வியாழன், 12 செப்டம்பர், 2019

ராஜபூசனம் மண்ணையார்


அண்ணாமலை மண்ணையார், கல்யாணி அம்மாளுக்கும் அம்மாப்பேட்டைக்கு அருகில் உள்ள கம்மந்தங்குடி என்னும் கமுகஞ்சேந்தகுடியில் பிறந்தவராவார். தொடக்கக் கல்வியை அம்மாப்பேட்டையில் திண்ணைப் பள்ளியில் ஆரம்பித்தார். பின்னர் அம்மாப்பேட்டை உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுப்பெற்று குடந்தை அரசினர் கல்லூரியில் பி.எஸ்.சி கணித பாடத்தில் பட்டமும் பெற்றார். சென்னை தலைமை செயலகத்தில் உதவியாளராகவும், மாநிலத் தேர்வாணை தலநல நிதிக் கணக்குத் துறையிலும்,பின்னர் தமிழ்நாட்டு மின்சார வாரியத்தில் உதவியாளராக சேர்ந்து தன் முயற்சியின் மூலம் படிப்படியாக பதவி உயர்வுகள் பலபெற்று துணைச்செயலாளராக பதவி வகித்து 1994ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 




ஓய்வுக்குப் பின்னர் இராசராசன் கல்விப்பண்பாட்டுக் கழகத்தில் இனைந்து முக்குலத்துச் சாதனையாளர்களையும், அறிஞர்களையும் நேர்காணல் செய்து கழக செய்தி மலரில் வெளியிட்டும் வந்தார். ஞானகுரு வேணுகோபால சுவாமிகளை தனது குருவாக ஏற்று அவர் வழி பின்பற்றி தம்நேரத்தை தியானம்,ஆன்மீகம்,மெய்ஞ்ஞானம் ஆகியவற்றில் ஈடுபடுத்தி வந்தார். இதனிடையே கள்ளர் குலம்பற்றிய ஒரு நூல் எழுதவேண்டும் என்ற நோக்கில் பல்வேறு குறிபுகள்,புத்தகங்கள், கல்வெட்டு சம்பந்தமான நூல்கள், தொல்பொருள் ஆய்வு நூல்கள் என பல்வேறு நூல்களையும் வாங்கியும், படித்தும் தனது வாழ்க்கையின் இறுதி நாட்களில் கள்ளர் குல வரலாறு என்னும் சீர் மிகு நூலையும் வெளியிட்டுள்ளார்

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்