புதன், 28 ஆகஸ்ட், 2019

மதுரை நாயக்கருக்கு எதிராக சிறுகுடி நாட்டு கள்ளர்கள்


மதுரையில் நாயக்கர் ஆட்சி உருவான காலத்தில் இருந்தே மதுரையை சுற்றியுள்ள கள்ளர் நாடுகள் யாருக்கும் கட்டுப்படாத தன்னரசாக செயல்பட்டு வந்தனர். மேலும் நாயக்கர்களின் அதிகாரத்தை எதிர்த்து போரிட்டும் வந்துள்ளனர்.

இதில் சிறுகுடி நாட்டு கள்ளர்களின் எதிர்ப்பும் திருமலை நாயக்கருக்கு இருந்துள்ளது என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது. சேருங்குடி நாடு என்ற பெயரே நாளடைவில் சிறுகுடி என்று மாற்றம் அடைகிறது.

கிபி 1639ல் திருமலை நாயக்கருக்கு எதிராக செயல்பட்ட சடைக்கன் சேதுபதியை அடக்க ஒரு மிகப்பெரும் படையானது இராமப்பய்யன் என்ற படைத்தலைவன் மூலமாக அனுப்பப்பட்டது.

இராமப்பய்யன் மிகப்பெரிய படைதலைவன், அனைத்து விதமான போரில் திருமலை நாயக்கருக்கு வெற்றி வாங்கி கொடுத்தவன். அப்படி பட்ட தளபதி படையெடுத்து சிவகங்கை நோக்கி செல்கின்றான். திருப்புவனம் அருகே தனது படைத்தளங்களுடன் கூடாரம் அமைக்கிறான்.

மடப்புரம் மக்கள் அவரை ஒரு பிரதிநிதியாக எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் தங்கள் வாழ்க்கையையும் சொத்துக்களையும் பாதுகாப்பற்றதாக மாற்றிய கள்ளர்களுக்கு எதிரான தங்கள் குறைகளை இராமப்பையனுக்கு தெரியப்படுத்துகின்றனர்.
(The people of Madappuram waited on him in a deputation and represented to him their grievances against the Kallars who made their lives and properties insecure.)

கள்ளர்களுக்கு எதிராக கோபமடைந்த இராமப்பையன், கள்ளர் குடியிருக்கும் பகுதியான மத்தம் சிறுகுடிக்குச் சென்று அங்குள்ள கள்ளர்களை அழித்தார். (Indignant against the Kallars, Ramappaiyan went to Mattam Cirukudi, a Kallar settlement, and destroyed it.)

கள்ளர்கள் அந்த இடத்தில் அனுபவித்ததை நாயக்க மன்னருக்கு கொடுத்து விடுகிறான். மேலும் அரசு பரிந்துரையின் பேரில், கள்ளர் பழங்குடியினருக்கு எதிரான தனது செயற்பாடுகளுக்கு இராமப்பையன் முற்றுப்புள்ளி வைத்தான்.
(Kallars of the place represented to the Naick king what they had suffered and on royal intercession, Ramappaiyan put an end to his activitics against the Kallar tribe.)


அதன் பிறகு இராமப்பையன் திருப்புவனத்திற்கு திரும்பி ராம்நாடு செல்லும் வழியில் படைகளுடன் முன்னேறினான். சேதுநாடு மீது கொண்ட யுத்தத்தில் இராமப்பையன் வெற்றி கொண்டு சடைக்கன் சேதுபதியை கைது செய்வதாக வரலாறு விரிவடைகிறது.

திருமலை நாயக்கருக்கு எதிரான கள்ளர்களின் யுத்தம் மிகவும் தீவிரமாக அன்றைய காலத்தில் இருந்தது.

கிபி 1639ல் சிறுநாட்டு கள்ளர்களின் யுத்தத்திற்கு பிறகு மேல்நாட்டு கள்ளர்கள் என்று அழைக்கப்படும் பிறமலை நாட்டு கள்ளர்களுடன் மோத வேண்டிய சூழ்நிலை திருமலை நாயக்கருக்கு இருந்தது.

மதுரை நாயக்கர் அரசுகளுடனான கள்ளர்களின் யுத்தம் ராணி மங்கம்மா காலம் வரையிலும் தொடர்ந்தை வரலாற்றில் பார்க்க முடிகிறது.

ஆய்வு : அஜித் தேவர்

Reference book : Annals Of Oriental Research, vol.6 (1941-42)

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்