வெள்ளி, 5 ஜூன், 2020

காடுவெட்டியார் வரலாறு



இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார் சென்னை துறைமுக கழகத்தில் உதவிக் கிடங்கு அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பின்னர் அரசியல் மற்றும் சமுதாய பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வந்தார்.

முக்குலத்தோர் சங்க மாநில பொதுச் செயலாளர் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார், தற்போது அகில இந்திய முக்குலத்தோர் பாசறை பொதுச் செயலாளராகவும், மூவேந்தர் பண்பாட்டுக் கழகத்தின்  மாநில பொதுச் செயலாளராகவும், இராஜராஜன்  கல்வி பண்பாட்டுக் கழகத்தின் மாநில ஆலோசகராகவும் அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் பொறுப்பில் இருந்து வருகிறார்.

‘கள்ளர் இன முழக்கம்’ எனும் மாத இதழையும் நடத்தி வந்தார். பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளிலும் ஆர்வமுடன் செயல்பட்டு வந்தார்.  ஏராளமான சமூக, அரசியல் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

அவருடைய மனைவி ராஜலெட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகி விட்டார். இவருடைய வளர்ப்பு மகன் சதாசிவம் அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

அகில இந்திய முக்குலத்தோர் பாசறை பொதுச் செயலாளர்  இராம.சுப்பிரமணிய காடுவெட்டியார் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 06.05.2020 காலை அவர் உடல் நிலை மிகவும் மோசமடைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 83.







கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்