வெள்ளி, 5 ஜூன், 2020

விபூதி வீரமுத்து தேவர்





விபூதி வீரமுத்து தேவர் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஊரில் கள்ளர் மரபில் தேவர் பட்டமுடைய குடும்பத்தில் பிறந்தவர்.

ஈவேரா தமது காலத்தில் ராமர் படத்தினை சேர்ப்பால் அடித்து ஹிந்து வெறுப்பை காட்டியபோது. எதிர்த்து கேள்வி கேட்டார்.


திராவிடர் கழகத்தினர் ... “ என் பணத்தில் நான் காசுகொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் நான் அடிப்பதில் என்ன தவறு? இதை கேட்க நீயார் ? என விபூதி வீரமுத்து தேவரை கேட்டனர்.

மறுதினம் அதே இடத்தில்  ஈவேராவின் படத்தினை வரைந்து அதை செருப்பால் அடித்தார் வீபூதி வீரமுத்து தேவர். கேள்விகேட்டு கோபத்துடன் வந்த திராவிடர் கழகத்தினருக்கு, அவர்கள் பாணியிலேயே பதில் சொன்னார் வீபூதி வீர முத்து தேவர், என் பணத்தில் நான் காசுக்கொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் அடிப்பதில் என்ன தவறு இதை கேட்க நீயார் ? என்றார்.

திராவிடர் கழகத்தினருக்கு பதில் சொல்ல முடியவில்லை, அதனால் அராஜக செயலில் இறங்கினர்.

விபூதி வீரமுத்து தேவர், பெரியார் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் போவதாகச் சொன்னதும். திருச்சி திராவிடர் கழகத் தலைவர் டி.டி.வீரப்பா, எந்தத் தோழரும், விபூதி வீரமுத்து தேவர் பக்கம் போக வேண்டாம் என்று கண்டிப்பாக உத்தரவிட்டார், அறிக்கையும் விட்டார். 

திராவிடர் கழக திருச்சி தியாகராசன் என்பவன், சகாக்களை அழைத்துப் பேசினான். 

டி.டி.வீரப்பா, கட்சியின் கட்டுப்பாடு படி நடக்கட்டும். ஆனால், நாம் நமது ‘சட்டத்திட்டப்படி’ அதை சந்திப்போம் என்று கலந்து பேசினான். 

திருச்சி தியாகராசன் கையில் கத்தி இருந்தது. அப்போது மணி மாலை 7. திருச்சி டவுன் ஆலை நோக்கி, கூட்டத்தைக் கலைக்க, போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆனால், விபூதி வீரமுத்து தேவரிடம் 25 பேர் மட்டும் போராட்டத்தில் இருந்தனர். 

விபூதி வீரமுத்து தேவர் பெரியார் ரஷ்யாவுக்குப் போன போது எடுத்த படத்தை ஒரு மூட்டையில் ஒட்டி, அந்தப் படத்தை செருப்பால் அடிக்கத் திட்டமிட்டிருந்தார்.

‘வெள்ளைக்காரனுக்கு காட்டிக் கொடுத்த நாயை செருப்பால் அடிக்கிறேன்’ என்று கூறி - பெரிய செருப்பை வைத்து, விபூதி வீரமுத்து தேவர் அடித்தார்.

திருச்சி தியாகராசன் சோட விற்பவனைப் போல் உள்ளே நுழைந்தான். டவுன் ஆல் கதவை உடைத்து, டவுன் ஆல் கோபுரத்தின் மீது ஏறி, டவுன் ஆல் கோபுரத்திலிருந்து சோடா பாட்டிலையும், கற்களையும் விபூதி வீரமுத்து தேவர் தலையை இலக்கு வைத்து அடித்தான்; 

7 பேர் மொட்டை அடித்துக் கொண்டு பெரியார் படத்தை வைத்துப் பாடை கட்டி தூக்கி வந்தனர். அத்தனை பேரையும் இலக்கு வைத்து தாக்கினார்கள்.

விபூதி வீரமுத்து தேவரை நோக்கி திராவிட கழகத்தினர் மலத்தை வீசினார்கள்; 

திருச்சி தியாகராசனை கைது செய்து விட்டார்கள். பெரியாருக்கு 3 ஆண்டு தண்டனை தரப்பட்டது. 

கருப்புக்கு ஒரு மறுப்பு போன்று பல நூல்களை எழுதி பதிப்பித்து நாஸ்திக அராஜக கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் வீபூதி வீரமுத்து தேவர்.

ம.பொ.சி அவர்கள் திராவிட எதிர்ப்பு மாநாடு நடத்தியபோது அதில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்.

விபூதி வீரமுத்து தேவரின் நூல்கள் அடுக்கு மொழியில் துணிவுடன் கடுமையாக  திராவிட கழகத்துக்கும், அதன் தலைமைக்கு சவுக்கடி கொடுத்து வந்தது.










கல்வெட்டில் கள்ளரும், கள்ளர் பட்டங்களும்

பொ. ஆ. மு.   4 ஆம் நூற்றாண்டு கால அகநானூறு பாடலில்  "கழல்புனை திருந்தடிக் "கள்வர் கோமான்" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி" ...

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

எனது படம்
Contact: info.kallarkulavaralaru@gmail.com, தமிழகத்தில் வாழும் கள்ளர் மரபினர் முக்குலத்தோரில் ஒரு பிரிவினர் ஆவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்த மூன்று குலத்தினரும் "தேவர்" என்ற பொதுவான பெயரோடு அறியப்படுகிறார்கள். கள்ளர் மரபில் அறந்தாங்கி தொண்டைமான், புதுக்கோட்டை பல்லவராயர், புதுக்கோட்டை தொண்டைமான் மற்றும் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். (கள்ளர் படைப்பற்று - கள்ளர் நாடு - கள்ளர்த்தடி). கள்ளர் வரலாறு : வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழி தெரியாதவர்களுக்குப் போகும் வழி புரியாது. வரலாற்றை நாம் நினைவு கூர்வதற்குக் காரணம் கடந்து போன ஈகங்களை எண்ணிக் கண்ணீர் விடுவதற்காகவும், நிகழ்த்தி விட்ட வீரங்களைச் சொல்லிப் பெருமை பேசுவதற்காகவும் அல்ல. வருங்காலத்திற்கு வழி சமைப்பதற்கு அந்த ஈகமும் வீரமும் வழிகாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். கள்ளர்களின் நான்கு முக்கிய பிரிவுகள் - ஈசநாட்டுக்கள்ளர் (திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை) : கிளைவழிக்கள்ளர் (சிவகங்கை) : அம்பல கள்ளர் / நாட்டார் கள்ளர் (சிவகங்கை, மதுரை) : பிறமலை கள்ளர் (மதுரை, உசிலமபட்டி, தேனி, கம்பம், திண்டுக்கல்)

வலைப்பதிவு காப்பகம்

பின்பற்றுபவர்கள்