வியாழன், 25 மே, 2023

வல்லத்து படைப்பற்று ஊரவர்கள்



தஞ்சை மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த ஊரவர் சபையினராக அகளங்க பல்லவராயர், தியாகவினோத பல்லவராயர், ராசபுரந்திரப் பல்லவராயர், வீரவினோத பல்லவராயர், எதிரிலிச்சோழ பல்லவராயர், சோழவிச்சாதரப் பல்லவராயர், மாங்குடையான் ராசராசப் பல்லவராயர், முதலிய பல்லவராயர்களும், 

அதிகைமான் , கங்கதரையன், பரகலுடையதெலென்னார், பாசக்கழையான், திருவையாறுடையார், தேவகுலமுடையான் பெரிய உடையார், வல்லமுடையான் பெரிய உடையான் முதலியோர்களும் இருந்துள்ளனர். 

இவர்கள் இணைந்து வல்லத்தின் கோட்டைக்குள் அமைந்துள்ள கரிகாலச் சோளீஸ்வரமுடைய நயினார் கோயில் எனும் சிவாலயத்திற்காக, அக் கோயிலுடைய சிவாச்சாரியாரான ஆலிலுத் தேவன் பலவன் நாயகப் பட்டர் என்பவருக்கு,  அவ்வூரைச் சேர்ந்த குமணன் குடிகாடு புஞ்சை நிலத்தை தடமாகக் கொண்ட ‌‌[வழி] கூத்தங்குடி விளைநிலத்தில் இரண்டு குழி அளவு நிலம் இறையிலியாகத் தானமளித்துள்ளனர். 

இதே சாசனத்தில், அதே கோயிலின் மற்றொரு சிவாசாரியாரான புதுவலி வனநாயகப் பட்டர் என்பவருக்கு அதே கூத்தங்குடி விளைநிலத்தின் கீழ்பகுதி நிலத்தை, செம்பூண்டியைச் சேர்ந்த  ஊரவர் சபையினரான "காட்டூருடையார்கள்"  என்போர் இணைந்து சூரியச் சந்திரர் உள்ளவரை அனுபவித்துக் கொள்ளுமாறு தானமளித்துள்ளனர்.

மேலுள்ள இறையிலித் தான நிலம் காவலுக்குரிய நிலமாக இருந்துள்ளதை "...இவ்வூர் குடிகாடு கூத்தக்குடி 'காவலில்' விளைநிலம்" - எனும் தொடர் உணர்த்துகிறது.  மேலும் இந்த சிவாலயம் கோட்டைக்குள் இருந்தது. ஆகவே மேற்சொன்ன பல்லவராயர் - காட்டூருடையார் முதலியோர்கள் படைப்பற்று ஊரவர்களாக இருந்திருக்க வேண்டும். அந்த கோட்டை சிவாலயமும் படைப்பற்றுச் சிவாலயமாகவே அமைந்திருத்தல் வேண்டும். 




வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்