வெள்ளி, 26 மே, 2023

விஜய ரகுநாத பல்லவராயர் துரை ராஜா



"விஜய ரகுநாத பல்லவராயர் துரை ராஜா " அவர்கள் புதுக்கோட்டையில் குழந்தைசுவாமி பல்லவராயருக்கு மகனாக பிறந்தார்.

புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவர்கள் 1898 இல் ஏப்ரல் மாதம் ஐரோப்பா தேசங்களுக்கு பயணம் மேற்க்கொண்டார். மன்னரின் பயணக்காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம் அரசு நிர்வாகத்தை கவனித்து வந்தார். 1898 - 1908 ஆம் ஆண்டு வரை நிர்வாக கவுன்சிலின் தலைவராக பணியாற்றி வந்தார். 1909 ல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவான் (பிரதம அமைச்சர்) பதவிக்கு உயர்ந்தார். 1922 இல் அரசப் பிரதிநிதி (Regent) எனும் பதவியைப் பெற்று 1928 வரையிலான காலகட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தான அரசப் பிரதிநிதியாக இருந்தார்.

இவரது நிர்வாகத்தில் 1924 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் புதுக்கோட்டை சட்டசபை குழு உருவாக்கினார். 1926 ல் தொடக்க கல்வி சட்டம் இயற்றப்பட்டது. கிராம பஞ்சாயத்து நீதிமன்ற சட்டம் இயற்றப்பட்டு, சிறு கிராமங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. விவசாயத்திற்கு கிணறுகள் தோண்டவும் குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டது, முந்திரி பயிரிடுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டன.

1930 ஆம் ஆண்டு தனது 58 வயதில் இறப்பெய்தினார்.  

வரலாற்று பக்கங்கள் - I

வளரி வரலாறு   👈 Click above திருமங்கையாழ்வார் வரலாறு 👈 Click above அம்பலகாரர் / அம்பலம் வரலாறு 👈 Click above வாண்டையார் வரலாறு 👈 Click a...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்