
இரண்டாவது மனைவி- மங்காத்தாயி( வேறு தகவல் இல்லை)
மூன்றாவது மனைவி - ரங்கம்மா ஆயி( வேறு தகவல் இல்லை) 
நான்காவது மனைவி - காத்தாயி ஆயி(வேறு தகவல் இல்லை)
ஐந்தாவது மனைவி - பெரிய நாயகி ஆயி (கிருஷ்ணன் பன்றிக்கொண்டார் குடும்பம்)
ஆறாவது மனைவி - ( நமண தென்னதிரையன் குடும்பம்) 
(General history of pudukkottai state 1916, பக் 162)

ராயரகுநாத தொண்டைமான்(1769-1789)

புதுக்கோட்டையின் மூன்றாவது மன்னராக ராயரகுநாத தொண்டைமான் பொறுப்பேற்றார். இவர் இரு மனைவிகளை பெற்றிருந்ததாக தகவல் உள்ளது.

முதல் மனைவி - அம்மணி ஆயி( கல்லாக்கோட்டை ஜமீன் சிங்கம்புலியார் குடும்பம்)
இரண்டாவது மனைவி - முத்தழகம்மாள்( வேறு தகவல் இல்லை)
(General history of pudukkottai state 1916, பக் 280)

ராயரகுநாத தொண்டைமானின் மகளான அம்மாள் ஆயியை, புதுக்கோட்டையை ஆட்சி செய்த பல்லவராயர்கள் வழிவந்த மாப்பிள்ளை பல்லவராயர் மணம் செய்து கொண்டார். 
(General history of pudukkottai state 1916, பக் 382)

விஜயரகுநாத தொண்டைமான்(1789-1807)

புதுக்கோட்டையின் நான்காவது மன்னராக ராயரகுநாத தொண்டைமான் பொறுப்பேற்றார். இவர் மூன்று மனைவிகளை பெற்றிருந்தார்.

முதல் மனைவி - ஆயி அம்மா ஆயி 
இரண்டாவது மனைவி - சுப்பம்மா ஆயி
மூன்றாவது மனைவி - முத்தம்மா ஆயி

(General history of pudukkottai state 1916, பக் 289)
இவர்களைப் பற்றிய வேறு தகவல்கள் இல்லை. கிபி 1807ல் விஜயரகுநாத தொண்டைமான் மறைவிற்கு பிறகு, அவரது மனைவியான ஆயி அம்மா ஆயி காரைத்தோப்பு எனும் இடத்தில் உடன்கட்டை ஏறி கணவருடன் கலந்தார். இவருக்கு எழுப்பப்பட்ட கோயில் இன்றும் ஆயி அம்மன் கோயில் என அழைக்கப்படுகிறது. 

விஜய ரகுநாதராய தொண்டைமான் (1807-1825)

மன்னர் விஜய ரகுநாதராய தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஐந்தாவது மன்னராவார். மன்னர் இரண்டு மனைவிகளை கொண்டிருந்தார்.

முதல் மனைவி-கல்லாக்கோட்டை ஜமீன் சிங்கம்புலியார் குடும்பம்
இரண்டாவது மனைவி- கத்தக்குறிச்சி திருமலை பன்றிக்கொண்டார் குடும்பம்
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 833)

மன்னர் விஜய ரகுநாதராய தொண்டைமானின்(1807-1825) தம்பி கத்தக்குறிச்சி சூர்யமூர்த்தி பன்றிக்கொண்டாரின் புதல்வியை திருமணம் செய்தார்.
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 833)

மன்னர் ரகுநாத தொண்டைமான் (1825-1839)

மன்னர் ரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆறாவது மன்னராவார். 

இவர் கத்தக்குறிச்சி பன்றிகொண்டார் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருந்தார்.
(General history of pudukkottai state 1916, பக் 413)

மன்னர் ரகுநாத தொண்டைமான் , அவர்களின் முதல் புதல்வியை 15 May 1828 ல் ஜாகிர்தார்( மன்னரால் அளிக்கப்பட்ட பெருமளவு நிலங்களை கொண்ட நிலக்கிழார்) ரங்கன் பல்லவராயர் மணந்தார்.
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 843)

மன்னர் ரகுநாத தொண்டைமான் அவர்களின் இரண்டாவது புதல்வி, 26 June 1831ல் ரகுநாதசாமி பன்றிக்கொண்டார் அவர்களை மணந்தார். 
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 843)

மன்னர் ரகுநாத தொண்டைமானின் மகனான திருமலைத் தொண்டைமான் , கல்லாக்கோட்டை ஜமீனை சேர்ந்த மதுராம்பாள் ஆயி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 

மன்னர் ரகுநாத தொண்டைமானின் பேரன் பாலசுப்ரமணிய ரகுநாத ராமச்சந்திர தொண்டைமான், சிலத்தூர் ஜமீனான பன்றிக்கொண்டார் குடும்பத்தில் திருமணம் செய்திருந்தார். 

மன்னர் ரகுநாத தொண்டைமானின் பேத்தி பிரகதம்பாள் அம்மனி ஆயி , கல்லாக்கோட்டை ஜமீன் விஜயரகுநாத திருமலை சிங்கம்புலியார் அவர்களை மணந்தார். 

மன்னர் ராமச்சந்திர தொண்டைமான்(1839-1886)

மன்னர் ரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஏழாவது மன்னராவார். 

மன்னர் ராமச்சந்திர தொண்டைமான்(1839-1886) மற்றும் அவரது தம்பி கிபி 1845ல் கல்லாக்கோட்டை(சிங்கம்புலியார்) ஜமீனில் திருமணம் செய்துள்ளனர். 
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 846)

மன்னர் ராமச்சந்திர தொண்டைமான் , 31 August 1848 ல் நெடுவாசல் ஜமீன் பன்றிக்கொண்டாரின் புதல்வியையும் திருமணம் செய்துள்ளார்.
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 846)

மன்னர் ராமசந்திர தொண்டைமான் தனது மகளை(பிரகதாம்பாள் ராஜாமணி ஆயி) குழந்தைசாமி பல்லவராயர் என்பவருக்கு மணம் முடித்தார். குழந்தை சாமி பல்லவராயரின் மகன் மாரத்தாண்ட பைரவ பல்லவராயர் புதுக்கோட்டை மன்னராக 1886ல் பொறுப்பேற்றார்.
(Manual of pudukkottai state vol 2 part 1 பக் 854)

மன்னர் ராமச்சந்திர தொண்டைமானின் மகள் வயிற்று பேத்தியான ராஜகுமாரி ஜானகி அம்மாள் பல்லவராயர் அவர்கள், திருமலை பாலசுப்ரமணிய ரகுநாத தொண்டைமானை மணந்தார். 

மன்னர் ராமச்சந்திர தொண்டைமானின் மற்றொரு மகள் வயிற்று பேத்தியான மீனாம்பாள் அம்மனி பல்லவராயர் அவர்கள், ராஜகோபால தொண்டைமான் சாகிப் என்பவரை மணந்தார். 

மன்னர் ராமச்சந்திர தொண்டைமானின் மற்றொரு மகளான, கமலாம்பாள் ராஜாமணி ஆயி, கல்லாக்கோட்டை ஜமீனான ரங்கசாமி சிங்கம்புலியாரை மணந்தார். 

மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர் (1886-1928)

மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் எட்டாவது மன்னராக பதவியேற்றார். மன்னர் ராமச்சந்திர தொண்டைமானுக்கு ஆண் வாரிசு இல்லாததால், தனது மகள் வயிற்று பேரனான மார்த்தாண்ட பைரவ பல்லவராயரை தனது வாரிசாக தேர்ந்தெடுத்தார்.

இவர் 1915ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டு இருந்தபோது, மோலி பிங்க் எனும் ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணை சிட்னியில் திருமணம் செய்துக் கொண்டார். வெள்ளைய இன பெண்ணை நாட்டின் ராணியாக ஏற்க மக்களில் ஒரு தரப்பினரிடம் எதிர்ப்பு இருந்தது. இதனால் கிபி 1916ல் மன்னர் தன்து மனைவியுடன் ஆஸ்திரேலியாவுக்கே சென்றார். மன்னர் பதவியைவிட தனது காதலியே முக்கியம் என கருதிய மன்னர், அரியாசனத்தை துறந்தார். அனைத்து அரசாங்க பொறுப்புகளையும் தனது தம்பியான விஜயரகுநாத பல்லவராயரிடம் ஒப்படைத்துவிட்டு சமஸ்தானத்தை விட்டு வேறு தேசம் சென்று வாழத் துணிந்தார். சிட்னியில் மன்னருக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு சிட்னி தொண்டைமான் என பெயரிடப்பட்டது.

மன்னர் மார்த்தாண்ட பைரவ பல்லவராயர் பிறகு பாரிஸ் நகரில் குடிபெயர்ந்தார். அங்கு கிபி 1928 ல் மரணமடைந்தார். அவரது உடல் அங்கிருந்து லண்டன் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 

(புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, ராஜா முகமது, பக் 147)

மன்னர் ராஜகோபால தொண்டைமான் (1928-1948)


புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மற்றும் ஒன்பதாவது மன்னராக ராஜகோபால தொண்டைமான் பொறுப்பேற்றார்.

இவர் கடைசி வரை திருமணம் செய்துக்கொள்ளாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்தார். 

இவரோடு பிறந்தோரின் திருமண உறவுகளை காண்போம்

மூத்த சகோதரி கமலாம்பாள் ராஜாயி - கல்லாக்கோட்டை ஜமீனில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்

இரண்டாவதாக இராஜகோபால தொண்டைமான்( புதுக்கோட்டை கடைசி மன்னர்)- திருமணம் செய்யவில்லை

மதுராம்பாள் இராஜாயி- சிவகங்கை சமஸ்தானத்தின் மன்னர் முத்துவிஜய ரகுநாத துரைசிங்கம் அவர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். ( சிவகங்கை இராணியாக இருந்தவர், இவரது நினைவாக மதுராம்பாள் ராஜாயி நினைவு மேல்நிலைப்பள்ளி சிங்கம்புணரியில் உள்ளது)

கடைசி சகோதரி- சேத்தூர் ஜமீனில் மணம் செய்து கொடுக்கப்பட்டார்

இவர்களோடு ராதாகிருஷ்ண தொண்டைமான் மற்றும் விஜயரகுநாத தொண்டைமான் ஆகியோர் மன்னர் ராஜகோபால தொண்டைமானோடு பிறந்தவராவர்.

புதுக்கோட்டை தொண்டைமான்களும், அவர்களின் குடும்பத்தார்களும், பெரும்பாலும் ராங்கியர், சிங்கம்புலியார் மற்றும் பன்றிக்கொண்டார் குடும்பத்தாரோடு மண உறவு கொண்டுள்ளனர். புதுக்கோட்டையை 15-17 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த பல்லவராயர் வம்சத்திடமும் தொண்டைமான்கள் மண உறவு கொண்டுள்ளனர். இவர்களை தவிர காடுவெட்டியார், தென்னதிரையர், மழவராயர், சம்பட்டியார் வம்சங்களுடனும் திருமண உறவு கொண்டிருந்ததை வரலாற்று பக்கங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. சிவகங்கை, ராமநாதபுரம் மன்னர்களிடமும் புதுக்கோட்டை மன்னர்கள் மண உறவில் இணைந்திருந்தனர். 

தொகுப்பு :- சியாம் சுந்தர் சம்பட்டியார்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்