செவ்வாய், 3 டிசம்பர், 2019

கரிமேடு கருவாயன் வரலாறு (கருவாயத்தேவர்)



சோழவந்தான் பகுதியில் எடுக்கப்பட்டு, நடிகர் திரு.விஜயகாந்த் நடிப்பில் 1986ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கரிமேட்டு கருவாயன். கருமாத்தூர் மூனு சாமியை குலதெய்வமாக கொண்டவர் கரிமேட்டு கருவாயத்தேவர்.  கவட்டை (கவண்) பயன்படுத்துவதில் வல்லவர்.



சோழவந்தானில்,  தற்போது தெற்குத்தெருவில் அரசஞ்சண்முகனார் நூலகத்தின் அருகில் உள்ள சந்தில் நுழைந்து பழைய கீரைத்தோட்டம் அருகில் பாலன் தியேட்டரில் பிடித்ததாகவும், பிறகு போலீசார் அங்கேயே சுட்டு கொன்றார்கள்.  அவர் இருந்து வந்த தென்னந்தோப்பு, கிணறு ஆகியன இன்றும் தென்கரை (கருவாயன் தோப்பு) மற்றும் RC பள்ளி பகுதியில் உள்ளன. 

திரைப்படங்களாக வெளிவந்த மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன் போன்றவர்களின் வாழ்க்கை அந்தப் படங்களில் இடம்பெற்ற ஒரே பாடலின் மூலம் நாம் அறிந்துகொள்ளும் நிலையில் பாடப்பட்டிருக்கிறது.

திரை இசையமைப்பாளர் இளையராஜா கிட்டத்தட்ட ‘கொலைச்சிந்துப்’ பாடல் முறையிலேயே அந்தப் பாடலுக்கு இசைக்கோர்வை செய்திருக்கிறார். கரிமேடு கருவாயன் திரைப்படத்தில்,

கதகேளு கதகேளு

கரிமேட்டுக் கருவாயன்

கதகேளு கதகேளடி ……

………உண்மையில அவங்கள்ளனில்ல

மதுரஜில்லாவுக்கே அவன் செல்லப்புள்ள

………………………………………..

சர்க்காரு சொன்னாங்க அவனோ கொலயாளி

சனங்கள்ளா சொன்னாங்க அவனே கொடையாளி

அவனே தேடித்தேடி தினமும் பாடிப்பாடி

வாய்க்காலா ஓடுதாம் வைகை நதி ………

என்று கரிமேடு கருவாயனது வாழ்க்கையைக் ‘கொலைச்சிந்துப்’ பாடல் போலவே பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



அடி கத கேளு கத கேளு... ( இசை )

கருவாயன் கத கேளு...

இசை பல்லவி

அடி கத கேளு கத கேளு
கரிமேட்டுக் கருவாயன்  கத கேளு கத கேளடி
கரிமேட்டுக் கருவாயன்  கத போல
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி
கட்டுக் கதை இல்ல ஒட்டுக் கதை இல்ல
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு
வைகை நதிக் கர ஓரத்துல
அன்று வாழ்ந்து செயிச்சவன் வரலாறு

கத கேளு கத கேளு
கரிமேட்டுக் கருவாயன்  கத கேளு கத கேளடி

இசை சரணம் - 1

உண்மையில அவன் கள்ளனில்ல...
யா யா யா ஆ
உண்மையில அவன் கள்ளனில்ல
மருத சில்லாவுக்கே அவன் செல்லப் பிள்ள
சொந்தம் ஒரு ஆள் இல்ல பந்தம் அது தான் இல்ல
மலையும் மரமும் தவிர யாரும் இல்ல
தங்கச்சிய பண்ண கற்பழிச்சான்
அவன் ரத்தத்துல இவன் கொப்பளிச்சான்
இன்னும் பழி வாங்காது கண்ணில் இம காயாது
எனவே இவனே சிவனா ஆரம்பிச்சான்
சட்டத்தில் சொன்னாங்க அவனோ கொலையாளி
சனங்கெள்ளாம் சொன்னாங்க அவனோ ஒடையாளி
அவனத் தேடித் தேடி வனத்தில் ஓடி ஓடி
புண்ணாகிப் படுத்திச்சாம் போலீஸ் பூலு

கத கேளு கத கேளு... கத கேளு கத கேளு
கரிமேட்டுக் கருவாயன்  கத கேளு கத கேளடி

இசை சரணம் - 2

தென்ன மரத்துல படுத்திருப்பான்
ஆனா பூமியில கண்ண வெச்சிருப்பான்
கவட்ட வில்லும் உண்டு கையில் ஒரு வில்லுண்டு
வில்லால் அடிச்சு எதையும் விழுக வெப்பான்
கன்னி கழியாத காளியம்மா
இந்தக் கருவாயன் மேல தான் காதலம்மா
மாலை எதும் சூடாம தாலி எதும் இல்லாம
கடைசி வரையில் இருந்தா சாவியம்மா
சுகம் ஏதும் காணாம வெயிலில் சருகானாள்
இல்லாத ஊருக்கு இவளே வழி ஆனாள்
இன்னும் சொல்லப் போனா இளம வீணா போனா
கருவாயன் கட்டைக்கு வெறகா போனா

கத கேளு கத கேளு... கத கேளு கத கேளு
கரிமேட்டுக் கருவாயன்  கத கேளு கத கேளடி

இசை சரணம் - 2

நன்ம செஞ்சா ஊரில் யாவருக்கும்
அந்தப் பாற மனசுல நீர் இருக்கும்
ஆகான்னு கருவாயன் பேர யார் சொன்னாலும்
கருவில் இருக்கும் பிள்ள கையெடுக்கும்
பாவிப் பயல்கள வேரழிச்சான்
அந்தப் பண்ண குடும்பத்தில் நீர் தெளிச்சான்
மானம் பிரதானம் தான் நானும் கரிகாலன் தான்
இவனே சிங்கம் என்றே பேரெடுத்தான்
தெக்கத்துச் சீமைக்கு அவனே அதிகாரி
தென்பாண்டி மன்னன் தான் வந்தான் உரு மாறி
அவனை எண்ணிக் கொண்டு
நெஞ்சில் சோகம் கொண்டு
வாய்க்காலா போகுது வைகை நதி

கத கேளு கத கேளு... கத கேளு கத கேளு
கரிமேட்டுக் கருவாயன்  கத கேளு கத கேளடி
அந்த கரிமேட்டுக் கருவாயன்  கத போல
இனி இந்தப் புவி ஏழும் கெடையாதடி
கட்டுக் கதை இல்ல ஒட்டுக் கதை இல்ல
கண்டு கேட்டு வந்தோம் ஒருவாறு
அந்த வைகை நதிக் கர ஓரத்துல
அன்று வாழ்ந்து செயிச்சவன் வரலாறு

கத கேளு கத கேளு
கரிமேட்டுக் கருவாயன்  கத கேளு கத கேளடி


மதுரை கரிமேடு அருள்மிகு கல்கத்தா காளியம்மன் திருக்கோவில் 85 ம் ஆண்டு உற்சவ திருவிழா





வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்