சனி, 18 மார்ச், 2023

ராஜ ராஜ சோழனுக்காக ஆகோள் பூசலில் ஈடுப்பட்ட கள்ளர்கள்.


சோழப்பெருவேந்தன் ராஜ ராஜ சோழனுக்காக ஆகோள் பூசலில் ஈடுப்பட்ட கள்ளர்கள்.



ஹொட்டூர் வீரக்கல் 

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம், பங்காபூர் வட்டத்தில் உள்ள ஹொட்டூர் எனும் ஊரில் மாண்ட ஒரு வீரனுக்காக எடுக்கப்பெற்ற நடுகல் ஒன்றில் காணப்பெறும் பழைய கன்னட எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் இராஜராஜனின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையதாகும்.




இந்த நடுகல்லான வீரக்கல்லில் உள்ள கல்வெட்டுச் சாசனத்தின் மைப்படி இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் எனும் அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர்களிடம் இருந்ததை ஆராய்ந்து கட்டுரை வரைந்த லைனல் பானட் (Lionell Barnett) என்பார் அந்த நடுகல்லின் அமைப்பு பற்றியும், கல்வெட்டின் முலம், மொழிபெயர்ப்பு, ஆய்வுக்குறிப்பு ஆகியவற்றையும் விரிவுற எடுத்துரைத்துள்ளார். அக்கல்லின் மேற்புரம் அமைந்துள்ள ஒரு தெய்வத்தின் இருபுறமும் இருவர் சாமரம் வீசி நிற்க அவைகளுக்கு கீழாக ஆறுவரி கல்வெட்டு சாசனமும்,மீண்டும் ஒரு குறுக்கு கோடிட்டு அதற்கு கீழே ஏழிலிருந்து பன்னிரண்டாவது வரிவரையிலும் கல்லெழுத்துக்கள் காணப்பெற மீண்டும் சாசனத்திற்கு கீழாக நடுவண் மாண்டவீரன் வில் அம்புடன், மூவரும் போரிடவும்,பின்புலத்தில் ஆறு பசுக்களும் காணப்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இக்கல்வெட்டு காலக்குறிப்புகளை முதலில் குறிப்பிட்டு பின்பு இராஜராஜ நித்யவிநோத ராஜேம்ந்தர வித்யாதர நூர்முடிச்சோழனின் படை எடுப்பு பற்றி குறிப்பிடுவதாகவும், அவ்வாறு குறிப்பிடப்பெறும் சோழமன்னன் அக்கல்வெட்டு குறிப்பிடும் காலகட்டத்தில் ஆட்சி புரிந்தவரும் நித்ய விநோதன் என்ற பட்டம் பூண்டவருமான முதலாம் இராஜராஜ சோழன்தான் என்றும் கூறியுள்ளார்.

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்