வியாழன், 29 ஆகஸ்ட், 2019

ஆப்கானிய இந்து அரச வம்சம்




சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்கள் ‘கொற்கை’,  ‘வஞ்சி’,  தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி .… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் நூற்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன. 



4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன. எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். 

சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம். பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.) 


இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களைஇழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். 

அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை. சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். 

எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)

தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. 

மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம். தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை - திரு. பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

திரு. பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்கள் கூறியது போல் அங்கு தமிழ் பெயரில் ஊர்கள் மட்டும் தான் உள்ளதா என்றால் இல்லை. அங்கு கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு. முன்தோன்றி மூத்த குடியாகிய கள்ளர்கள் பெயரில் ஒரு அரசாட்சியே நடந்துள்ளது. அதாவது மேலே உள்ள வரைபடத்தில் உள்ள பாண்டி, கொற்கை என்ற பகுதியில் இந்து அரச வம்சம் ஆட்சி செய்துள்ளது.

ஆப்கானிய இந்து அரச வம்சம் கள்ளரால் கிபி 800களில் தோற்றுவிக்கப்பட்டு மேற்கே ஈரானும், கிழக்கே காஷ்மீரும் தெற்கே இந்துப்பெருங்கடலுமாக பரந்து விரிந்திருந்தது. இந்தியாவில் ஆரம்பகால இடைக்கால காலத்தில் காபூல் பள்ளத்தாக்கு மற்றும் காந்தாரா (நவீனகால பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்) ஆகியவற்றின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தானின் கடைசி இந்து வம்சங்களில் இந்து ஷாஹி (879-1026) ஒன்றாகும். காபூல் பள்ளத்தாக்கு மற்றும் காந்தாராவில் இரண்டு வம்சங்கள் இருந்தன: க்ஷத்திரிய வம்சம் மற்றும் அதை மாற்றிய பிராமண வம்சம். இருவரும் ஷாஹி என்ற தலைப்பைப் பயன்படுத்தினர்.

இந்து ஷாஹி வம்சத்தின் நிறுவனர் கள்ளர் (சி 843-50) அபு ரிஹான் அல்பெருனியின் பட்டியலிலிருந்து மட்டுமே அறியப்படுகிறார். அவரது உயர்வுக்கு வழிவகுத்த துல்லியமான சூழ்நிலைகள் இன்னும் ஒரு மர்மமாகவே இருக்கின்றன. அவர் காபூல் ஷாவின் அமைச்சராக இருந்தார் (பாரசீக வரலாற்றாசிரியர்கள் துர்க் ஷாஹி ஆட்சியாளர்கள் என்று அழைக்கப்பட்டனர், ஏனெனில் காபூல் அவர்களின் தலைநகரம்) செல்வத்தைக் கண்டறிந்து, அரேபியர்கள் / பெர்சியர்களின் கைகளில் தோல்வியை சந்தித்த அவரது செல்வாக்கற்ற மன்னர் லகதுர்மனை (துர்க் ஷாஹி) பதவி நீக்கம் செய்தார். 

வெளிப்படையாக இது ஒரு சொட்டு இரத்தமும் இல்லாமல் செய்யப்பட்டது. பஞ்சாபியில் கள்ளர் என்ற சொல்லுக்கு உண்மையில் உப்புத்தன்மை அல்லது உமிழ்நீர் என்று பொருள், மேலும் இது உள்ளூர் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும் உப்பு மண்ணைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. நிறைய இடங்கள் பஞ்சாபில் கள்ளர் என்று அழைக்கப்படுகின்றன, அவற்றில் சில உப்பு மண்ணின் காரணமாக இருக்கலாம், ஆனால் மற்றவை ஆட்சியாளரையும் குறிக்கலாம். உப்பு வீச்சு அவரது பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்று நாம் முடிவு செய்யலாம்.

இந்த வம்சத்து பீம்பால கள்ளர் உருவாக்கிய கல்வெட்டு 2001இல் கிடைத்தது இந்த வம்சத்து அரசாட்சியை பற்றி கூறுகிறது.

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு தற்போது மஜார்-ஈ-ஷெரிப் என்று வழங்கும் இடத்தில் கிடைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 

According to the inscription, “the ruler Veka occupied by eight-fold forces, the earth, the markets and the forts. It is during his reign that a temple of Siva in the embrace with Uma was built at Maityasya by Parimaha (great) Maitya for the benefit of himself and his son”.

என்று இருக்கிறது என்று இதனை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Coin of the Shahi king Spalapati Deva, circa 750-900.
Obv: Bull, symbol of Shiva. Rev: King mounted on a horse.

இந்த வமிசத்தைச் சார்ந்த ஸ்பலபதி தேவர் அச்சடித்த நாணயத்தை மேலே பார்க்கிறீர்கள்.



இதே வம்சத்தை சார்ந்த சமந்த தேவரின் நாணயம் இது


Gold dinar of Kushan king Kanishka II with Lord Shiva (200–220 AD)


கள்ளர் செய்தான்



பாகிஸ்தானில் ராவல்பிண்டிக்கும், இஸ்லாமாபாத்துக்கும் இடையே 'கள்ளர் செய்தான்' Kallar Seydan செய்தான் என்று ஓரிடம் இருக்கிறது. இங்கு பசுக்களுக்குக் காவலனான கிருஷ்ணனுக்கு ஒரு கோவில் இருந்தது என்று கண்டு பிடித்துள்ளார்கள் . 






சிவன் (ஒரு முகத்துடன் சிவலிங்கம்), ஆப்கானிஸ்தான்



விநாயகர்

5 ஆம் நூற்றாண்டின் பளிங்கு விநாயகர் ஆப்கானிஸ்தானில் உள்ள கார்டெஸில், இப்போது காபூலில் உள்ள தர்கா பிர் ரத்தன் நாத்தில் காணப்பட்டார். இந்த "மகாவிநாயகாவின் பெரிய மற்றும் அழகான உருவம்" ஷாஹி மன்னர் கிங்கலாவால் புனிதப்படுத்தப்பட்டது என்று கல்வெட்டு கூறுகிறது.




கள்ளர்கள் பகுதியில் ஜல்லிக்கட்டு நடப்பதுபோல், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் காளைகளுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.



The Shahs of Shahi Shahdom with their Throne Titles

1. Kallar I (841-898), Shah of Afghanistan from 850 till 898, Brahman, known as "the Fat", The Shield of India, Vanquisher of Invaders and the founder of Shahi Empire, poisoned by the vile Prince Jagattunga Rashtrakuta.

2. Behram (871-934), Shah of Afghanistan from 898 till 934, Kshatriya, known as "the Ironside", The Kindler of Sacred Flames of Agni, the Architect of Empire and Vanquisher of Foes to East and West, killed in the battle against Persians.

3. Kallar II (934-980), Shah of Afghanistan from 934 till 980, Kshatiya, known as "the Great", Skanda Incarnate, The Defender of Empire and Vanquisher of Foes from North and South, taken to lead the armies of Gods against Rakshasas and Asuras.


Srideva alias Surendra Vikrmadiyta Nandin of Gilgit (6th–7th century)
Patoladeva alias Vajraditya Nandin of Gilgit (6th–7th century)
Kallar alias Lalliya (c. 890–895)
Kabul Kamaluka (895–921)
Bhima (921–964),
Jayapala (964–1001)
Anandapala (1001 - c. 1010),
son of Jayapala Trilochanapala (ruled c. 1010 - 1021-22; assassinated by mutinous troops)
Bhímapála (died in 1022–1026)


இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி

Inscription throws new light to Hindu rule in Afghanistan
PRESS TRUST OF INDIA

——————————————————————————–

Kolkata, Jan 4: A stone inscription in Sanskrit, recovered from the city of Mazar-i-Sharif of northern Afghanistan a few years ago, has thrown new light on the reign of the Hindu Shahi ruler `Veka’ in that country.

The recovery and significance of the inscription, telling a story of the Hindu ruler Veka and his devotion to lord `Siva’, was told by leading epigraphist and archaeologist Prof Ahmad Hasan Dani of the Quaid-E-Azam University of Islamabad at the ongoing Indian History Congress here.

If historians, preferred to revise the date of the first Hindu Shahi ruler Kallar from 843-850 AD to 821-828 AD, the date of 138 of present inscription, if it refers to the same era, should be equal to 959 AD which falls during the reign of Bhimapala”, Dani said in a paper `Mazar-i Sharif inscription of the time of the Shahi ruler Veka, dated the year 138”, submitted to the Congress.

The inscription, with eleven lines written in `western Sarada’ style of Sanskrit of 10th century AD, had several spelling mistakes. “As the stone is slightly broken at the top left corner, the first letter `OM’ is missing”, he said.

According to the inscription, “the ruler Veka occupied by eight-fold forces, the earth, the markets and the forts. It is during his reign that a temple of Siva in the embrace with Uma was built at Maityasya by Parimaha (great) Maitya for the benefit of himself and his son”.

The inscription was brought from Mazar-i-Sharif, where the tomb of Hazrat Ali, son-in-law of Prophet Mohammed is located, to Pakistan and is currently housed at the Islamabad Museum, Dani said.

Dani said “the inscription gives the name of the king as Shahi Veka Raja and bestows on him the qualification of `Iryatumatu Ksanginanka’…. and (he) appears to be the same king who bears the name of Khingila or Khinkhila who should be accepted as a Shahi ruler”.

Dani further said “he may be an ancestor of Veka deva. As his coins are found in Afghanistan and he is mentioned by the Arab ruler Yaqubi, he may be an immediate predecessor of Veka deva…… Both the evidences of inscription and coins suggest that Veka or Vaka should be accepted as an independent ruler of northern Afghanistan.

“Thus we find another branch of the Shahi ruler in northern part of Afghanistan beyond the Hindukush. Veka is said to have conquered the earth, the markets and the forts by his eight-fold forces, suggesting that he must have himself gained success against the Arab rulers of southern Afghanistan”.

Dani observed that going by the findings it seemed that during the rule of the Hindu Shahi ruler Bhimapala there was a break in the dynasty — one branch, headed by Jayapala, ruled in Lamaghan and Punjab, and another branch, headed by Veka, ruled in northern part of Afghanistan.

“The northern branch must have come to an end by the conquest of Alptigin in the second half of tenth century AD”, he said.


குறிப்பு : இன்று தமிழகத்தில் வாழும் கள்ளர்களுக்கும், ஆப்கானில் ஆட்சி செய்த கள்ளர்கள் ஓரே கால்வழியினர் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. சிந்து சமவெளியில் எப்படி தமிழர்களுக்கான தொடர்புகள் இருக்கலாம் என்ற ஆய்வை போல, இதுவும் ஆய்வுக்கு உட்பட்டதே.



வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்