வியாழன், 7 ஜூலை, 2022

M.S.ராஜேந்திரன் கண்டியர்



பெற்றோர்கள் வாழும்போது கவனிக்கப்படாமல் அவர்கள் மறைந்த பின் ஆடம்பர பகட்டும் வெடி வேடிக்கை, ஆட்டம் பாட்டம் கரகாட்டம் என வாழும் பெரும்பாலானோர் மத்தியில்,

தன்னை படிக்கவைத்து, ஆளாக்கி அழகு பார்த்து மறைந்த தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் அவர்களின் திருவுருவச் சிலையை தத்ரூபமாக நிறுவி, வாழும் தனது தாயாரின் ஆசையை நிறைவேற்றியதோடு மட்டும் நில்லாமல், உற்றாரும் மற்றாரும் ஒற்றுமையின் மேன்மையை உணரும் வகையில் அனைவரும் ஓய்வெடுக்க ஒர் சத்திரமும், குறுகிய வட்டத்துக்குள் ஆட்படாமல் வாழும் எதிர்கால சந்ததியினர் அறிவுப்பசி போக்கிட நூலகமும், "அம்மா அப்பா" எனும் மந்திரச்சொல்லையும், தான் கடந்து வந்த பாதையையும், வளர்த்துவிட்ட கிராமத்தையும் நினைவில் கொள்ளாமல் ஆண்ட்ராய்டு உலகில் அவதனிக்கும் இன்றைய இளைஞர்களுக்கும், ஊரின் ஒற்றுமையையும் உறவின் மேன்மையையும் தம்மை வளர்த்தெடுக்க தன்னிலை மறந்து பிள்ளைகளுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்த பெற்றோரை இறுதிக் காலங்களில் போற்றிப் பாதுகாப்பது குறித்தும் மற்றவர்களுக்கு உணர்த்திய ஒரு உன்னதமான உணர்வுப்பூர்வமான தருணம்....

பெரியவர் M.S.ராஜேந்திரன் கண்டியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை நன்றியோடு போற்றி, நீங்கள் விதைத்திட்ட விதையால் விருட்சமாக வளர காத்துக் கொண்டிருக்கும் பலரில் ஒருவன்.

பாசத்திற்கு ஈடு இணை இவ்வுலகில் ஏதுமில்லை என்று "பேர் சொல்லும் பிள்ளை" யாக அன்பையும் அறத்தையும் அனைவருக்கும் உணர்த்திட்ட அத்தான் M.S.R. ரமேஷ் கண்டியர் அவர்களுக்கு என்னின் அன்பும்... நன்றியும்.



"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்"

மகன் தந்தைக்கு செய்யும் உதவி தன் தந்தை பெருமைப்படும்படியான செயல்களைச் செய்து பிறர் இவனைப் புகழ்ந்து இவன்தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தார் என்று சொல்ல வேண்டும்.

கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்