கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்
வல்லநாட்டு கவிற்பா ( கவிர்பால்) - கள்ளர் அரையர்கள் - திருக்கட்டளை சிவன் கோயிலுக்கு அளித்த கொடை
கள்ளப்பால் - கள்ளன் - கற்குறிச்சி
ஊர்: புதுக்கோட்டை கல்வெட்டு
ஆண்டு : 9 ஆம் நூற்றாண்டு
மன்னர் : முதலாம் பராந்தக சோழன்
கள்ளப்பால் கவிற்பா இவ்வூர் கள்ளன் சேந்தன் குலோத்துங்கசோழ மங்கல நாடாள்வான்.
கள்ளப்பால் - கள்ளன் - கற்குறிச்சி
ஊர்: புதுக்கோட்டை கல்வெட்டு
ஆண்டு : 11 ஆம் நூற்றாண்டு
மன்னர் : குலோத்துங்க சோழத்தேவர்
புதுக்கோட்டை கல்வெட்டு
நாட்டாழ்வார்
கள்ளர்கள் காணி
ஊர்: சிவகங்கை அளகாபுரி அளகமணீஸ்வரர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு (1228)
மன்னர் : ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்
கள்ளர்நிலங்களைத் தவிர்த்து அனைத்து நிலங்களும் கிளிப்பற்றுடையாருக்கு தானமாக அளிக்கப்படுகிறது. கல்வெட்டில் கையெழுத்திட்டோர் கள்ளரில் அதளையூர் நாடாள்வார் /
முனையத்தரையர் / விழுப்பரையர் / சேதிராயர் / பல்லவரையர் / கிளிகொண்டார்
ஊர்: புதுக்கோட்டை கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் : சுந்தர பாண்டிய தேவர்
ஊர்: திருப்புவனம் அளகமணீஸ்வரர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் : ஸ்ரீ ஜடாவர்ம பராக்கிரம பாண்டியதேவர்
குளமங்கலநாட்டார் கள்ளர்களுக்கு ஊர்க்காவல் வரி
கடராத்தலைவர்
ஊர்: பர்மா பீலிக்கான்
ஆண்டு : 19 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
1861 ல் பெ. ந. குப்புசாமி கடாரத்தலைவர் கட்டிய ஸ்ரீ முனீசுவரர் கோயில்
கள்ளர்கள் / வன்னியன் / தொண்டைமான்
ஊர்: சிவகங்கை கண்டதேவி
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு
மன்னர் : சுல்தான்
ஊர்: சேலம் கல்வெட்டு
ஆண்டு : 15 ஆம் நூற்றாண்டு
அரசு :
கள்ளரைய பெரிய கரியப்பகவுண்டர், அண்ணியப்ப கவுண்டர் வழங்கிய தானம்.
கள்ளர் பெரிய தேவன், சீராளத்தேவன், விழுப்பரையன்
ஊர்: தொடையூர்
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு (1222)
அரசு : மூன்றாம் இராஜராஜன்
கிபி 1222ல் மூன்றாம் இராசராச சோழர் காலத்தில் தொடையூரைச் சேர்ந்த நால்வர்களான கவுசியன் கண்ணன் பட்டன், கவுசியன் திருவரங்கமாளி பட்டன், சூரியதேவ பட்டன், வாச்சியன் என்போர் நத்த நிலங்களை 10,300 காசுக்கு, கள்ளன் சதுரநான மழை நாட்டு விழுப்பரைருக்கு விற்றுக் கொடுக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த ஒப்பந்த கல்வெட்டில் தனது கையெழுத்தாக “கள்ளன் சதிரனான மழை நாட்டு விழுப்பரையன்” என்றே குறிப்பிட்டுள்ளார்.
கல்லன் / கள்ளன் என்பது ஒன்றே. கல்வெட்டில் தேவர், தெவர் என்றும் சிங்களர் , சிங்கழர் என்று குடில் நெடில் மாறி வரும்
ஊர்: மதுரை அழகர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
மன்னர் :
ஊர்: மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு
மன்னர் : மரட்டிய மன்னர் பிரதாப் சிங் காலம்
இராமலிங்க விசையதேவர் அவர்கள் செயங்கொண்டநாதர் அர்த்தசாம பூசைக்காக 46 பொன் இராசகோபால சக்கரத்தை மூலப்பொருளாக வழங்கியிருக்கிறார்.
திருமாஞ்சோலைச் செப்பேடு
ஊர்: திருப்பனந்தாள்
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு (1736)
அரசு : விசயதேவர்
ராசஸ்ரீ இராமலிங்கம் விசையாத் தேவரவர்கள் காசியில் அன்னதானக் கட்டளைக்காகக் காசிமடத்து அதிபர் தில்லைநாயகத் தம்பிரான் அவர்களிடம் திருமாஞ்சோலை என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது.
ஊர்: கடத்தூர்
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு ( ஹிஜிரி 769)
அரசு : சுல்தான்கள்
மதுரை சுல்தான்கள் ஆட்சி காலத்தில் உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் உள்ள கடத்தூர் எனும் பகுதியில் காங்கயநாட்டு முத்தூர் கோயில் பிராமணர்கள் அனுப்பிய ஒலையில் இக்கட்டான அந்த காலத்தில் கோயிலை காக்க கள்ளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுல்தான்களின் கொடுங்கோல் ஆட்சியில் கோயில்களையும் மக்களையும் காக்க கள்ளர்களை மக்கள் சரணடைந்ததற்க்கு இந்த கல்வெட்டு ஒர் சிறந்த எடுத்துக்காட்டு.
கள்ளர் காவல்
ஊர்: திருக்குன்றக்குடி
ஆண்டு : 14 ஆம் நூற்றாண்டு (1377)
அரசு : விருப்பண்ண உடையார் காலம்
விசயநகர மன்னர் காலத்தில் , திருக்குன்றக்குடி மக்கள் " கள்ள வேளைக்காரர் " என்பவரிடத்தில் சரணடைந்து தங்களது ஊரை காத்து வருமாறு காவல் உரிமை அளித்து அவருக்கு சிறப்புகள் செய்துள்ளனர். அவருக்கு மக்கள் அளிக்க வேண்டிய சலுகைகள் பற்றியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊர்: புதுக்கோட்டை, நெயவாசல்
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு (1222)
அரசு : வீரசுந்திரபாண்டிய தேவர.
வெண்ணெய்நல்லூரை சேர்ந்த கூத்தன் தில்லை நாயகன் என்பவன் திருத்தியூர் முட்டத்தாரான வண்டாங்குடி கள்ளர்களிடமிருந்து வண்டாங்குடியையும் அதன் சுற்றுபுறமுள்ள நிலங்களையும் காராண் கிழமையாய் விலைக்கு கொண்டுள்ளார்
ஊர்: மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1645)
அரசு : திருமலை நாயக்கர்
திருமலை பின்னத்தேவருக்கு வழங்க வேண்டிய மரியாதைகள்
ஊர்: மதுரை
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு (1642)
அரசு : திருமலை நாயக்கர்
ஊர்: மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டு
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு
மன்னர் : மரட்டிய மன்னர் பிரதாப் சிங் காலம்
ஸ்ரீசவாய் விஜயரகுநாத வாளாசி கிருஷ்ணக்கோபாலர்" மன்னார்குடி ஜெயங்கொண்டநாத ஸ்வாமி கோயிலுக்கு இறையிலியாக அக்கோயிலின் இறைவனுக்கு காலைச்சந்திக்கு நாள் ஒன்றிற்கு இரண்டு பணம் வீதம் ஆண்டிற்கு 720 பணம் என்ற கணக்கின் கீழ் 72 பொன் ராசகோபால சக்கரமும், வெள்ளிக்கிழமைகளில் வரும் சுக்கிரவாரகட்டளைக்காக மாதமொன்றிற்கு 6- பணம், 1-பொன், ஆகமொத்தம் வருடமொன்றிற்கு 19 பொன், இரண்டு பணமும் அளித்துள்ளார், இதே மன்னரின் மற்றொரு 1760 ஆம் ஆண்டைச் சேர்ந்த செப்பேட்டில் சாயரட்சை வழிபாட்டிற்காக {மாலைநேர பூஜை} ஆண்டிற்கு 40 பொன் வழங்கியமையையும் அறியமுடிகிறது
சிங்கவனம் குறுநில மன்னர் மெய்க்கண் கோபாலர்
ஊர்: திருவாவடுதுறை
ஆண்டு : 18 ஆம் நூற்றாண்டு ( 1729)
மன்னர் : மரட்டிய மன்னர் முதலாம் துளசா
ஆதீனச்செப்பேடு : சவ்வாய் விசைய ரகுநாத வாளாசி கிருட்டிண கோபாலர்" மிழலைக் கூற்றம் திருப்பெருந்துறை பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலம் ஆளுடைய பரம சுவாமிகளுக்கும், அம்மன் சிவயோக நாயகிக்கும் அளித்த நிலக்கொடை இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
"ஸ்ரீசவ்வாயி விசைய ரகுநாத வாளோசி கிருட்டிண கோபாலர்" அவர்களின் குடிக்காணியான கோயில்கோட்டை மாகாணத்தைச் சேர்ந்த சிறுபனையூரில் நிலம் கொடையாக அளிக்கப்பட்டது. அந்நிலத்திற்கு நான்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன
சிங்கவனம் குறுநில மன்னர் மெய்க்கண் கோபாலர்
ஊர்: சிங்கவனம்
ஆண்டு :
மன்னர் :
ராமர் கோயில் கல்வெட்டில் மெய்க்கண் கோபாலர்
ஊர்: தஞ்சாவூர் கல்வெட்டு
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
மன்னர் : இரண்டாம் மராட்டிய அரசர் சாசி
ஊர்: திருப்பழனம் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (921)
அரசு : முதலாம் பராந்தக சோழன்
திருப்பழனம் கல்வெட்டில் " கோனாட்டு கொடும்பாளூர் கள்ளன் ஆச்சப்பிடாரி" என்பவர் குறிப்பிடப்படுகிறார். இவர் புதுக்கோட்டை கொடும்பாளூரை ஆட்சி செய்த வேளிர் குல அரச மரபினர் ஆவார்.( கல்வெட்டு: 140/1928)
ஊர்: திருப்பழனம் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு
அரசு : முதலாம் பராந்தக சோழன்
திருப்பழனம் கல்வெட்டில் "கோனாட்டு உறத்தூர் கூற்றத்து கொடும்பாளூர் கள்ளன் ஆதித்தபடாரி " என கொடும்பாளூர் அரச குலத்தவர் குறிப்பிடப்படுகிறார். ( கல்வெட்டு 345/1902)
ஊர்: புதுக்கோட்டை கொடும்பாளூர் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (956)
அரசு : சுந்தர சோழன்
கொடும்பாளூர் கல்வெட்டில் " மதுராந்தகன் சுந்தர சோழன் வேளத்து பெண்டாட்டி கள்ளச்சி உத்தம" என குறிப்பிடுகிறது.
ஊர்: திருச்சி, திருநெடுங்களம் திருநெடுங்களநாதர் கோவில் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (926)
அரசு : முதலாம் பராந்தகச் சோழன்
திருநெடுங்களநாதர் கோவிலுக்கு பகல் விளக்கெரிக்க, குழித்தண்டலை வாச்சிய கோத்திரத்து முருகன் என்பவர் 45ஆடுகளை தருகிறார். அடிகளை ஏற்றுக் கொண்டு விளக்கெரிக்க ஒப்புதல் அளிப்பவர் எயில் நாட்டைச் சேர்ந்த அட்டுப்பள்ளி நியமத்து கள்வன் உலங்கண் ஆவார்.
ஊர்: வட ஆர்காடு சாணங்குப்பம் கல்வெட்டு
ஆண்டு : 9 ஆம் நூற்றாண்டு (899)
அரசு : கம்பவர்மன்
பல்லவர் காலத்தில் வெட்சி போரான,விண்டபாடி கள்ளர்கள் ஆநிரைகளை கவர்ந்து சென்றது.
ஊர்: ஆனைமங்கலம் கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (911)
அரசு : முதலாம் பராந்தக சோழர்
ஆநிரை கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்கச் சென்ற கரந்தை கள்ளருக்கு எழுப்பிய நடுகல்.
ஊர்: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கல்வெட்டு
ஆண்டு : 17 ஆம் நூற்றாண்டு
அரசு : தொண்டைமான்
கள்ளர் ஆநிரை கவர்தல்
ஊர்: வட ஆர்காடு செங்கம் தாழையுத்து கல்வெட்டு
ஆண்டு : 10 ஆம் நூற்றாண்டு (930)
அரசு : முதலாம் பராந்தக சோழர்
கள்ளர்கள் ஆநிரைகளை கவர்ந்து சென்றது
#மழவராயர்