புதன், 22 மார்ச், 2023

மாமன்னர் ஸ்ரீ அரிஞ்சய சோழத்தேவர்



அரிஞ்சய சோழத்தேவர் (கி.பி. 956 - 957)

கண்டாதிரத்தருக்குப்பிறகு பரகேசரி என்னும் பட்டத்துடன் ஆட்சிக்கு வருகிறார். இவரது ஆட்சியாண்டு, காலம் குறித்து போதுமான சான்றுகள் இல்லை. இராஷ்டிர கூடர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து இவர் போர் செய்திருக்கலாம். இவரது கால முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல் இல்லை.

வேலூர் அருகே மேற்பாடி என்னுமிடத்தில் இவருக்கு பள்ளிப்படையான நினைவாலயம் உள்ளது.



பராந்தக சோழரின் புதல்வர்களில் ஒருவரும் கண்டராதித்தருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவரும் ராஜராஜ சோழரின் பாட்டனாருமான அரிஞ்சய சோழர் ஆற்றூர் எனும் ஊரில் மறைந்துள்ளார். திருவல்லத்திற்கு அருகேயுள்ள மேல்பாடி என்று தற்போது அழைக்கப்பெறும் ஊரில் ராஜராஜர் தனது தாத்தாவிற்கு பள்ளிப்படை கோவில் எடுப்பித்துள்ளார். அந்தக் கோவில் கல்வெட்டுகளில் அவர் ஆற்றூர் துஞ்சிய தேவர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதை கீழே காணலாம்.


இவரது மகன்தான் இரண்டாம் பராந்தகன் எனப்படும் சுந்தர சோழன்.

பிள்ளையார் தமிழர்களின் தெய்வமா / விநாயகர் தமிழ் கடவுளா / விநாயகர் வரலாறு

  7 ஆம் நூற்றாண்டு  திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம் வரலாற்று ஆய்வாளர் ஐயா.  மா....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்