புதன், 27 மார்ச், 2019

கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மன் C. A. வெள்ளையன் தேவர்



கொடைக்கானலில் போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது.

கொடைக்கானல், மூணாறு ஆகிய இரண்டு ஊர்களுக்கு சாலை போடப்பட்டது. அந்த சாலை போடும் பணியை கொடைக்கானலுக்கு மானூத்து கோயிலை தங்களது குலமரபு கோயிலாக வணங்குகின்ற C. A. வெள்ளைய தேவருக்கும், மூணாறுக்கு A.S. சுப்பன் செட்டியாருக்கும் வழங்கப்பட்டது.

கொடைக்கானலுக்கு சாலை போட்ட வெள்ளைய தேவர், அங்கு 13 பேருந்துக்களை CA. வெள்ளைய தேவர் டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் இயக்கினார்.


அதன் பிறகு 1947 வது வருடம் சுதந்திரம் பெற்ற போது காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டி போட்டு கொடைக்கானல் முதல் முனிசிபல் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த தேர்தலில் கொடைக்கானலுக்கு சிறு வணிகம் செய்ய வந்த JC என்ற ஜெயராஜ் செல்லத்துரைக்கும், C. A. வெள்ளைய தேவருக்கும் தேர்தல் பகை காரணமாக ஒரு பந்தயத்தில் பந்தய பொருளாக தனது 13 பேருந்துக்களை வைத்து, ஜெயராஜ் நாடாரிடம் 13 பேருந்துக்களை எழுதி கொடுத்து விட்டு பெரியகுளம் வந்துவிட்டார். அந்த பேருந்து தான் இன்று ஒடிக்கொண்டிருக்கும் J.C. பேருந்து ஆகும்.

C. A. வெள்ளைய தேவருக்கு பக்க பலமாக இருந்த போடி சுப்பன் செட்டியார், புதுக்கோட்டை மன்னர் ரகுநாத தொண்டைமான், T. V. சுந்தரம் ஐயங்கார் ( TVS குழுமம் தலைவர்) .

T. V. சுந்தரம் ஐயங்கார் வருடத்திற்க்கு ஒரு முறை C. A. வெள்ளையன் தேவருக்கு அவர்களுக்கு ஒரு புது FIAT கார் பரிசளிப்பார், அந்த வருடம் அந்த பழைய காரை வாங்கிக் கொண்டு புதிய கார் தருவார்.


போடி சுப்பன் செட்டியார் உடன், அவரது போடி வீட்டிற்கு வெள்ளையன் தேவர் சென்ற போது, சுப்பன் செட்டியாருக்கு பக்கபலமாகவும், உற்ற நண்பனாகவும் இருந்த பாலார்பட்டி பெரிய கருப்பத் தேவர் அறிமுகம், வெள்ளையன் தேவருக்கு கிடைத்தது. காலப்போக்கில் பாலார்பட்டி பெரிய கருப்பத் தேவர், வெள்ளையன் தேவர் சம்மந்தியாக மாறி பெண் கொடுத்து பெண் எடுத்தார்கள்.

பெரியகுளத்தில தனது சமுதாயத்தில் வீடு இல்லாத குடும்பங்களை கண்ட வெள்ளையன் தேவர், அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தனது செல்வாக்கில் நிதி கொண்டு ஒரு ஊரை உருவாக்கி ஒரு 20 வீட்டை கட்டினார்.

அப்போது கட்டும் பணிக்கு நிதி தேவைப்பட்டது, அதனை Kallar Reclamation Scheme Society அணுகி, அதில் நிதியை பெற்று, அதன் மூலம் வேலை நடைபெற்றது. Kallar Reclamation Scheme Society சூப்பர்வைசராக பணிபுரிந்த சூரியநாராயாணத் தேவர் அதாவது நடிகர் SSR ன் தகப்பனார் அவர்களும், இந்த வேலை நடைபெற முழுக்காரணம், அதனால் அந்த ஊரில் கரட்டூர் மந்தையம்மன்  கோவிலில் வெள்ளையன் தேவர், சூரியநாராயாணத் தேவர் குடும்பத்திற்க்கும் முதல் மரியாதை கொடுப்பார்கள், அந்த ஊர் கரட்டூர் என்று அழைக்கபடுகின்ற தெய்வேந்திரபுரம் ஆகும்.

வைத்தியநாதபுரத்தில், எல்லோரும் படிக்க பள்ளிகூடம் இல்லாததால் கள்ளர் பள்ளி ஒன்றை கட்டினார்.





 தெய்வேந்திரபுரம் பின்னால் கொடைக்கானல் 

நன்றி : திரு. காண்டீபன் மற்றும் திரு. செந்தில்

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்