வியாழன், 7 ஜூலை, 2022

சீதக்காதி நொண்டி நாடகம்



சீதக்காதி நொண்டி நாடகமாகும். இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரமான மதுரை ஒடுங்காப்புலி என்ற கள்ளன் செஞ்சிக்கோட்டைக்குச் சென்று அங்குள்ள ஆற்காடு நவாபின் பாசறையிலிருந்து குதிரை ஒன்றை கவர்ந்த பொழுது பிடிக்கப்பட்டு ஒரு கையும், ஒரு காலும் வெட்டப்பட்டு வேதனையுற்ற நிலையில் தற்செயலாக அங்கு சென்ற கீழக்கரை சீதக்காதி மரைக்காயரின் முகவர் மாமு நெப்னாப் பிள்ளையின் அனுதாபத்திற்கு ஆளாகி அவரது உதவியுடன் செஞ்சியிலிருந்து கிழக்கரை வந்ததாகவும், அங்கு சீதக்காதி மரைக்காயரது அன்பையும், அனுதாபத்தையும் பெற்று இமாச் சதக்கத்துல்லாற். அப்பாவிடம் கலி மாச் சொல்லி , இஸ்லாத்தை ஏற்று மக்கா சென்று இறையருளால் வெட்டப்பட்ட கையும் காலும் வளரப்பெற்று இறைவனுக்கு நன்றி செலுத்துவதாக இந்த நாடகத்தின் போக்கு அமைந்துள்ளது. இந்த நாடகத்தைப் புனைந்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை. என்றாலும் அவர் அளித்துள்ள இரண்டு செய்திகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. முதலாவதாக பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் பெரும்பாலான ஊர்களை நினைக்கும தரை வழிப் பாதைகள் இல்லாத பொழுது செஞ்சிக்கோட்டையிலிருந்து கிழக்கரைக்கு உள்ள பாதை எந்த ஊர்களின் வழியாகச் சென்றது என்பதை ஆசிரியர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். செஞ்சிக் கோட்டையிலிருந்து வாலிகண்டபுரம், அரியலூர், புதுக்கோட்டை, திருமெய்யம், மனமேல்குடி, தொண்டி, திருப்பாலைக்குடி, வாடி, தேவிப்பட்டினர், இராமநாதபுரம், சக்கரக் கோட்டை கண்மாய், உப்பளம், மோர்க்குளம், பாலையாறு, மணவச்சேரி, சிங்காரத்தோப்பு வழியாக (கிழக்கரைக்கு அந்தப் பாதை வந்தடைந்ததாகத் தெரிகிறது. اس



கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்