ஞாயிறு, 19 மார்ச், 2023

அகளங்க நாட்டாழ்வான்:




உறையூரைத் தலைமை ஊராகக் கொண்டு சோழ அரசின் ஒரு பகுதியை ஆண்டு வந்த சிற்றரசன் அகளங்கன். உறங்காவில்லி முதலியோர் இவனை அண்டிதான் வாழ்ந்தனர். இவர்கள் இராமாநுசரால் ஆட்கொள்ளப்பெற்ற பின்னர் இவர்களின் இயல்புகள் மாறிவருவதைக் கண்டான். இவர்கள் முகத்தில் சாந்தியையும் ஒளியையும் கண்ணுற்றான்.தன்னையும் உடையவரிடம் இட்டுச் செல்லும்படி வேண்ட, வில்லிகளும் அங்ஙனமே இட்டுச் சென்று செய்தியை உடையவரிடம் தெரிவித்தனர். வேடர்களை உகந்து ஆட்கொண்டிருந்த உடையவரின் கருணை வேந்தனையும் உகந்து ஆட்கொண்டது. உடனே அவனுக்குப் பஞ்சசம்ஸ்காரம் செய்வித்து அகளங்க நாட்டாழ்வான் என்ற தாஸ்ய நாமமும் வழங்கினார். இங்ஙனம் ஆட்கொண்டபின் கோயில் கைங்கரியங்களை மேற்பார்வையிடும் அதிகாரியாகவும் நியமித்தார். அரசனுக்குரிய மாட்சியைவிட இந்தப் பணியில் தனக்குக் கிடைந்தத மாட்சியே பெரிது என்று அகமகிழ்ந்தான். அகளங்கன். குலசேகரப் பெருமாளைப்போல வெற்றரசைக் கைவிட்டு வீட்டரசுக்கு வழிவகுத்துக் கொண்டு அரங்கன் பணியில் ஆழங்கால் பட்டுவிட்டான்.
















பிள்ளையார் தமிழர்களின் தெய்வமா / விநாயகர் தமிழ் கடவுளா / விநாயகர் வரலாறு

  7 ஆம் நூற்றாண்டு  திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம் வரலாற்று ஆய்வாளர் ஐயா.  மா....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்