புதன், 15 மார்ச், 2023

குளித்தலை சோழகர்


குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் அழைக்கப்படுள்ளது. கடம்பவனம் எனும் சிற்றூர் "குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் "குளித்தலை" என்றாகியது. அன்னவாயில் கூற்றம் ஆகும்.

சோழ பேரரசில் "மீய் கோட்டு' நாட்டில் அமைந்த சிற்றூராக குளித்தலை மேட்டுமருதூர் இருந்துள்ளது. இங்குள் ஈஸ்வரன் "ஆராவமிதீஸ்வரர்' கோயில் கி.பி.996ல் முதலாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டு, கோயில் கல்வெட்டில், "சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜசேகரி' என்ற அடைமொழியுடன் மன்னன் குறிப்பிடப்படுகிறார்.  இந்த புகழ்பெற்ற  ஊரில் குளித்தலையில் சோழகர் குடும்பம் என்றால் பிரசித்தி பெற்றதாகும். 



குளித்தலையில் 1957-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற அச்சாணியாக செயல்பட்ட கள்ளர் மரபினரின் சோழகர் குடும்பம்: 

கே.ஆர். வையாபுரி சோழகர்

நான் 1957-ம் ஆண்டு குளித்தலையில் போட்டியிட்டபோது; முதலில் என்னை வரவேற்று வாழ்த்தியவர்; அந்த ஊர்ப் பெரியவர்களில் ஒருவரான வையாபுரிச் சோழகர் - அவர் பழுத்த காங்கிரஸ்காரர் - அவர் மூத்த மகன் திராவிடர் கழகம் - அவருக்கு அடுத்த மகன் தி.மு.க. - அவர்களுடைய பிள்ளைகுட்டிகள், பேரன், பேத்திகள் மொத்தம் குடும்பத்தினர் பதினைந்து பேர் இருக்கும். ஆளுக்கொரு கட்சி; அப்படியும் ஒரு குடும்பம் - எல்லாப் பிள்ளைகட்கும் தி.மு.க. பற்று என்பதாக இப்படியும் ஒரு குடும்பம். :- கலைஞர் கருணாநிதி


அமரர் திரு. M.M. சந்திரகாசன் காங்கேயர் . இ.ஆ.ப. (ஐ.ஏ.எஸ்) மனைவி குளித்தலை திரு இரத்தினச் சோழகர் மகள் ஞானாம்பாள் ஆவார்.


குளித்தலையில் சோழகர் தெரு என்று தனியாகவே உள்ளது.

கள்ளர் - கள்ளர்கள் - யார் கள்ளர் சாதியினர் - Who are the Kallars - Who are the Kallar caste

ஆங்கிலேயர்கள்,  கள்ளர்களை  சென்னை மாகாணத்தில் 1911-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆனால் இந...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்