புதன், 22 மார்ச், 2023

மாமன்னர் ஸ்ரீ சுந்தர சோழத்தேவர்


சுந்தர சோழத்தேவர் (கி.பி. 956 - 973)



அரிஞ்சய சோழன் இறந்த பின்னர் வைதும்பராயனின் மகளான, அரசி கல்யாணியின்பாற் பிறந்த அரிஞ்சய சோழனின் மகன் (இரண்டாம்) பராந்தகன் கி.பி. 957 -ல் சோழ இராச்சியத்திற்குச் இராச கேசரி என்னும் பட்டத்துடன் சக்கரவர்த்தியாய் முடிசூட்டப்பெற்றான்.

சுந்தரச்சோழனுக்கு பராந்தகன் என்னும் பெயரும் உண்டு.


பெற்றோரால் பராந்தகன் எனும் பெயர் சூட்டப்பட்ட இம்மன்னன் பேரழகனாய் இருந்தமையால் பின்னர் ‘சுந்தர சோழன்’ என்ற பெயர் பெற்றான் என அன்பிற்செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.



மூன்று வாரிசுகள்..

குந்தவை நாச்சியார்..
ஆதித்த கரிகாலன்..
அருமொழி என்னும் இராசராசன்.


இவரது ஆரம்ப மற்றும் முடிவு ஆட்சியாண்டு பற்றிய உறுதியான சான்றுகள் இல்லை. வரலாற்று ஆர்வலர்களிடையே பெருத்த கருத்து வேறுபாடு உள்ளது.

இவர் 17 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார் என்பது கல்வெட்டுச் சான்றுகளுடன் உறுதி செய்யப்படுகிறது.

இவரது காலத்தில் தொண்டை நாட்டை இராஷ்டிர கூடர்களிருந்து மீட்கும் முயற்சி வெற்றி பெற்றது.

அதே நேரம் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவர் இராசசிம்ம பாண்டியனின் மகனான வீரபாண்டியன். இவர் ஏதோ ஒரு போரில் சோழர்களை போரில் வென்றிருக்க வேண்டும்.. ( பராந்தகனின் மூன்றாம் மகனான உத்தமசீலி என்பவராக இருக்கலாம். ஒரு யூகம். ) சோழன் தலை கொண்ட பாண்டியன் என்னும் பட்டத்தை வீரபாண்டியன் கல்வெட்டுகளில் வெட்டினார்.

சுந்தரச்சோழன் மதுரை மீது கி.பி. 962 ல் படையெடுக்கிறார். வீரபாண்டியனை வென்று மதுரையை கைப்பற்றினார். வீரபாண்டியன் தோற்று பின் வாங்கினார். இவ்வெற்றியின் காரணமாக இவர் மதுரை கொண்ட இராசகேசரி என அழைக்கப்பட்டார்.

கி.பி. 966 ல் மீண்டும் வீரபாண்டியன் படை திரட்டி சோழர்களுடன் மோதுகிறார். போர் நடைபெற்ற இடம் சேவூர். இப்போரில் சுந்தரச்சோழரின் மகன் ஆதித்த கரிகாலன் பங்கேற்கிறார். போரில் வீரபாண்டியை வென்று அவரது தலையை கொய்தான். வீரபாண்டிய தலைகொண்ட ஆதித்த கரிகான் என்னும் பட்டம் பெறுகிறார். 

ஆதித்த கரிகாலனும் தந்தை சுந்தரச் சோழனுடன் இணைந்து ஆட்சி செய்திருக்கலாம். காலம் 966 - 971 கல்வெட்டுகள் இவரை வீரபாண்டியன் தலை கொண்ட கோபரகேசரி என்று கூறுகின்றன..

கி.பி. 971 ல் ஆதித்தன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.

அடுத்த இரண்டொரு ஆண்டில் சுந்தரச்சோழனும் இறந்திருக்க வேண்டும்.. இவரை பொன்மாளிகை துஞ்சினதேவர் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.




வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்