புதன், 25 டிசம்பர், 2019

SR.தமிழன் தேவர் . MA, LLB



தேனி மாவட்ட மயிலாடும்பாறை அருகில் உள்ள கோரையூத்து என்ற கிராமத்தில் திரு.செவ்வாலைராஜா அவர்களின் மூத்த மகனாக பிறந்த தமிழன் சிறுவயது முதலே தனது கிராம விளையாட்டு குழுக்களுக்கும், தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கும் தலைவனாக செயல்பட்டவர். சிறுவயது முதலே சமுதாய மீது மிகுந்த அக்கறை கொண்டவராக  விளங்கினார்.

இவரது தந்தை 
நடிகர் செவ்வாழை ராசு



MA படிப்பினை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முடித்தவர் பின்பு தனது சட்ட படிப்பினை பெங்களூர்வில் தொடங்கினார். இதற்கிடையே தனது சமுதாய சமூக பணிகளை தொடங்கும் பொருட்டு தேனி மாவட்ட பிரமலை கள்ளர் சங்கத்தில் இணைந்து அச்சங்க செயல்படுகளில் திறன்பட மேற்கொன்டு அச்சங்க உறுப்பினர்களிடமும் நன்மதிப்பினை பெற்று, சங்கத்தின் பல்வேறு நிர்வாக பொறுப்புகளை வகித்தார்.

தேனி மாவட்ட பிரமலை கள்ளர் சங்கத்தினை தேனி மாவட்ட முழுவதும் பரவியிருக்கிற கள்ளர் சமுதாய மக்களை ஒருங்கிணைத்து சங்கத்தினை வளர்ச்சி பாதைக்கு இட்டுசென்றார். இது இவரின் அரசியல் பணிக்கு அடித்தளம் அமைத்தது, இதை தொடந்து 2006 ல் BT அரசகுமாரின் திராவிட விழிப்புணர்ச்சி கழகத்தில் இணைந்த SR. தமிழன் அக்கட்சியின் தேனி மாவட்ட செயலாளரக நியமிக்கபட்டார். 

பின்பு 2009 ல் தனது கட்சியினை சேர்ந்த ஆயிரம் மேற்பட்டோருடன் அகிலஇந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தமிழ் மாநில பொதுசெயலர் PV. கதிரவன் முன்னிலையில் பார்வர்டு கட்சியில் இணைந்து தனக்கே உரித்தான பாணியில்யில் திறன்பட செயல்பட்டு பார்வர்டு பிளாக்கினை தேனி மாவட்டம் முழுவதும் பரவ செய்தார். 2010 ல் இவரின் அதீத தீவிரசெயல்படுகளை பார்த்த மாநில தலைமை தேனி மாவட்ட பொது செயலாளராக நியமித்தது. இதனை தொடர்ந்து இவரின் செயல்பாடுகளினால் தேனி மாவட்டத்தில் கிட்ட தட்ட. எல்லா கிராம நகர்ப்புறங்களில் புலி கொடி பட்டொளி வீசி பறக்க தொடங்கியது. 

2011-ல் பல ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட மாநாட்டினை சிறப்பாக நடத்தினார். இந்தமாநாட்டு நிகழ்வுக்கு பின்பு தேனி மாவட்ட தேவரின மக்களின் கவனம் இவர் மேல் முழுவதும் திரும்பியது. தொடர்ந்து இவர் தனது துடிப்பான கட்சி  பணிகளால் மாநில இளைஞரணி செயலாளராக 2012 ல் நியமிக்கபட்டார். பின்பு 2013 சென்னையில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். தொடந்து தேனி மாவட்டம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி நகரம் ஒன்றிய தொகுதி செயலாளர்களை நியமித்து கட்சியினை பலப்படுத்தினார். 

இவரின் இச்செயல்பாடு தேனி மாவட்ட திராவிட கட்சிகளுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் தேவரின சமுதாய மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் எந்த நேரமாக இருந்தாலும் நேரடியாக வந்து, அதை சரிசெய்து வைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு தேவரின இளைஞர்களின் நல்ல வரவேற்பினை பெற்றார். அது மட்டுமில்லாமல் தேனி மாவட்ட பொதுமக்களின் வாழ்வாதார  ஆக்கபூர்வமான, அடிப்படை பிரச்சனைகளை தனக்கே உரித்தான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

பொதுமக்களுக்கு அதிகம் பயன்படும் மருத்துவம், குடிநீர், சாலைகள், விவசாயிகளின் பிரச்சனைகள், முல்லைபெரியார் பிரச்சனைகள் மற்றும் கேரளா தமிழ்ர்களுக்கான அதரவு போராட்டங்கள் ஆகிய பல்வேறு மக்கள் அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி தனது அரசியல் பணிகளை மேற்கொண்டார். இவரின் வளர்ச்சியினை கண்டு சீரணிக்க முடியாத அரசு இவர் மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டு, சிறையில்  அடைத்தது. இவரது கைதை அறிந்த 2000 மேற்பட்ட பொதுமக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பினை காட்டினார், அதனால் 7 நாட்களில் விடுதலை செய்யபட்டார். பின்பு இவரின் மக்கள் நல போராட்டங்கள் தேனி மாவட்ட முழுவதும் அதிதீவிரமாக செயல் படுத்த தொடங்கினர் . பார்வர்டு பிளாக் கட்சி மட்டுமல்லாமல் தேனி மாவட்ட இடதுசாரி கட்சிகள் நாம்தமிழர், தேமுதிக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட அரசியல் கட்சிகள் பல சமுதாய அமைப்புகள் முன்னெடுக்கும் மக்கள் அடிப்படை பிரச்சனைகளுக்கு, இவர் அவர்களுடன் இணைந்து களம் கண்டார், இதனை தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களிடையே ஒரு இணக்கமான சமத்துவ சூழ்நிலை உருவானது. 

தேனி மாவட்டத்தில் அனைத்து சமுதாய ஆதரவு பெருகியது, இதை பொறுத்து கொள்ளமுடியாத பலர் தொடர்ந்து இவரின் கட்சி மாநில பொதுச்செயலாளர் மூலமாக. இவர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது, இதை மீறி தனது மக்கள் நலபோராட்டங்களை தொடர்ந்ததின்  விளைவாக, கட்சியின் பொதுச்செயலர் அனைத்து பெறுப்புகளில் இருந்து நீக்கியாதாக அறிவித்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து கட்சியின் தமிழ் மாநில தலைவர் PKM. முத்துராமலிங்கம், தமிழக பொதுச்செயலர் தன்னிச்சையாக. SR.தமிழனை நீக்கியது செல்லாது என அறிவித்தார் இந்த உட்கட்சி மோதல்கள் இடையே கல்கத்தாவில் நடைபெற்ற மத்திய குழுவின் கூட்டத்தில் தீர்வு காணப்பட்டு SR தமிழன் நீக்கம் செல்லாது என மீண்டும் அறிவிக்கபட்டது. 

கூட்டத்தினை வெற்றியுடன் முடித்துவிட்டு பெங்களூரில் தங்கியிருந்த. SR.தமிழன் 26.12.14 அன்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஒரு மக்கள் நல தொண்டன் மறையா புகழினை நாம் போற்றுவோம்


இவண்: கல்வித்தந்தை பி.கே. மூக்கையாத்தேவர் அறக்கட்டளை

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்