ஞாயிறு, 25 ஜூன், 2023

இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான்




இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தில் மந்திரியாக இருப்பவர் செந்தில் தொண்டைமான். இவருடைய பூர்வீகம் நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஆகும். இவருடைய பெற்றோர் பாளையங்கோட்டை மகாராஜ நகரில் வசித்து வருகிறார்கள்.




இலங்கையில் சிங்களர்களின் கடும் எதிர்ப்பை மீறி கம்பன், திருவள்ளுவர், கிருபானந்த வாரியார், பாரதியார், பாரதிதாசன் என 140 பள்ளிகளுக்கு தமிழில் பெயர்கள் சூட்டி அரசாணை வெளியீடு

இலங்கையில் இந்திய தமிழர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய, சிங்களரின் கட்டுப்பாட்டிலுள்ள மலையக பகுதியான ஊவா மாகாணத்தில் தமிழ் மாணவர்கள் படிப்பதற்காக 172 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 140 பள்ளிகளில் முழுக்க, முழுக்க தமிழ் மாணவர்கள் படித்த போதிலும் பள்ளியின் பெயர் மட்டும் சிங்கள மொழியிலேயே இருந்தது.

இவற்றுக்கு தமிழ் பெயரைச் சூட்ட வேண்டும் என கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்கள் வலியுறுத்தி வந்தனர். போராட்டங்களையும் நடத்தினர். ஆனால், ஆட்சி அதிகாரம் சிங்களர்கள் கைவசம் இருந்ததால், அவர்கள் இந்த கோரிக்கையை செயல்படுத்த மறுத்து வந்தனர். 

இந்த சூழலில், தற்போது ஊவா மாகாணத்தின் கல்வி அமைச்சராக இருக்கும் தமிழரான செந்தில் தொண்டமான், சிங்களர்களின் எதிர்ப்பையும் மீறி 140 பள்ளிகளுக்கு இந்து கடவுள்கள், தமிழ் புலவர்கள், சான்றோர் பெருமக்களின் பெயரைச் சூட்டி அரசாணையை வெளியிட்டிருக்கிறார். அதில் கம்பன், திருவள்ளுவர், கிருபானந்த வாரியார், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்டோர் பெயர்களுடன் நம்ம ஊர், வைத்தீஸ்வரன் கோயிலை நினைவூட்டும் வகையில் வைத்தீஸ்வரா தமிழ் வித்யாலயம் எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.


யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை சிதைத்து சிங்களத்தை திணிக்கும் செயலில் இலங்கை அரசு ஈடுபட்டு வரும் நிலையில், சிங்களர்கள் ஆளக்கூடிய பகுதியிலேயே, சிங்கள பெயர்களை நீக்கிவிட்டு தமிழ் பெயர்களை சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்