வியாழன், 29 ஆகஸ்ட், 2019

சோழபாண்டி மாரியப்பர் மல்லிக்கொண்டார்



சோழபாண்டி என்னும் ஊர், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மன்னார்குடி வட்டத்தில் உள்ளது. மன்னார்குடி - முத்துபேட்டை வழித்தடத்தில், மன்னார்குடியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில், பாமணி ஆற்றின் கீழ்புறம் அமைந்துள்ளது.

நடுத்தெரு, தெற்குத் தெரு, வடக்குத் தெரு, கோலியர் தெரு என நான்கு தெருக்கள் உள்ளன. கடுக்காகாடு என்ற சிற்றூரும் சோழபாண்டியில் உள்ளது. 

சோழபாண்டி கிராமத்தில், பெருமளவில் நிலம், தோப்பு முதலியவற்றைச் சொந்தமாகக் கொண்டவர்  A .R . மாரியப்பர் மல்லிக்கொண்டார். 


இவர் சிங்கப்பூர் கள்ளர் மகாஜன சங்கத்தின் தலைவராக இருந்தவர் (1925 ). 

இவர் தனது சொந்த கிராமத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு தனது மனைவியின் பெயரில் 1927 ஆம் ஆண்டு சோழபாண்டி மீனாட்சி மாரியப்பர் மல்லிக்கொண்டார் தொடக்க பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். ஏழைகளுக்கு பல உதவிகள் அளித்தார்.




சோழபாண்டி கிராமத்தில் ராஜாளியார் பட்டம் உடையவர்கள் அதிகம் வாழ்கின்றனர். இங்கு மாணிக்க ராஜாளியார் என்ற மிராசுதாரரும் வாழ்ந்தார். 

ராஜாளியார் வீட்டு திருமண பத்திரிகை 




ஐயா. மாரியப்பர் மல்லிக்கொண்டார் வாரிசுகள் (மகள்கள்), இன்றும் அங்கு வாழ்கின்றனர். இவர்களே  பள்ளி நிருவாகம், மில் நிருவாகம் கவனத்துகொள்கின்றார். தற்போது பள்ளியின் 91 ஆம் ஆண்டு விழா நடந்தது.

பிள்ளையார் தமிழர்களின் தெய்வமா / விநாயகர் தமிழ் கடவுளா / விநாயகர் வரலாறு

  7 ஆம் நூற்றாண்டு  திண்டிவனத்தில் உள்ளஉள்களத்தை சேர்ந்த கள்ளர் உழுத்திர சயியாறு என்பவர் செய்த விநாயகர் சிற்பம் வரலாற்று ஆய்வாளர் ஐயா.  மா....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்