வியாழன், 12 டிசம்பர், 2019

கொடும்பாளுர் இருக்குவேளிர் வம்சம்



சிலப்பதிகாரத்தின் காலத்திலிருந்தே கொடும்பாளுர் நகரம் ‘கொடும்பை’ என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்திருக்கிறது. இருக்குவேளிர் குலத்தின் முக்கிய நகரமாக இருந்த இது பழங்காலத்தில் ‘இருக்குவேளூர்’ என்ற பெயர் கொண்டிருந்திருக்கிறது. கொடும்புறார் மற்றும் இருக்குவேள் என்ற பட்டப்பெயர்களில் இன்றும் அந்தப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தோழர் என்.வெங்கடாசலம் கொடும்புறார் குறிப்பிடத்தக்கவர்.

கொடும்பாளூர் வேளிர் குலத்தரசர்களான கள்ளர்கள் - Indian council of historical research


கொடும்பாளூர் ராயர் காலப்போக்கில் கொடும்புராயர், கொடும்புறார் ஆகிவிட்டது. வேளிர் என்பது இன்னாளில் வேளார் ஆகி இருக்கிறது. பேராவூரணி பக்கம் வேளார் பட்டமுடைய கள்ளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த இருக்குவேளிர் அரச வம்சம் பிற்கால பல்லவர் ஆட்சியின் தொடக்க காலத்திலும் கொடும்பாளுர் பகுதியை ஆட்சி புரிந்து வந்துள்ளனர். பல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் கி.பி.642ல் வாதாபி நகர் மீது படையெடுத்த பொழுது கொடும்பாளுர் வம்சத்தை சேர்ந்த செம்பியன் வளவன் என்பவன் பல்லவனுக்கு உதவியாக போர்ப் புரிந்தான் என்ற குறிப்பு கல்கி குறிக்கிறார்.


எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளிள் பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களின் ஆதிக்க போட்டிகள் சோழ மண்டலத்தில் அதிகரித்தன. ஆகவே இருக்குவேளிர்கள் மெல்ல பலத்தை அதிகரித்துக் கொண்டுவந்த சோழர்களுடன் நட்புறவு கொண்டனர். ஒன்பதாம் நூற்றாண்டில் (880 AD) திருப்புறம்பியத்தில் நடைபெற்ற போரில் சோழர்கள் பல்லவர்கள் உதவியுடன் பாண்டியர்களை முறியடித்த பிறகு கொடும்பாளுர் அரசர்கள் சோழ அரசுடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.

முதலாம் பராந்தக சோழர் தான் பிற்கால சோழர் சாம்ராஜ்ஜியத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். ஏனென்றால் இவர் கிபி907ஆம் ஆண்டு மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனான வறகுண பாண்டியனை வீழ்த்தி சோழர்களின் புலிக் கொடியை கன்னியகுமரி வரை பறக்க விட்டர். மதுரைக்கு படையெடுத்து சென்று பாண்டியர்களை வீழ்த்தியது யாரென்றால் பராந்தக சோழரின் முதன்மை தளபதியான தென்னவன் இளங்கோவேள் தலைமையில் வறகுணபாண்டியனின் தலையை கொய்து புலிக்கோடியை குமரி வரை கோலோச்ச வித்திட்டவர். 

அதன்பிறகு கொடும்பாளுர் இருக்குவேளிர் வம்சம் திருமண உறவுகள் மூலம் சோழ அரசுடன் தமது உறவை வலுப்படுத்திக் கொண்டனர். கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கோவேள் என்பவரின் மகள் கள்ளன்ஆதிச்ச பிடாரி (கொற்றவையை குறிக்கும் சொல்) என்பவளைப் முதலாம் பராந்தகனின் மகன் அரிகுலகேசரி திருமணம் செய்து கொண்டார்.

அதற்கு பின்பு கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் சோழர்களுடன் முழுமையாக கரைந்து விட்டார்கள்.


இருக்குவேளிர் ஆதித்த முனையதிரியர்




கற்றளி பிராட்டியை நேரிடையாகவே கள்ளச்சினு குறித்துள்ளார்கள். "வெளத்துப் பெண்டாட்டி கள்ளச்சி உத்தம த..... றந்தான் ஆன ....பூதி பட்டலாகன் "







இவள் சுந்தரசோழனின் வேளத்தில் இருந்தவள். இம் மங்கை கற்றளிப் பிராட்டியார் என்பதற்கு சான்றாக இந்த கல்வெட்ட மேற்கோள் காட்டியுள்ளார்கள். விக்கிரமகேசரியின் மனைவி கற்றளி சுந்தரசோழனின் துணை என்று வேளத்து பெண்டாட்டியை மேற்கோள் காட்டுகின்றனர்





கள்ளன் அச்ச பிடாரி, கள்ளர் நங்கை, மும்முடிசோழன் இளங்கோவேளாயின ஆதித்தன் முனையத்தரையன்.
இங்கு ஆதித்த முனையத்தரையன் இருக்குவேளிராக வருகிறார். திருமங்கை ஆழ்வார் தன்னை முனையத்தரையர் என்று பதிவு செய்துள்ளார். முனையத்தரையர் பட்டம் இன்றும் கள்ளர் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

எகா: டிடிவி தினகரனுக்கு முனையத்தரையர் பட்டமே. அதுமட்டுமில்லாமல் இன்றும் கொடும்பாளூரை சுற்றியும், ஊரிலும் கொடும்புரார், இருங்களர், இருக்குவேள், முனையத்தரையர் பட்டத்தோடு வாழ்ந்து வருகிறார்கள்.





கள்ளன் ஆச்சபிடாரி, கள்ளன் அச்சபிடாரி, கள்ள நங்கை, வேளத்தில் இருந்த இருக்குவேளிர் மங்கை, அந்த இருக்குவேளிர் மூலமாக வந்த வல்லாளத்தேவர். அவர் பெயரை இன்றும் தாங்கும் மேலூர் மற்றும் தஞ்சை கள்ளர்.













கொற்றம் பூதி 









கள்ளர் பட்டங்கள் 














நன்றி
சோழர்கள் வரலாறு போற்றுதலுக்குரிய ஐயா நீலகண்ட சாஸ்த்திரி
மற்றும் தொல்லியல் துறை

அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்