வியாழன், 7 ஜூலை, 2022

சேடப்பட்டி செப்பேடு - சேடப்பட்டி அம்பலக்காரர் மடம்




நெடுங்குள நாட்டு ஆலங்குளமான பெரியகுளத்தைச் சேர்ந்த தாமரைக்குளம் , சேடப்பட்டி , மேல்மங்கலம் (மேலமங்களம்) , வடுகர்பட்டி (வடுகபட்டி) , அழகிரி நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள காத்தான் அம்பலம் , தம்பான் அம்பலம் , குஞ்சாய அம்பலம் ஆகியோர் வழிவந்தவர்கள் ஒன்று கூடி , மடம் ஒன்று ஏற்படுத்தினர் . அம்மடத்தலைவராக பாணி பார்த்திப அரையன் மகன் சங்கரமூர்த்தியை அமர்த்தி அவருக்கு வருவாயாக வர்த்தனை தானியம் , ஏழு கலம் , கலியாணம் ஒன்றுக்கு நாலுபடி அரிசி , அன்னிக் குடிக்கு மூன்று பணம் ஆகியவை வழங்குவதாகப் பட்டயம் எழு - திக் கொடுத்துள்ளனர் . செப்பேட்டில் முதல் 12 வரிகளில் அம்பலக்கார்ர் பெருமைகள் சொல்லப்பட்டுள்ளது.

கலங் காத்தான் செங்காவிக் கொடியுடையோன் காவிக் குடையுடையோன் காவிச் சிவிகையுடையோன் அரவணியரனார் ரகத்தில் வேர்வை கரமது வாங்கி ச ங்கு சேர்படை வெண்சாமரையுடன் துலங்க யிவர் சுளூபமாய் வன்த வ ரிகல் மிகத் தோன்றி யிலமுகிலெனுங் கச்சியர் நகரி காவலராகிய காவல ரீட்டிக்கு மாலை யெதுத்தே யிட்டவர் மட்டில்லாச் சேனையை சோட் டையால் வென்றவர் வேளமும் பரியிமிகுந்திடு முன்னாள் சோழனை அன்று துலங்கக் கட்டி முறைப்பாடு வெட்டி முறியக் குத்தி பிற்ப்பாடு வெ ட்டிப் பேர் பாடிய தராசுரவனை யுதுரம் படையற வெட்டும் தரவிட்டிகமுள்ள சஹா ய வீரர் வெள்ளைக் குடைக்கும் வெண் சாமரைக்கும் கள்ளவே வாய்த்த பெருமான் வா ழி வாழி வையகம் வாழி ஊழிகாலம் உகந்திட வாழியே என்ற ஊழிகாலம் உகந்திட வாழியே என்ற கலியுக சகார்த்தம்.





கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

கள்ளர் மரபினரின் வரலாறு - Kallar History In Tamil - Mukkulathor History In Tamil - Thevar History In Tamil - Tamilar History In Tamil பொ. ஆ....

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்