வியாழன், 8 ஆகஸ்ட், 2019

அம்மையநாயக்கனூர் ஐமீன்தார் கிராமக்காவல் காவல் உரிமை பெற்ற பிறமலைக்கள்ளர்கள்



கிபி 1801 ல் ஆங்கிலேயர் ஆட்சியில் பாளைக்காரர் அந்தஸ்தில் இருந்த குடும்பத்தினர் ஜமீன்தார்களாக மாற்றப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூர் ஐமீன்தார் கனகய நாயக்கர் ஆரியபட்டியே சேர்ந்த பிறமலைக்கள்ளர் இருவருக்கு கிராமக்காவல் உரிமை வழங்கியுள்ள செய்தி ஒரு செப்பு பட்டயத்தில் இடம்பெற்றுள்ளது.


கிபி 1845 ல் வழங்கப்பட்ட இந்த செப்பேட்டில் ஜமீன்தார் கனகய நாயக்கர் உட்பட 8 நாயக்கர் சமுதாயத்துடன் ஆரியபட்டியே சேர்ந்த மதுரைக்கோட்டை கருத்தவீரத்தேவர் மகன் குமாரத்தேவன் மற்றும் இராசத்தேவன் மகன் சின்ன வீரத்தேவன் ஆகிய இரண்டு பிறமலைக்கள்ளர்களுக்கு கிராமகாவல் பொருப்பை கொடுப்பதாக செய்தி உள்ளது. இவர்களுக்கு காவல் கூலியாக வீடு ஒன்றுக்கு 3 குறுணி தானியம் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் இரவு நேரத்தில் காவலை மீறி மாடு களவு போனால் 7 பொன்னும், நிலத்தில் மேய்ந்தால் 5 பொன்னும் அபராதமாக கொடுக்க வேண்டும் என்ற தகவலும் இந்த செப்பு பட்டயத்தில் தெளிவாக உள்ளது.

இந்த செப்புப்பட்டயம் திண்டுக்கல் நிலக்கோட்டையில் ஒரு பள்ளர் சமூகத்தவர் வீட்டில் வைத்திருந்தனர். இதனை ஆய்வாளர் கு.சேதுராமன் வெளிக்கொண்டு வந்தார்..

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்